யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/18

CPS-ஐ நீக்கினால் ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு*

CPS நீக்கம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான *ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்* ஈடுபட அறிவித்துள்ளது.


டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ள கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறும் சூழலில் ஜாக்டோ-ஜியோவின் நடவடிக்கை பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விளக்கமளித்துள்ள *ஜாக்டோ-ஜியோவின் நிதிக்காப்பாளரான திரு.ச.மோசஸ்,* "பல ஆண்டுகாள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே இத்தகைய நிலைக்குள் ஜாக்டோ-ஜியோ தள்ளப்பட்டுள்ளது.

 நேற்றைய ஜாக்டோ-ஜியோவின்  ஊடகச் சந்திப்பிலேயே  *ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கஜா புயல் நிவாரணப் பணிகள் துளியளவும் பாதிக்காது.* மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் *பிற மாவட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்* என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் *சில ஊடகங்கள் இதனை மறைத்து வெறும் வேலைநிறுத்தச் செய்தியை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன.*

ஜாக்டோ-ஜியோவைப் பொறுத்தவரை புயல் *பாதிப்பிற்குள்ளான மாவட்ட மக்களின் உணர்வுகளையும் எமது உறுப்பினர்களின் உரிமையையும் ஒருங்கே மதித்தே வேலைநிறுத்தப் போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டுள்ளோம்.*
மேலும், நிவாரணப் பணிகளோடே நின்று விடாது *நிதி உதவி வழங்குவதிலும் ஜாக்டோ-ஜியோவின் உறுப்பு சங்கங்கள் தனித்தனியாகவும் பல இலட்சக்கணக்கான ரூபாய்* மதிப்பிலான பங்களிப்புகளைச் செய்துள்ளதோடே ஜாக்டோ-ஜியோ சார்பாக *ஒரு நாள் ஊதியத்தையும் வழங்க* அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புயல் நிவாரணப் பணிக்காக ரூ.15,000/- கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதும் எமது போராட்டக் கோரிக்கைகளில் முதன்மையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எமது பிடித்தத்தில் நாளது தேதி வரை அரசு செலுத்தியுள்ள 10% தொகையான ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள* ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், CPS திட்டத்தினை இரத்து செய்வதன் வழியாக அரசிற்கு *இந்த டிசம்பர் 1-ம் தேதி முதலே மாதம் தோறும் ரூ.250 கோடி நிதிச் செலவினம் குறையும்."* என்று தெரிவித்துள்ளார்.

இணைப்பு : மோசஸ் அவர்களின் பேட்டி https://youtu.be/yFiZ9TyxtMs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக