யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/18

வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது:

சென்னை : 'வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குடி தண்ணீருக்கு பற்றாக்குறை வருமோ என்ற அச்சத்தில் உள்ள, வட மாவட்ட மக்கள், இந்த மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம், நவம்பர், 23க்கு பின், குறைந்து காணப்படுகிறது. இதனால், ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, கணிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 40 சதவீதத்துக்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இந்நிலையில், 'நாளை முதல், மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



மழை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: வங்கக்கடலின் தென்கிழக்கில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, மேற்கு திசையில் நகரும் நிலையில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யலாம்.

கன மழை :

நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களின் சில இடங்களில்,
கனமழை பெய்யும். மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மழை குறைவால், குடிநீருக்கு திண்டாட்டம் வருமோ என்ற, அச்சத்தில் உள்ள, வட மாவட்ட மக்கள், மூன்று நாள் மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

சென்னை வானிலை மையத்தின், மாவட்ட வாரியான முன் கணிப்பின்படி, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிக மழை பெய்யும்.
வரும், 5ம் தேதி, எந்த மாவட்டத்துக்கும் கனமழை எச்சரிக்கை இல்லை. 6ம் தேதி, வேலுார், திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு, மழை முன்னறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

'திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதை ஒட்டி உள்ள, சென்னையின் சில பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இடைவெளி விட்டு, இரண்டு நாட்கள் மழை பெய்யும்' என, தனியார் வானிலை யாளர்கள் கணித்துஉள்ளனர்.
வெயில் :

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் எந்த இடத்திலும், 1 செ.மீ., கூட மழை பதிவாகவில்லை. சென்னை, வேலுார், சேலம், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் மிதமாகவும், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகவும் வெயில் கொளுத்தியது. மாலையிலும், அதிகாலையிலும், குளிர்பனி நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக