யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/3/17

பள்ளிக்கு செல்லாதோரை பட்டதாரி ஆக்கிய நிலவொளிபள்ளி

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களுக்காகவும், பள்ளிக்கே செல்லாதவர்களுக்காகவும் கல்வி கற்க, காஞ்சிபுரத்தில், நிலவொளிப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இங்கு படித்த பலர், இன்று மத்திய, மாநில அரசு பணிகளிலும், பல தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.
கடந்த, 1997ல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வெ.இறையன்பு, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்ற போது, பள்ளி செல்லும் சிறுவர்கள், பட்டு நெசவில் ஈடுபட்டிருந்ததை கண்டார். இதையடுத்து, 1997 டிசம்பரில், பிள்ளையார்பாளையத்தில், 188 மாணவ, மாணவியரைக் கொண்டு, தமிழகத்திலேயே, முதன்முறையாக, நிலவொளிப் பள்ளியை துவக்கினார். அதன் பின், 32 பள்ளிகளாக வளர்ச்சி அடைந்தது.இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர், இவர்களது குடும்பத்தில்முதல் பட்டதாரிகளாக உள்ளனர். ஒரு மாணவர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வருகிறார். பல மாணவர்கள், பல்வேறு தொழில்நுட்ப படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்கல்விக்கு பின், டி.என்.பி.எஸ்.சி.,பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்ததோடு, மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இப்பள்ளியில் படித்த மாணவர்களில் சிலர், தற்போது, இப்பள்ளியின் ஆசிரியர்களாக பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருந்தாலும்,பழையதை மறக்காமல், தங்கள் வாழ்க்கை பாதையை மாற்றி யமைத்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த, ஐ.ஏ.எஸ்.அதிகாரி வெ.இறையன்புவை, நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக