யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/9/16

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி பரிசு தொகைகளை  வழங்கினார்.  இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: 2016ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகித அடிப்படையில் 10ம்  வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய 1,063
மாணவர்களுக்கான ரொக்கப் பரிசுத் தொகை  ரூ.15 லட்சத்து 59 ஆயிரமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து  விளங்கிய 399 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்மும், மொத்தம் 1,462 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.21 லட்சத்து 37 ஆயிரத்திற்கான  பரிசுத்தொகையை மேயர் சைதை துரைசாமி வழங்கினார். 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 வருடம் விபத்து ஏற்படுத்தாமல் ஓட்டுநராக பணியாற்றிய, பணிபுரியும் ஓட்டுநருக்கு  தலா 4 கிராம்  வீதம் 27 ஓட்டுநர்களுக்கு   108 கிராம் தங்க நாணயங்ளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக