யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/17

புதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்

புதிய பாடத்திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 4 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்ட தேதியைவிட ஒரு மாதம் தாமதமாக திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்குக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த 3 மாதங்களில் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் புதிய பாடத் திட்டத்துக்கான வரைவை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வைக்காக அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தமிழக அரசு அக்.20-ஆம் தேதி வரைவு புதிய பாடத்திட்டத்தை வெளியிடவில்லை. 
தற்போது புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டாலும் கூட அதன் நோக்கம் நிறைவேறுவது சந்தேகம்தான்.
புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கேற்ற வகையில் பாடங்களை எழுத ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். புதிய பாடங்களை எழுதி, இறுதி செய்ய இரு மாதங்கள் ஆகும் என வைத்துக் கொண்டால் வரைவுப் பாடநூல்களைத் தயாரிக்கவே பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கம் ஆகிவிடும்.
அதன் பின்னர் அச்சுப் பணிகள் முடிந்து ஜூன் மாத இறுதியில் தான் புத்தகங்கள் தயாராகும். ஜூன் மாதத் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குறைந்து ஒரு மாதத்துக்கு புத்தகங்கள் இல்லாமல் படிக்க வேண்டிய அவலநிலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடும். புதிய பாடத்திட்டத்தைத் தயாரித்து வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, பாடத்திட்டத்தை மாற்றும் நோக்கமே சிதைந்து விட்டது.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சற்று குறைக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ள வகுப்புகளுக்கான பாட நூல்களை அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே அச்சிட்டு, வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக