யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/10/17

பிஇ படித்தவர்களுக்கு மின் துறையில் பணியிடங்கள்!! (Last date 10.10.2017)

NSPCL நிறுவனம் அமைக்கும் மின் நிலையங்களுக்கு எலக்ட்ரிக்கல், 
மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்,  எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பி.இ., படித்தவர்களை தேர்தெடுக்கிறது. *

*பணி விவரம்: -*

Engineering Executive Trainees.

1. Electrical:

4 இடங்கள் (ஓபிசி-3, எஸ்டி-1).

*தகுதி: -*

Electrical/Electrical & Electronics/Electrical, Instrumentation & Control/Power Systems & High Voltage/Power Electronics/Power Engineering ஆகிய பாடங்களில் பி.இ.

2. Mechanical:

7 இடங்கள் (எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-1).

*தகுதி: -*

Mechanical Engg. (Mechanical/Production/Industrial Engg.,/Production & Industrial Engg./Thermal/Mechanical & Automation/Power Engineering) ஆகிய பாடங்களில் பி.இ.,

3. Instrumentation:

2 இடங்கள் (எஸ்சி-1, ஓபிசி-1).

*தகுதி: -*

Instrumentation Engg.,/Electronics & Instrumentation Engg/Instrumentation & Control Engg., ஆகிய பாடங்களில் பி.இ.,

4. Electronics Engineering:

2 இடங்கள் (ஓபிசி):

*தகுதி: -*

Electronics/Electronics & Telecommunication/Electronics & Power/Power Electronics/Electronics  & Communication/Electrical & Electronics ஆகிய பாடங்களில் பி.இ., விண்ணப்பதாரர்கள் கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.150/-. (எஸ்சி.,/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).

விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2017.*

அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதமா ??

Flash News : வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது -  7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசனை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.


7வதுஊதிய குழு பரிந்துரைகள் மற்றும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்!!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை
மற்றும் எழுத்தறிவித்தல் துறையின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரிகள், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

*பணி: -*

1. Director: (Academic) 1 இடம் (பொது)
2. Joint Director: (Media): 1 இடம் (பொது)
3. Deputy Director (Administration): 1 இடம் (பொது)
4. Deputy Director (Academic): 1 இடம் (பொது)
5. Deputy Director (Accounts): 1 இடம் (பொது)
6. Training Officer (Humanities/Social Science): 1 இடம் (ஓபிசி)
7. Section Officer: 7 இடங்கள் (பொது)
8. Assistant Audit Officer: 1 இடம் (பொது)
9. Stenographer: 1 இடம் (பொது).

விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.nios.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

*விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2017*

உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்ற அவமதிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட
வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.09) உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகக் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் அமல்படுத்தவில்லை. எனவே, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 09) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், குறித்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டும் அதைச் செய்யாமல் இருப்பதை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.

மனுதாரரின் புகார் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலர் டி.ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இருவகையான இருள்

குறையும் ரயில் கட்டணம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவின்போது வசூலிக்கப்படும்
வணிகர் தள்ளுபடி விலையை (MDR) திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்து வருகிறது. இதன் மூலம், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்குக் கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்டிசிடி இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வணிகர் தள்ளுபடி விலைக் கட்டணம் பொருந்தும். டெபிட் / கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இந்தக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ரயில்வே அமைச்சர் தெரிவித்தபடி, இந்த எம்.டி.ஆர்., பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன்30 ஆம் தேதியுடன் முடிய இருந்த சேவைக் கட்டண ரத்து செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதனை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ. 20 முதல் 40 வரை சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவையை அளிப்பதற்காக வங்கிகள் பெறும் கட்டணத்தைத் திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்துவருகிறது. இதனால், ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் தானாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., வருவாயில் சுமார் 33% ஆன்லைன் முன்பதிவுகளிலிருந்து வரும் சேவைக் கட்டணமாகும். கடந்த நிதியாண்டின் வருவாயின் படி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் மொத்த வருவாய் ரூ.1,500 கோடியில் ரூ. 540 கோடி டிக்கெட் முன்பதிவுகள் மூலம் வந்தது என மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடிக்கு ஆப்பு??? ஆளுநர் வைக்கும் செக்!!!

                                                       
தமிழக காவல்துறையை நவீனமயமாக்க வாக்கி டாக்கி வாங்கியதில்
ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக இந்த ஊழல் தற்போது பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


பொதுவாக வாக்கி டாக்கி வாங்குவதற்கான டெண்டர் ஒதுக்கும்போது பல நிறுவனங்கள் பங்கேற்கும். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடும் போது ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்படும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை.

ஆனால், 2017-2018-ஆம் ஆண்டுக்கான வாக்கி டாக்கி வாங்கும் ஒப்பந்த புள்ளி கோரலில் மோடோரோலோ சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. அதற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.
உண்மையில், அந்த திட்டத்திற்கு ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிக பட்சமாக ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய விதிமீறலாகும்.
ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.4700 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியிருந்தார். ஒப்பந்த புள்ளி கோரலில் ஒரே ஒரு நிறுவனமே, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ள நிரஞ்சன் மார்டி, வாக்கி டாக்கியின் தொழில்நுட்ப மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, வாக்கி டாக்கி வழங்கும் நிறுவனத்திற்கு அளித்த ஒப்பந்த ஏற்பு ஆணை, கொள்முதல் ஆணை ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஊழலை திமுக கையிலெடுத்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதன் பேரில் ஆளுநர் தலைமைச்செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து தமிழகத்தில் பாஜக நல்ல பெயரை எடுக்க ஆளுநரை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக புதிதாக வந்துள்ள ஆளுநர் வாக்கி டாக்கி ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என ஆளுநர் தலைமைச் செயலரிடம் கேட்கலாம் எனவும், புதிய ஆளுநர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக பேசப்படுகிறது.

100ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்

6B43~1கணினி என்றால் என்ன?

Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

MOBILE

அறிந்துகொள்ளுவேம்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆசிரியர்களை பற்றி தவறாகவோ

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆன்மீகத்தில்பெண்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்

இஞ்சிப் பால்

9/10/17

மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை சட்ட படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தின் எம்.எல். (பிரைவேட் ஸ்டெடி) படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு நடைபெற்றது.அந்த தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவுகள் நாளை வெளியிடப்படும். மாணவர்கள் www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின

பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசுமருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை.
தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்7,843 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் காலியிடம் இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கானஅனுமதி கடிதத்தை பெற்றனர்.

முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும்நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் 2-ம் கட்டம் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது,"முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்"என்று தெரிவித்தார்.

ஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.


இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உண்மை சான்றுகள் சரி பார்த்து மீண்டும் வருவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகிறது. இவ்வாறு வீண் காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிக்க முடிவதில்லை. அதுபோல கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் பவானி சாகர் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இந்த காலதாமதத்தை தவிர்க்க தற்போது அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி அரசுத் ேதர்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.

இந்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் கிடைக்கப் பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும், உண்மைத் தன்மை ஒத்துப் போகாத சான்றிதழ்களின் நகல்களை மட்டும் தேர்வு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால் தனிக் கவனம் செலுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது.

மதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் நிறுத்தணும்

10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
இது பற்றி பள்ளி கல்வித்துறை செயலர், அனில் ஸ்வரூப் கூறியதாவது:மாநில கல்வி வாரியங்களும், சி.பி.எஸ்.இ.,யும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை செயல்படுத்தி வருகின்றன.அடுத்த கல்வியாண்டு முதல், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் என, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 'கிரேடு' முறை தான் சிறப்பாக இருக்கும். 

ஏனெனில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, மதிப்பெண்களை கூடுதலாக வழங்கும் முறை, பல மாநிலங்களில் நீடிக்கிறது. இதில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன.நாடு முழுவதும், ௨௦௧௮ முதல், பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் வழங்குவதில், பொதுவான முறையை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

8/10/17

போட்டித் தேர்வுமூலம் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு!!!

521 அரசுப் பள்ளிகட்டிடங்கள் இடிப்பதற்கு இயக்குனர் மற்றும் கலெக்டர்களிடம் பரிந்துரைக்கடிதம்!!

பள்ளி மாணவர்களுக்குவழங்கிய இரண்டாம் பருவபாடபுத்தங்களில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' !!!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ,5 ஆயிரமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்பாளர் ஆனைவாரி ஆனந்தன், புலவர் கி.த.பச்சையப்பன், பாக்கம் தமிழன், தமிழ் வளர்ச்சி கண்காணிப்பாளர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஒரு முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இந்துப்பண்டிகையான தீபாவளிக்கு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது !!

பொது மக்கள் கவனத்திற்கு- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தும் -2018-அக்டோபர் 3 முதல் அக்டோபர் 31 2017 வரை நடைபெறுகிறது

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு

'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை கண்டிப்பாக வைத்திருக்கும் படி உத்தர விட்டுள்ளது. இவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்கள் கூட தெரியாமல் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து கோவாவில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாதிபதி,பிரதமர் புகைப்படங்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை

தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த, 'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்காக, 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக வழங்கப்படும்' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
தற்போது, அதற்கான உரிமம் கிடைத்து விட்டதால், செட் - டாப் பாக்ஸ் வினியோகத்தை, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவங்கியுள்ளது. பொது மக்களிடம் இருந்து, ஒரு பாக்சுக்கு, 175 ரூபாய் வசூல் செய்ய, ஆப்பரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், செட் - டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள், அதிக தொகைக்கு விற்பதாக, புகார் கூறப்படுகிறது.

 சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கூறும்போது, 'எங்கள் ஆப்பரேட்டர், 1,200 ரூபாய் கேட்கிறார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை' என்றார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 500 - 800 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், 'பொதுமக்கள், 175 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை' என, தெரிவித்தனர்.

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி: தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.220 ஆகிறது

சினிமா டிக்கெட் கட்டணத்தை, 25 சதவீதம் உயர்த்த,தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜி.எஸ்.டி., மற்றும், கேளிக்கை வரி என, இரட்டை வரி விதிக்கப் பட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியதால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, தியேட்டர் உரிமையாளர்களுக்கு, அரசு சலுகை வழங்கி உள்ளது.

 இதனால், தியேட்டர்களில், அதிகபட்ச டிக்கெட் விலை, 220 ரூபாயாகிறது.
சினிமா டிக்கெட்டிற்கு, சரக்கு மற்றும் சேவை
வரியான, ஜி.எஸ்.டி., 28 சதவீதம், கேளிக்கை வரி, 10 சதவீதம் என, இரட்டை வரி விதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கபட்ட தியேட்டர் உரிமையாளர்கள், 'இரட்டை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் விலையை உயர்த்த, அனுமதிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தினர்.

வாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்பட்டியல் திருத்தப் பணி, தமிழகம் முழுவதும், இம்மாதம் துவக்கப்பட்டது.

வாக்காளர்களுக்காக, தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்ற விரும்புவோர், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
மற்ற நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில், மனு அளிக்கலாம்.
பெயர் சேர்க்கும்விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதிற்கு கீழ் உள்ள மனுதாரர்களுக்கு, வயது சான்றிதழ் கட்டாயம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.வரும், 2018 ஜன., 1ல், 18 வயது நிறைவடைவோரும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


18 - 25 வயதிற்குட்பட்டோர் தவிர, மற்றவர்கள், தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை, படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தால், தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும், குறிப்பிட வேண்டும். 'விண்ணப்பதாரர், படிவம் - 6ன் உறுதிமொழியில், முந்தைய முகவரியை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.'ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்' என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி (Junior Accounts officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 996

பணி: Junior Accounts officer

தகுதி: 01.01.2017 தேதியின்படி M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/advertisement/NOTIFICATION_DRJAO_2017.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

*அகவிலைப்படி உயர்வு எப்போது : காத்திருக்கும் அரசு ஊழியர்கள்*

உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக ஐந்து பேர் குழு, முதல்வர் பழனிசாமியிடம் செப்., 27ல் அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை களையவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்படும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவும் பரிந்துரைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

'சம்பள மாற்ற பரிந்துரைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, இடைவிடாத போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என அரசு ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் அன்பரசு கூறியதாவது: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் அமல்படுத்தியது.

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள மாற்றத்தையும், அதற்கான நிலுவை தொகையையும் பெற்று விட்டனர். அவர்களுக்கு 1.7.2017 முதல் சம்பள மாற்றத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஒரு சதவீதத்தையும் அரசு வழங்கி விட்டது. மத்திய அரசின் 8 வது சம்பள மாற்றத்திற்கான சம்பள விகிதங்களை பெறாத தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு, பழைய சம்பள விகிதத்தில் 3 சதவீத அகவிலைப்படியை 1.7.2017 முதல் உயர்த்தி செப்., 26ல் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள மாற்றத்தையோ, நிலுவைத் தொகையையோ 21 மாதங்களாக பெறாமல் நிதி சுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய அரசு பழைய சம்பள விகிதத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது போல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் பழைய சம்பள விகிதத்தின்படி அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை, அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்று கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

வாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO - உண்மைச் செய்தியா? வதந்தியா

வலைத்தள வதந்தி - ஆசிரியர்  LOGO-விற்கு உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?


வலைத்தள வதந்தி


🌺தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களுக்கு என்று தனி LOGO-ஐ பயன்படுத்த உச்சநீதி  மன்றமே அனுமதி அளித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.


🌺இதன் உண்மைத் தன்மைக்கான எவ்வித சான்றும் அதில் இல்லை.


🌺மேலும் அதில், "மருத்துவர் & வழக்கறிஞர்கள் பயன்படுத்த அனுமதித்தது போல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


🌺உண்மையில் இவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? அளிக்க முடியுமா? அளிக்க வேண்டிய அவசியமுண்டா? என பல கேள்விகள் எழுகிறது.


🌺மருத்துவர் & அவசரச் சிகிச்சை வாகனங்களில் சிவப்பு நிற '+' குறி LOGO இடம்பெற்றிருக்கும். உண்மையில் இது இவர்களுக்கானதே அல்ல.


🌺செஞ்சிலுவை இயக்கத்திற்காக, 1949-ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட LOGO அது.


🌺இதை மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதை மருத்துவர் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.


🌺2007-ல் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) இந்திய மருத்துவக் குழுமத்திற்கு(IMC) இது குறித்து அறிவுறித்தி, தங்களின் LOGO-வை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.


🌺அதன்பின்னரே, சிவப்பு நிற (90%) '+' குறியினுள் Dr அல்லது Rx என்று குறியிட்ட LOGO-ஐ பயன்படுத்த IMC முடிவெடுத்தது.


🌺இந்த LOGO-வையும் MBBS மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதியுண்டு என IMC கூறியுள்ளது.


🌺இதனை சித்தா, ஆயுர்வேதா, கால்நடை மருத்துவர்களோ, மருந்தகங்களோ பயன்படுத்தக் கூடாது.


🌺ஒரு LOGO- வைப் பயன்படுத்துவதில் இத்தனை வில்லங்கங்கள் உள்ள சூழலில்,


🌺ஏதோ ஒரு LOGO-ஐ  அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது என்று அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களே பகிர்ந்து வருவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.


🌺ஒரு திறமைமிக்க ஆசிரியர் எனில் இது போன்ற தகவலைப் பார்த்தவுடன் உங்களின் மனதில்,


🌺உச்சநீதி மன்றத்தில் இதுக்காக வழக்காடியது யார்?


🌺இதை வடிவமைத்தது யார்?


🌺தீர்ப்பளித்தது யார்?


🌺தீர்ப்பின் விபரம் என்ன?


என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்க வேண்டும் அல்லவா!?


🌺மற்ற குழுக்களுக்கு Forward செய்யும் முன் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து செயல்படுங்கள்.

அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

29/9/17

வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம் : செங்கோட்டையன் தகவல்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்,'' என, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை தரிசனம் செய்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், கல்வித் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக, 412 தேர்வு மையங்கள் துவங்கப்படும். அடுத்த மாதம் முதல், அந்த மையங்கள் செயல்படும். மேலும் கூடுதல் மையங்கள் திறக்கப்படும்.
அதுபோல, 32 மாவட்டங்களின் தலைநகரங்களில், அரசு நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கான நுால்கள் அளிக்கப்படும்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். கற்றலுக்கு ஏற்றபடி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது.  இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
 இதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.
 கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை  அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை  நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி

தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின.
இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன. 
தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற சான்றிதழ் பெற்றுள்ளன.
அவற்றுக்கு வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., அந்தஸ்து கிடைக்கும். இன்னும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்து உள்ளன. கடந்த கல்வியாண்டில், 600ஆக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த கல்வியாண்டில் 800ஐ தாண்டி உள்ளன

பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ௨௮ பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தை புதுப்பிக்கும் பணியில், எஸ்.சி.இ.ஆர்.டி., ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஒன்பது புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இந்தத் துறையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க, ௨௮ பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், ௧௧ துணை இயக்குனர்கள் மற்றும், ௧௭ மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, பள்ளிக்கல்வி 
அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, பதவி உயர்வு ஆணைகளைவழங்கினார்.

சாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்தரம் குறித்து உலகவங்கி கவலை !!

DGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவலர்களே சரிபார்த்துக்கொள்ள கடவுச்சொல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்



ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.   
ஆண்டுதோறும் ஊதியம், ஆண்டுக்கு இருமுறை உயரும் அகவிலைப்படியால்  ஊதியமானது அதிகரித்துக்கொண்டு போகும் என்றாலும் ‘ஊதிய மேம்பாடு’ தருவது ஊதியக்குழு பரிந்துரையால்தான். ஏனென்றால், ஓர் ஊதியக் குழுவுக்கும், அதற்கடுத்த ஊதியக் குழுவுக்குமான பத்தாண்டு கால இடைவெளியில் தரப்படும் அகவிலைப்படி மொத்தத்தையும் அடிப்படை ஊதியமாக (Basic Pay) அங்கீகரித்துத் தருவது ஊதியக்குழுதான். இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஊதியத்தைத்தான் ‘உண்மை ஊதியம்’ (Real Pay) என்று குறிப்பிடுகிறது ஏழாவது ஊதியக்குழு. இதற்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு தரவே அகவிலைப்படி உயர்வு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

நான்கு அம்சங்கள் 
அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்பட ஊழியர்களின் ‘திருப்தி’ அவசியம் என்பதால், ஏழாவது ஊதியக்குழு கீழ்க்காணும் நான்கு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு தனது ஊதிய நிர்ணய பரிந்துரையை அளித்துள்ளது. 
1. ஊதியமானது, திறன்மிகுந்த ஊழியர்களை ஈர்த்து, தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ளும் வகையில் போதுமான அளவு இருக்க வேண்டும்.
2. ‘கடுமையாக உழைக்க வேண்டும்’ என்ற உந்துதலை ஊழியரிடையே ஏற்படுத்தக்கூடியதாக  இருக்க வேண்டும்.
3. ஊதியக் கொள்கையானது (Pay Policy) இதர மனிதவள மேலாண்மைச் சீர்திருத்தங்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.
4. அமைக்கப்படும் ஊதிய நிலைகள், நாட்டின் நிதிநிலை ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
இதன்படி, புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும், தர ஊதியமும் சேர்ந்தது 100%. அன்றைய தேதியில் தரப்பட்டிருந்த அகவிலைப் படி 125%.  ஊதியம் + அகவிலைப் படியின் கூட்டுத் தொகை 225%. ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரையில் 14.2 சதவிகித உயர்வை வழங்கியுள்ளது. அதன்படி, 225 சதவிகிதத்தில் 14.2% உயர்வு என்பது 32% ஆகும். அப்படியானால் 100+125+32 = 257%. இதுதான் அனைவருக்கும் பொதுவான ஊதிய நிர்ணயமுறை.
இந்த 257 சதவிகிதம்தான் 2.57 மடங்கு எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, 1.1.2016 அன்று பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி, பெருக்கி வரும் தொகையை ரூ.100-ன் மடங்குகளில் அமைத்து, ஊதிய நிர்ணய அட்டவணை ஒன்று அமைந்துள்ளது. இதன்படி நிர்ணயம் செய்யப்படுவதே ‘உண்மை ஊதியம்’ என்று சொல்லப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கும். 1.1.2016-க்குப் பிறகு தர ஊதியம் கிடையாது.
இவ்வாறு புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்தபிறகு, பணியில் உள்ள ஊழியர்களுக்கு 1.1.2016-க்குப் பிறகு கிடைக்கும் சில பணிப் பலன்கள் பின்வருமாறு இருக்கும்.
ஊதிய உயர்வு 
வருடத்துக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதிய உயர்வானது, 1.1.2016-க்கு முன்பு இருந்த ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் மூன்று சதவிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.10-ன் மடங்குகளில் இருந்தது. 
01.01.2016-ல் தர ஊதியமானது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால்,      1.1.2016-க்குப் பிறகு தரப்படும் ஊதிய உயர்வானது அடிப்படை ஊதியத்தில் மூன்று சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.22,850 அடிப்படை ஊதியமும் ரூ.5,400 தர ஊதியமும் பெற்றிருந்த ஒரு சிறப்பு நிலை செவிலியருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வு தொகையாக ரூ.850 தரப்பட்டிருக்கும். அதாவது, 22,850+5,400 = 28,250. இதற்கான மூன்று சதவிகித உயர்வு ரூ.850.
இந்தச் சிறப்பு நிலை, செவிலியரின் மொத்த ஊதியமான ரூ.28,250-க்கு நிர்ணயம் செய்யப்படும் புதிய ஊதியம்,  ஊதிய நிர்ணய அட்டவணைப்படி (Pay Matrix) ரூ.73,200-ஆக இருக்கும். எனவே, இவரது வருடாந்திர ஊதிய உயர்வு ரூ.2,200-ல் துவங்கி ரூ.2,300, ரூ.2,400 என ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகும்.
அகவிலைப்படி உயர்வு 
31.12.2015 அன்று ரூ.32,400 அடிப்படை ஊதியமும் ரூ.7,600 தர ஊதியமும் பெற்றிருந்த ஓர் அலுவலருக்கு ரூ.40,000-க்கு அகவிலைப் படி கணக்கிடப் பட்டிருக்கும். (32,400+7,600 = 40,000) இவரது புதிய ஊதியம் ரூ.1,02,800-ஆக நிர்ணயம் செய்யப்படும். ஆகையால், இனி இவரது அகவிலைப்படி ரூ.1,02,800-க்குக் கணக்கிடப் படும்.
ஊதிய முன்பணம் 
அரசு ஊழியர், ஆசிரியர் முதலானோர் பணிமாறுதல் (Transfer) செய்யப்படும்போது ஒரு மாத அடிப்படை ஊதியத்தை முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதனை மூன்று சம தவணை களில் மூன்று மாதங்களில் திரும்பச் செலுத்தலாம். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.20,900 அடிப்படை ஊதியம் +
ரூ4
,800 தர ஊதியம் பெற்றிருந்த ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கக்கூடிய முன்பணம் ரூ.25,700-ஆக இருந்திருக்கும். புதிய ஊதிய நிர்ணயத்தின்படி, இவரது அடிப்படை ஊதியம் ரூ.68,000-ஆக உயரும் என்பதால், இவர் ரூ.68,000-யை வட்டி இல்லாத முன்பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். (இந்த ஊதிய முன்பணமானது சொந்த விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கே சென்றாலும் கிடைக்கும்.) மேற்கண்டவை அனைத்தும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவுள்ள, புதிய அடிப்படை ஊதியம் வழங்கவுள்ள மேம்பட்ட பணிப்பலன்களே.
இனி, உண்மை ஊதியமான அடிப்படை ஊதியம் புதிய பணியாளர்களுக்கு எப்படி மேம்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். 
புதிய ஊழியர்கள்
புதிதாகப் பணிக்கு வருவோர்க்கான தொடக்கநிலை ஊதியம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 01.01.2016-க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேருபவருக்குத் தரப்பட்ட ஊதியம் + தர ஊதியம் + 125% அகவிலைப் படி= 9,300+4,600+17,375 = ரூ.31,275 இது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கத்துக்கு முந்தைய நிலை. ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தபின் பட்டதாரி ஆசிரியர் பெறக் கூடிய ஊதியம், 01.01.2016 அன்று, ரூ.44,900. அதாவது, தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.44900, முந்தைய ஊதியமான ரூ.31,275-யைவிட 43.56% அதிகம். 
இந்த 43.56% அடிப்படை ஊதிய உயர்வு என்பது பட்டதாரி ஆசிரியருக்கு மட்டு மன்றி, ரூ.9,300-34,800 என்ற ஊதிய ஏற்றமுறையும் ரூ.4,600 தர ஊதியமும் கொண்ட பழைய ஊதிய நிலைக்கு இணை யாகத் தற்போது மேம்படுத்தப் பட்டுள்ள புதிய ஊதிய நிலையில், நேரடி நியமனம் பெறும் அனைத்துப் பதவிகளுக்கும் பொருந்தும். இன்ன பதவிக்குத்தான் மேம்படுத்தப் பட்ட தொடக்க நிலை ஊதியம் என்றில்லாமல், நேரடி நியமனம் பெறத்தக்க அனைத்து பதவிகளுக்குமே அடிப்படை ஊதியத்தில் 62.22% வரை அதிகரித்த ஊதியத்தைத் தந்துள்ளது (Pay Matrix) ஊதிய நிர்ணய அட்டவணை.
‘மூத்த ஊழியரின் ஊதியம், அதே பதவியில் உள்ள இளைய ஊழியரின் ஊதியத்தைவிட குறைவாக இருக்கக்கூடாது’ என்பது விதிமுறை. இந்த விதிமுறையைப் பயன்படுத்தி சில வருடங்கள் முன்னதாகவே பணிக்கு வந்து, புதிய ஊதியத்தில் குறைவான ஊதியம் பெறுவோர், தமது இளையவரின் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் பெற முடியும். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தொடக்கநிலை ஊதியத்தின் பலன், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு வந்த ஊழியர்களுக்கும் போய்ச் சேரும்.
சுருக்கமாகச் சொல்வதானால், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் சிறப்பம்சமே தொடக்க நிலை ஊதிய மேம்பாடுதான். இந்த மேம்பாடானது, தற்போது பணியில் சேரும் ஊழியர்களுக்கு, கால ஓட்டத்தில் நிறைவான பணப்பலனை வழங்கக்கூடும்.  ஊதிய ஏற்றம் கருதி தனியார் துறைக்குச் செல்ல விரும்பும் திறன்மிகு இளைஞர்களை அரசுப் பணிக்குக் கொண்டு வந்துசேர்க்கும்! 

ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு! சிறப்பு கட்டுரை :

ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு !!! ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை 23ன்படி 2011லிருந்து வழங்கி வரும் தனி ஊதியம் 750 ஐ 1.1.2006ல் 2800 தர ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்காது 1.1.2011 முதல் வழங்குவதால் ஏற்பட்டுள்ள இளையோர் மூத்தோர் முரண்பாடுகளை களைய முடியாமல் தமிழக கல்வித்துறை திணறி வருகிறது .ஊதியக்குழவில் வழங்கப்படும் திருத்தம் அனைத்தும் அவ்வூதியக்குழுவின் ஆரம்ப காலம்(1.1.2006) முதல் வழங்காமல் குறிப்பிட்ட தேதியை (1.1.2011)வைத்து ஆசிரியர்களை பிரிவிணைப்படுத்தியதே இதற்கு காரணம் ..

அனைத்து பணப்பலன்களுக்கும் பொருந்தும் தனி ஊதியம் 750ஐ ஆறாவது ஊதியக்குழவின் மையத்திலிருந்து வழங்குவதும் 1.1.2006 லிருந்து 31.12.2010 முடிய 2800தர ஊதியம் பெற்ற சாதாரண இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் எந்த பணப்பலனுக்கும் வழங்காமல் மறுப்பதும் அரசாணை 23 ன் தவறாகும் ...
  
ஓர் ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக அல்லது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது எப்படி தனி ஊதியம் கையாளப்பட வேண்டும் என்பதை அரசு தெளிவாக விளக்காமல் போனதாலும் ...தனி ஊதியம் 5200-20800 க்கு மாற்றாக அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்பட்டதா ? அல்லது 4200க்காக வழங்கப்பட்டதா ? என்பது பற்றி அரசு தெளிவு படுத்தவில்லை ...
  
கேட்டதோ 9300-34800  கிடைத்ததோ 750 மட்டும் ....இது எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே இன்னும் முடிவாக வில்லை ....எப்படி இருப்பினும் இத்தனி ஊதியம் எல்லோருக்கும் 1.1.2006லிருந்து வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ...வழங்காத காரணத்தால் பணியில் பதவி உயர்வில் மூத்தோர் பல ஆயிரக்கணக்கானோர் குறைவான ஊதியம் பெறும் நிலை தமிழகமெங்கும் உருவாகி உள்ளது .
    
❇8764 தெளிவுரை பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் எக்காரணம் கொண்டும் தொடரக்கூடாது என்று கூறியுள்ள நிலையில் ..எல்லோருக்கும் 1.1.2011க்குப்பின் பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் பதவி உயர்வு பெற்ற பிறகும் தனி ஊதியமாக தொடராமல் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இணைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது ....
  
⏰ஆறாவது ஊதியக்குழவில் pay in the pay என்றும் grade pay என்றும் ஊதியம் வழங்கும் நிலையில் இத்தனி ஊதியம் 750 இந்த இரு நிலைகளில் எதில் வருகிறது என்பதை தமிழக கல்வித்துறை விளக்காமல் பணியில் மூத்தவருக்கு குறைந்த ஊதியத்தையும் ..பணியில் இளையோருக்கு தனி ஊதியம் 750 பதவி உயர்வில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது தவறானது என தணிக்கை தடைகளை காரணம் காட்டி பிடித்தம் செய்வதும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பான சூழலை உருவாக்கி உள்ளது ...
  
 தனி ஊதியத்தை 1.1.2006 முதல் கொடுக்காமல் மறுப்பதும் ..1.1.2011 முதல் பதவி உயர்வில் சேர்த்து கொடுத்ததை எடுப்பதும் பல நீதிமன்ற வழக்குகளுக்கு வித்திட்டு காலத்தையும் பணத்தையும் நிர்வாக குழப்பங்களையும் ஏற்படுத்தும் ..
  
அரசின் முறையற்ற அரசாணை 23 ஆல் தெளிவற்ற 8764 நிதித்துறை தெளிவுரையால் தமிழக கல்வித்துறையில் 750 பெற்றவரும் பெறாதவரும் அல்லல் படும் சூழல் உருவாகி உள்ளது ..ஐந்தாவது ஊதியக்குழவில் தனி ஊதியம் கையாண்டு வந்த முறையும் .ஆறாவது ஊதியக்குழவின் தனி ஊதியமும் ஒன்றா ? அல்லது எப்படி வேறுபட்டது என கல்வித்துறை விளக்காமல் அதிக ஊதியம் வழங்குவதும் பிறகு பிடுங்கி எடுப்பதும் தேவையற்ற நடவடிக்கைகள் ..
  
கீழ்நிலை அலுவலக பணியாளர் செய்தது தவறெனில் தமிழகம் முழுதும் தெளிவாக அரசாணைகளை வழங்குதல் அரசின் கடமை ஆகிறது ...அரசின் இத்தகைய ஆசிரியர் விரோத போக்கினால் ஆயிரக்கணக்கான ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்ட மேலும் மேலும் குழப்பமான நடைமுறைகள் தொடர்கிறது ..
  
ஆறாவது ஊதியக்குழவின் முரண்பாடுகள் களைய ஒரே தகுதி .ஒரே பணி .ஒரே ஊதியம் என்பதை தமிழக அரசும் கல்வித்துறையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும் ...

28/9/17

ரூ.1,307 கோடி நன்கொடை: இந்திய தம்பதி தாராளம்!!

அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக, அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் தம்பதி,
1,307 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

இந்தியாவை பூர்வீகமாக உடைய, கிரண் படேல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், தம்பாவில், மருத்துவ சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பல்லவி படேலும் டாக்டராக உள்ளார். இருவரும் சேர்ந்து, மியாமியைச் சேர்ந்த நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு, 1,307 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

பல்கலை சார்பில், தம்பாவில் புதிய மருத்துவமனை வளாகம் கட்டுவதற்காக, நிலம் மற்றும் ரொக்கத்தை அவர்கள் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

தமிழகத்தின் பஞ்சமில்லா பரபரப்புகளும்; பற்றி எரியும் வதந்'தீ'களும் ....

சூடான காப்பி டீ மட்டுமல்ல சூடான செய்தியும் கூட நம்மை சுறுசுறுப்பாக்கும் என்பதற்கு சமீபத்திய 
தமிழக அரசியல் சூழலை உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு நாட்டின் நிகழ்வுகள் நம்மை விழிப்படைய செய்து விறுவிறுப்பாக வைத்திருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஏறத்தாழ ஒரு க்ரைம் நாவல் படிக்கும் வாசகனைப் போல் நம் எல்லோரையுமே ஆக்கி வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசயமும் தமிழக அரசியல் போக்கும், நாளுக்கு நாள் கணிக்க முடியாத அளவுக்கு திருப்பங்களும் நகர்வுகளும் நிறைந்ததாக இருப்பதோடு, அரசியல் நோக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண டீக்கடை விவாதங்களிலும் சந்தை வியாபாரிகள் மத்தியிலும் சூடு பிடித்திருப்பதை காணமுடிகிறது.

அதேசமயத்தில் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் மீம்ஸ்களும், வதந்திகளும் வேறு தன் பங்கிற்கு மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்து அழகு பார்க்கிறது. காவல் துறை ஆணையரின் இன்றைய அறிவிப்பானது அதற்கு மேலும் வழிவகுத்தது போல் இருந்தது.

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த  உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, முக்கிய புள்ளிகளில் யாராவது மரணமா என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது. இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின.

பாதுகாப்பு வேண்டும்: பிரதமருக்கு மாணவிகள் கடிதம்!!!

பல்கலை வளாகத்துக்குள் பாதுகாப்பு வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பனாரஸ் 
இந்து பல்கலைக்கழகத்தின் மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதைக் கண்டித்து கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசிக்குச் சென்றிருந்தபோது பாதுகாப்பு இல்லை எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமான மாணவ - மாணவியர் காயம் அடைந்தனர். மேலும் சில மாணவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு வேண்டி மாணவிகள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதாவது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் பேச வாய்ப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு, நிர்வாகத்தின் ஆதரவு, ஆண் பெண் சமத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள்தான் எங்களுக்கு வேண்டும். ஆனால், அது தவிர பெண்கள்மீது லத்தி - சார்ஜ், கண்ணீர்ப்புகை மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசுதல், பல்கலைக்கழக வளாகத்தை எரித்தல் மற்றும் 144ஆவது பிரிவுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை நடைபெறுகிறது. இதை எதையும் நாங்கள் விரும்பவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “நாங்கள் எங்கள் துணைவேந்தரிடம் பேச விரும்புகிறோம். அவரிடம் பேச இரு நாள்களாகச் சாலையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், அவர் எங்களிடம் பேச தயாராக இல்லை என்று தெரிகிறது. மோடி ஜி இதுபற்றி உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட நினைக்க முடியாது. ஏனெனில் சம்பவத்தின்போது நீங்கள் உங்கள் தொகுதியில் இருந்துள்ளீர்கள். இந்தச் சம்பவம் உங்கள் கவனத்துக்கு வரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஒரு மாணவி தெரிவித்திருக்கிறார்.

“எங்களுடைய கோரிக்கை எளிமை மற்றும் நேரடியானது. அதாவது துணைவேந்தர் எங்களைச் சந்தித்து பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்திருந்தால் எதிர் நடவடிக்கைகள் தேவைப்பட்டிருக்காது. நாங்கள் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருக்கிறோம், வன்முறையைச் சந்திக்க அல்ல” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு செயலாளர்,கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு சம்பளம் வழங்கக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

B.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி!!!

தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே 
பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர்.
இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டும், பல்கலை தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்க, அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், அவரவர் பணியாற்றும் பள்ளியிலேயே கள பயிற்சி பெற, கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

வீடியோ விவகாரம் ; ஜெ. கூறியதையே நாங்கள் செய்தோம் - தினகரன் விளக்கம்!!!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில்
மர்மமே நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம்,  அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான். 
அந்நிலையில், ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்க்கவே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பின் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அதோடு, மருத்துவமனையில் ஜெ.வை சசிகலா வீடியோ எடுத்தார் எனவும், அந்த வீடியோ எங்களிடமே இருக்கிறது என சமீபத்தில் தினகரன் கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் ஜெயலலிதா உடல் மெலிந்து, நைட்டியில் இருந்தார். எனவே, கண்ணியம் கருதி அதை வெளியிடவில்லை என அவர் கூறியிருந்தார்.    
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : 
ஐசியு வார்டில் இருந்து சாதாரண அறைக்கு ஜெயலலிதா மாற்றப்பட்ட பின்புதான் சசிகலா அவரை வீடியோ எடுத்தார். அதுவும், ஜெயலலிதா கூறித்தான் அதை எடுத்தார். அதை ஊடகங்கள் கேட்கிறது என்பதற்காக நாங்கள் வெளியிட முடியாது.  
சசிகலா, நான் உட்பட நாங்கள் அனைவருமே ஜெயலலிதாவிற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் போலவே இருந்தோம். அவர் ஒரு துணிச்சலான பெண்மணி. ஜெயலலிதா உடனான அந்த நட்பிற்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என சசிகலா நினைத்தார். அதனால்தான் அந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை. தற்போது விசாரணைக் கமிஷன் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அதை அவர்களிடம் அந்த வீடியோவைக் கொடுப்போம்” என அவர் கூறினார்.

சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்: சாம்சங் விற்பனை யுக்தி!

                                                                                            
                                            
   சாம்சங் அதிகாரப்பூவ இணைய தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது
. இந்த விற்பனை வரும் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து ஸ்மார்ட்வாட்ச் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது.  
# சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (4ஜிபி ராம்) ஸ்மார்ட்போன் ரூ.60,900-க்கும், கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ரூ.53,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
# சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,900-க்கும், 64 ஜிபி கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   
# சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரோ, கேலக்ஸி ஜெ3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ரூ.7,590 மற்றும் ரூ.7,090 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  
# கேலக்ஸி ஆன் 7, கேலக்ஸி ஆன் 5 ப்ரோ, கேலக்ஸி ஆன் 5  ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.6,590, ரூ.6,490, ரூ.5,990-க்கு  விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  

மதுரையில் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியைக்கு கத்திக்குத்து ஆராய்ச்சி படிப்பு மாணவர் கைது!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறையின் இணைப்பேராசிரியர்
மற்றும் துறைத்தலைவராக இருப்பவர் ஜெனீபா செல்வின் (வயது 45).

பல்கலைக்கழகத்தின் சினிமா கல்வியியல் துறையில் பகுதிநேர ஆராய்ச்சி மாணவராக இருப்பவர், குலமங்கலத்தை சேர்ந்த ஜோதிமுருகன் (32). இவர் பேராசிரியை ஜெனீபாவின் துறையில் நேர அடிப்படையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

ஜோதிமுருகனின் நடத்தை, வகுப்பு எடுப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த கல்வியாண்டில் அவருக்கு கவுரவ பேராசிரியர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் துறைத்தலைவரான பேராசிரியை ஜெனீபாவை அடிக்கடி சந்தித்து வேலைவாய்ப்பு குறித்து வற்புறுத்தி வந்தார்.

இருப்பினும், மாணவ–மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து அவருக்கு பணி வழங்க முடியாது என ஜெனீபா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறைத்தலைவர் அலுவலகம் முன்பு ஜோதிமுருகன் நின்றிருந்தார்.

அப்போது, பேராசிரியை ஜெனீபா தனது அறைக்கு வந்தார். அவருடன் ஜோதிமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெனீபாவை குத்தினார். அவரது கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவ–மாணவிகள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர்.

அங்கு, கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஜோதிமுருகனை மாணவ–மாணவிகள் சரமாரியாக தாக்கினர். பின்னர் ஜெனீபாவை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்தனர். அதன்பிறகு, பீபிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக கொண்டு போய்ச் சேர்த்தனர்.

தகவலறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆராய்ச்சி மாணவர் ஜோதிமுருகனை கைது செய்தனர்.

ஜோதிமுருகன் இதே பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி, எம்.பில்., படிப்புகளை முடித்த பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திக்குத்து சம்பவம் நடந்த இடம் துணைவேந்தர் அலுவலகத்தின் அருகில் உள்ள தமிழ்த்துறையின் 2–வது மாடியில் அமைந்துள்ளது. சம்பவம் நடந்த போது மு.வ.அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. இதனால் பல்கலைக்கழக வளாகம் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.

தகவல் அறிந்ததும், துணைவேந்தர் செல்லத்துரை ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, பேராசிரியை ஜெனீபாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆஸ்பத்திரியில் பேராசிரியைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பூரண குணமடைந்து விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.

வேலைவாய்ப்பு கேட்ட ஆராய்ச்சி பிரிவு மாணவர் மீது பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால் அவருக்கு மீண்டும் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கவில்லை. அதற்காக பேராசிரியையை கத்தியால் குத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். இதை மாணவ–மாணவிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள், ஆபத்து இருப்பதாக தெரிந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் சுற்றறிக்கையாக அனைத்து துறைத்தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை !!

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

27/9/17

FLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

Image may contain: 10 people, people smiling, people standing and indoor7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம்
முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்.
Image may contain: 1 person, text

FLASH NEWS:- CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!


JACTO GEO CASE -COURT ORDER COPIES - 7th Sep,12th Sep ,15th Sep and 21st Sep

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

Image may contain: 1 person, textமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில்
புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்வி நிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்

JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!





குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.



தொடக்கக்கல்வி - B.Ed Teaching Practice - அருகாமையில் உள்ள பள்ளியிலும் ஊதிய இழப்பின்றி ஒரு பாடவேளை கற்றல் பயிற்சி மேற்கொள்ளலாம் - இயக்குநர் தெளிவுரை




பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தகவல்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும்
நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார். தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார்.


கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோ எழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி

பாரதஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச
தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் ஓய்வூதியதார்களுக்கும் குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு நிலம் விற்றது தொடர்பான வழக்கு : 6 வாரங்களுக்குள் விசாரிக்க உத்தரவு !!

முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாக நிலம் விற்றது தொடர்பான புகாரை 6 வாரங்களுக்குள் விசாரிக்க பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காமராஜரின் விருப்பப்படி அவரது
 நண்பர் சங்கு கணேசன் என்பவர் நெல்லை வடக்கன்குளத்தில் பள்ளி ஆரம்பித்தார்.


பள்ளிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வாகி அருள்ராஜன் சட்டவிரோதமாக விற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி சங்கு கணேசனின் பேரன் நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைப்பு !!!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது....

எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுக்கு தமிழக டி.ஜி.பி.உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

இன்றும், நாளையும் நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமாண்டோ உள்ளிட்ட அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகளில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவு தற்போது திடீரென வெளியாகியுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

CPS COMMUNICATION ADDRESS

01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்றும் ஓய்வு பெற்றோர் / மரணம் அடைந்தோர் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை! !

இரண்டுக்கு மேல் குழந்தைகள்: நீதிபதி பதவி பறிப்பு!!!

மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால் 
இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் சட்டப் பிரிவு 196இல் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 26 ஜனவரி 2001ஆம் ஆண்டுக்குப் பின் அரசு அதிகாரிகள், நீதித் துறையில் பணியாற்றுவோர் ஆகியோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இச்சட்டத்தின் கீழ் 2 பயிற்சி நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார். மற்றொருவர் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி. இத்தகவலை போபால் உயர் நீதிமன்றப் பதிவாளர் முகமது ஃபாஹிம் அன்வர் நேற்று (செப். 25) தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி 3ஆவது குழந்தை பெற்றதையடுத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார். பதவியை இழந்த நீதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டுதான் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

26/9/17

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதில்லை.
மேலும் இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குத் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக். 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது: 10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரையில் 1939ல் உருவாக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை முதன்மை கல்வி அலுவலகம், 1985ல் திண்டுக்கல், 1997ல் தேனி முதன்மை கல்வி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன. 
இதையடுத்து மதுரை வருவாய் கல்வி மாவட்டம் அளவில் உள்ளதை நிர்வாக வசதிக்காக 13.2.1995ல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், 29.8.1960ல் உசிலம்பட்டி டி.இ.ஓ., 14.9.1985ல் மேலுார் டி.இ.ஓ., மற்றும் 8.2.1995ல் மதுரை டி.இ.ஓ., அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.மதுரை நகர் வளர்ச்சியடைந்ததன் காரணமாக பள்ளிகளின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தன. தற்போது மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்தமுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மதுரை டி.இ.ஓ.,வின் கீழ் செயல்படுகின்றன. அதாவது 534 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 220க்கும் மேற்பட்ட பள்ளிகள் மதுரை டி.இ.ஓ.,விற்கு உள்ளது.அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். அதேநேரம் உசிலம்பட்டி - 121, மேலுார் -189 பள்ளிகள் உள்ளன. ஆனால் மூன்று டி.இ.ஓ., அலுவலகங்களிலும் பணியாளர்கள் ஒரே விகிதத்தில் தான் உள்ளன.
இதனால் பள்ளி ஆய்வுகள் அதிகாரிகளுக்கு சவாலாகவும், நிர்வாக ரீதியிலான பணிகள் அலுவலர்களுக்கு சுமையாகவும் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தான் பத்து ஆண்டுகளுக்கு முன் பாண்டுரங்கன் சி.இ.ஓ.,வாக இருந்தபோது மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை இரண்டாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் பெரிய ஒன்றியங்களான அலங்காநல்லுார், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் மதுரையின் கீழ் உள்ளன. மாணவர்கள் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இதை இரண்டாக பிரித்தால் மட்டுமே கற்றல் கற்பித்தல், பள்ளி ஆய்வுகள் பணிகள் சீராகவும், நிர்வாக பணிகள் சிறப்பாக மேற்கொள்ள முடியும்," என்றார்.

ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர் சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க கூட்டுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை குறித்தும், நீதிமன்ற வழக்குகள் குறித்தும், அரசின் அணுகுமுறை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஓய்வூதியம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும், அரசுத்துறை சார்ந்த பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 
அரசின் அணுகுமுறை, நீதிமன்ற வழக்குகள், கோரிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும், தமிழக முதல்வர் அறிவித்தவாறு ஊதியமாற்று அறிக்கையைப் பெற்று அறிக்கை மீது சங்கங்களை அழைத்துப் பேசி அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்திட வேண்டும். இதே கோரிக்கையுடன் ஓய்வூதியர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், தோழமை சங்கங்களை ஒன்றிணைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு உருவாக்கப்படும். அக். 15-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், திருச்சியில் அக். 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ-ஜியோ மாநில பேரவை கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதில்லை.
மேலும் இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குத் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக். 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.