யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/9/16

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு : சென்னையில் ஒருவர் கூட இல்லை

தமிழகத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் ஒரு அரசு பள்ளி கூட இடம்பெறவில்லை. செப்., 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள், பணித்திறன் அடிப்படையில், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இந்த ஆண்டு, தமிழகத்தில், 23 பேருக்கு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பள்ளிகளை சேர்ந்த நான்கு பேர், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் என, மொத்தம், 23 பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்ட, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட விருதுக்கு தேர்வாகவில்லை. சென்னை மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளி மற்றும் தாம்பரம் சி.எஸ்.ஐ., கார்லி பள்ளி என, இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக