யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/17

பள்ளிக் கல்வித்துறை, கிராம ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ செல்வன் என்பவர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அம்மனுவில், "தமிழகத்தில் உள்ள கிராம, நகரங்களில் உள்ள ஊராட்சி மற்றும் அரசு நூலகங்களில்,
கடந்த சில வருடங்களாக போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் நலன் கருதி தமிழ் மொழியில் பொது அறிவுப்புத்தகங்கள், சட்டப் புத்தகங்கள் புதிதாக வாங்கப்படாமல் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூல்செய்யும்போது, நூலகத்திற்காக செஸ் வரியையும் வசூல் செய்கின்றனர். இந்த வரியைக்கொண்டு, நூலகத்திற்குத் தேவையான புத்தகங்கள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நூலகத் துறையில் புத்தகங்கள் வாங்கும் பிரிவில் உள்ளோர், தமிழில் பொது அறிவுப் புத்தகங்கள், சட்டப் புத்தகங்களை வாங்காமல் உள்ளனர்.

தமிழக கல்விதுறையின் அரசாணை 130-ன் படி, தமிழகத்தில்உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் அரசு நூலகங்களுக்கு தமிழ் மொழியில் தேவையான பொது அறிவுப் புத்தகங்கள் மற்றும் சட்டப் புத்தகங்களை வாங்குவதற்குத் தேவையான உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்தது . நீதிபதிகள் வேணுகோபால், பாஸ்கரன் அமர்வு இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை , கிராம ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை 14.12.17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக