யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/16

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!!

மரணத்திற்குப் பின்  வாழ்க்கைஉண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறதுஎன்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி
வேறொன்றுமில்லை.

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக்கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும்போது மூளை உயிருடன் இருக்கும்வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால்அனைத்தும் முடிந்து போய் விடும். அதன்பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான்இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும்கிடையாது.என்கிறார்.

இருந்தாலும்ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான்ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில்உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில்இதய நோய் காரணமாக ஒருநோயாளியை ஐ.சி.யூவில்வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

அப்போதுதிடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால்அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர்சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.
அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான்வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில்நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலைமருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானேபார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாகமருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!

இன்னொருசம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரைஉயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரேகூறுகிறார்,என் உடலைவிட்டு நான் அப்படியே மேலேபோனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒருசெருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது எனஅவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள்பார்த்த போது உண்மையிலேயே அங்குஅந்த பொருட்கள் இருந்துள்ளது.
இது போல பல உண்மைசம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம்கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர்இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள்அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பதுதெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்தஒரு சம்பவம் மறுபடி நடத்தல்போன்ற பல விஷயங்கள்  தாங்கள் உணர்ந்ததாக அவர்கள்கூறியுள்ளார்கள்.

இப்படியானபல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள்அதன் பின்னர் என்ன ஆவார்கள்என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக