யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/1/17

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்!: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை மறுநாள் தொடங்குகிறது.  மத்திய 
அரசின் பொது நிதிநிலை அறிக்கையும், தொடர்வண்டித்துறை நிநிதிலை அறிக்கையும் 92 ஆண்டுகளுக்குப் பிறகு இணைத்து தாக்கல் செய்யப்படுவதால், இதில் வெளியாகவிருக்கும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை  மாத ஊதியம் பெறுவோரிடமிடருந்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வருமானவரி  உச்சவரம்பு உயர்வு என்பது அவ்வப்போது பெயரளவில் செய்யப்படுகிறதே தவிர, கள யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரித் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பாதகமற்ற, சாதகமான வரிச்சூழல் ஏற்படுத்தப்படும். வரிவிதிப்பு முறை எளிமைப்படுத்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் இன்று வரை வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது. மேலும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு இணையாக  வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் மாத ஊதியம் பெறுவோரில் பெரும்பான்மையினர் தங்களது ஊதியத்தின் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்களிடையே வரி மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.

இவைஒருபுறமிருக்க வருமானவரியின் அளவை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தான் வரி வருவாயை அதிகரிக்க முடியும். வருமானவரியின் அளவு அதிகமாக இருப்பதாலும், வரி விலக்குக்கான உச்சவரம்பு மிகவும் குறைவாக இருப்பதாலும் அதிக அளவு  வருவாய் ஈட்டுபவர்கள் கூட வருமான வரி செலுத்தத் தயங்குகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்படுவதுடன், வருமான வரிவிலக்கு வரம்பும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, வருமானவரி விலக்கு வரம்பை இப்போதுள்ள ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அத்துடன் வருமானவரி அளவை ரூ.10 லட்சம் வரை 10% ஆகவும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20% ஆகவும், அதற்கு மேல் 30% ஆகவும் மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், மூத்த குடிமக்களின் ஓய்வூதியத்திற்கு முழுமையான  வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து  தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நோக்குடன் 2% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக 10% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் தங்கத்தின் இறக்குமதி குறைந்து விட்ட பிறகும், அதன்மீதான வரி குறைக்கப்படவோ, ரத்து செய்யப்படவோ இல்லை. இறக்குமதி வரி விதிப்பால் அரசுக்கு கிடைத்த லாபத்தை விட இழப்புகள் தான் அதிகமாகும். இறக்குமதி வரியால் முறைப்படியான இறக்குமதி குறைந்தாலும், தங்கம் கடத்தி வரப்படுவது பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சுங்க வரி வருவாய் பெருமளவில் குறைந்திருக்கிறது.

அதேநேரத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்காக ஒரு குடும்பத்தினர் ரூ.5 லட்சத்திற்கு தங்கம் வாங்க வேண்டுமானால் ரூ.50,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது ஏழை மக்கள் மீது கடுமையான சுமையை சுமத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யவோ, அது சாத்தியமாகாத நிலையில் 5% ஆக குறைக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்வண்டித்துறையை பொறுத்தவரை தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை  நிதி இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அத்திட்டங்களை அடுத்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கும் வகையில் அவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.’’

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக
தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.

எனவேநீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்- மாணவர்கள் தேர்வைக் கண்டு அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,

மன்கி பாத் நிகழ்ச்சியில் மோடி, 'காந்தி நினைவு நாளை முன்னிட்டு, நாளை அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். குடியரசு தின விழாவில் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் தேர்வைக் கண்டு
அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை. பதற்றமின்றி இருந்தால்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். யாருடனும் போட்டி போடாதீர்கள். உங்களுக்கு நீங்களே போட்டி. சச்சின் டெண்டுல்கர் அப்படிதான் தனது சாதனைகளை அவரே முறியடித்துள்ளார்.

வாழ்க்கையில் இடையூறுகள் வரதான் செய்யும். அப்துல்கலாம் அதுபோன்ற தடைகளை எல்லாம் எதிர் கொண்டதால்தான் வெற்றி பெற முடிந்தது. அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது மிகவும் அரிது. நேற்றை விட இன்று சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய கடலோர காவல்படை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதியுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டுக்காக சேவை செய்த கடலோர காவல்படை வீரர்களுக்கு நன்றி' என்றார்.
புதுடில்லி: தேர்வை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.   

மவுனஅஞ்சலி:
மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: ஜனவரி 30ம் காலை11 மணியளில், மகாத்மா காந்தி மற்றும் மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக வருடந்தோறும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இது நமது ஒற்றுமையையும் காட்டுவதுடன், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றுவது போல் ஆகும். நமது நாடு ராணுவ வீரர்கள், பாதுகாப்புபடையினருக்கு சிறப்பு மரியாதை அளித்து வருகிறது .காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் போற்ற வேண்டும். இளைஞர்கள் அவர்களை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும்.

மறுசீர்திருத்தம்:
மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் தேர்வை மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும். திருவிழா போல் தேர்வை பார்க்க வேண்டும். கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். நல்ல மனநிலை தான் நல்ல மதிப்பெண்களை தரும். தேர்வின் போது அனைவரும் குழுவாக செயல்பட வேண்டும். சிறிது நேரம் ஓய்வெடுப்பது நினைவாற்றலுக்கு சிறந்த மருந்தாகும். இது எனது சொந்த அனுபவம். அனைத்து அறிவும், விஷயமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் கற்றறிந்ததை அறியவே தேர்வு நடத்தப்படுகிறது. வாழ்க்கையின் வெற்றிக்கு தேர்வு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கு, தேர்வு சிறிதளவு உதவுகிறது.தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை மிக எளிதாக எதிர் கொள்ள வேண்டும். மகிழ்வோடு தேர்வை எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

28/1/17

Breaking News: ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என
திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேட்பாளருக்கு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது.

 இந்நிலையில் இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

அப்போது தேர்தல் நடத்த எவ்வளவு காலம் தான் தாமதிப்பீர்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

 இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.


இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சிரமம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை
குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, தமிழகப் பள்ளிகளில் வெளிநாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு ஊசி என்று சொல்லி நம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது.
இதனைஅனைவருக்கும் ஷேர் செய்யவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அரசு வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் மீசில்ஸ் (தட்டம்மை) மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசியை இலவசமாக போட திட்டம் கொணர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தஊசிக்கு எதிராகத்தான் சமூக ஊடகங்களில் ஒரு புரளி வெகு வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றிய உண்மை நிலை குறித்து அறியாமல், அதனை ஏராளாமனோர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்துவருகிறார்.
ஆனால், இந்த ஊசி பாதுகாப்பானதுதான். இந்த ஊசியின் மூலம் மீசில்ஸ் எனும் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம்.
மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப் போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நியுமோனியா / உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கவல்லது. இந்த நோயினால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.
ரூபெல்லா எனும் நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனங்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா நோய் அதிக கருக்கலைப்புகளை ஏற்படுத்துகின்றது.
மீசில்ஸ் நோய்க்கு எதிராக நமது தடுப்பூசி திட்டத்தில் 9 மாதம் நிறைவான குழந்தைகளுக்கும் ஒன்றரை வயதான குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்ததடுப்பூசியை தற்போது மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவிற்கு எதிரான இரு நோய் தடுப்பு ஊசியாக (measles rubella Vaccine ) அரசாங்கம் தரம் உயர்த்தியுள்ளது.
இந்தரூபெல்லாவிற்கு எதிரான தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதைத் தான் தற்போது இலவசமாக அரசு measles rubella vaccine என்று மாற்றியுள்ளது.
அந்தவாட்சப் செய்தி கூறுவது யாதெனில் இந்த தடுப்பூசி நல்லதல்ல. கேடு விளைவிப்பது. இதில் அரசியல் லாப உள்நோக்கம் உள்ளது என்பது போன்று அந்த ஆடியோ மெசேஜ் இருக்கிறது.
அரசுமருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் ஏராளமானோர், இந்த தடுப்பூசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில்லாத ஒரு தகவல் எளிதில் வாட்சப்பில் பரப்பி விட முடிகிறது. இது தவறு.
Measles rubella vaccine ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் போட்டு வரும் ஊசி தான். இதுவரை பணம்படைத்தவர்கள் மட்டும் இந்த ஊசியை போட்டு வந்தனர்.
தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும் , இந்த measles rubella vaccine தேசிய தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. 9 மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளும் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் இந்த measles rubella தடுப்பூசி தான் இனி போடப்பட உள்ளது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம்.
தடுப்பூசிகள் கொடும் நோய்களுக்கு எதிராக செயல்படுபவை. ஏற்கனவே பலம் நல தடுப்பூசிகளைப் பயன்படுத்தி, மிகக் கொடூரமான நோய்களையும், தொற்று நோய்களையும் இந்தியாவில் இருந்து விரட்டியுள்ளோம். அதுபோல இந்த தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தயவுசெய்து தவறான பதிவுகளை நம்பவேண்டாம்.
உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ்- ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள் என்பதே விவரம் அறிந்தவர்கள் சொல்லும் உண்மை.
இதேவிஷயத்தைத்தான், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதாவது, மீசெல்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் குழந்தைகளுக்கு வராது. ரூபெல்லா எனும் கொடிய வியாதியில் இருந்து குழந்தைகளைக் காக்கவே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து சிறார்களுக்கும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

TNTET- கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில்
வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. எனவே இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும். 
தகுதித்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5 மாநில தேர்தல்.. 10, 12 - ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், சில பாடங்களின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 10-ல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 23-ல் நடைபெறவிருந்த 10-ம் குருங் படத்தேர்வு மார்ச் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 -ல் நடைபெறவிருந்த 10-ம் என்சிசி தேர்வு மார்ச் 23-க்கு மாற்றப்பட்டுள்ளது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 20-ந்தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper) ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல் 29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ? - படிக்க மிஸ் பண்ணிடாதீங்க...

பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை,
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி
உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)

வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3. வருமான வரி

ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

4. கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

5. ரெயில்வே

ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

6. விவசாயம்

ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .

7. தொழில்துறை, உற்பத்திதுறை

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.

8. அன்னிய முதலீடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை 10. ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை சந்தித்து மனு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி அமைச்சர்
பாண்டியராஜன் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இன்று கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும், முதல்வர் தனிப்பிரிவிலும் இரு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் பாதிக்காத வண்ணம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், 

 தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 31 ஆம் நாள் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஆதார் எண் அடிப்படையில் பணபரிவர்த்தனைகளை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.

 உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு பணத்தட்டுப்பாடு உருவானதால் மக்கள் வேறு வழியின்றி கார்டு,
ஆன்லைன் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.


இதற்காக சமீபத்தில் கூட ஸ்மார்ட் போன்களுக்காக 'பீம்' என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

 இந்நிலையில், ஆதார் எண் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது.

 ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 இதன்படி, வணிகர்களிடம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்த மொபைல் போன் கூட எடுத்துச்செல்ல வேண்டாம்.

💷 தங்களது ஆதார் எண்ணை கூறினால் போதும். பயோ மெட்ரிக் முறையில் பணத்தை செலுத்திவிடலாம்.

  தற்போது ஆதார் பேமன்ட் முறையில் 14 வங்கிகள் இணைந்துள்ளன.

 இந்த சேவைகள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

 பிற வங்கிகளிடமும் இந்த திட்டத்தில் இணைவது தொடர்பாக பேசி வருகிறோம்.

 பீம் ஆப், யுபிஐ ஆகியவையும் ஆதார் அடிப்படையில் இயங்குவதுதான்.

💷 நாடு முழுவதும் 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். 49 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

 மாதத்துக்கு 2 கோடி கணக்குகளில் ஆதார் எண் சேர்க்கப்பட்டு வருகிறது.

 எனவே, ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை வெகு விரைவில் செயல்படுத்தப்படும்.


இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த காவல்துறை தடைவிதித்துள்ளது.

 சென்னை மெரீனா கடற்கரையில் பொழுது போக்கிற்காக அதிக மக்கள் கூடுவதால், கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை
தடைவிதித்துள்ளது.



 இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல் துறையே அனுமதி வழங்கும்.

சென்னையில் குறிப்பிட்ட இடத்தில் பொது மக்கள் போராட்டம் நடத்த காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும்.

அமைதி நிலவ பொதுமக்கள், மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஏற்கனவே முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளது.


மெரினாவில் சட்ட விரோதமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

🌺 தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

🌺 அதன் தலைவராக, தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி
நியமிக்கப்பட்டு உள்ளார்.

🔶 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேர, முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

 🔷 இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' [NET Exam.] தகுதி தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

🔶 நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது.

🔷 அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி, பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம்.

🔶 மாநில அரசு நடத்தும் செட் [SET Exam.] தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது.

🔷 அதில் தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர முடியும்.

🔶 கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகம் நடத்தியது.

🔷 ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்ரவரி, 22ல் தேர்வு நடந்தது.

🔶 இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன.

🔷 இந்த ஆண்டுக்கான (2017) செட் தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலைக்கழக துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

🔶 உறுப்பினர் செயலராக, தெரசா பல்கலைக்கழக பதிவாளர் கீதா, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக விமலா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

🔷 உறுப்பினர்களாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சுவாமிநாதன் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

📝 இந்த ஆண்டுக்கான (2017) செட் தேர்வு தேதி, பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,


*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.


```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.


எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதியஅலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!
     மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.


```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.


எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதியஅலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.

TNTET 2017 : இன்று (சனிக்கிழமை ) அறிவிப்பு? இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நயர் சனிக்கிழமை வெளியிடவுள்ளார்

ஆசிரியர்தகுதித் தேர்வு குறித்த முறையானஅறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது தேசியஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையாகும். ஆனால், தமிழகத்தில் முதலாவதுதகுதித் தேர்வு 2012-ஆம் ஆண்டில் ஜூலை, அக்டோபர் மாதங்களிலும், 2013-ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதத்திலும் என 3 தகுதித் தேர்வுகள்நடத்தப்பட்டன.

        மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு2014-ம் ஆண்டு மே மாதம்நடைபெற்றது. இந்த நிலையில், பாண்டியராஜன்கூறுகையில், "ஆசிரியர் தகுதித் தேர்வுவெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக நடைபெற்று வந்தவழக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ளஅரசாணை செல்லும் என கடந்தசில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கானஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல்30-ஆம் தேதிக்குள் நடத்தப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின்தலைவர் விபு நயர் சனிக்கிழமைவெளியிடவுள்ளார் என்றார் அவர்.

தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ஆண்டில் 20ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை
மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும்.
அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.
இந்தஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
இந்தகணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.

* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.

SMC TRAINING POSTPONED

“SMC CRC LEVEL TRAINING POSTPONED TO FEB 13th TO 15th DUE TO DELAY OF 
SMC MOUDULES.......Dates will be informed later.

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை- சட்டமுன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை” என்பதை நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலை பெற
வேண்டும்”

தொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்

அகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்

27/1/17

உடல்திறன் சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிப்பு

அரசு பொதுத்தேர்வு எழுத, ஒரு மணி நேர சலுகை பெறும் மாணவர்கள், உடல்திறன் சான்றிதழ் பெற, கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2 மற்றும் 8ம் தேதிகளில் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், 7,000 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில், 20 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரமும்; 10ம் வகுப்பு தேர்வு, இரண்டரை மணி நேரமும் நடக்கும்.


இதில், சாதாரண மாணவர்கள் தவிர, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் திறன் குறைவான மாணவர்கள், மூளை வளர்ச்சி பாதிப்புள்ள சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் போன்றோருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை அளிக்கப்படும்.

இந்த சலுகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்கள், தமிழக சுகாதாரத் துறையின் அரசு உடல்திறன் சோதனை கமிட்டியிடம் இருந்து சான்றிதழ் பெற்று, தேர்வுத் துறையிடம் வழங்க வேண்டும். 

இதற்கு பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களுக்கு உதவுவதில்லை. அதனால், சலுகை பெற விரும்பும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், அரசு மருத்துவமனையில், பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. உடல்திறன் தேர்வு கமிட்டி, வாரம் ஒரு நாள் மட்டுமே கூடும் என்பதால் அதுவரை மாணவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.

மேலும் மருத்துவமனையில் மாணவர்கள் யாரை அணுக வேண்டும்; எந்தவிதமான ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும்; உடல்திறன் ஆய்வு கமிட்டியினர் கூடுவது எப்போது என, மாணவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. 
'உடலளவில் பாதிக்கப்பட்டோரை, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத்துறையும் அலைக்கழிப்பதால் மனதளவில் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து, உடல்திறன் சான்றுக்கான சிறப்பு முகாம்களை நடத்தலாம்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.       

டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.


பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

INCOME TAX - 2016-17 FORMS AND EXCEL FILE ...

ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி  நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து
நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறியதாவது:

ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். அதனால் தகுதித் தேர்வு நடத்த தேவை இருக்காது என்று எண்ணினோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால், இந்த ஆண்டு, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடக்கும்.


இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும். இது தவிர, மேனிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம் மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இந்த ஆண்டு இரு தேர்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
அறிவிப்புகள் வெளியாகின.

இதனால் பலர் எந்த தேர்வுக்கு படிப்பது என்று குழப்பத்திற்கும் உள்ளாகினர்.

சிலநாட்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மிகவும் சின்சியரா படித்தவர்கள் பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு படித்தனர். பிறகு மீண்டும் டெட் தேர்வுக்கு படித்தனர்.
இந்த2017 ஆம் ஆண்டில் மீண்டும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இந்தஆண்டு இரு தேர்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது.
‎Thanks to-Mr.Alla Baksh‎ 

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப்
பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம்மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.ஆகையால் 3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு வரும்

TNTET-Instruction for applying TET Duplicate Certificate & Application

உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு

அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு
உதவித்தொகை திட்டத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, "ஸ்காலர் ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்தேர்வெழுத, ஏழாம் வகுப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு, 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 5,223 பேர், நடப்பு ஆண்டுக்கான "ஸ்காலர் ஷிப்' பெறுவதற்கான எழுத்து தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வு, நாளை நடைபெறுகிறது. மாவட்டத்தில், 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மாதம், 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும்

சென்னை: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பும் முதல் 12ம் வகுப்பு வரை கணினிப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். மேலும், அச்சடிக்கப்பட்டு குடோனில்
கிடக்கும் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி பாடப் புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 1992 ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பட்டப்படிப்பை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் கணினி ஆசிரியர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 ஆயிரம் பேரும், பெண்கள் 29 ஆயிரம் பேரும் இருக்கிறார்கள். இவர்களது ஒரே கோரிக்கை தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் திட்டத்தில் கணினியையும் சேர்க்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதற்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் அந்தப் பாடத்தை நடத்தாமல் உள்ளது தமிழக அரசு. இதுகுறித்து மேலும் பல தகவல்களை ஒன் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்கிறார் வெ.குமரேசன்.

குடோனில் கணினிப் புத்தகம்

சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டு பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. என்றாலும் அவற்றை மாணவர்களுக்கு இதுவரை வழங்காமல் குடோனிலேயே குப்பை போல கிடக்கிறது. இதற்கு காரணம் அவற்றை சொல்லித் தர அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை.

900 கோடி எங்கே?

கணினி பாடத்திற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு 900 கோடி ரூபாய் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பணத்தை செலவு செய்யக் கூட தமிழக கல்வித் துறைக்கு தெரியவில்லை. அது அப்படியே மத்திய அரசிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய தரமான கணினிக் கல்வி மறுக்கப்படுகிறது.

கணினி ஆய்வகங்கள்

தமிழகத்தில் 21 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினியை வழங்கியுள்ளது. என்றாலும் பள்ளிக் கூடங்களில் கணினிப்பொறி ஆய்வகங்கள் முறையாக இல்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைத்துக் கொடுத்தால்தான் மாணவர்கள் திறம்பட கற்க முடியும். வெறும் மடிக்கணினியை கொடுத்து என்ன பயன்?

கணினி ஆசிரியர்கள்

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருக்கிறது. என்றாலும், அந்தப் பாடங்களை நடத்துவதற்கு முறைப்படி கணினி பிரிவில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. அதே போன்று கடந்த பத்து வருடங்களாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு சுத்தமாக இல்லை. அங்கேயும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இணையாக வளர..

தமிழக அரசு கணினி கல்வியில் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கணினி அறிவைப் பெறுவது போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் பெற முடியும்.

கட்டாயக் கல்வி

தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் கணினிக் கல்வி கட்டாயக் கல்வியாக உள்ளது. வரும் கல்வியாண்டில், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு குடோனில் தூங்கிக் கொண்டிருக்கும் கணினிப் பாடப் புத்தகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று குமரேசன் கூறியுள்ளார்.

அரசு கேபிள் 'டிவி' கட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'

அரசுகேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும்
திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது.  இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:

தமிழகத்தில், 2011 முதல், அரசு கேபிள், 'டிவி' புனரமைக்கப்பட்டு, சென்னையை தவிர, மற்ற இடங்களில் அறிமுகமானது. பின், சென்னையிலும் சேவை துவங்கியது.

பொதுமக்களுக்கு மாத சந்தா, 70 ரூபாயாக நிர்ணயித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்; 2011 நவ., 11ல், அது அமல்படுத்தப்பட்டது. அதில், 20 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு தரப்படுகிறது; அதற்காக ரசீது வழங்கப்படுகிறது.

எனினும், சில ஆப்பரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிப்பதாக, பொது மக்கள் புகார் கூறுகின்றனர். அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும், சந்தாதாரர் செலுத்துவதற்காக, ஒரு பிரத்யேக, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டு வருகிறது. அதை, 'ஆண்ட்ராய்டு போன்' மூலம் பதிவிறக்கம் செய்து, மாத கட்டணத்தை, அரசுக்கு நேரடியாக செலுத்தலாம்.
இதற்காக, சந்தாதாரர்களின் விபரம் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஆப்பரேட்டர்களுக்கு, வங்கி மூலம் கமிஷன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

லாபத்தில் அரசு கேபிள்!

மற்றநிறுவனங்கள், மாத வாடகையாக, 150 ரூபாய் வரை வசூலிக்கும் நிலையில், குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு கேபிள், 'டிவி'யும் லாபம் பார்க்க துவங்கியுள்ளது. 2011 - 12ல், 23 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய இந்நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில், 5.2 கோடி; 12.02 கோடி; 18.46 கோடி; 34.95 கோடி ரூபாய் என, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச்சில் நீக்கம்!

வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில்
தளர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  நாட்டில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கள்ள நோட்டுகளை ஒழித்துக்கட்டவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவைகளாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. இந்நோட்டுகளை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, அவை அடிக்கடி மாற்றப்பட்டும் வந்தன.

கடைசியாக, ரிசர்வ் வங்கி விதித்திருந்த கட்டுப்பாட்டின்படி, ஒரு நாளைக்கு ஏ.டி.எம்-களிலிருந்து 10,000 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக எடுக்க முடியும் என்று அறிவித்திருந்தது. முன்னதாக ஒரு நாளில் 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், பின்னர் இந்த வரம்பை 4,500 ரூபாயாக உயர்த்தியது என்பதும் நினைவுகூரத்தக்கது. மேலும், தற்போது ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 மட்டுமே எடுக்க இயலும்.


இந்நிலையில், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநரான ஆர்.கே.குப்தா கூறுகையில், “என்னைப் பொருத்தவரையில் நோட்டுகள் எடுப்பதற்கான வரம்புகள் பிப்ரவரி மாத முடிவிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ நீக்கப்படும். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.

SSA SPD Proceedings regarding PINDICS - QMT dated 24/1/2017.

10 ரூபாய் நாணயங்கள் எப்படி இருந்தாலும் செல்லபடியாகும் - ரிசர்வ் வங்கி

தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.

டெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய்
நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது. இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன. கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவேபொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெட்டிக்கடைகள், சிறு வியாபாரிகள் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்து வருகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்களை மக்களுக்கு வழங்கியது. இப்போது அவற்றை செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவதால் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.

26/1/17

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

TNPSC:குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது.இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று, இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்!

  ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிப்பு என்ற விஷயம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் மாநில முதலைமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரை அறிக்கையானது கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

25/1/17

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.


இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்.
இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் . தமிழகத்தில் பல
இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில் 750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில் ....நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகை ஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில் விசாரணைக்கு வரும் .....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......
தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.

ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.


அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 


மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல், ஜன., 29 வரை, தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை குறித்து, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாதோருக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அப்கிரேட் செய்தி போலியானது: மக்களே உஷார்!

ரிலையன்ஸ் ஜியோவில் உங்களது தினசரி டவுன்லோட் அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜியோ 4ஜி அப்கிரேஷன் என்று வரும் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது வெறும் போலி மட்டும் அல்ல என்றும், இந்த செய்தியின் மூலம், மக்களின் முக்கிய தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள், உங்களது தினசரி இணைய பயன்பாட்டை 1 ஜிபியில் இருந்து 10 ஜிபிக்கு அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று ஒரு லிங்க் வருகிறது.

அதனை க்ளிக் செய்தால் அதில், பயனாளரின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கேட்கப்படுகிறது. அனைத்தையும் பதிவு செய்து சப்மிட் செய்தால், இந்த லிங்க்கை உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் அல்லது குறைந்தது 10 வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் என்று வாசகம் வருகிறது.
அந்த லிங், போலியான சலுகைகளை அறிவித்து, பயனாளர்களை உள்ளே நுழைய வைப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த லிங்கில், ரிலையன்ஸ் அல்லது ஜியோவுக்கு இந்த லிங்க் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற போலியான லிங்குகளை நம்பி, பயனாளர்கள் தங்களது தகவல்களையும், அதை நண்பர்கள் குழுவிலும் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*- மொத்தம் மூன்று நாட்கள் *( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .

SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*


 ( அல்லது )
 *ஏதேனும் SMC உறுப்பினர்*

ஆக *மொத்தம் மூன்று பேர் ( 1  HM +  2 SMC members )*
 இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .

*மேற்கூறிய பயிற்சிக்கு வரும் போது  ஈராசிரியர்பள்ளியில்*
*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*

*அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளியில்*
*( 1 HM + 3 SMC members) - Total 4 members*

அனைவரும் தங்கள் *STAMP SIZE SIZE PHOTO*
 இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO*  எடுத்து வர வலியுறுத்தவும் .

SMC பயிற்சி நடைபெறும் இடங்கள்  ஆசிரியர் பயிற்றுநரைத் BRTE தொடர்பு கொண்டு    
 தெளிவு பெற வேண்டப் படுகிறது.

குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

சென்னை: அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று,
இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்

பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பரில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மறைவு வரை, பல நாட்கள் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. பின், 'வர்தா' புயல் தாக்குதலால், பள்ளிகளுக்கு, மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
பின், ஜனவரியில் நிலைமையை சமாளிக்கலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம், பந்த் மற்றும் கலவரம் என, நான்கு நாட்கள் வரை, பள்ளிகள் முறையாக இயங்கவில்லை.அதனால், பல பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருப்புதல் தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சியும் நடத்த முடியவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க, தினமும் வழக்கமான காலை, மாலை சிறப்பு வகுப்புகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சிறப்பு வகுப்புகளை நடத்த, பள்ளிகள் முடிவு செய்துஉள்ளன.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே அங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. கல்வி உரிமை சட்டப்படி, அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால், அத்தகைய கல்வி பணியில் இருக்கும் ஆசிரியர்களை கால்நடை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் பொதுப் பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைவதுடன், மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் நாட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் வரும் பொதுத் தேர்வில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகளவில் குறையலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 10 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்களிடம் பேசியபோது, ‘அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி தவிர, மற்ற பணிகளில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர்.

கடந்த அரையாண்டு தேர்வுகளில் நாங்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. மூன்றாம் பருவ பாடங்களும் நிறைவு பெறவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுத் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்ற அச்சம் மாணவர்களிடம் நிலவி வருகிறது. இதனால் எங்களை தனியார் டியூஷன் சென்டர்களில் அதிக பணம் செலவழித்து பெற்றோர் சேர்த்துள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக அலைவதால், எங்களுக்கு பாடங்களில் உரிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி மட்டுமல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்–்ட அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ‘தனியார் பள்ளிகளில் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை கூடுதலாக ஒரு மணி நேரம் அமரவைத்து சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் எங்களுக்கு ஒரே நாளில் அனைத்து பாடங்களையும் படிப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது’ என்று தனியார் பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களின் கல்வி நேரம் வீணடிக்கக்கூடாது’ என பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் குழு சமீபத்தில் ஆய்வு நடத்தி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி அல்லாத மற்ற பணிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அவர்களின் கவனம் கல்வியை தவிர, வேறு எதிலும் செல்லக்கூடாது’ என்று குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான புதிய பணி விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என்று தமிழக கல்வித்துறை ஏற்கெனவே அட்டவணை வெளியிட்டுள்ளது.‘இன்னும் ஒரு மாதமே நடுவில் உள்ள நிலையில், பொது தேர்வுக்கு தயாராகும் அனைத்து பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?’ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விடை கிடைக்குமா?

NMMS EXAM - Instruction Regarding Director Proceedings..

'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாகசெயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறைகள் நிறுவப்பட்டு வருகின்றன.சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களைச்சார்ந்த குழந்தைகள் பயன் பெறும் வகையில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தி வருகிறது என ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு

தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

காலியிட விவரம்: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 170 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 167 செ.மீ.,) இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., மார்பு விரிவாக்கம் குறைந்த 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் உயரம் 159 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 157 செ.மீ.,)இருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:தேர்வு செய்யப் பட்ட 284 அஞ்சல் நிலையங்களில், ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ. 135.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மதிப்பெண் விவரம்: மொத்த மதிப்பெண்கள் 100 ( எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள்,என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள்)

தேர்ச்சி முறை: முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முழு விவரங்களுக்கு:http://www.tnusrb.tn.gov.in/

RTI தகவல்: CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்புவிபரம்...

பேஸ்புக் பயன்படுத்துவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்: 5 ல் ஒருவரின் கணக்கில் மற்றவர்கள் ஊடுருவல்.

சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று 2012ம் ஆண்டே 100 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாண்டி நிற்கும் பேஸ்புக் நிறுனம் தற்போது 2016ம் ஆண்டின் கணக்குப் படி 176 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது.


இதுகுறித்து பிரிட்டன், கொலம்பியா, பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒரு அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது.

முகநூல் என்று சொல்லப்படும் பேஸ்புக் பயன்படுத்துவோர்களில் 5 ல் ஒருவரின் கணக்கை அவருக்கு தெரியாமல், அவரது நண்பர், காதலர், அல்லது குடும்ப உறுப்பினர்களே ரகசியமாக ஊடுருவி பார்க்கின்றனர் என தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் ஸ்மார் போன், வழியாக இந்த ஊடுருவல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினம் வரலாறு!(ஒரு சிறப்பு பார்வை)

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும்
நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். 
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.

அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

கல்விச்சிறகுகள்

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்:

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!!

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரேகூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம். இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

750 PP - COURT NEWS...

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் .

தமிழகத்தில் பல இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில்750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில்.... நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகைஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில்விசாரணைக்கு வரும்

.....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......

தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்.

ஜல்லிக்கட்டு மீதான 2016-ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தனது 2016-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
இதனை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டு மனு மீதான முடிவை எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் தெரிவித்தது.கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது.

இந்தஅறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்டதாகும்.பின்னர், 2014ஆம் ஆண்டு விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்தது. இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிப்பாணை பிறப்பித்தது மத்திய அரசு.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவினால் இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது

+2 தனித் தேர்வர்களுக்கு புதன் முதல் ஹால்டிக்கெட்.

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை புதன்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு: 'வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) 25-ம் தேதி(புதன்கிழமை) முதல் 29-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பிரிண்ட் அவுட் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்துவிட்டுவிண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்தால் போதும்.மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.