யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/9/16

பிளஸ் 2 காலாண்டு தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில், கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வானது, பொது வினாத்தாள் மூலம் ஒரே
நாளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு காலாண்டு தேர்வையும், பொதுவான தேர்வாக நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்கி, செப்., 23ல் முடிவடைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக