யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/9/16

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு*

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 14ம்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசிநாள் 16ம் தேதி எனஅறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசிநாள் எனடி.என்.பி.எஸ்.சி. அறிவிருந்தது. இந்நிலையில்ஏராளமானோர் ஆன்-லைனில்
விண்ணப்பிக்கமுயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது.

குரூப்4 பதவியில் 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. எழுத்து தேர்வு நவம்பர் 6ம்தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியில்குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இளநிலைஉதவியாளர்(பிணையமற்றது)- 2345 இடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையம்)-121 இடம், வரித்தண்டலர் (கிரேடு 1)- 8 இடம், நில அளவர்- 532 இடம், வரைவாளர்-327 இடம், தட்டச்சர்-1714 இடம், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 404 இடங்கள் உள்ளிட்ட 5,451 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 9ம்தேதி ெவளியிட்டது.

அறிவிப்புவெளியிட்ட அன்றே ஆன்லைன் மூலம்விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது. விண்ணப்பிக்க10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், குரூப்4 தேர்வுக்கு பட்டதாரி முதல் 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் வரை போட்டி போட்டுகொண்டு விண்ணப்பித்தனர். இது வரை 8 லட்சத்துக்கும்அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக