![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiREG3mUJAu73QYw_lhokvs1RtX7IFkGZh1rCSTtplR7NJizluDmufmRh9hCZqyGNaCCnrmNKLZua3DuYeZmdRcTqOcOvsoejXFHNXB3vNG6suIk3morcIOHjYvY_NGap4fbLyge9xZG1x0/s320/Screenshot_20171109-082550.png)
தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்துக்களை
வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
சட்டசபை தேர்தல்:
ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், இன்று(நவ.,9) நடக்கிறது. குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தல், டிசம்பரில் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, டிச., 18ல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தடை:
இந்நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்தை வெளியிட கூடாது. இதை, பத்திரிகைகளும், 'டிவி' சேனல்களும், கடைபிடித்து, சுதந்திரமாக தேர்தல் நடக்க, ஒத்துழைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக