யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/17

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு TNGTA அ.சுந்தரமூர்த்தி -மாநிலபொதுச்செயலாளர் அவர்களின் அன்பு வேண்டுகோள்

அன்புடையீர் வணக்கம்!!
      
CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய் திட்டத்தை நடைமுறைபடுத்திடவே  தாமும் , தான் சார்ந்துள்ள அமைப்புகளும் உருவானதைப்போல உருவக படுத்தித் கொண்டுள்ள போலி சங்கங்களை சார்ந்த போலியானவர்களுக்கு இந்த பதிவினை பதிவிடுகிறோம் .
                CPS திட்டத்தை ரத்து செய்திட CPS திட்டத்தில் உள்ள தலைமையே தேவையென்று கூறிக்கொண்டு வலம் வருபரோடு , போராட்ட களத்தில் உள்ள  *திருவாளர்கள் செ. முத்துசாமி (Ex MLC மற்றும் முன்னாள் பொதுச் செயலா ளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி) ,செல்வராஜ்( பொதுச் செயலர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ) , க.மீனாட்சி சுந்தரம்(Ex MLC மற்றும் பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்), அ .மாயவன் (Ex MLC மற்றும் தலைவர்), பக்தவச்சலம் (மாநிலத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ) ,  K .P. O .சுரேஷ் (தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), பாலசந்தர் ( பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ) , தாஸ் (பொதுச் செயலாளர் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ), தியோடர் ரபின்சன் (மாநிலத்தலைவர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் )ஆகியோர் அனைவரும் CPS திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களா ?* *எண்ணிப்பாருங்கள் .
நண்பர்களே இன்று தமிழகத்தில் உயிர்ப்போடு இயங்கும் அனைத்து இயக்கங்களின் மாநில , மாவட்ட , வட்ட நிர்வாகிகளில் பெரும் பகுதியினர் CPS திட்டத்தின் கீழ் பணிபுரிவர்களே என்பதனை மறந்து விட வேண்டாம் .குறிப்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் 95 சதவீதம் (95%) பொருப்பாளர்கள் CPS திட்டத்தில் உள்ளவர்களே ,
           நண்பர்களே போலியானவர்களின் பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.
CPS திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பதில் எவருக்கும் இரு வேறு கருத்தில்லை .

 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு , பிறகு 1 .06.2006 முதல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு . 
 இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசிடத்தில் போராட்ட கால பேச்சுவார்த்தையின் போது மிகத் தெளிவாக எமதமைப்பின் மாநிலத் தலைவர் திரு *P.இளங்கோவன்* அவர்களால் வாதிடப் பட்டத்தை அனைவரும் நன்கு அறிவோம் *.
  தொகுப்பூதிய பணிக் காலத்தை முறையான பணிக்காலாமாக மாற்றி தர வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் வாருங்கள் என்ற போது வழக்கு தொடர வராதவர்கள் , தற்போது தொகுப்பூதியம் சார்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டது என்று பொய் பரப்புரை செய்து வருகிறார்கள்.அவர்கள் வழக்கு தொடர்ந்த    லட்சணம் அப்படி*
   எமது அமைப்பின் (TNGTA ) *முன்னாள் பொதுச் செயலாளர் *திரு கி. மகேந்திரன்* *அவர்கள் பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொகுப்பூதிய பணி காலத்தை முறையான பணிக் காலமாக மாற்றிட வேண்டி வழக்கு பதியப்பட்டு இன்றும் உயிர்ப்போடு , அந்த வழக்கை நடத்தி வருகிறோம் என்பதனையும் தெரிவித்திட விரும்புகிறோம்*. 
      எனவே  நண்பர்களே *எவரோ சிலரின்* தூண்டுதல்களால் , சிலர் 
CPS திட்டம் ரத்து மற்றும் தொகுப்பூதிய காலம் மாற்றம்  எனக் கூறிக் கொண்டு நமது *கூட்டமைப்பிற்கு (ஜாக் டோ- ஜியோ - கிராப்)  குந்தகம் ஏற்படுத்துவதை  அனுமதிக்க வேண்டாம்*
      இவன்
 அ.சுந்தரமூர்த்தி மாநிலபொதுச்செயலாளர்*
      மற்றும்
*மாநில நிர்வாகிகள்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNG TA).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக