யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/17

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்

கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள்வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்துசெய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 1.20
கோடி கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 33, 973 ரேஷன் கடைகள் மூலம்இலவச அரிசி, குறைந்த விலையில்துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த பொருட்கள்இனி மானிய விலையில் கிடைப்பதுபடிப்படியாக நிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியஅரசு நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்புசட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டியது. ஜெயலலிதாமுதல்வராக இருந்தபோது அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா உயிருடன்இருந்தபோது மக்கள் நலனுக்கு எதிரானமத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புதெரிவித்தார். அந்த வகையில் உணவுபாதுகாப்பு திட்டமும் ஒன்று.
ஓபிஎஸ்ஆதரவு: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எந்தெந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரோ, அந்த திட்டங்களுக்கு எல்லாம்ஓபிஎஸ் தலைமையிலான அரசு தற்போது மறைமுகமாகஆதரித்து வருகிறது. அந்த வகையில் தற்போதுமத்திய அரசின் உணவுப் பாதுகாப்புதிட்டத்தில் இணைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்பு திட்டப்படி, குடும்பத்தில் நபர் ஒருவருக்கு தலா5 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதுவரை ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தாலும் 20 கிலோ அரிசி மட்டுமேவழங்கப்பட்டது. ஆனால் உணவு பாதுகாப்புச்சட்டப்படி ஒரு குடும்பத்தில் 6 பேர்இருந்தால் அவர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கவேண்டும். இதனால் வழக்கத்தைவிட கூடுதலானஅரிசி கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம்தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
மக்களைகடனாளியாக்கும் முடிவு: தமிழகத்தில் வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்அரிசியின் விலையை மத்திய அரசுஉயர்த்தியது. அதன்படி ஒரு கிலோரூ.8.30ல் இருந்து ரூ.21.40 ஆக அதிகரிக்கப்பட்டது. திடீரென இருமடங்கு விலைஉயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமைமேலும் அதிகரித்தது. தற்போது அரிசிக்காக மட்டும்தமிழக அரசு சுமார் ரூ.2,700 கோடி செலவிடுகிறது. இந்த விலையில், அரிசிவழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 60 சதவீதகுடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக பகீர்தகவல் வெளியாகி உள்ளது.
யார் யாருக்கு அரிசி கிடைக்காது ரேஷன்கடைஊழியர்கள் கூறியதாவது: ஒரு வீட்டில் 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருப்பவர்களுக்குரேஷன் அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளது. இதற்காகஉணவுப்பொருள் வழங்கல்துறை ரகசிய சர்வே நடத்திஉள்ளது. அதில் கிடைத்துள்ள பட்டியலைவைத்து ரேஷன் கார்டை என்பிஎச்எச்(non priority house holder), பிஎச்எச்(poor house holder) என 2 பிரிவுகளாக பிரித்துள்ளனர். சிலிண்டர், ஏசி, பைக், கார்வைத்திருப்பவர்கள் என்எச்எச் பிரிவிலும், எதுவும் இல்லாதவர்கள் பிஎச்எச்பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள். இதற்காக 3 படிவங்கள் தயாரித்து அதை எங்களிடம் வழங்கிவீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும்படிரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முதல் படிவத்தில், குடும்பத்தில் உள்ளவர்களில் யார், யாரெல்லாம் ஆதார்கார்டு வாங்கி உள்ளனர் என்றவிவரமும், 2வது படிவத்தில் வீட்டில்ஏசி, கார், பைக், 2 சிலிண்டர்உள்ளதா என்ற விவரமும், 3வதுபடிவத்தில் இதுவரை ஆதார் கார்டுவாங்காத நபர்கள் அவர்களின் முகவரில்வசித்து வருகின்றனரா என்ற விவரமும் பதிவுசெய்யப்படுகிறது. கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் மிகரகசியமாகவும், மறைமுகமாகவும் நடக்கிறது. கணக்கெடுப்பின் இறுதியில் கார், பைக், ஏசி, 2 சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பத்தினரை NPHல் இணைத்து அவர்களுக்குஅரிசியை ரத்து செய்ய அரசுமுடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள2 கோடி அட்டைத் தாரர்களில் சுமார்1.20 கோடி கார்டுகளுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னையில்  12 லட்சம்பேருக்கு அரிசி ‘கட்’

தமிழகத்தில்முதல்கட்டமாக சென்னையில் இப்பணிகள் வேகமாக நடக்கிறது. சென்னையில்உள்ள 20 லட்சம் ரேஷன் கார்டுகளில்60 சதவீதம்(12 லட்சம்) கார்டுகளுக்கு அரிசிரத்தாகும் என தெரிகிறது. அரசின்இந்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள் கடுமையாகபாதிக்கப்படுவார்கள் என்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக