யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/18

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு!

அரசுப்பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கானஇட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப்பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத்
தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம்தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில்நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர்மற்றும் டி.ஒய்.சந்திரசௌத்ஆகியோர் கொண்ட அமர்வானது தனதுதீர்ப்பில் கூறியதாவது:

2006இல்நாகராஜ் எதிர் இந்திய அரசுஎன்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையைஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சிமற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவதுகுறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராகஇடைக்காலத் தடை விதிக்க முடியாதுஎன்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையைஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்கொண்ட அரசியல் சட்ட அமர்வுவிசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாகஅரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்ஏழு பேர் கொண்ட அரசியல்சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத்துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்ட நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்கஅரசியல் சட்ட அமர்வு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராஅவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர்அரசியல் சட்ட அமா்வானது பல்வேறுபிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கைஉடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில்இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வுஎடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக