யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/15

பாடம் முடிக்காமல் தேர்வா?

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வு டிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதனால், வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழையால், 18 நாட்களாக கல்லுாரி இயங்காமல், பாடங்கள் பாக்கி உள்ளன. புறநகரில், பல கல்லுாரிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில், கல்லுாரிகளுக்கு செல்லும் வழிகளில், வெள்ளம் வடியவில்லை. இந்த ஆண்டில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமாகிறது. இந்நிலையில், பாடங்களை முடிக்காமல், மாதிரித் தேர்வும் நடத்தாமல், செமஸ்டர் தேர்வு எழுதினால், மதிப்பெண் குறையும்; தர வரிசையில் பாதிப்பு ஏற்படும்.
முதல் செமஸ்டருக்கு, 65 நாள் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மழை விடுமுறையால், 12 நாள் வீணாகியது. இன்னும் கல்லுாரி எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை. எனவே, மழை விடுமுறையை கணக்கிட்டு, தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலை கல்லூரிகளுக்கு தரவரிசை: யு.ஜி.சி.,

நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், தரவரிசை திட்டத்தை கட்டாயப்படுத்தி, யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து கல்லுாரிகளும், மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை, ஆராய்ச்சி எண்ணிக்கை, பேராசிரியர் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல புள்ளி 
விவரங்களை, https://www.nirfindia.org/Home இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த பட்டியலில், மொத்தம், 795 பல்கலைகள், 39 ஆயிரம் இணைப்பு கல்லுாரிகள் இணைக்கப்பட்டு, 2.37 கோடி மாணவர்களின் கல்வி தேர்ச்சியும், 10.15 லட்சம் பேராசிரியர்களின் கற்பித்தல் திறனும், ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'

'மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டன; இதனால், கணக்கு பராமரிப்பில் குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் நிர்வாகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கும் மாற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் சரி செய்யப்பட்டன.
இதற்கிடையே, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, புதுக்கோட்டை மற்றும் துாத்துக்குடி ஆகிய, ஏழு மாவட்டங்களில், தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான ஆசிரியர்களின், பி.எப்., கணக்கு விவரங்களை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் உள்ள, 81 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். இது பற்றி விவாதிக்க, டிசம்பர், 4ல், சென்னையில் மாவட்ட கல்வி அதிகாரி கள் அவசரக் கூட்டத்தையும், அவர் கூட்டியுள்ளார்.

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

தீபாவளி விடுமுறைக்கு பின்னர், தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை (நவ. 26) திறக்கப்பட்டன. 
இதில், குறிப்பிட்ட 24 பள்ளிகளில் மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த 24 பள்ளிகளுக்கும் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் விடுமுறை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்தப் பள்ளிகளின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்காக வெற்றிப்படி! மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2,480 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாநகராட்சி பள்ளிகளில், அரையாண்டு தேர்வுக்கு பிறகு, காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், தேர்வு எழுதும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கவும், 'வெற்றிப்படி' என்ற திட்டத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகமும், 'அறம் அறக்கட்டளை'யும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த அக்டோபரில் திட்டம் துவங்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், காலாண்டு தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சிறப்பு வகுப்பில், பயிற்சி அளிக்கப்படுகிறது.

'அறம் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலர் லதா கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், குறைந்த மதிப்பெண் பெற்ற, 300 மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சித்தாபுதுார், ராமநாதபுரம், வெங்கிட்டாபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ஒக்கிலியர் காலனி,
வடகோவை, ரத்தினபுரி, வெரைட்டிஹால் ரோடு மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

திட்டத்துக்காக, கமிஷனர், மாநகராட்சி கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி வகுப்புக்கு, 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்துக்காக, 3.5 லட்சம் ரூபாய் அறக்கட்டளை மூலம் செலவிடப்படுகிறது.

வழக்கமாக, வகுப்பறையில் பாடம் நடத்துவது போன்றில்லாமல், 'விஷூவல்' முறையில் பாடம் நடத்தப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.பொதுத்தேர்வில், 35 மதிப் பெண் பெற்று, வெற்றி பெறுவதற்கு பாடத்திட்டத்தில், எந்தெந்த பாடங்களுக்கு, எந்த வினாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள் எந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் என, பல்வேறு தகவல்களுடன் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

'விஷூவல்' முறையில் வகுப்பு நடப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்த முறையில் கல்வி போதிப்பதால், மாணவர்களின் மனதில், 80 சதவீதம் ஞாபக சக்தி அதிகரிக்கும். வாரத்தில், புதன் கிழமையில் மாலை நேரத்திலும், சனிக்கிழமையில் முழு நேரமும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இவ்வாறு, லதா தெரிவித்தார்.

இந்தாண்டு 'சூப்பர் 50'
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், கடந்த ஆண்டு, 'சூப்பர் 30' என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்தாண்டும் அதே திட்டத்தை செயல்படுத்த, பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு நடக்கிறது.
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''மருத்துவம், பொறியியல் படிப்புக்கு செல்ல, கடந்தாண்டு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இந்தாண்டு, அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்டு, 'சூப்பர் 50' பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

தென் கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: நாளை முதல் 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது: 
தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்குச் சுழற்சியானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. 


இது, தென்கிழக்கு வங்க கடல், அதை ஒட்டிய பகுதியில் மேலடுக்குச் சுழற்சியாகவே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறினால், கடலோர மாவட்டங்களில் சனி, ஞாயிறு (நவ 28-29) ஆகிய இரண்டு நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் வாய்ப்புண்டு.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மிகவும் பலத்த மழை இருக்கும். இந்தப் பகுதிகளில், அதிகப்பட்சமாக 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
மழை நிலவரம்(மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 70 மி.மீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 40 மி.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் தலைமை ஆசிரியயைக் கண்டித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 36 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியûயாக மேட்டூரைச் சேர்ந்த வசந்தகுமாரி பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பள்ளி முன் தொளசம்பட்டி-தாரமங்கலம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவியரை அவதூறாகப் பேசி வரும் தலைமை ஆசிரியயை மாற்றக் கோரி, தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
பெற்றோர்- ஆசிரியர் கழக நிதியாக மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிப்பதாகவும், தேர்வுக் கட்டணம் என்று தலா ரூ.100-ம், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டுக்கு ரூ.300-ம் வசூல் செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் நள்ளிரவில் பள்ளியில் புகுந்து அசுத்தம் செய்து செல்வதாகவும் குறை கூறினர். மேலும், மாணவ-மாணவியரை அவதூறாகப் பேசும் தலைமை ஆசிரியயை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை சமரசம் செய்து, பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை வசந்தகுமாரியிடம் கேட்ட போது, மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார். பள்ளியில் சிலர் மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி செல்லா குழந்தைகள் விபரம்: 8 ம் வகுப்பு வரை சேகரிக்க உத்தரவு

எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில், 14 வயது வரை, கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கட்டாயக்கல்விச்சட்டம் வலியுறுத்துவதால், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், அடுத்த கல்வியாண்டுக்கான வரைவு திட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களின் விபரங்களையும், பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன், விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், இந்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்திட்டம் அமைய உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

19 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
வயது வரம்பு: 


31.12.2015 தேதியின் அடிப்படையில் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icicicareers.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3 நாட்களுக்கு கன மழை

'வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறுவதால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறி வருகிறது. இதனால் அந்தமான் கடல் பகுதியில் மழை பெய்ய துவங்கி விட்டது.தமிழகம் நோக்கி: இந்த காற்று அழுத்த தாழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்.தற்போதுள்ள வானிலை நிலவரப்படி அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு, வட சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் இடையே டிச., 1ல் கரையை கடக்கலாம் என, கணிக்கப்படுகிறது. எனவே அதுவரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க வானிலை கணிப்பு மையமும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு குறித்து கணித்துள்ளது. அந்த கணிப்புப்படி தமிழகத்தின் வட கடலோர பகுதியில் டிச., 5 வரை கன மழை பெய்யும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிம்மதி: இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தணிந்து வெயில் பதிவானது. 
இது தேங்கியிருந்த மழை நீர் வடிய வாய்ப்பாக இருந்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் - 10; திருசெந்துார் - 2; ராமேஸ்வரம், குன்னுார் - 1 செ.மீ., மழை பெய்துள்ளது.குளிர் : தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் குளிர் துவங்கி உள்ளது. தர்மபுரி, வேலுார் மாவட்டம், திருப்புத்துாரில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

26/11/15

மத்திய அரசின் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.


மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் கட்டுரை மற்றும் ஓவியம் தொடர்பாக போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டன. பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆகிய இயற்கை வளங்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும்,நான் எவ்வாறு பெட்ரோலிய பொருள்களை பாதுகாப்பது,சேமிப்பது,தேசிய அளவில் இதனை பாதுகாப்பது தொடர்பாக எவ்வாறு  எடுத்து செல்வது  என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன..6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட  70க்கும் மேற்பட்ட மாணவர்களில்  மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில்  மாணவர் ரஞ்சித்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை முத்தும் மீனாள் போட்டிகளை நடத்தினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில்  மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.

               கட்டுரை போட்டியில்  8ம் வகுப்பு மாணவர்  கண்ணதாசன்  முதல் பரிசும்,7ம்  வகுப்பு மாணவி தனலெட்சுமி   இரண்டாம் பரிசும்,அதே  வகுப்பு மாணவி பார்கவி லலிதா மூன்றாம் பரிசும் பெற்றனர். ஓவிய போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும்,7ம்  வகுப்பு மாணவி பிரவீனா  இரண்டாம் பரிசையும் ,அதே  வகுப்பு மாணவர்  பரத்குமார்  மூன்றாம் பரிசையும் பெற்றனர்.நிறைவாக மாணவர் ஜெகதீஸ்வரன்  நன்றி கூறினார்.

அரசு மகளிர் பள்ளியில் மொபைல் போன்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம், பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவியர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினர். நேற்று முன்தினம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ஆசிரியர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, மாணவியரிடமிருந்து, 25க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மாணவியரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, பள்ளிக்கு வரும்போது மொபைல் போன் கொடுக்கக்கூடாது எனவும், மீறி கொண்டு வந்தால், மாணவியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. 


ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது. தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இரு நாட்களாக வெயில் தலை காட்டியதால், பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த, 12 வேலை நாட்களில் வகுப்புகள் இயங்காமல் பாதிக்கப்பட்டதால், இன்று முதல், நேரத்தை வீணடிக்காமல் வகுப்புகளை நடத்துமாறும், மாணவர்களை முடிந்த வரை விடுமுறையின்றி வகுப்புகளில் பங்கேற்க வைக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நவ., 17ல் துவங்க இருந்த திருப்புதல் தேர்வுகளை, பள்ளிகளே முடிவு செய்து, திங்கள் கிழமை முதல் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

வாய்மொழி உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது; மழையால் பாதித்துள்ள மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகளை இழந்திருந்தால் அவர்களுக்கு, இன்று முதல் மீண்டும் இலவச புத்தகம், சீருடை வழங்கப்படு கிறது. இதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டன.சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்புள்ள, 11 அரசு பள்ளிகளுக்கு மட்டும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

சீருடைகெடுபிடி இல்லை

வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகளை இழந்தும், பாதுகாப்பான இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் பிள்ளைகள், சீருடைகளை இழந்திருந்தால், அவர்களை சீருடை அணிந்து வர, சில வாரங்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?

தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.


இது பற்றி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அச்சம்
'ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள பட்டியலிலும், ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக, அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது' என, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த அரசு ஆணையை, ஊழியர்கள் பார்க்கும்படி வெளியிடவில்லை. இது, அரசு ஊழியர்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.உயர்க்கல்வித் துறையின் சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர் இது பற்றி கூறியதாவது:ஆதார் எண் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்க வேண்டும். நகலை சரிபார்க்க, உண்மை நகலை இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகையை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை, ஒவ்வொரு ஊழியரின் இணையதள கணக்கில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்பிஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.'அரசின் திட்ட பயன்களை பெறக்கூட, ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணை, தமிழக அரசு கேட்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என, அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

காஸ் மானியத்திற்கும்...சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களிடம், 'ஆதார்' எண் தருமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. 

மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, ஜன., மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்; அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் வரவு வைக்கும். 

'நேரடி மானிய திட்டத்தில் இணைய, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அப்போது அறிவித்தன. இதனால், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த, ஜூன் மாதத்திற்குள், நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஆதார் எண் அளிக்கத் தேவையில்லை; 

வங்கி கணக்கு எண் மட்டும் தாருங்கள்' என தெரிவித்து, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைத்தன. இந்நிலையில், மானிய திட்டத்தில் இணைந்து, ஆதார் எண் அளிக்காத வாடிக்கையாளர்கள், அதை சமர்ப்பிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன. 

விலக்குஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண் அவசியம். சில மாதங்களுக்கு முன், ஆதார் எண்ணை பலர் பெறாமல் இருந்ததால், அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, மானிய திட்டத்தில் இணைந்த பலர், ஆதார் அட்டை பெற்று வருகின்றனர். அதனால், ஆதார் எண் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதை அளிக்குமாறு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 


விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்திலும் வேலை தனியார் பள்ளி ஆசிரியைகள் அதிருப்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. 


இதுகுறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசின் உத்தரவால், தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொன்ன பள்ளி நிர்வாகங்கள், பராமரிப்பு பணிகளில் ஈடுபட செய்தனர். கண்டிப்பாக பள்ளிக்கு வருமாறும், மற்ற பணியாளர்களை போல் பராமரிப்புப் பணியில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டதால், ஆசிரியைகள் அவதிக்கு ஆளாகினர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்

பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நவ., 12 ல், வி.ஏ.ஓ., தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசு தேர்வு எழுதும்போது, வயது உச்சவரம்பு நிர்ணயம் தேவையில்லை என உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இந்த தீர்ப்பு இதற்கு முந்தைய வி.ஏ.ஓ., தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வயதுள்ள பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.தேனியை சேர்ந்த பட்டதாரிகள் கந்தசாமி, சாமிநாதன் கூறியதாவது: 

தமிழக அரசு வேலை வாய்ப்பு பதிவுக்கும், புதுப்பித்தலுக்கும் பட்டதாரிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் 57 வயது வரை, அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுதலாம். இதற்கு முந்தைய தேர்வுகளில் தமிழக அரசே இந்த அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு அனுமதி மறுப்பது வேதனையாக உள்ளது. வேலையில்லா பட்டதாரிகளின் சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வயது உச்சவரம்பு சலுகை அளிக்க வேண்டும், என தெரிவித்தனர்.

21/11/15

TNTET தகுதி தேர்வில் 2013 ஆண்டு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு...

வருகின்ற 01.12.2015 அன்று உண்ணாவிரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு
நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,


இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704,  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150,  திரு.பரந்தாமன் : 94432 64239,  திரு.சக்தி : 97512 68580,  திரு.லெனின் ராஜ் : 80125 32233.

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....

தலைமை ஆசிரியர் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, பள்ளியை அடிக்கடி பூட்டி செல்வதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியரின் செயல்பாடால், தற்போது, 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கடந்த, 17ம் தேதி வந்த மாணவர்கள், பள்ளி பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மற்றொரு ஆசிரியர் விடுமுறையில் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் வராததால், மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். தகவலறிந்த, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி, நேரடியாக பள்ளியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம், பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின், கஞ்சம்பட்டி பள்ளியிலிருந்து, ஒரு ஆசிரியரை வரவழைத்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ''உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காந்திமதி தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி, தெற்கு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன் கூறுகையில், ''பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததுடன், பள்ளியை பூட்டிச் சென்றார்; 'சஸ்பெண்ட்' உத்தரவை, தலைமையாசிரியர் பெற மறுத்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் முன்னிலையில், பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது; அவருக்கு, தபால் மூலமும் சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி உதவியாசிரியர் மூலமாக, பள்ளி தொடர்ந்து இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.

இதே போல், ஆனைமலை ஒன்றியம், கன்னியம்மன் கோவில் காலனியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், இவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தனர்.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'தவறு செய்த ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' என்றனர்.

7 PAY COMMISSION PAY BAND DETAILS


RATIONALISATION APPLIED IN THE PRESENT PAY STRUCTURE

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை. 
காலியிடங்கள்: 122 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.


வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றுஅழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்றுஅழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில்கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், (primary HM)ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்: (as a primary HM)
*****************************
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
22970 x  2.57 = 59,033
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 59,033    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது. ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 1400 x 2 = 2800
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)
நகர ஈட்டுப்படி : 720   
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)   
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 62, 753
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 28,713
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 1400
நகர ஈட்டுப்படி :360
மருத்துவப்படி : 100
மொத்தம் : 53,543
********************
வித்தியாசம் : 9,210
********************
தோராய ஊதிய உயர்வு : 17%

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
9400 x  2.57 = 24,158
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 24,158    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.
ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 25,438
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 21,150
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 21,790
********************
வித்தியாசம் :3,648
********************
தோராய ஊதிய உயர்வு : 14%

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்..

*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.


*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு.குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.

*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள்ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு 

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்.

*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.

*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம் 

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும்.நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்.

*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும்ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.

இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு

கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:


தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போதுவரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம்தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சவுதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள்மற்றும் சிறப்பு மருத்துவர்கள் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000/ முதல் ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000/ முதல் ரூ.3,91,000/ வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவுதிஅரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRC: Primary upper primary crc dates announced...

Topic: Remedial Teaching for late Bloomers

Primary CRC

State level
24.11.2015
Dt level
27.11.2015
CRC level
05.12.2015

Upper Primary CRC

State level
25.11.2015
Dt level
30.11.2015
CRC level
12.12.2015

IGNOU:Hall Tickets for December 2015 Term End Examination

520 பொது அறிவு கேள்வி பதில்கள்----தகவல் துளிகள்

Govt school VS Private school---தகவல் துளிகள்,

Heart attack when alone at home---தகவல் துளிகள்

JOBS RELATED GOVERNMENT AND OTHER WEBSITES---தகவல் துளிகள்

Pen drive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்.---தகவல் துளிகள்

TNPSC TET TRB 100 QUESTIONS AND ANSWER

இேதா ஒர கணித விதைத !----தகவல் துளிகள்,

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய ---தகவல் துளிகள்

20/11/15

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?

தற்போது D.A 119%
01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.
Pay 100% + D.A 125%
= 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% )
= 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% )
= 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்......

38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி

புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.

கடந்த, 2010ல், 'அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற, 44 நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டாண்டன் குழு பரிந்துரைத்தது. இது தொடர்பான வழக்கில், மூன்று பல்கலைகள் நீங்கலாக, 41 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து அறிக்கை தர, பல்கலை கழக மானியக் குழுவிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதில், மூன்று பல்கலைகள் அங்கீகாரம் பெற்றன.
எஞ்சிய, 38 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து, புதிய தரப் பட்டியலை வழங்கும்படி, என்.ஏ.ஏ.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஏ.ஏ.சி., தரப்பில், 38 பல்கலைகளை ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் விவரம்: கடந்த, 2012ம் ஆண்டு, என்.ஏ.ஏ.சி., ஒழுங்குமுறை விதிகளின்படி, 38 நிகர்நிலை பல்கலைகளும் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதனால், இந்த நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து இயங்கலாம். மேலும், இந்த பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அது, இணையத்திலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தர வரிசைப் பட்டியல் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை நிகர்நிலை பல்கலைகள் தெரிவிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை, 2016, ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.
இதன் மூலம், ஐந்து ஆண்டுகளாக தங்களின் எதிர்காலம் குறித்து, பரிதவித்து வந்த, 2 லட்சம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 

சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. 

இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு: குழு பரிந்துரை

புதுடில்லி: ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 48 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், 55 லட்சம் பேர், ஓய்வூதியம் பெறுகின்றனர். தற்போதைய ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
இதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு அமைக்கப்படும். இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய வீதம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2014ல், ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, தன் அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்தது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் விபரம் வருமாறு:
* மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஊதியம் மற்றும் இதர படிகள் சேர்த்து, 23.55 சதவீத அளவுக்கு மொத்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதில், ஊதிய உயர்வு மட்டும், அடிப்படை சம்பளத்தில், 16 சதவீதமாகவும், இதர படிகள், 63 சதவீதமாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஓய்வூதியதாரர்
களுக்கான ஓய்வூதிய உயர்வு, 24 சதவீதமாக இருக்க வேண்டும்.* ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம், 2.25 லட்சம் ரூபாயாகவும் இருக்க வேண்டும். கேபினட் செயலர்
களுக்கும், அவருக்கு சமமான அந்தஸ்து உள்ள அதிகாரி
களுக்கும், 2.50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.* இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும், 3 சதவீத சம்பள உயர்வும், 24 சதவீத ஓய்வூதிய உயர்வும் வழங்க வேண்டும்.
* ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே பட்ஜெட்டிற்கு சென்று விடும்.
* 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' முறையை, ராணுவத்தினருக்கு மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, செலவுகள் துறை செயலர் தலைமையில், செயலகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம், 0.65 சதவீதம் நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.* மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையானது, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊதியக்குழுவின் இந்தப் பரிந்துரைகள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டதும் அமல்படுத்தப்படும். 2008ல் நியமிக்கப்பட்ட, ௬வது ஊதிய குழு, மத்திய அரசு 
ஊழியர்களுக்கு, 35 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது

பள்ளியின் மேற்கூரை ஓடுகள் விழுந்து புத்தகங்கள் நாசம்

பலத்த மழையால் அரசுப் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள்ளே விழுந்ததில் புத்தகங்கள் சேதமடைந்தன.

ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி அன்சாகரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 38 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா காந்தியும், உதவி ஆசிரியராக கோவிந்தியும் பணியாற்றி வருகின்றனர்.


இப்பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் மாணவர்களின் புத்தகங்கள் சேதம் அடைந்தன. வியாழக்கிழமை காலை பள்ளியைத் திறக்க வந்த தலைமையாசிரியர் வகுப்பறையின் மேற்கூரை ஓடுகள் விழுந்து மழைநீர் புகுந்தது குறித்து உதவித் தொடக்க கல்வி அலுவலர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடம் சென்று சேதமடைந்த பள்ளி வகுப்பறையைப் பார்வையிட்டார். பின்னர் அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கூரை சேதமடைந்திருப்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
        இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.
பரிந்துரைகள் விவரம
்*.அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்
*.இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும
்*.குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்
*.ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்
*.ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும
்*.பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.
*.பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.
*.தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.
*.இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.
*.நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்
*.இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.

தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!

தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!
இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது."டி.என்.எஸ்.,' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் மொபைல் போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது ஆண்டுக்கு 49 நாட்கள் மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல், இந்தியாவில் 31-45 வயதுடையோர் சராசரியாக 1.8 மணி நேரத்தையும், 46-65 வயதுடையோர் 1.5 மணி நேரத்தையும் மொபைல் போனில் செலவிடுகின்றனர்.
இந்தியாவில், வாரந்தோறும் இண்டர்நெட் பயன்படுத்தும் இளைஞர்களில், சுமார் 85% பேர் ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ளனர். இதில் சமூக வலைதளங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதில் 43% பேர் தினமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்; 42% பேர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கின்றனர். இளைஞர்களில் 11% பேர் மொபைல் போன் வழியே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி, பொருட்களை வாங்கும் முறைகளை வாரம்தோறும் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16-30, 31-45, 46-65 வயதுடை 3 பிரிவினருமே மொபைல் போனில் செலவிடும் நேரத்தில் பாதியை சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும்

புதுடெல்லி,மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள்
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்குஅதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.இந்நிலையில், 7-வது சம்பளக்கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது

வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.
கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது:
* மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மதிய இடைவேளை நேரத்தைக் குறைத்து; மாலை நேரத்தில், கூடுதல் நேர பாடப்பிரிவு ஒதுக்கி பாடங்கள் நடத்தப்படும் 
* சனிக்கிழமைகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகள் முழு நேரம் இயக்கப்படும் 
* மழையால், கல்லுாரிகளில் தேர்வுகள் ரத்தாகி உள்ளதால், தேர்வு நாட்களை குறைத்து, மற்ற நாட்களில், கூடுதல் பாட வேளைகள் ஏற்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என, இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது கட்டமாக, விண்ணப்பங்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவற்றை கொண்டு, கள ஆய்வுக்கான விண்ணப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் விவரம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. ஒரு சில மாவட்டங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கள ஆய்வை துவக்கி 
உள்ளனர்.பெரும்பாலான மாவட்டங்களில், நாளை முதல் கள ஆய்வை துவக்க உள்ளனர். ஆய்வின் போது விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால், ஓட்டுச்சாவடி அலுவலர், தனக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில், 'சரி' என குறிப்பிடுவார். தவறு இருந்தால், 'மொபைல் ஆப்ஸ்' மூலம், உடனடியாக திருத்தம் மேற்கொள்வார்.
கள ஆய்வு விவரமும், உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணி டிச., 5க்குள் முடிக்கப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பரில் துவங்கி, அக்., 24ல் முடிந்தது. மூன்று நாள் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, 17 லட்சம்; நீக்க, 1.76 லட்சம்; பெயர் திருத்தம் செய்ய, 2.69 லட்சம்; முகவரி மாற்ற, 1.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக, விண்ணப்பத்தில் இருந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.

எனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும். இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுவையில் மழை பெய்யும்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவுப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. காற்றின் மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, கடல் பகுதியில் நிலவும் ஈரம் மிகுந்த காற்றை நிலப்பகுதிக்குள் இழுக்கும் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. கடந்த 24 மணி நேரத்தில், சங்கரன்கோயில் மற்றும் கடம்பூரில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அழைப்பு

ஸ்ரீரங்கம் மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததால், விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில், தனக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஆறு பேருக்கு, காலியாக உள்ள, அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவி வழங்கவும், முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மோகன், காமராஜ், ஆகியோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகின்றனர். அந்த துறைக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சர்ச்சைக்குள்ளான அமைச்சர்களை மாற்றவும், முதல்வர் திட்டமிட்டு உள்ளதால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட இனத்தவரை விமர்சித்த பிரச்னையில் சிக்கிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுார் கூட்டத்தில், சொத்துகள் குறித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வளர்மதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுசாமி ஆகியோருக்கு, முதல்வரை சந்திக்க, அழைப்பு சென்றதை தொடர்ந்து, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர்.அவர்களில், முக்கிய பணிகளில் ஈடுபட்ட ஆறு பேருக்கு, முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை வழங்க, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அழைக்கப்பட்டு இருந்தவர்களில், ராசிபுரம் முன்னாள் எம்.பி., சரோஜாவும், முன்னாள் எம்.எல்.ஏ., ராசு ஆகியோரும் அடங்குவர்.

-- நமது சிறப்பு நிருபர் --

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய சிடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் தாவரவியல், உயிர்விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 11 பாடங்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய ஒரே சிடி தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கான இந்த சிடி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.


இதை அவர்கள் பாடவாரியாக பிரின்ட் அவுட் எடுத்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்கள் முதல் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இது பயன்பெறும். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் இணையதள முகவரியிலும் இந்த வினா-விடையை பார்த்து படித்துக் கொள்ளலாம், என்றார்.

மேல்நிலைத் தேர்வு;தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.11.2015 முதல் 27.11.2015 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித்தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தனித்தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஓ.பி.சி., மாணவர்களுக்கு உ.பி., சலுகையோ சலுகை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு என வகைபடுத்தப்பட்டுள்ள, ஓ.பி.சி., மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. 

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் ஓட்டு, 52 சதவீதம் உள்ளது. ஓ.பி.சி., மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற, அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 30 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என உள்ளது. 

வரும், 2017ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இந்த மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவினரின் ஓட்டுகளை குறிவைத்து, அந்தப் பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, மாநில சமூக நலத்துறை, நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்.

.*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

.*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம்

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்

.*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிப்பு

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் ஏ,கே., மாத்தூர் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18, ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ 2. 25 லட்சம் வரை வழங்கவும், ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கவும், அடிப்படை சம்பளாக 16 சதவீதமாகவும், இதர படிகள் 63 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனை 24 சதவீதம் வரையில் உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் தனது அறிக்கையை அமல்படுத்தும் படியும்
தற்போது வழங்கப்பட்டு வரும் 52 வகையான படிகளையும் ரத்து செய்யும்படியும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grade pay விற்கு பதிலாக புதிய முறை அறிமுகம்
இடைநிலை ஆசிரியர் new level will b 5
B.T Asst level 7
P.G level 8
For BT entry level pay 53600
Sec.Grade 32900
P.G. 58600

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7வது ஊதியக் குழுவின் அறிக்கை முழு விவரம்

19/11/15

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு

ஒர பளளிககடததகக ஆயவாள ஒரதத வநதார

மீன் உணவு சாப்பிட்டு வாழ்க நலமுடன் நண்பர்களே

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது:

சந்தனம், குங்குமம் மற்றும் திருநீறு இடுவதின் உண்மையான பயன்கள்:-

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்...

ஆன்லைனில் ஈசியாக "பான் கார்ட்" பெற வேண்டுமா? - கட்டணம் வெறும் ரூ.106:

உங்கள் செல்போன் எண் மறந்துவிட்டதா ..!