யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/19

10ம் வகுப்பு தனி தேர்வர் விண்ணப்பிக்க அழைப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிகள் வழியாக அல்லாமல், தனி தேர்வராக எழுத விரும்புவோர், ஜன., 7 முதல், 14 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறையின், சேவை மையங்கள் வழியாக மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி, நிபந்தனை, தேவைப்படும் சான்றிதழ் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு குறித்த விபரங்களை அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக