யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/2/18

இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பரில் நடந்தது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பல்கலையின் தேர்வுத்துறையில், மாணவர்களின் மொபைல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மொபைல் எண்களுக்கு, மாணவர்களின் தேர்வு முடிவுகள், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா தெரிவித்துள்ளார். 'எந்தெந்த கல்லுாரிகள் சார்பில், தேர்வு கட்டணம் செலுத்தவில்லையோ, அந்த கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

pay matrix single page

மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை!!!

மதுரை, பிப். 5--மதுரை மாவட்ட கருவூலத்தில் ஊழியர் பற்றாக்குறையால் ஒருவர் 4 ஆயிரம் 
ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கும் அவலம் நிலவுகிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக, மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கருவூலத்தில் 1980 க்கு முன்பு வரை தேவையான ஊழியர்கள் இருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் 1980 ஜன., 24 துவங்கப்பட்ட திண்டுக்கல் கருவூலம், 1987 செப்., 1 துவக்கப்பட்ட மதுரை சம்பளக்கணக்கு அலுவலகம், 2000 அக்., 1 துவங்கப்பட்ட தேனி கருவூலத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். புதிய அலுவலகங்கள் துவங்கிய போதெல்லாம் இங்கிருந்து ஊழியர்கள் மாற்றப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆயிரம் உள்ளது. மாதந்தோறும் 100 பேர் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற துவங்குகின்றனர். தற்போது ஒரு கருவூல அலுவலர், ஒரு உதவி அலுவலர், 10 கணக்கர்கள், 5 கண்காணிப்பாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இவர்கள் 44 ஆயிரம் ஓய்வூதியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்துப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஒரு கணக்கர் குறைந்தது 4 ஆயிரம் ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு ஊழியர் 750 ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கிறார். எனவே கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய வழங்கும் அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் நிதித்துறையினருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நிதித்துறையில் அவரது பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிகளில் மந்தம் நிலவுகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில்,
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 6 - 8ம் வகுப்பு வரை, ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்தவும், மதிப்பீட்டு முறையிலும் ஒரே நடைமுறையை பின்பற்றவும், அந்த வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
எனினும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட முறையில், 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், மாணவர்களின் தன்னம்பிக்கையையும், திறனையும் மேம்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ.,யின் அறிவிப்புக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல கமிஷன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இத்திட்டம் கைவிடப்படுவதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சமூக வலை தளங்களில் பரவும் ரயில்வே வேலை குறித்த தகவலை நம்ப வேண்டாம்!!!

வேலைவாய்ப்பு : பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் பணி!

                                                  


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில்
காலியாக உள்ள சயின்டிஸ்ட்/இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 106

பணி இடம் : பெங்களூரு

பணியின் தன்மை : சையின்டிஸ்ட்/இன்ஜினியர்

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 56100/-

கல்வித் தகுதி : பிஇ/பிடெக்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம் : ரூ.100/- இதனை ஆன்லைன் வழியாகவும், அல்லது அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.

கடைசித் தேதி : 20.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/sites/default/files/advtsciengrsc2018detailedforweb.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Hero Motocorp நிறுவனத்தில் 6577 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது!!!

வேலையின் பெயர்:  Manager and various Roles


சம்பளம் : Rs.55,000/- per month.

தேர்வு முறை: Written test

Apply Link: https://goo.gl/SSncek

கல்வி:  Any Degree

கடைசி நாள்: 20.03.2018

மேலும் தகவலுகள்
https://goo.gl/SSncek
www.sstaweb.com

I.T SOFTWARE 11.0


Click here

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம். 05/02/2018 SSTA-பொதுச்செயலாளர் பேட்டி

                                                       

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - 
போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்* *(SSTA)*
Vikatan 5 Feb. 2018 18:36
  Vikatan

ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை. கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் புலம்பலும் வேதனையும் வேறுமாதிரியாக இருக்கின்றன. இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்கள். இப்படி வேலை செய்யும் இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதுபற்றிய விவரங்களை இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) என்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நம்மிடம் விவரித்தார்.
"2009-க்குப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட 21,000 இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களில் 1.6.2009-க்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 11,170 என்றும் 1.6.2009-க்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,000 என அடிப்படை ஊதியத்தில் 3,170-ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறோம். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி

மாதம் வரை பல்வேறு போராட்டங்களைச் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்திவிட்டோம். அரசும் எங்களை அழைத்து 8 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில், 2009-க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தது.
ஆனால், இன்றுவரை உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதே ஊதிய முரண்பாடுகளை இந்த ஊதியக் குழுவிலும் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகள் வருடாந்தர ஊதிய வித்தியாசம் ஏற்படுகிறது. இந்தத்தொகை முரண்பாடு பல லட்சங்களைக்கொண்டதாக இருக்கிறது. தற்போது தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு துப்புரவுப் பணியாளர்கள் பெறும் ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய முரண்பாட்டைக் களையவும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 6.1.2018 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். ஆனாலும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவில்லை. இதனால், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராகிவிட்டோம். வருகிற மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் DPI வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என்றார் ஜே.ராபர்ட்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

4/2/18

ITI/டிப்ளமோ தகுதிக்கு காரைக்குடி CECRI-ல் பல்வேறு பணிகள் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (CECRI) சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள 17 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 17

பணியிடம்: காரைக்குடி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Fitter – 01

பணி:  Welder – 02

பணி:  Wireman – 01

பணி:  Ref. & A/C Mechanic – 03

பணி:  Draughtsman (Civil) – 01

பணி:  PASAA  – 03

பணி:  Plumber – 01

பணி:  Carpenter  – 01

பணி:  Mechanical Engineering – 01

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது:  14 வயது பூர்த்தியடைந்திருக்க  வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://www.cecri.res.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேர்,நேர்முகத்தேர்வின்  போது சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 21.2.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Central Electrochemical Research Institute, Karaikudi

கூடுதல்  விவரங்கள் அறிய  http://www.cecri.res.in/Portals/0/Careers/APP-02-2018_AdvtCopy.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு ஊழியர்களின் வெளிநாட்டு வேலைக்கு செக்: நீதிமன்றம் அதிரடி!!!

அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக 
அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்க அனுமதிக்கும் அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பரகத் அலிகான். இவர் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லா விடுமுறையில் 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி அளிக்கும் அரசாணையின் அடிப்படையில் துபாய் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தார். அனுமதி கிடைப்பதற்கு முன்பு வெளிநாட்டு வேலையில் சேர்ந்து பணிக்காலம் முடிந்து மீண்டும் அரசு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் அனுமதி கிடைப்பதற்கு முன்பு பணியில் சேர்ந்தற்காக பரகத் அலிகானுக்கு ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 4 ஆண்டுகள் அவரது பெயர் வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் துணை ஆட்சியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகள் சம்பளம் இல்லா விடுமுறையில் வெளிநாட்டில் வேலைபார்க்க அனுமதி வழங்கி தமிழக அரசின் பொதுத்துறை 20.5.1991-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்கள் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது, அரசு ஊழியர்களை 3 ஆண்டுகள் விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க அனுமதி வழங்கி விட்டு நாடு திரும்பியதும் மீண்டும் அரசு பணியில் சேர அனுமதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

அரசு ஊழியர் ஒருவர் தாய் நாட்டிலும், வெளிநாட்டிலும் இரு வேலை பார்ப்பது எப்படி? என்பதை தீவிரமாக பார்க்க வேண்டும். இதனால் அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்கும் அரசாணையின் அடிப்படையில் எத்தனை பேர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்? இந்த அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்!!!

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் பயிற்சி!

                                                

தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் நிரப்பப்படவுள்ள தொழில்பழகுநர் 
பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 737

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கடைசி தேதி: 23.02.2018

மேலும் விவரங்களுக்கு http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf
என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பணிபுரியும் பெண்களுக்கான பட்ஜெட்!

                                                

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில்,பணிபுரியும் 
பெண்களுக்கான வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாகப் பெண்களும் ஆண்களும் தங்களது சம்பளத்திலிருந்து 12 சதவிகிதத்தைச் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் தங்களது சம்பளத்திலிருந்து செலுத்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளத்தின் அளவு உயரும் என்பதால் பணிபுரியும் பெண்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் மொத்த பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் அவர்களின் பங்களிப்பு 24 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்று பொருளாதார வல்லுநர்களும் தொழில் துறை நிபுணர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ள வருங்கால வைப்பு நிதி அறிவிப்பு அதற்கு ஒரு பாதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நீட் தேர்வு: மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்!!!

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் 
என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பட்ஜெட் விளக்க ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு முன் தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியது:
தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு கோரிக்கை. நீட் தேர்வு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த முறை நடத்தப்பட்டது. இதன் மூலம் தெருக்கோடியில் உள்ள மாணவர்களுக்குக் கூட நீட் மூலம் இடம் கிடைத்து மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மறுபடியும் நிச்சயமற்ற தன்மையை வைத்துக் கொண்டு மாணவர்களை யாரும் குழப்பக்கூடாது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநில பாடத் திட்டமும் நீட் தேர்வில் சேர்த்துக் கொள்ளப்படும் என மிகத் தெளிவாக கூறி உள்ளார். மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற நன்றாக படிக்கச் சொல்வதே சரி. இதில் அரசியல் கூடாது.
தமிழ் ஓங்கி ஒலிக்கும்: தமிழ் உணர்வு பாஜக-வுக்கு அதிகம் உள்ளது. வைகோ உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், இனிமேல் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது.
தமிழ் மொழி முதுமொழி; தெய்வமொழி. பாஜக ஆட்சியில் தமிழ் நிச்சயமாக தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். பாஜக தலைவர்கள் யாரும் தமிழ் பற்றில் வைகோவுக்கு குறைந்தவர்கள் அல்ல என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

பதவி உயர்வில் இழுபறி கல்வித்துறையில் அதிருப்தி!!!

பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிப்பு இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்'

இடைக்கால நிவாரணம்: மின் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!!!

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, ‘ஹால் டிக்கெட்’கள் 
வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதி!!!

*சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதி 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று பள்ளி கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார். மேலும்,  காவல்துறை, மாவட்ட ஆட்சியர், பாஸ்போர்ட் உள்ளிட்ட துறைகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்*

பிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை!!!

புதிய கற்றல் முறை மற்றும் படிநிலைகள்!!!

                           
                                            



படிநிலைகள்
https://drive.google.com/file/d/1zjEkBhDqOR-Diau4H3CXVH28By4XRPue/view?usp=drivesdk

கற்றல்முறை
https://drive.google.com/file/d/11R16Fztjb2rIl4dor0GbKRDlatO7T5Cq/view?usp=drivesdk

4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தகவல்

தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' 
என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நுாலகம் சார்பில், 'நுாலகங்கள் மற்றும் தகவல் மையங்களின் முன்னேற்றத்துக்கான சர்வதேச தற்போதைய நிகழ்வுகள்' என்ற தலைப்பிலான, தேசிய மாநாடு, நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: 

அண்ணா நுாற்றாண்டு நுாலக பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய்; மதுரை தமிழ் சங்கத்திற்கு, ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 312 நிரந்தர நுாலகங்களின் புத்தகங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட உள்ளன. அவற்றில், 119 நுாலகங்களுக்கு, கணினி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 4,603 நுாலகங்களும் கணினி மயமாக்கப்படும். 32 மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., அகாடமியை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார். 12 மாவட்டங்களில், நடமாடும் மொபைல் நுாலக திட்டம் துவங்கப்பட உள்ளது.
மொபைல் நுாலகங்கள், காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளி என, மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பயிற்சி அளிக்கும். பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கூறும் ஓலைச்சுவடிகள், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக நுாலகங்களில், மூன்று மாதங்களில், ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண நுாலகத்துக்கு, ஒரு லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளது.மற்ற நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதி நுாலகங்களுக்கு, 2,500 முதல், 5,000 வரையில் புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பொது நுாலகத்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன்; இணை இயக்குனர், நாகராஜ முருகன் பங்கேற்றனர்.
நேற்று அமைச்சர்செங்கோட்டையன் அளித்த பேட்டி: 
'நீட்' தேர்வில் விலக்கு பெறுவதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொண்டு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற, முதல்வர் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நுாலகத் துறைக்கான, 'செஸ்' வரி விகிதத்தை, 4 சதவீதமாக, மத்திய பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளனர். இதன்மூலம், உள்ளாட்சி துறைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.தற்போது, நுாலகத்துறை வளர்ச்சிக்கு, உள்ளாட்சித்துறை வழியாக கிடைக்கும், செஸ் வரியின் நிலுவைத் தொகையை பெற, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 
உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு, இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தான் கண்டுபிடித்தது. தேர்வு பணியில் ஈடுபட்ட, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம்.வரும் காலங்களில், தேர்வு பணிகளில் தனியார் துறையை ஈடுபடுத்து வது குறித்து, பரிசீலித்து முடிவு எடுப்போம். இந்த பிரச்னையில், நாங்கள் எந்த விதமான விசாரணைக்கும், தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!!!

                                           
வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை 
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலை.. வேலை... வேலை... இந்திய ரயில்வேயில் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலை

                                                  
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து
505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதில் சென்னைக்கு 945 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.
CENTRALISED EMPLOYMENT NOTICE (CEN) No.01/2018
மொத்த காலியிடங்கள்: 26,502
பணி: உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot)
காலியிடங்கள்: 17673
பணி: டெக்னீசியன் (Technicians)
காலியிடங்கள்: 8829
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. RRB Ahmedabad - 164
2. RRB Ajmer - 1221
3. RRB Allahabad - 4694
4.. RRB Bangalore - 1054
5. RRB Bhopal - 1679
6. RRB Bhubaneswar - 702
7. RRB Bilaspur - 945
8. RRB Chandigarh - 1546
9. RRB Chennai - 945
10. RRB Gorakhpur - 1588
11. RRB Guwahati - 367
12. RRB Kolkata - 1824
13. RRB malda - 880
14. RRB Mumbai - 1425
15. RRB Muzaffarpur - 465
16. RRB Patna - 454
17. RRB Ranchi - 2043
18. RRB Secunderabad - 3262
19. RRB Siliguri - 477
20. RRB Thiruvananthapuram - 345
சம்பளம்: மாதம் ரூ.19,990 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: மெட்ரிக்/பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள், 3 டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது: Armature and Coil Winder, Electrician, Electronics Mechanic, Fitter, Heat Engine, Instrument Mechanic, Machinist, Mechanic Diesel, Mechanic Motor Vehicle, Millwright Maintenance Mechanic, Mechanic Radio & TV, Refrigeration and Air-conditioning Mechanic, Tractor Mechanic, Turner, Wireman அல்லது மெட்ரிக், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) முடித்தவர்கள் அல்லது 3 years Diploma in Mechanical, Electrical, Electronics, Automobile Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக நடத்தப்படும் கணினி வழியிலான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250. இதனை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தியும் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  வேலை http://tz.ucweb.com/2_2mD7f

கடிதம் எழுதி கலக்டரை சந்தித்த 9ஆம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்.*

தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்: அக்டோபர் 2 முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு!!!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒரு நபர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

தேசிய அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமான இது, வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவத்துக்கு தற்போது அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்கும்.   

கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்!!!

நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!

                                       
தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 100 நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் 2017 அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்தனர்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய நூலகர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், “பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் செயல்படுத்தப்படும். நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகும். நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீட் பயிற்சிக்காக முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மீதமுள்ள 312 மையங்களும் தொடங்கப்படும். எனவே தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை முதல் 412 பயிற்சி மையங்களும் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

3/2/18

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகள்


ஈரோடு மாவட்டம் SSA (SARVA SHIKSHA ABHIYAN)-ல் Data Entry Operator பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணி:  மாவட்ட அலுவலக கணினி விவரப் பதிவாளர்

       ( District Project Office – Data Entry Operator)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 10,000

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் LOWER GRADE மற்றும் MS-Office-ல் 3 மாத Certificate Course முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. பணி: வட்டார அளவில் கணினி விவரப் பதிவாளர்

            (Block Resource Centre – Data Entry Operator)

காலியிடங்கள்: 18

சம்பளம்: 8,400

கல்வித்தகுதி: +2 முடித்து தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் LOWER GRADE மற்றும் MS-Office-ல் 3 மாத Certificate Course  முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.erode.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட திட்ட ஒருங்கிணைய்ப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,

மாவட்ட திட்ட அலுவலகம்,

அனைவருக்கும் கல்வி இயக்கம்,

அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம்,

பன்னீர் செல்வம் பூங்கா,

 ஈரோடு – 638001

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.erode.tn.nic.in/ssa/SSA_DEO_applicationForm.pdf

10ம் வகுப்பு தகுதிக்கு TNAHD-ல் உதவியாளர் பணிகள்


சேலம் மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 59 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர் 

காலியிடங்கள் : 59

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.salem.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  அதனுடன் ரூ.5 அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குநர்,

கால்நடை பராமரிப்புத்துறை,

கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,

பிரட்ஸ் ரோடு, சேலம் – 636 001

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 13.2.2018

கூடுதல் தகவல்களுக்கு CLICK HERE

ஆவின் நிறுவனத்தில் பணிகள்


கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 2018-ஆம் ஆண்டிற்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Vety) - 01
பணி: Manager (Pur) - 01
பணி: Manager (Accounts) - 01
பணி: Manager (Mkg) - 012
பணி: Dy.Manager (Dairy)  - 01
பணி: Dy.Manager (DC) - 02
பணி: Dy.Manager (System) - 01
பணி: Executive (Office)  - 01
பணி: Executive (System) - 01
பணி: Executive (Lab) - 02
பணி: Extension Officer Gr.II - 04
பணி: Private Secretary Fr.II - 01
பணி: Jr.Executive (Office) - 01
பணி: Jr.Executive (Typing) - 01

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை கேட்பு வரைவோலையாக (டி.டி) பொது மேலாளர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.co.in  என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
பொது மேலாளர்,

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி-2.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com  அல்லது http://aavinmilk.com/hrdha190118.html  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

AIL நிறுவனத்தில் 382 காலியிடங்கள் Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தில் பணிகள்



பணி: Management Trainee (Technical)

காலியிடங்கள்: 382

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:

Mechanical Engineering (ME)  

Metallurgical Engineering (MT)

Electrical Engineering (EE)

Chemical Engineering (CH)

Instrumentation Engineering (IN)

Mining Engineering (MN)

கல்வித்தகுதி: Mechanical, Metallurgy, Electrical, Chemical, Instrumentation, Mining ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் BE  முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.2.2018

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் உதவியாளர் பணிகள்


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 73 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர் 

காலியிடங்கள் : 73

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tiruppur.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குநர்,

4/583, பல்லடம் ரோடு,

வீரபாண்டி பிரிவு,

திருப்பூர் – 641 605

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://tiruppur.tn.nic.in/dept_pdf/ahvs.pdf

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி


சென்னையில் இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் Chief Financial Officer  பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி: Chief Financial Officer

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: CA தேர்ச்சி பெற்று 15 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் secretarial@lvbank.in என்ற இமெயில் முகவரிக்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Lakshmi Vilas Bank Limited Corporate Office,

Secretarial Department,

"LVB House",

No.4, Sardar Patel Road,

Guindy, Chennai - 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.lvbank.com/UserFiles/Post%20of%20CFO.pdf



டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிகள்


தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி மற்றும் காலியிட விபரம்:

(SC/ST பிரிவினர்களுக்கு மட்டும்)

பணி: Asstt Manager/Finance

காலியிடங்கள்: 02

பணி: Asstt Manager/Corporate Communication

காலியிடங்கள்: 1

பணி: Asstt Manager/Legal

காலியிடங்கள்: 01

பணி: Asstt Manager/Safety

காலியிடங்கள்: 01

Section - ‘B’ - Regular-Non-Executive பிரிவு பணிகள்

பணி: Station Controller/ Train Operator (SC/TO)

காலியிடங்கள்: 50

பணி: Maintainer Electronic Mechanic

காலியிடங்கள்: 29

Section - ‘C’ - Non-Executive Category Posts

பணி: Stenographer

காலியிடங்கள்: 02

பணி: Account Assistant

காலியிடங்கள்: 01

பணி: Office Assistant

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்ள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.250.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2018

கூடுதல் தகவல்களுக்கு https://www.digialm.com/EForms/pdf/onlineAppForm/form54967/DMRC_Notification2018.pdf 

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பணிகள் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி: Management Trainees

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2018

கூடுதல் தகவல்களுக்கு www.vizagsteel.com

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பணிகள்

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி: Management Trainees

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண

+2 தகுதிக்கு Balmer Lawrie நிறுவனத்தில் பணிகள்


Balmer Lawrie  நிறுவனத்தில் 42 Field Executive (Customer Clearance) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advt No : BA/TL/LS/FE(CC)/01

பணி: Field Executive (Customer Clearance)

காலியிடங்கள்: 42

கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: கொல்கத்தா & சென்னை

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.balmerlawrie.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.balmerlawrie.com/files/uploads/1517214629web_ad__apprentices_field_executive_customs_clearance.pdf




I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu
[7:07 PM, 2/3/2018] Tr.RajendranDindukal: தேசிய நியூட்ரிஷன் மையத்தில் பணிகள்
ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Nutrition”-ல் பணிகள்

Advt. No.: 58/Projects/2017

பணி: Research Assistant (Nutrition)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: Food & Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 31,000

பணி: Research Assistant (Social Work/ Sociology)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Social Work/ Sociology பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 31,000

பணி: Field Worker

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT/PMW/Radiology/Radiography பாடப்பிரிவில் 2  வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2018 

பணி: Data Entry Operator (DEO):

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ நிலை சான்று பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2018

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Head of the Department of Social Work,

Gulbarga University,

Gulbarga – 585 106
[7:09 PM, 2/3/2018] Tr.RajendranDindukal: 
தேசிய நியூட்ரிஷன் மையத்தில் பணிகள் ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Nutrition”-ல் பணிகள்  Advt. No.: 58/Projects/2017  பணி: Research Assistant (Nutrition)  காலியிடங்கள்: 2  கல்வித்தகுதி: Food & Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 31,000  பணி: Research Assistant (Social Work/ Sociology)  காலியிடங்கள்: 02  கல்வித்தகுதி: Social Work/ Sociology பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 31,000  பணி: Field Worker  காலியிடங்கள்: 02  கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT/PMW/Radiology/Radiography பாடப்பிரிவில் 2  வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 18,000  நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2018   பணி: Data Entry Operator (DEO):  காலியிடங்கள்: 1  கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ நிலை சான்று பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 18,000  நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2018  தேர்ந்தெடுக்கப்படும் முறை:  எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.  நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:  Head of the Department of Social Work,  Gulbarga University,  Gulbarga – 585 106

INCOME TAX 2019 - சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை :

வருமானவரி விதிப்பு முறையில் நிலையான கழிவுத் திட்டம் கடந்த 1974-ம் ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிலையான கழிவு என்ற அடிப்படையில் சம்பளதாரர்கள் வருமானவரி விலக்கு பெறலாம்.
எனினும், இந்தத் திட்டத்தை 2006-ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரத்து செய்தார். இந்நிலையில் நிலையான கழிவுத் திட்டம் வரும் நிதியாண்டில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் இதன்கீழ் ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில்சந்திரா நேற்று கூறும்போது, "சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவை குறிப்பிட்டு ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். எனினும், இதற்கு ஆதாரமாக எந்தவித ஆவணத்தையோ ரசீதையோ தாக்கல் செய்யத் தேவையில்லை. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கறுப்பு பணம் பதுக்குபவர்களையும் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் வருமான வரித்துறையிடம் உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற் பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள், மற்றும் 35 குறுகிய கால தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கு அங் கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும், ஒவ் வொரு ஆண்டும்ஜனவரி 2-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதிவரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.2017-18-ம் ஆண்டு முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல பயிற்சி இணை இயக்குநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதள முகவரியில் தற்போது 2018-19-ம் ஆண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.

புதிதாக அங்கீகாரம் கோரும் தொழிற்பள்ளிகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால்தொழிற் பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

Annamalai University - 81st Annual Convocation 2018 - Notification ... ANNAMALAI UNIVERSITY | NOTIFICATION

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - 2 முக்கிய குற்றவாளிகள் கைது :

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன் (வயது 38), சேக் தாவூத் நாசர்(32), ரகுபதி(34), சுரேஷ்பால்(34) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது. 

'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவியை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு !!

சுற்றுப்புற தூய்மை பற்றிய அக்கறை கொண்ட வேங்கிக்கால் , பொன்னுசாமி நகரைச் சேரந்த சந்திரவாசன், இளையசுதா என்பவர்களின் மகளான   ச.பூஜா என்ற   ஒன்பதாம் படிக்கும் மாணவியை பெருமை படுத்தும் விதமாக நம் மாவட்ட (திருவண்ணாமலை) ஆட்சித்தலைவர் அம்மாணவியை தம் இருக்கையில் அமர வைத்து பெருமை படுத்தினார்.

மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு!!!

புதுடில்லி: சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள்,
முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.


'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா' பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.

சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!!

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, 
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு!!!

தேனி: மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை
சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 30 மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. 40 ஆண்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2002 முதல் 2017 டிசம்பர் வரை மாநிலத்தில் இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், மிக மோசமான நிலையில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை புகைப்படங்களுடன் மார்ச் 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு!!!

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான
, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது. சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 
ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.


பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது.
'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!!

                                    2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளதால் மொபைல்போன்
மற்றும் டிவி போன்ற மின்சாதனப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கான சுங்க வரி முந்தைய 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டிவி உதிரிப் பாகங்களுக்கான சுங்க வரியும் முந்தைய 7.5 - 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல், டிவி மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மொபைல்போன்களில் சுமார் 81 சதவிகித அளவானது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக உள்ளது. இந்த அளவு 2018ஆம் ஆண்டில் 90 சதவிகிதத்தைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல்போன்களின் விலையில் உயர்வு இருக்காது. வீடியோ கேம் சாதனங்களின் சுங்க வரி முந்தைய ஆண்டின் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவு பதப்படுத்துதல், மின்னணு சாதனங்கள், கார் பாகங்கள், காலணி மற்றும் மரச்சாமான்கள் போன்ற பொருள்களுக்கான உள்நாட்டு மதிப்புக் கூட்டுதலும் சிறப்பாக உள்ளது.

அதிகக் கட்டணம்: மாணவர்கள் போராட்டம்!

                                            
கும்பகோணத்தில் அதிகக் கட்டணம் கேட்பதாக நிர்வாகத்தின்
மீது குற்றம்சாட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று (பிப்ரவரி 1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.2,200 கட்டணமாகச் செலுத்த கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தேர்வு எழுதாமல் இருந்தாலும், தேர்வு எழுதித் தோல்வியடைந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிகள் கல்லூரியில் இருப்பதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக கடந்த ஜனவரி 31 அன்று தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!!!

                                                 
ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 27

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990/-

வயது வரம்பு: 20 -28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழியியல் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 19.02.2018

மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTE30012018C4BD15E84BF7477D927549B329231E9B.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம்-கழிவு மட்டுமே மிஞ்சியது!!!

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​!!!

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

EMIS-Report as on 02.02.2018 - All Districts

கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை!!


CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!