யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/17

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு

ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார். புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு
அதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மே, 22ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்டக்குழுவும் அமைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளிஒருங்கிணைப்பில், கலைத்திட்ட குழு, துணைக்குழு மற்றும் பாட புத்தகம் எழுதும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், பொதுமக்கள் என, 2,000 பேரிடம், கருத்துக்கள் பெறப்பட்டன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் உட்பட, பல பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன.இதன்படி உருவாக்கப்பட்ட, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிக்கையை, www.tnscert.org என்ற,இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், இறுதி பாடத்திட்ட அறிக்கைதயார் செய்யப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பிப்ரவரியில் புதிய புத்தகம்

புதிய பாடத்திட்டம் குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:இதுவரை இல்லாத மாற்றத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் போது, வேலை வாய்ப்பு பெறக்கூடியதாக, கல்விமுறை மாற உள்ளது. சிறுபான்மை மொழியினருக்கு, அடுத்த வாரம் பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும். ஏழு நாட்களுக்குள், பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கருத்துக்களை தெரிவிக்கலாம்.இந்த கருத்துக்களின்படி,ஜனவரியில் புத்தகம் உருவாக்கப்பட்டு, பிப்ரவரியில் பாடநுால் கழகம் சார்பில், புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் வரும்; அடுத்த இரண்டு ஆண்டுகளில், மற்ற வகுப்புகளுக்கு அமலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா, சிங்கப்பூர், 'சிலபஸ்'

பாடத்திட்டம் குறித்து, கலைத்திட்ட குழு தலைவர், அனந்தகிருஷ்ணன் அளித்த பேட்டி:வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து உட்பட வெளிநாடுகளில் உள்ள, 15 பாடத்திட்டங்களை, ஆய்வு செய்தோம். அதிலுள்ள நல்ல அம்சங்களை, புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், எவ்வாறு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்ற, விபர கையேடு தயாரிக்கப் பட்டுள்ளது.அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த பாடங்கள், புதிய திட்டத்தில் இடம் பெறும். அடுத்தடுத்த பாடங்களுக்கு தொடர்பு இருக்குமாறு, பாடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தொழில்நுட்ப தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.இவ்வாறுஅவர் கூறினார்.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

கல்வித்துறை முடிவு : இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொது தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.இதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வையொட்டி, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி, அரையாண்டு தேர்வுக்கு பின் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்

புதிய பாடத்திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 4 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்ட தேதியைவிட ஒரு மாதம் தாமதமாக திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்குக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த 3 மாதங்களில் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் புதிய பாடத் திட்டத்துக்கான வரைவை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வைக்காக அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தமிழக அரசு அக்.20-ஆம் தேதி வரைவு புதிய பாடத்திட்டத்தை வெளியிடவில்லை. 
தற்போது புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டாலும் கூட அதன் நோக்கம் நிறைவேறுவது சந்தேகம்தான்.
புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கேற்ற வகையில் பாடங்களை எழுத ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். புதிய பாடங்களை எழுதி, இறுதி செய்ய இரு மாதங்கள் ஆகும் என வைத்துக் கொண்டால் வரைவுப் பாடநூல்களைத் தயாரிக்கவே பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கம் ஆகிவிடும்.
அதன் பின்னர் அச்சுப் பணிகள் முடிந்து ஜூன் மாத இறுதியில் தான் புத்தகங்கள் தயாராகும். ஜூன் மாதத் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குறைந்து ஒரு மாதத்துக்கு புத்தகங்கள் இல்லாமல் படிக்க வேண்டிய அவலநிலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடும். புதிய பாடத்திட்டத்தைத் தயாரித்து வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, பாடத்திட்டத்தை மாற்றும் நோக்கமே சிதைந்து விட்டது.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சற்று குறைக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ள வகுப்புகளுக்கான பாட நூல்களை அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே அச்சிட்டு, வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்



அரசுப்பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தரஊதியம் உயர்த்தி வழங்கியதால் அரசுக்கு நிதியிழப்பு. - தணிக்கை ஆய்வில் கண்டுபிடிப்பு:

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு TNGTA அ.சுந்தரமூர்த்தி -மாநிலபொதுச்செயலாளர் அவர்களின் அன்பு வேண்டுகோள்

அன்புடையீர் வணக்கம்!!
      
CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய் திட்டத்தை நடைமுறைபடுத்திடவே  தாமும் , தான் சார்ந்துள்ள அமைப்புகளும் உருவானதைப்போல உருவக படுத்தித் கொண்டுள்ள போலி சங்கங்களை சார்ந்த போலியானவர்களுக்கு இந்த பதிவினை பதிவிடுகிறோம் .
                CPS திட்டத்தை ரத்து செய்திட CPS திட்டத்தில் உள்ள தலைமையே தேவையென்று கூறிக்கொண்டு வலம் வருபரோடு , போராட்ட களத்தில் உள்ள  *திருவாளர்கள் செ. முத்துசாமி (Ex MLC மற்றும் முன்னாள் பொதுச் செயலா ளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி) ,செல்வராஜ்( பொதுச் செயலர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ) , க.மீனாட்சி சுந்தரம்(Ex MLC மற்றும் பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்), அ .மாயவன் (Ex MLC மற்றும் தலைவர்), பக்தவச்சலம் (மாநிலத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ) ,  K .P. O .சுரேஷ் (தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), பாலசந்தர் ( பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ) , தாஸ் (பொதுச் செயலாளர் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ), தியோடர் ரபின்சன் (மாநிலத்தலைவர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் )ஆகியோர் அனைவரும் CPS திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களா ?* *எண்ணிப்பாருங்கள் .
நண்பர்களே இன்று தமிழகத்தில் உயிர்ப்போடு இயங்கும் அனைத்து இயக்கங்களின் மாநில , மாவட்ட , வட்ட நிர்வாகிகளில் பெரும் பகுதியினர் CPS திட்டத்தின் கீழ் பணிபுரிவர்களே என்பதனை மறந்து விட வேண்டாம் .குறிப்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் 95 சதவீதம் (95%) பொருப்பாளர்கள் CPS திட்டத்தில் உள்ளவர்களே ,
           நண்பர்களே போலியானவர்களின் பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.
CPS திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பதில் எவருக்கும் இரு வேறு கருத்தில்லை .

 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு , பிறகு 1 .06.2006 முதல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு . 
 இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசிடத்தில் போராட்ட கால பேச்சுவார்த்தையின் போது மிகத் தெளிவாக எமதமைப்பின் மாநிலத் தலைவர் திரு *P.இளங்கோவன்* அவர்களால் வாதிடப் பட்டத்தை அனைவரும் நன்கு அறிவோம் *.
  தொகுப்பூதிய பணிக் காலத்தை முறையான பணிக்காலாமாக மாற்றி தர வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் வாருங்கள் என்ற போது வழக்கு தொடர வராதவர்கள் , தற்போது தொகுப்பூதியம் சார்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டது என்று பொய் பரப்புரை செய்து வருகிறார்கள்.அவர்கள் வழக்கு தொடர்ந்த    லட்சணம் அப்படி*
   எமது அமைப்பின் (TNGTA ) *முன்னாள் பொதுச் செயலாளர் *திரு கி. மகேந்திரன்* *அவர்கள் பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொகுப்பூதிய பணி காலத்தை முறையான பணிக் காலமாக மாற்றிட வேண்டி வழக்கு பதியப்பட்டு இன்றும் உயிர்ப்போடு , அந்த வழக்கை நடத்தி வருகிறோம் என்பதனையும் தெரிவித்திட விரும்புகிறோம்*. 
      எனவே  நண்பர்களே *எவரோ சிலரின்* தூண்டுதல்களால் , சிலர் 
CPS திட்டம் ரத்து மற்றும் தொகுப்பூதிய காலம் மாற்றம்  எனக் கூறிக் கொண்டு நமது *கூட்டமைப்பிற்கு (ஜாக் டோ- ஜியோ - கிராப்)  குந்தகம் ஏற்படுத்துவதை  அனுமதிக்க வேண்டாம்*
      இவன்
 அ.சுந்தரமூர்த்தி மாநிலபொதுச்செயலாளர்*
      மற்றும்
*மாநில நிர்வாகிகள்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNG TA).

New Draft Syllabus 2017 - இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்

தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு - 2017
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியான அறிக்கைகள் மற்றும் ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இயக்குனர்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.
2016-2017 கல்வியாண்டில் 8.93 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். 2017-2018 கல்வியாண்டில்கூடுதலாக 7,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களைக் கண்காணிக்க, விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்களைப் பார் குறியீட்டுடன் அச்சிட தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அரசு தேர்வுகள்இயக்குநரகம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, டிசம்பர் மாதம் விடைத்தாள்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அதற்குத் தடை ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கிட்டத்தட்ட 50 சுயநிதி மற்றும்உதவிபெறும் பள்ளிகள் அரசாங்க அங்கீகாரமின்றி இயங்கின.

முன்னதாக அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் உள்ள பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் ஆவணங்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி, சேர்க்கைக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.இந்தியாவில் இயங்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டுமே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு,இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் விரைவில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த 2004ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.அதைத் தொடர்ந்து, பள்ளி கட்டடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வின் முடிவில், சுமார் 746 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி 2016 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 746 பள்ளிக்கூடங்களுக்கு விதிமுறைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாகக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தைக்கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய பள்ளிகள் தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது?

Flash News :TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு. சென்னை தரமணி மத்திய பல்தொழில்நுட்ப கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவிருந்தது.பொறியியல் அல்லாத பாடங்களுக்கு திட்டமிட்டபடி நடைபெறும்.விழுப்புரம்,மதுரையில் திட்டமிட்டபடி நவம்பர் 24,25ல் நடைபெறும்.சான்றிதழ் நடைபெறும் தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிவிக்கப்படும்

21/11/17

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கை கூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது: - வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால்

சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.


கடந்த மூன்றாண்டுகளில் 56 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

SCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவலர்கள்| ஆசிரியர் பயிற்று நர்கள் உற்று நோக்கி பள்ளிப் பார்வைக் குறிப்பில் குறிப்பிட வேண்டியவை!

20/11/17

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது -
அமைச்சர் செங்கோட்டையன்

வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் வெற்றி பெற்றும் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

தந்தி டிவி

ஆதார் பதிவு இயந்திரங்கள் வங்கிகள் வாங்க அனுமதி

புதுடில்லி: நாடு முழுவதும், 10 சதவீத வங்கிகளில், ஆதார் பதிவு பணிகளுக்கான இயந்திரங்களை வாங்கவும், 'டேட்டா என்ட்ரி' வேலைகளுக்கு, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஆதார் பதிவு, திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனங்கள் மூலம், ஆதார் அடையாள அட்டை ஆணையம் நிறைவேற்றி வந்தது. 

உத்தரவு : தற்போது, 100 கோடி பேருக்கு மேல், ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதால், ஆதார் பதிவு பணிகளை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 10 சதவீத கிளைகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு வசதியாக, வங்கிகள் தக்க ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் பதிவு, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள, இயந்திரங்களை கொள்முதல் செய்யவும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களாக, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 
பதிவு மையம்
இதனால், வங்கிகளின், 10 சதவீத கிளைகளில், விரைவில், ஆதார் பதிவு மையங்கள் திறக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஆதார் பதிவு மற்றும் திருத்தல் பணிகளை முறையாக மேற்பார்வை இடும்படி, வங்கி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதுவரை, நாடு முழுவதும், 3,000 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி கிளைகளில் மட்டுமே, ஆதார் பதிவு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், 15,300 மையங்கள் துவக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறுதலாக வெளியான

தகவல்கள்
சிலரது பெயர், முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை, மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த, 200 இணை
யதளங்கள், தவறுதலாக வெளியிட்டுள்ளது
தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆதார் அடையாள அட்டை ஆணையம் அளித்த பதிலில், இந்த தகவல் அம்பலமாகி உள்ளது. சில தனிநபர்களின் தகவல்கள், தவறுதலாக, மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்களில் வெளியானதாகவும், அவை நீக்கப்பட்டு விட்டதாகவும், ஆதார் ஆணையம் கூறியுள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில், 12 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், ஒன்பது லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பாட மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., தேர்வு, சி.ஏ., படிப்பதற்கான நுழைவு தேர்வு என, பல தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக, பொது தேர்வுகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை சோதிக்கும் கேள்விகளை இடம் பெறச்செய்ய, தேர்வுத்துறை முயற்சித்து வருகிறது.
எனவே, இந்த ஆண்டு, பிளஸ் 2 வினாத்தாளில், 5 சதவீதம் அளவுக்கு, சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும், சிக்கலான கேள்விகள் இடம் பெறலாம்.
வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம், போட்டி தேர்வுக்கு ஏற்ற வினாக்களை இடம் பெற செய்ய, ஏற்கனவே, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
தற்போது, தோராய வினாத்தாள் வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், இறுதி வினாத்தாளை ரகசியமாக இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பு, அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். அனுபவம் பெற்ற, தகுதியான தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

'நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது.

நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள்,பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது. 

தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. 

பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களை

தேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.- நமது நிருபர் -

வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல்

நாமக்கல்: வரலாறு காணாத விலை உயர்வால், தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வினியோகிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்துணவுக்கு முட்டை வழங்க பண்ணையாளர்கள் மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரம் 5 முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு வாரம்தோறும் 2.50 கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் நாமக்கல்லில் உள்ள பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பிரித்து கொடுத்து, முட்டை சப்ளை செய்தது.

கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்து வந்தனர்.
சத்துணவு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதில் பண்ணையாளர்களுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இந்த ஆண்டு தனியார் நிறுவனம், நேரடியாக பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்ய முடிவு செய்து, பண்ணையாளர்கள் குறிப்பிட்ட குடோன்களில் மட்டும் முட்டையை இறக்கி வைத்தால் போதும் என கூறியது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்தினருக்கும், பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கு பெரிய பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தனியார் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 

சிறிய பண்ணையாளர்கள் சிலரை வைத்துக்கொண்டு, சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வந்தது. கடந்த இரு மாதமாக பெரிய பண்ணையாளர்கள் யாரும் சத்துணவு முட்டையை தனியார் நிறுவனத்துக்கு சப்ளை செய்யவில்லை. இந்நிலையில், தற்போது முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், சத்துணவு முட்டை வினியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு வெளி மாநிலங்களில் அதிகளவில் டிமாண்ட் உள்ளதால், அங்கு அனுப்பவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 516 காசுகளாக உள்ளதால், அந்த விலையில் இருந்து 5 காசு அதிகமாக தான் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டையை வாங்கிச் செல்கின்றனர். கை மேல் உடனடி காசு கிடைப்பதால், பெரும்பாலான பண்ணையாளர்கள் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்து வருகின்றனர். 

இது குறித்து சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்துவிட்ட நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ''எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் முட்டைக்கு அடுத்த வாரம் வரை இப்போதே புக்கிங் செய்துள்ளனர். எனவே, சத்துணவுக்கு முட்டை சப்ளையை நிறுத்தி விட்டோம்'' என்றனர். இதன் காரணமாக, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்ய முடியாமல் தனியார் நிறுவனம் திணறி வருகிறது. வாரம் 5 முட்டை பள்ளிகளில் வழங்கப்படுவதால், அந்தந்த பி.டி.ஓ.க்களின் கண்காணிப்புபடி வாரத்துக்கு 2 முறை பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யப்படும். தற்போது போதுமான முட்டை கிடைக்காததால், ஒவ்வொரு பள்ளிக்கும் குறைவாக தான், முட்டை சப்ளை செய்யப்படுகிறது. 

வழக்கமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களுக்கு தேவையான முட்டைகள், வெள்ளிக்கிழமை சத்துணவு மையங்களுக்கு சென்று விடும். இந்த வாரம், கோழிப்பண்ணையாளர்கள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூட, வரும் திங்கட்கிழமைக்கு தேவையான முட்டைகள் நேற்று மாலை வரை சப்ளை செய்யப்படவில்லை.

குளறுபடி ஏன்?: முட்டை விலை, கடந்த 1ம் தேதி முதல் நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1ம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை, 6ம் தேதி 441 காசுகளாக உயர்ந்தது. தற்போது, 516 காசுகளாக உள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும் டெண்டரை, தனியார் நிறுவனம் ஒரு முட்டைக்கு 443 காசுகளுக்கு எடுத்துள்ளது. இந்த விலையை விட தற்போது மார்க்கெட் விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறுவனத்தால் குறைந்த விலைக்கு முட்டை வாங்க முடியவில்லை. மேலும், கடந்த காலங்களில் முட்டை சப்ளை செய்த பண்ணையாளர்களுக்கு பணம் பாக்கி உள்ளதால், அவர்களும் முட்டை கொடுக்க மறுத்து, விலை அதிகம் கிடைக்கும் இடத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால், சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டை வினியோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை போல விலை உச்சவரம்பு வருமா?: மேற்கு வங்கத்திலும் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அங்கு கொள்முதல் விலை ரூ.5.52ஐ எட்டி விட்டது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் கால்நடை மேம்பாட்டு துறை, முட்டை விற்பனைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதில், இந்த மாநிலத்தில் தினசரி 2 கோடி முட்டைகள் தேவைப்படுகின்றன. ஆனால் சந்தைக்கு 1.75 கோடி முட்டைதான் சப்ளை செய்யப்படுகிறது. கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி முட்டை விலையை உயர்த்தக்கூடாது. ஒரு முட்டையின் விலை 6 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணையாளர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இதுபோல் தமிழகத்திலும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நுகர்வோர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.