யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/17

கல்லூரி அருகே 'டாஸ்மாக்' மாணவியர் சாலை மறியல்

மாதவரம்: தனியார் கல்லுாரிக்கு
அருகே திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்றக் கோரி, கல்லுாரி மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.இரு மாதங்களுக்கு முன், கல்லுாரி அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அங்கு குவியும், 'குடி'மகன்களால், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு, டாஸ்மாக் கடை முன் திரண்ட கல்லுாரி மாணவ, மாணவியர், கடையை அகற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து, 'மாவட்ட ஆட்சியரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்; இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.சாலை மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக