யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/3/18

முன்கூட்டியே வெளியாவதை தடுக்க பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுகளில் ஜிபிஎஸ் கருவி: மேற்கு வங்க அரசு அதிரடி!!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே 
வெளியாவதை தடுக்க, ஜிபிஎஸ் மைக்ரோசிப் பொருத்தப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் முறைகேடு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுத்தேர்வு நடைமுறையே சீர்குலைகிறது. பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியாவதை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கு வங்க அரசு எடுத்துள்ளது. இதன்படி, பள்ளிகளுக்கு அனுப்பப்படும் வினாத்தாள் கட்டுகளில் ‘ஜிபிஎஸ்’ வசதி கொண்ட மைக்ரோசிப் பொருத்தப்படுகிறது.*

*இது தொடர்பாக மேற்கு வங்க மேல்நிலை பள்ளி கல்வி வாரியத் தலைவர் கல்யாண்மாய் கங்குலி அளித்த பேட்டியில், ‘‘வினாத்தாள் பாதுகாப்பாக கட்டப்பட்ட பிறகு, ஜிபிஎஸ் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட உறைக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். இந்த உறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. வினாத்தாள் உறையின் சீல் உடைக்கப்பட்டதும் அது பற்றிய தகவல் உடனடியாக கல்வி வாரிய அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள சர்வருக்கு வந்துவிடும். அதன் மூலம், வினாத்தாள் உறையை பிரித்தது யார் என்ற தகவலும் அங்குள்ள பட்டியல் மூலமாக சரிபார்க்கப்படும். இதன் மூலம், வினாத்தாள் முன்கூட்டியே கசிவதும், முறைகேடுகள் நடப்பதும் தடுக்கப்படும்’’ என்றார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக