யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/16

PDT GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை(தமிழ்நாடு அரசு)
பணிக்கொடைஎன்பது அரசு/அரசு சார்ந்தஊழியர் அல்லது ஆசிரியர் பணிஓய்வின் போது அல்லது பணியில்இருக்கும் போதே காலமான போதுஅவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை
பாராட்டும் விதமாகவழங்கும் ஒரு ஒட்டு மொத்தத்தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்றஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

அரசு& அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடைகணக்கீடு முறை தொகு

பணி ஓய்வின் போது பணிக்கொடைகணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம்ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]

இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு
அரசு மற்றும் அரசு சார்ந்தஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படைஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்புஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி(Dearness Allowance) ஆகியவற்றின்கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம்கணக்கிடுதல் தொகு
ஓய்வு(Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில்இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமேபணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள்9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால்33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள்5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள்மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடைகணக்கீடு தொகு
மொத்தப்பணி செய்த ஆண்டிற்கு அரைமாத ஊதியம் வீதம், குறைந்தபட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாதஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்புரூபாய் 10 இலட்சம்.

பணிக்கொடைவருவாய்க்கு வருமான வரி சட்டம்10 (10)-இன் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குபணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல்பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டியதொகைகள் நிலுவை இருப்பின், அதனைபணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக