யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/17

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை: தேர்தல் ஆணையம்!!!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவினை  அதிமுகவின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரிவினைத் தொடர்ந்து அதிமுக தற்பொழுது அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தனக்கு என்று ஒரு தனி அணியினை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி எடுத்துள்ள முடிவின் படி, டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்து செயல்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமயிலான அணியினைச் சேர்ந்த 'அஸ்பயர்;' சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு கடந்த எட்டாம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலானது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிலானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக