யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/9/16

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர்பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்திமாநிலங் களுக்கு மத்திய அரசுகடிதம் எழுதியுள்ளது.

மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர்
நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலி யாக உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர்பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்பமாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதிவருகிறேன்.

அத்துடன்அனைத்து மாநிலங் களையும் சேர்ந்தகல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டைவிரை வில் நடத்த உள்ளோம். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்துமுக்கியமாக விவா தித்து முடிவெடுக்கதிட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ்ஜவடேகர் கூறினார்.


இதுகுறி்த்துமத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும்ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவாகவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத்தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில்காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம்தீவிரமாக உள்ளது’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக