யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/4/17

கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்.

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்.

ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்')ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு.

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்
களுக்கு, 2015, மே, 30ல் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 
தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியாகின. இவர்களுக்கு, நாளை முதல், வரும், 11ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவில், இரண்டு ஆண்டு வரை காத்திருப்போருக்கு, 2; நான்கு ஆண்டுகளுக்கு, 4; ஆறு
ஆண்டுகளுக்கு, 6; எட்டு ஆண்டுகளுக்கு, 8; பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு, 10 மதிப்பெண்கள் என, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தரப்படுகிறது.பிளஸ் 2வுக்கு, இரண்டு; பட்டம் மற்றும் அதற்கு மேலான படிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆய்வக உதவி யாளராக அனுபவம் இருந்தால், இரு மதிப்பெண்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'பத்தாம் வகுப்பு முடித்த பலர், கல்லுாரி களுக்கு செல்ல முடியாமல், தொலை நிலை கல்வியில், டிப்ளமோ முடித்துள்ளனர். பட்ட படிப்புக்கு வழங்குவது போல, டிப்ளமோ படித்த தங்களுக்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, அவர்கள் கோரிஉள்ளனர்.

போலி சான்றிதழ் கண்காணிப்பு : ஆய்வக உதவியாளர் பணி அனுபவத்துக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படுவதால், பல பள்ளி, கல்லுாரிகளில் பணம் வாங்கிக்கொண்டு, போலி சான்றிதழ் வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, பணி அனுபவ சான்றிதழை, பள்ளி, கல்லுாரிகளின் ஆவணங்களில் சரிபார்க்க, அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.

தமிழ் பல்கலை.யின் டிப்ளமோ படிப்பு இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் டிப்ளமோ படிப்பு, இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் (பொறுப்பு) இரா.வெங்கடேசன் கடந்த மார்ச் 15-ம் தேதி பிறப் பித்த அரசாணையில் கூறப்பட் டுள்ளதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பானது, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானது என்று தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணைப்புக்குழு (Equivalence Committee) தீர்மானித் துள்ளது.

 அதன் அடிப்படையில், தமிழ் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்கக இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியானது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் இசை ஆசிரியர் நியமனத்துக்கு பொருந்தும் என அரசாணை வெளியிடுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் அரசை கேட்டுக் கொண்டார்.அவரது கருத்துரு மற்றும் டிஎன்பிஎஸ்சி இணைப்புக் குழுவின் தீர்மானம் ஆய்வு செய் யப்பட்டது.

தமிழ் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியை, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானதாக கருதலாம் என அரசு முடிவுசெய்து ஆணை வெளியிடப்படுகிறது.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

I "M" Possible - TET தன்னம்பிக்கை வரிகள் !!!

TET தன்னம்பிக்கை வரிகள் - பிரதீப் ப .ஆ . பூங்குளம்

இன்றைய வெற்றி விதைகள்:🐝

* பல முறை தேர்வில் தோற்றவரா நீங்கள் - கவலை வேண்டாம் - அறிவும் சூழலும் முரண்பட்டது. இணையும் போது வெற்றி நிச்சயம்


* முதல் முறை தேர்வு எழுதுபவரா கவலை வேண்டாம். முதல் முயற்சி வலிமை மிக்கது

* வயது அதிகம் மறதி என்ற பயம் இருந்தால் அகற்றுங்கள். அனுபவமே கல்வியின் அடித்தளம் . மன நிலையை ஒருநிலை படுத்துங்கள். இளைஞரை விட பல மடங்கு திறன் பெற்றவர் ஆவிர்

* வழிகாட்டுதல் இல்லை என்ற நிலை இருப்பின் வருத்தம் வேண்டாம் சுயத்தை மீறிய திறன் மற்றவரிடம் இல்லை. நம்பிக்கை உடன் படியுங்கள்

* மறதி, சோர்வு , சலிப்பு வருகிறாதா? கண்டிப்பாக ஏற்படும். நம்பிக்கை விதையுங்கள் இவை களை செடியாய் மறைந்து விடும்

* படிக்கும் பகுதி அதிகம் என்ற பயம் உள்ளதா ? ஒரு எண்ணத்தை மனதில் விதையுங்கள் " I முதல் 10 வகுப்பு மாணவன் படிப்பதை நம்மால் எளிதாக படிக்க முடியும் என "

* போட்டியாளர் அதிகம் என பயமா? எவரை பற்றியும் கவலை வேண்டாம். ஓடும் குதிரையில் முதல் குதிரை நான் என கொள்ளுங்கள்

* நேரம் போதவில்லையா?
இருக்கும் நேர்த்தை மிக நேர்த்தியாக பயன்படுத்துங்கள்

* பணி இடம் இருக்குமா ? எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை. 1 பணியிடமாவது கிடைக்கும் அது எனக்கு என முடிவு கொள்ளுங்கள்

* அட்டவணை படிக்க இயலவில்லையா ? கவலை வேண்டாம். நாம் இயந்திரம் அல்ல இட்டதை எட்ட. இயன்ற வரை போராடு

* பாடம் புரியவில்லையா ? வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி படியுங்கள்

* கணிதம் வரவில்லையா? புத்தக கணக்கை தீர்த்து பாருங்கள். தேர்ச்சி மதிப்பெண் நிச்சயம்

* கனவை நீக்குங்கள். நிஜத்தில் வாழுங்கள். இன்றைய முயற்சியே
நாளைய வெற்றி

* எண்ணம் தெளிவாகட்டும்
இலக்கு
உயர்வாகட்டும்

* நேர்மறை எண்ணம் நேர்மறை முடிவு தரும்.
எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்- விவேகானந்தர்

வாழ்த்துகளுடன் : தேன்கூடு🏆

TRB - 1,111 ஆசிரியர்கள் நியமனம் - பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம் நீடிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த 1,111 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட நியமன அறிவிப்பில் பாடவாரியாக பணியிடங்கள் அறிவிக்காததால் பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

TNTET - 2017 Exam ஹால்டிக்கெட் தயார்.

டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு வருகிறது. இதை, அடுத்த வாரம் தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிஇடி தேர்வை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஇடி தேர்வு நடக்க உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி மார்ச் 23ம் தேதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. தவறாக பூர்த்தி செய்தது, தகுதி இல்லாத பாடங்களுக்கு விண்ணப்பித்தவை என சுமார் 2,000 பேரின் விண்ணப்பம் கண்டறியப்பட்டுள்ளது.மற்ற விண்ணப்பங்களுக்கு ஹால்டிக்ெகட் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி 598 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 1,263 தேர்வு மையங்களும் அமைக்க டிஆர்டி ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியலை அடுத்த வாரம் இணைய தளத்தில் டிஆர்பி வெளியிட உள்ளது. அப்போது, ஹால் டிக்கெட் குறித்த விவரங்களும் வெளியிட்டுஇணை தளம் மூலமாகவே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுதவிர, தபால்மூலம் ஹால்டிக்கெட் அனுப்பவும் டிஆர்பி முடிவு செய்துள்ளது.வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் டிஇடி தேர்வில் வெற்றி பெறுவோர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு முன்பு கடை பிடித்த வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் (டிஇடி) பெற்ற மதிப்பெண்ணை 60 ஆல் பெருக்கி 150 ஆல் வகுக்க கிடைக்கும் மதிப்பெண், இடைநிலைஆசிரியர் தேர்வில் (டிடிஎட்) பெற்ற மெதிப்பெண்ணை 25 ஆல்பெருக்கி மொத்த மதிப்பெண்ணால் வகுக்க கிடைக்கும் மதிப்பு (25%), மேனிலைத் தேர்வில் (பிளஸ் 2) பெற்ற மதிப்பெண்ணுக்கு 15% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதற்கு, மொத்த மதிப்பெண்ணை 15 ஆல் பெருக்கி, 1200ல் வகுக்க கிடைக்க மதிப்பு எடுக்கப்படும். மேற்கண்ட முறையின் கீழ் 60%, 25%, 15% என கணக்கிட்டு அவற்றை கூட்டினால் வரும் மதிப்பெண்படி பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் போடுவார்கள்.. 

8/4/17

தேன்கூடு உளவியல் New significant material

TET வெற்றி நிச்சயம் சிறப்பு கட்டுரை - பிரதீப் ப.ஆ - பூங்குளம்


மீதமுள்ள நாட்கள் : 22 நாட்கள்
:::::::செய்ய வேண்டியவை:::::
* முடிக்கபடாத பாட பகுதியை விரைவாக படிக்க துவங்குங்கள்
* கடின பகுதியை மீள படியுங்கள்
* படிக்காத பாடங்களை ஒரு முறையாவது படியுங்கள்
* திருப்புதலை துவங்குங்கள்.
*முன்பு படித்ததை விட ஆளமாகவும் தெளிவாகவும் திருப்புதலில் படியுங்கள
* உங்கள் Major பாடமே உங்களின் கூடுதல் பலம். அதில் மிக தெளிவாய் இருங்கள்
* தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தை தினமும் மனதில் விதையுங்கள்
* தேவையற்ற மெடிரியல் அவற்றில் உள்ள தேவையற்ற கருத்துகளை படித்து நேர விரயம் செய்யாதீர்
* கூடுமான அளவு சிறு தேர்வு எழுதி பாடப்பகுதி சார் சுய மதிப்பீடு செய்யுங்கள்
* கணிதம் சோர்வான நேரத்தில் தீர்த்து பயிற்சி பெறுங்கள்
* தமிழ், அறிவியல், ச.அறிவியல் தேர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மறவாதீர்
:::::செய்ய கூடாதவை ::::::
* பிறரின் தேவையற்ற வசை சொற்களில் மூழ்கி இருக்காதீர்கள்
* தேர்வின் மீது பயம் தேவை. தேர்வையே பயம் என நினைத்து உடைய வேண்டாம்
* வெற்றியோ தோல்வியோ அது இப்போது தெரியாது. தெரிந்த முயற்சியை எடுத்து செல்வோம் வெற்றி நோக்கி
* வெய்ட்டேஜ் பற்றி கவலை வேண்டாம். குறைவாக உள்ளவர் டெட் தேர்வில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுங்கள்
* கோச்சிங் வகுப்பு தவறில்லை. தவறான நேர விரயம் செய்யும் கோச்சிங் தேவை இல்லை
*  இறுதி நேர பதற்றம் வேண்டாம்
* மறதி கண்டு பயம் வேண்டாம். அது மேலும் மறதி செய்யும்.
* சிறந்த தன்னம்பிக்கை தேவையான நேரத்தில் நினைவூட்டல் தரும்
* ஓய்வினை தவிர்க்க வேண்டாம். உறக்கம் அவசியம்
* ஏற்கனவே படித்து முடித்தவர் 2 திருப்புதல் செய்ய முனையுங்கள்
வாழ்த்துகள் _ தேன்கூடு

பழைய ரேஷன் கார்டுகளை திருப்பி தர தேவையில்லை!

புதிதாக வழங்கப்படும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற்ற பின், பழைய ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற தவறான தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருவதால், உணவு துறைஅதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கார்டு, ரேஷன் கடைக்கு வந்ததும், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' பற்றிய எஸ்.எம்.எஸ்., வரும். அதை, ஏழு தினங்களுக்குள், ரேஷன் கடைக்கு சென்று, ஊழியரிடம்தெரிவித்ததும், ஸ்மார்ட் கார்டு தரப்படும். அப்போது, பழைய கார்டை, கடைகளில் ஒப்படைக்க தேவையில்லை. ஆனால், சிலர், 'ஸ்மார்ட் கார்டு பெறும் வேளையில், பழைய ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டி இருப்பதால், அதனை முழுவதுமாக,'ஸ்கேன்' அல்லது நகல் எடுத்து கொள்ளவும்' என, வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர், ஸ்மார்ட் கார்டு பெறும் போது, பழைய கார்டை கடைக்கு கொண்டு செல்லவேண்டும். அதில், 'ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டு விட்டது' என்று, ஊழியர் முத்திரை வைத்து, ரேஷன் கார்டுதாரரிடமே, பழைய கார்டை திரும்ப தருவர். எக்காரணம் கொண்டும், பழைய கார்டை, திரும்ப வாங்க கூடாது என, ஊழியர்களிடம் கூறப்பட்டு உள்ளது. இதனால், பழைய கார்டை நகல் எடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ வேண்டாம். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை, பழைய கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். பழைய கார்டை, ஊழியரிடம் வழங்கினால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். அதை யாரிடமும் தர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்

.பிழை ஏன்? : ஸ்மார்ட் கார்டில் உள்ள பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி ஆகிய விபரங்கள், 'ஆதார்' கார்டை, ஸ்கேன் செய்ததில் பெறப்பட்டவை. எனவே, ஆதார் கார்டில் பிழை இருந்தால், அது, ஸ்மார்ட் கார்டிலும் வருகிறது. அது பற்றிய அச்சம் வேண்டாம்.பொது வினியோக திட்ட இணையதளத்தில் சென்று, பிழையை சரி செய்யலாம். புது கார்டை, அரசு இ - சேவை மையங்களில் வாங்கி கொள்ளலாம்.

ஆய்வக உதவியாளர் பணி : அனுபவ சான்றிதழுக்கு பணம்

ஆய்வக உதவியாளர் பணிக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க, பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 30ல் தேர்வு நடந்தது. 
எட்டு லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் முடிவுகள், மார்ச், 24ல் வெளியாயின.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 9 முதல், 11 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்புநடக்கிறது. ஒவ்வொரு சான்றிதழுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது.எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, 10; கூடுதல் கல்வித் தகுதிக்கு, 5; பிளஸ் 2 என்றால், 2; இளநிலை பட்டம் மற்றும் அதற்கு மேல், 3 மதிப்பெண் வழங்கப்படும்.

ஆய்வக உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால், 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம், 167 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். பணி அனுபவத்துக்கு, அங்கீகாரம் பெற்றஅரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில், 2015, மே, 6க்குள் பணிபுரிந்தால், அந்த அனுபவ காலம் கணக்கிடப்படும். இதற்கு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மாவட்ட கல்வி அதிகாரி, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் சான்றிதழ் அளிக்க வேண்டும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்த பலர், வேலை பார்க்காமலேயே, அனுபவ சான்றிதழ் பெற்று வருகின்றனர்.

பல பள்ளி, கல்லுாரிகளில், சான்றிதழ் கேட்டு வருவோருக்கு, தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும், ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததாக, போலி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை வழங்க, பள்ளி, கல்லுாரி பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர், 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும்,2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதிமுடிவடைந்தது.பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி31-ந்தேதி முடிந்தது.பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வது முதல்9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுவருகிறது.

கோடை விடுமுறை

உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதிஇந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது.21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறைவிடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசுதொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்குதேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசி வேலைநாளாக உள்ளது.இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடை விடுமுறையாகும்.கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதிபள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் சனி அல்லதுஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப்படும்.எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும்ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால்பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? என்றுஅதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ்-1 வகுப்புகள்அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன்15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கும் தேதியும், பிளஸ்-1 வகுப்பு தொடங்கும்தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1,861 மையங்களில் 'TET' தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்புவரையில் பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30லும் தேர்வு நடத்தப்படுகிறது. 
இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 23ல், முடிந்தது. இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, 8.47 லட்சம் விண்ணப்பங்கள் விற்றன. அவற்றில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேர்; பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஐந்து லட்சத்து, இரண்டாயிரத்து, 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா மேற்கொண்டு வருகிறார்.

தேர்வுக்கு, 1,861மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள்,ஏப்., 29 தேர்வுக்கானவை. தற்போது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பாளர், பறக்கும் படையினருக்கான நியமனம் நடந்து வருகிறது.

Jio 'சம்மர் சர்ப்ரைஸ்' சலுகைக்கு டிராய் தடை

ஜியோ நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ள 3 மாத 'சம்மர் சர்ப்ரைஸ்' சிறப்பு சலுகை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

ஜியோ நிறுவனம், குறைந்தபட்சம் ரூ.303 ரீசார்ஜ் செய்யும் அதன் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு வரையறையில்லா டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை வழங்குவதாக அறிவித்தது. ஜியோவின் இந்த திட்டத்துக்கு இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில்

எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், டிராய் அமைப்பு அந்த சிறப்பு சலுகை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஜியோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டிராயின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம், டிராய் அறிவுறுத்தலின்படி செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் இதுவரை சேர்ந்தவர்களுக்கு 3 மாத சிறப்பு சலுகை திட்டம் பொருந்தும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

TNTET - 2017:ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய ‘வெயிட்டேஜ்’ முறையே கணக்கிடப்படும் | வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


 வழிகாட்டும் நிகழ்ச்சி

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், என்ன படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் அரசு சார்பில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை கருத்தரங்கு முகாம்கள் நடத்த திட்டமிட்டது. அதன்படி மாநகராட்சி, மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். கருத்தரங்கை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கையேட்டை அவர் வெளியிட்டார்.

சுய வேலைவாய்ப்பு

அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இது போன்ற கருத்தரங்கு நடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இன்று (வெள்ளிக்கிழமை) ஊராட்சி ஒன்றியங்களில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏழை மாணவர்களின் அறிவுத்திறனை அறிந்து அவர்கள் எந்த துறையில் ஆர்வமாக உள்ளார்களோ அந்த துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த உயர்கல்வியை தொடர ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் அதனை கற்க கல்வி நிறுவனங்கள் எங்கு அமைந்து உள்ளன என்பதற்கான வழிக்காட்டு கையேடும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த கையேட்டில் கல்விஉதவித்தொகை சார்ந்த விவரங்கள், சுய வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு பயிற்சி பற்றி விளக்கப்பட்டுள்ளது. வழிகாட்டும் மையம் வரும் கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மையம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். இணை இயக்குநர் பி.குப்புசாமி, எம்.கோதண்டபாணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ச.ராஜேந்திரன், பிரின்ஸ் கல்விக்குழும தலைவர் கே.வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் உஷா நன்றி கூறினார்.

 புதிய பாடத்திட்டம் முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- 'நீட்'தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதால் விதிவிலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை எப்படி அமைக்கலாம் என அரசு ஆய்வு செய்து வருகிறது. இதனை கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில்அறிவிக்க உள்ளோம். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விரைவில் அச்சிடும் பணி தொடங்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய 'வெயிட்டேஜ்'முறையே கணக்கிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தகுதிதேர்வை தள்ளிவைக்கலாம்!- தினமலர் (உங்கள் பக்கம் பகுதி பதிவு)

புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

ஆசிரியர் தகுதித் தேர்வு, 2003ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது; 2010 முதல், பிற மாநிலங்களிலும், தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின், 2012ல் அடுத்த தேர்வு நடைபெற்றது. அதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2017 ஏப்ரல், 29, 30ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், '2012க்கு பின் பணியில் சேர்ந்தோர், 2016க்குள் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால், பணி வாய்ப்பு உறுதி செய்யப்படும்' என, தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அரசே ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்தாதது தவறு; இது, மத்திய அரசின் அரசாணையை மீறிய செயல்!ஐந்தாண்டில், மூன்று முறை தேர்வு நடைபெற்று இருந்தால், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்தடுத்த தேர்வில் வெற்றி பெற்றிருப்பர்; பணி நிரந்தரம் ஆகி இருக்கும். புதிய ஆசிரியர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைத்து இருக்கும். இப்படி, அரசே ஆசிரியர்களை பழிவாங்குவது நியாயமா?தமிழக அரசு, தன் தவறை உணர்ந்து, 2012லிருந்து, 2017 மார்ச் முடிய பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம். தற்போது நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, புதிதாக பணி வழங்கலாம்.

வருங்காலத்தில் மத்திய அரசின் ஆணைப்படி, அவ்வப் பருவங்களில் தகுதித் தேர்வு நடைபெற வேண்டும்.வரும், ஏப்., 29, 30ல் நடைபெறும் தகுதித் தேர்வை ஓரிரு திங்கள் தள்ளி வைக்கலாம். ஐந்தாண்டு தள்ளியவர்களுக்கு, இரு திங்கள் பொறுக்க முடியாதா...ஏனெனில், 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிந்து விட்டது.

இனி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல வேண்டும்; ஏனைய ஆசிரியர்கள்,பள்ளித் தேர்வை நடத்தி, விடைத்தாள் திருத்த வேண்டும்.பின், தேர்வு முடிவு அறிவிக்க வேண்டும்.கோடை விடுமுறையில் தான், ஆசிரியர்களுக்கு படிக்க, தயாரிப்பு பணி செய்ய போதிய காலம் கிடைக்கும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் முடிய பள்ளி உண்டு. பள்ளி பணி பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.எனவே, அரசும், துறை அலுவலர்களும் ஆராய்ந்து, தகுதித் தேர்வை, ஜூன், ஜூலையில் வைக்க ஏற்பாடு செய்யலாம்!

உங்கள் TPF கணக்கை சரிபார்க்க நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை.

TPF 2014-2015 account statement 06.04.2017 அன்று வெளியாகியுள்ளது.*


உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க வேண்டும்.  நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை :


www.agae.tn.nic.in  என்ற முகவரிக்குச் சென்று,
download TPF account statements for the year 2014-15 என்ற option ஐ click செய்யுங்கள்.

Log in page வரும், அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.

உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும். அதில்
view account slip ஐ click செய்தால் financial year கேட்கும், அதில் 2014-15 select செய்து view account slip ஐ click செய்தால் 2014-15 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும். அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.

Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள், கடன் செலுத்திய பதிவுகள், பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பதிவுகள் சரியாக இருப்பின் statement ல் உங்கள் mobile எண் கொடுத்து கையொப்பம் இடுங்கள்.

ஏதேனும் பதிவுகள் விடுபட்டிருப்பின் தலைமை ஆசிரியர் மூலமாக aeeo  அலுவலகத்திற்கு உரிய ஆதாரங்களுடன் உடனடியாக விண்ணப்பம் கொடுங்கள் .

பதிவுகள் சரியாக உள்ளதையும் aeeo அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவது நலம்.

உங்கள் TPF கணக்கை நீங்கள் தான் சரிபார்க்க வேண்டும். 

Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவு செய்யுங்கள்.  கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள்.

குடிமைப் பணி: நிகழாண்டில் 980 அதிகாரிகளை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்.


நிகழாண்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் 980 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. 

முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிகழாண்டில் குடிமைப் பணியிடங்களுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட உள்ளனர்? என்பது குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த ஆண்டில் (2016) குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 1,209 காலியிடங்கள் இருந்தன. அவற்றுக்குத் தகுதியான நபர்களை நியமிப்பதற்காக யுபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதற்கான இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் தோராயமாக 980 அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: இதனிடையே, மற்றொரு கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஜிதேந்தர சிங், சரிவர பணியாற்றாத 5 ஐஏஸ் அதிகாரிகளையும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
குடிமைப் பணி அதிகாரிகளின் செயல்பாடுகளை அவர்களது பதவிக் காலத்தில் இரு முறை மதிப்பீடு செய்வது வழக்கம். அதில் அதிகாரிகள் சரிவர பணியாற்றாதது தெரியவந்தால், அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கப்
படும். அந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

ஓரியண்டல் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.


இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Senior Manager (FA) – Chartered Accountant, Taxation) (MMGSIII) - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51490
2. Senior Manager (FA)- Chartered Accountant Ind AS Cell (MMGSIII) - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51,490
3. Manager (FA) – Chartered Accountant (MMGSII) - 18
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
4. Assistant Manager (Financial Analyst) (JMGS-I) - 100
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Advertisement_for_CA.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எக்ஸிம் வங்கியில் மேலாளர், துணை மேலாளர் வேலை.


மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள துணை மேலாளர், மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: மும்பை
மொத்த காலியிடங்கள்: 10
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (JM I) - 02
2. Manager (MM II) -06
3. Deputy General Manager (SM V) - 01
4. Administrative Officer (JM I) - 01
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வு: மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/Advertisement/Advertisement_1432017211113.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்..