யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/9/16

தமிழக ஆளுனர் மாற்றம்...

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, பொறுப்பு ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக ஆளுநராக ரோசய்ய பதவியேற்றுக்கொண்டார். அதையடுத்து, ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பொறுப்பை வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.இதையடுத்து, தமிழகத்துக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம்.பிரதமர் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவரைத் தான், மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் அறிவிப்பார். அந்த வகையில் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் தமிழக ஆளுநர் பதவிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக