யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/16

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில்வழங்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்மேலும் குறைந்த பட்ச ஊதியம்அதிகரிக்கப்படும்
என்றும் கூறினார்.

12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2-ம்தேதி முதல் (வெள்ளிக்கிழமை) நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில் மத்திய அரசு பணியாளர்கள்33 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றுகூறப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர்அருண்ஜெட்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘7வது ஊதிய கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில்உள்ள 2014-15 மற்றும் 2015-2016ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட2 ஆண்டு போனஸ் வழங்கப்படும்’ என்றார். இதனிடையே அரசு வழங்கும் திருத்தியமைக்கப்பட்டபோனஸ் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவாகும் என்றுகூறப்படுகிறது.


இதினிடையேவிவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.246 லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்றநிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெட்லி; ‘விவசாயம்சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாகரூ.350 என நிர்ணயம் செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக