யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/7/17

காது கேளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவு.

காதுகேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள்,
உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரில்,

பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்கு, 1989ல் இருந்து பயணப்படியாக, 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 2010ல், பயணப்படி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்த படி, தற்போது, காது கேளாத ஊழியர்களுக்கும் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், 'காதுகேளாத ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சான்று பெற்று வழங்கினால், படியை அனுமதிக்கலாம். பணிபுரியாத காலங்கள், மருத்துவ விடுப்பின் போது பயணப்படி வழங்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக