யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/9/18

நீதிக்கதை :

மூன்று தலைகள்! - ஜென் கதைகள்


மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

Also Read: ஜென் குருவும் ஒன்பது திருடர்களும்

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.

கூட்டுறவு சங்கம் அமைப்பு - உறுப்பினர்கள் பேரவை:

✍கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும்.


✍ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

✍ஆண்டு வரவு,செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்.

✍தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.

✍நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.

✍சங்கத்தின் செயல்திட்டத்தை மதிப்பிடுதல்.

✍முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் சேவைகளை கலந்துரையாடல். (அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கம் செய்திருந்த சேவைகளின் விவரங்களை பரிசீலித்தல்.)

புதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.

✍தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.
(கடன் பெற்று மூன்று மாதம் திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்கள்)

✍சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும்.

✍சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும். 

✍உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.

👉 நிர்வாகக் குழு:

✍ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

✍நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

✍நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

✍நிர்வாகக் குழு கூட்டம்
நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும்.

✍இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம்.

✍செயலாளர், தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

✍மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

✍மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

✍தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.

✍சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.

✍தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.

கூட்டுறவு சங்கம் பார்வை👁👁👁👁

 கண்டிப்பாக தகவலை முழுவதும் வாசிக்கவும்...

Society Act-1983
Society Law-1988
ஒரு பார்வை...

✍கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.

✍ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.🤦‍♂🤦‍♂

✍கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும்.

⚖சட்ட விதிகள்⚖

✍பிரிவு - 9 :
கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்).
குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள்...🤝🤝

✍பிரிவு - 1 விதி -9 :
பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்).
தேவைப்படும் போது DRO விடம் உறுப்பினர்கள் இணைந்து மாற்றலாம்.
உறுப்பினருக்கு நிர்வாக குழுவை மதிப்பிட உரிமை உள்ளது...

உறுப்பினர் யார் வந்து கேட்டாலும் பதில் சொல்லனுமா? என விதி ஒன்று கூட தெரியாமல் குதர்கமாக பேசக்கூடாது..

✍பிரிவு - 80:
தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

தேவையில்லாமல் காலம் கடத்திய பின் Audit பிரச்சனை என பொய் கூறக்கூடாது..😜😜

✍பிரிவு - 81:
விசாரணை முடித்தல் (3 மாதங்கள்).

தணிக்கை மீதும் , நிர்வாகம் மீதும் மேல்முறையீடு சார்பு.

✍பிரிவு - 87:
தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

நிர்வாக முறைகேடு கண்டறியப்பட்டால்..😀😀


✍பிரிவு - 88:
நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂

✍பிரிவு - 88:
நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂

✍பிரிவு - 89:
சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

நிர்வாக குழு கலைக்கப்பட்டால்...
தேர்தல் கட்டுப்பாடு நடைமுறையில் கூட ...
உறுப்பினர் நலன் கருதி தனி அலுவலர் மூலமாக தாராளமாக (டிவிடண்ட்) பங்குத்தொகை வழங்கலாம்...😀😀

தேர்தல் காரணம் என பொய் சொல்ல கூடாது😜😜

✍பிரிவு - 36:
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல்.

✍பிரிவு - 72 விதி 94:
நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்.🙊🙊

இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்...
நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மாத மதிப்பூதியம்.

( உதாரணம்: தலைவர்/செயலாளர் - ரூ.1200 & இதர இயக்குநர்கள் - ரூ.2400 )
இப்ப பதவிக்கு ஏன் போட்டி போட்டுட்டு அரசியல் வருது என தெரியுதா?

👍முடிந்தால் ஆண்டறிக்கை நிர்வாக குழு பிரிண்ட் எடுத்து தர வேண்டும் தவறு ஒன்றும் இல்லை.

மாத ஆரம்ப இருப்பு தொகை , வரவு , மாத முடிவு தொகை & TDS தொகை... கூட்டம் கூட்டிய எண்ணிக்கை , கூட்டத்திற்கான டீ மிக்சர் செலவு ஆடிட் பண்ணுவதற்கான தொகை , ஆடிட் லஞ்சம் (தவறை பூசி மறைக்க) ஒன்று விடாமல் நிர்வாக குழு பிரிண்ட் தந்தால் நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.

👉🏼👉🏼இதில் ஆயுள் காப்பீடு என்று கொண்டுவந்தால் அதற்கான பாண்டை சார்ந்த ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.அந்த நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால் அதையும் வருமான வரிக்கு உதவும்


மேலும் சில விதிமுறைகள்:

1. நாம் பெறும் கடன் (₹5,00,000) தொகையில் 10% (₹50,000)வைப்பு தொகையாக பிடித்தம் செய்து மீதம் வழங்கப்படும்.

2. மாதம் சிக்கன சேமிப்பு தொகை இடவேண்டும் குறைந்த பட்சம்₹500 முதல்

3 நாம் வைத்திருக்கும் வைப்புதொகைக்கு 50,000 க்கு 14% வட்டியும்,சேமிப்பு தொகைக்கு 8 & 8.5% வட்டியும்  கூட்டுறவு சங்க வழங்க வேண்டும்.

4. இந்த கணக்கீடு ஒவ்வொரு வருடமும் தணிக்கை முடித்து, 1.ஏப்ரல் முதல் அடுத்த வருடம் 31மார்ச் வரை இலாபத்தொகை (Dividend) பங்கீட்டு வழங்க வேண்டும்.a

நீதிக்கதை



 ‘நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலி’ என்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெருமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது. அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தோழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்து ‘மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா? நீ என்னைவிட பெரியவனா?  கீழே வந்து என்னை வணங்கி நில். இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே? உலகில் வலிமை உள்ளவர்கள் வலிமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்? யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர்  பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே? தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கி ‘சலாம்’ போடுவது கேவலம் இல்லையா? அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

‘நன்பா உன் ஆதங்கம் புரிகிறது. இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும். என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது, எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை. அதை எப்படி செய்யலாம்?’

அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

‘நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.

அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும். நாளை அங்கு வந்துவிடுங்கள். ‘யார் பலசாலி’ என்று நிரூபிக்கிறேன்’ என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம்  ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.

எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று நுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்தியது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே. காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலறியது.

‘நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்’
என்று சிரித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடின.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.

அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-மத்திய அரசு :

குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

 அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை :

'குரூப் 4 தேர்வில், மாற்றுதிறனாளி தேர்வர்கள், தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பிப்., 11ல் நடத்தப்பட்ட, குரூப் 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், ஆக., 30 முதல், செப்., 18 வரை, சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி தேர்வர்கள், மருத்துவ குழுவிடமிருந்து சான்றிதழ் பெற்று, பதிவேற்றம் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவ சான்றிதழ் பெற முடியவில்லை என, மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.எனவே, சான்றிதழ் பதிவேற்ற வேண்டிய மாற்று திறனாளிகள், சான்றிதழ் இல்லை எனில், மாற்று திறனாளிகளுக்கான, தேசிய அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும். 
அதனுடன், 'கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டால், உரிய மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கிறேன்' என்ற, உறுதிமொழி கடிதத்தையும் பதிவேற்ற வேண்டும்.அவ்வாறு பதிவேற்றாதோர், கவுன்சிலிங்கின் போது, மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இதுகுறித்து, சந்தேகம் இருப்பின், 044- - 2530 0336, 044- - 2530 0337 மற்றும், 1800 425 1002 ஆகிய, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில், 2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு, போட்டித் தேர்வு என, இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'டெட்' தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.
அந்த தேர்வு, ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு அல்ல. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலைக்கான நியமனத் தேர்வு தனியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 
இந்த நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகியுள்ளது. இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொண்ட பின், நியமனத் தேர்வை நடத்தும் பணிகள் துவங்கப்படும்.அதுவரை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, தற்காலிகமாக நியமனம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன், தமிழிலும் எழுத, வாய்ப்பு தர வேண்டும். இது குறித்து, தமிழக அரசின் சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, 'கட் -- ஆப்' பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
பொது பிரிவு மாணவர்களுக்கு, வரும், 17ம் தேதியும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, 18; மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு, 19 மற்றும் 20ம் தேதியும், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கேரளா மாநிலத்திற்கு ரூ 4 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா லாரி மூலம் அனுப்பி வைத்தார்..


புதுக்கோட்டை,செப்.6:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் மனமுவந்து கேரளா  மாநில வெள்ள நிவாரணத்திற்காக ரூ.4 இலட்சத்து 31 ஆயிரத்து 200 மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள்,பிஸ்கெட் பாக்கெட்கள்,ஆடைகள் மற்றும் பல்வேறு வகையான நிவாரணப் பொருட்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்கள்..
  அதனைத் தொடர்ந்து தலைமைஆசிரியர்கள் சேகரித்து சிப்பங்களாக கட்டி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்..
அதனைத் தொடர்ந்து  நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இன்று மாலை 06-09-2018(வியாழக்கிழமை) லாரியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.வனஜா  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்துக்கு  அனுப்பி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.ஜீவானந்தம், உயர்நிலை ஆர்.கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
இவ்வாறாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்டல அளவில் பல்வேறு மாவட்டங்களின்  பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கேரளா  மாநிலத்திற்கான வெள்ள நிவாரணப் பொருட்கள்07-09-2018(வெள்ளிக்கிழமை) நாளை மதியம்  மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது... கேரள  வெள்ள நிவாரணத்திற்கு மனமுவந்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்..

7/9/18

அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், இன்று முதல் செயல்படத்தொடங்கும். சுமார்3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும்.ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமேஇல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்

                                          
பண்ருட்டி அருகே புதிதாக துவங்கிய இணைப்பு துவக்கப்பள்ளிக்கு  ஆசிரியர்கள் வர மறுத்ததால் தற்போது முன்னாள் ஆசிரியரை கிராம மக்கள் நியமித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காவனூர் ஊராட்சி உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
அருகில் உள்ள காவனூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக பள்ளி  வேண்டும் என பத்து வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உளுந்தாம்பட்டு பள்ளிக்கு  காவனூர் மாணவர்களை அனுப்ப மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி நடந்த குறைகேட்பு  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், காவனூர், உளுந்தாம்பட்டு, மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக உளுந்தாம்பட்டில் உள்ள பள்ளியில் காவனூர் மாணவர்கள்  செல்வதில் சிக்கல் உள்ளது என அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காவனூர்  கிராமத்துக்கு இணைப்பு பள்ளியை வட்டார கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வந்தபோது ஆசிரியர்களும் துவங்கிய நாள் மட்டுமே வந்து கல்வி போதித்தனர். 4, 5, ஆகிய இரு தினங்களில் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வர மறுத்துவிட்டனர்.

இதனால் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் பெற்றோர்கள் அவசர கூட்டம் கூட்டி முடிவெடுத்தனர். இதில் ஆசிரியர்கள் வராததால் நமது கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகையாளருமான சகுந்தலாநாராயணன் என்பவரை கல்வி போதிக்க செய்தனர். சத்துணவு சமைப்பதற்கும் உள்ளூர் சமையலரை வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. நேற்று ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் வருவார்கள் என நினைத்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து  காவனூர் கிராம பெற்றோர்கள் கூறியதாவது: உளுந்தாம்பட்டில் இயங்கி வரும் பள்ளிக்கு எங்கள் கிராமத்திலிருந்து பிள்ளைகள் செல்வதில் மிகுந்த சிரமம்  உள்ளது.

நாங்கள் தனியாக கேட்ட பள்ளி தற்போது கிடைத்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவையான இடங்கள் 20 சென்ட் 2009ம் ஆண்டே வாங்கி வைத்துள்ளோம். காவனூர்  பகுதி பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் வரவில்லை என உளுந்தாம்பட்டு பள்ளியில் கேட்டபோது எங்களுக்கு போதிய அளவிற்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீறி ஆசிரியர்கள் சென்றால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவனூர் பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-மத்திய அரசு

குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

 அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர் கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு!!

உயர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு, உயர்த்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா முடித்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில், இளநிலை பட்ட படிப்பில் சேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும், 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கல்வி உதவித்தொகை, மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என, ஏற்கனவே நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது
தற்போது, வருமான உச்சவரம்பை அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ள, குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மத்
...

கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி அல்ல: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கற்பித்தல் மட்டும் ஆசிரியர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது. மாணவர்களுக்கு ஆலோசகராகவும், பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராகவும் விளங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது விழா ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
373 ஆசிரியர்களுக்கு விருது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் காந்திய அனுபவக் கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி என்ற நூலை முதல்வர் வெளியிட்டார். 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி விருதுகளை வழங்கி அவர் பேசியது:
ஆசிரியர் என்பவர் கற்பித்தலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. அவதானி, ஆலோசகர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராக விளங்க வேண்டும் என கல்வியாளர் லூயில் கோகலே என்பவர் கூறியுள்ளார்.
ஏட்டுக் கல்வியின் வரையறையைத் தாண்டி, பரந்த பரிமாணத்தில், சமூக பொறுப்புடன் தீர்மானிக்கும் திறனோடும், வசீகரிக்கும் தன்மையோடும், சினேகித மனோபாவத்தோடும், சமூக மேம்பாட்டுக்கு வழிகாட்டும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
தியாக மனப்பான்மை கொண்டவராகவும் கற்பிக்கும் தொழிலில் பெரும் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.
மாணவ சமுதாயமும் தங்களின் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
கல்வித் துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள், 32 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் என மாணவர்களை மேம்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாணவ சமுதாயம் நினைத்தால்...மாணவ சமுதாயம் நினைத்தால் எதையும் செய்ய இயலும். இதை ஆசிரியர்களும் நன்கு அறிவர். எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பாட நூல்களைத் தாண்டி, மாணவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தற்போது சமூக நலன் சார்ந்து தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதின் மூலம், ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. விருது என்கிற பயணச்சீட்டைத்தான் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு இருக்கிறது. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருந்து புதிது புதிதாகப் படிக்க வேண்டும். தான் படித்தவற்றை தன் மாணவர்களுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். அதுதான் நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு செய்யும் சீரிய தொண்டாகும் என்றார் முதல்வர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாணவ சமூகத்துக்குத் தேவையான அறிவாற்றல், தன்னம்பிக்கை போன்றவற்றைக் கற்றுத் தந்து மாணவர்களை அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதப் பணியினை மேற்கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.
பள்ளிகளில் நிலவும் சூழலை மிகத் திறமையாகக் கையாண்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வியறிவை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது உழைப்பால், சமூகத்தின் மீது உள்ள அக்கறையால் மேற்கொள்ளும் சிறப்பு பணியை பாராட்டியே, இன்றைய தினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது என்பது ஆசிரியர்களின் கல்விப் பணியை மேலும் சிறப்புடன் செய்வதற்காக வழங்கப்படும் பெருமையாகும்.
இதனைச் சரியான முறையில் ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொண்டு, சமூகத்தின் உயர்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்

துப்பட்டாவால் முகத்தை மூட தடை : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நிபந்தனைகள்

மாணவியர்,
 துப்பட்டாவால் முகத்தை மூடுவதற்கு, அண்ணா பல்கலை தடை விதித்துள்ளது
*சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைமுடிந்துள்ளது
*புதிய மாணவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், ஒருங்கிணைப்பு பயிற்சி துவங்கியது
*அதில், புதிய மாணவர் கள், பல்கலை மற்றும் கல்லுாரி வளாகத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
*சீனியர்' மாணவர்கள், 'ஜூனியர்' மாணவர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
*இதற்காக, அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கட்டடவியல் கலை படிப்புக்கான, 'ஆர்கிடெக்ட்' கல்லுாரி வளாகங்களில், ராகிங் தடுப்பு வாகனம், ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது
*பல்கலையின் வளாகத்தில், ராகிங் தடுப்பு குழுவினர், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அதேபோல், மாணவ - மாணவியருக்கு, சுய ஒழுக்கம் தொடர்பான, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன
அதன் விபரம்
*வளாக பகுதிகளில், அரட்டை அடித்து, நேரத்தை வீணடிக்கக் கூடாது; வகுப்புகளை புறக்கணிக்காமல், பங்கேற்க வேண்டும்
*மாணவ மாணவியரிடம் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
*பல்கலை வளாகத்திற்குள், காதில், 'ஹெட் போன்' கருவி அணிந்து வரக் கூடாது
*மொபைல் போன், 'ஹெட்செட்டை' கல் லுாரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களும், மாணவி யரும், கைக்குட்டை மற் றும் துப்பட்டா போன்ற வற்றால் முகத்தை மூடி, வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது
*வாகனத்தில் வரும்போது, 'ஹெல்மெட்' அணிந்திருந்தால், அதில், முகத்தை மூடும் கண்ணாடியை, திறந்து விட்டிருக்க வேண்டும்
*ஒவ்வொரு மாணவியும், அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்
*பேராசிரியர்களும், பல்கலை ஊழியர்களும், காவலாளிகளும், அடையாள அட்டையை காட்டச் சொன்னால், மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும்
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

சான்றிதழ்களில் ஆதார் பதிய தடை : கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு :

*மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது.
*நாடு முழுவதும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிர்வாக செயல்பாடுகளுக்காக, ஆதார் எண் சேகரிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவி யரிடமும் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு, கல்வி நிறுவன தகவல் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது.
*மேலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, சான்றிதழ்களை சரி பார்க்கவும், சான்றிதழ்களை வழங் கவும், ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டு இருந்தன. இந்நிலையில், ஆதார் எண்ணை, சான்றிதழ்களில் பதிவு செய்ய, மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
*இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல் கலைகளுக்கும், அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில், 2017 மார்ச்சில், கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
*இதில், மாணவ - மாணவி யரின் ஆதார் எண்ணை பயன்படுத்துவது தொடர்பான, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில், ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதன் வழியே, தனிநபர் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
*எனவே, பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ்களில், ஆதார் எண்ணை, எந்த காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம்.
*மேலும், ஆதார் எண்ணை, வேறு பயன்பாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.இந்த உத்தரவை பல்கலைகளும், கல்லுாரிகளும் உடனடியாக பின்பற்றி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்!

சேலம் கோட்டை  மாநகராட்சி
 பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 
பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறை ஆசிரியருக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வா
ழ்த்து தெரிவித்தனர்.





நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் விபரம்!!!

27 ஆண்டுகளாக வாங்கப்படாத மதிப்பெண் சான்றிதழ், பட்டய சான்று பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!

EMIS' பதிவேற்றப் பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை!!!

6/9/18

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள் ..........

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).


2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சி களை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain )தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும்.இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).

7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் தவிப்பு!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ரேஷன் பொருள் வாங்கக்கூடாது தேனி கலெக்டர் சுற்றறிக்கையால் பரபரப்பு!!!

ஆதார் இல்லாத மாணவர்களும் பள்ளியில் சேரலாம் : மத்திய அரசு

டில்லி.. ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என பள்ளிகளுக்கு மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.


பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆதார் எண் அவசியம் என ஒரு சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லாததால் அந்த மாணவர்கள் பள்ளிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதை மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் ஆய்வு செய்தது.

அதை ஒட்டி அந்த ஆணையம் இன்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், "பல பள்ளிகளில் ஆதார் எண் இல்லாததால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த சுற்றரிக்கை மூலம் ஆதார் எண் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பின்னர் ஆதார் எண்ணைப் பெற்று பிறகு அந்த எண்ணை இணைக்கலாம். அது வரை வேறு அடையாளங்களை பெற்று மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம். தற்போது வங்கிகள், தபால் நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் முகாம்கள் நடைபெறுகின்றன. பள்ளிகள் இந்த முகாம்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஆதார் பெற்றுத் தரலாம்" என குறிப்பிட்பட்டுள்ளது.

KVS - 8339 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2018 :

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் இனி தேர்வு கிடையாது :

'பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும். 


தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். அரசு பள்ளிகளை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இதற்காக, வட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.அவர்களின் தொடர்பு எண்கள், சில தினங்களில் வெளியிடப்படும். அதன் பின், பள்ளியை தத்தெடுக்க விரும்புவோர், நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம். பள்ளிகளை தத்தெடுக்கும் பணிக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட, 14417 என்ற எண்ணுக்கு, இதுவரை, 300 புகார்கள் வந்து உள்ளன. அவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு:

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும், 18ல், துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


இந்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு, விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, 18 முதல், 20ம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.அறிவியல் செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கனவே நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்காத வர்கள், புதிய தேர் வர்கள் என, அனைவரும், இந்த செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறை தேர்வு குறித்த விபரங்களை, மாவட்ட கல்வி அதிகரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!

31/8/18

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?
அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு)  ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார். 
ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும். பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி  அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறையை மூடுவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் பள்ளிச் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து 20 அடி தொலைவுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகள் அருகில் செல்லாமல் பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் நீர் தேங்காதவண்ணம் அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது மாணவ, மாணவிகள் மழை மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக கவனமாகச் செல்லவும் அறிவுரை வழங்க அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இடி, மின்னல் வரும்போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என அறிவுறுத்தவும் அதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பருவ கால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அவற்றுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான
 கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! இந்த குரலைத் தெரியும்... ஆளைத் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷன் போனதும் நம்மையுமறியாமல்
ஒரு குரல் நம்மை ஈர்த்துக்கொள்ளும்..
                                  


சரளா சவுத்ரி குரல்:
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..." இந்த குரலை கேட்டதும் ஸ்பீக்கரை திரும்பி பார்க்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த குரல் நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. ரயில் நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கேட்டு பாருங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு தாலாட்டு என்பார்கள்.
அப்படியொரு மென்மை, கம்பீரம் இரண்டுமே இருக்கும் அந்த குரலில். வெறும் 30 வினாடிகள் மட்டுமே அந்த குரலை அவ்வளவு எளிதாக பயணிகள் மறந்து விடமாட்கள்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை ஒலிக்கும் "இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..?
சரளா சவுத்ரி. 53 வயதாகும் இவர் 1982-ல் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் மேனுவல் தான். கம்ப்யூட்டர் கிடையாது. தற்செயலாய் இன்ஸ்பெக்சனுக்கு சென்றிருந்த ரயில்வே பொது மேலாளர் அட்ஸோத் பேனட்ஜி , இந்த குரலை கேட்டுவிட்டு உடனடியாக அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். மராத்தியில் ஒலிக்கு இவரது குரல் கணினி மூலம் எல்லா ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்பக காலத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து வந்த சரளா சவுத்ரி, மாருதி ட்ராபிக் தகவல்களை தினமும் காலையில் மக்களுக்கு அறிவிப்பார்.அதன் பின்பு தான், தனது தந்தையில் ஆசைப்படி ரயில்வே நிர்வாகத்தில் பணிப்புரிய தொடங்கினார்.
இவரின் குரலை பதிவு செய்த அன்று, அவருடன் பணிப்புரிந்த ஒட்டு மொத்த ஊழியர்களும் உன் குரலுக்கு நீ கண்டிபாக சுத்தி போட வேண்டும், கலாய்த்தார்களாம். சரளா தனது 49 ஆவது வயதில் சொந்த காரணங்களுக்காக ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்.
ஆனால், அவரின் குரல் இன்னமும் ரயில்வேக்கு பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு 

முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
* காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
* பெயர் சேர்க்க - படிவம் 6
* பெயர் நீக்க - படிவம் 7
* வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
* முகவரி மாற்றம் - படிவம் 8A.

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? "கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-31 "நகரும் சிலை" (30.08.2018) :



SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year


13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ராமதாஸ் அறிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன்30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில்200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலிடும் போது, கூடுதலாக சில மதிப்பெண்களை சேர்த்துப் பதிவு செய்ததன் மூலம் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில் உள்ளீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை.ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது. ஆனால், அவ்வாறு செய்யப்படாததை எதேச்சையாக நடந்த, சாதாரண விஷயமாகக் கருதமுடியாது.
தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர்.
ஆனால், இவர்களைத் தாண்டிஇந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாக செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும். இது குற்றவாளிகளை ஊக்குவிக்கும்.அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும்அவசியமாகும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1289 உயர்நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ேதவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் வசதிஉள்ளிட்ட பணிகளை 1257 கோடி செலவில் ேமற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, நிதி நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக 100 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அதே போன்று மற்ற 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதி கட்டமைப்பு டெண்டர் விட வேண்டிய நிலையில் இருந்தது.இதற்கிடையே ஜிஎஸ்டி காரணமாக மீண்டும் திட்ட அறிக்கை தயாரிப்பது மற்றும் ஏற்கனவே டெண்டர் விட்ட பணிகளுக்கு ஜிஎஸ்டியால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதால் பணிகள் நிறுத்தி வைப்பு, ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பேரில் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 150 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.kaninikkalvi அந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் மேற்கொள்ளாததால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் கோட்ட செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்த ₹150 கோடி நிதியை சரண்டர் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, நடப்பாணடில் நிதியை பயன்படுத்த தவறியதால், அந்த நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் மீண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து இதற்கான நிதியை பெற இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி! Click Here To Download PDF Notification :

சென்னையில் உள்ள Broadcasting Engineering Consultants India Limited என்ற நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி: தரவுப் பதிவு அதிகாரி காலியிடங்கள்: 20 
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். 
சம்பளம்: ரூ.17,498 வயது: 21 - 30 
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018
அனுப்ப வேண்டிய முகவரி: Assistant General Manager (HR) BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 மேலும் விவரங்களுக்கு 
 CLICK HERE TO VIEW&DOWNLOAD THE NOTIFICATION 

நெஞ்செரிச்சலுக்கு மருந்து!

நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக

இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகக் கார உணவு, துரித உணவை அடிக்கடி சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

இததகைய நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க மருந்து மாத்திரை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கையாகவே எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

நெஞ்செரிச்சலை குணப்படுத்த

நெஞ்சு எரிச்சலின் போது ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனனில் ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளதால் இது நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும்.
நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால் துளசி இலை சாறை அருந்தினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
சோம்பு ஜீரண சக்தி அதிக அளவு கொண்டது. நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் போட்டு சிறிது நேரம் மென்று தின்று வந்தால் உடனே சரியாகும்.
நன்கு அரைத்த பட்டையின் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் முற்றிலும் அடங்கும்.

மோர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.மேலும் கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பொழுது அதிக அளவு தண்ணீர் அருந்துவதின் மூலம் சரி செய்யலாம்.
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவை

வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிரடியாக விலை குறைக்கப்பட்ட விவோ மொபைல்கள்

இந்தியாவில் விவோ ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரிடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக விவோ நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 ஆகியோ மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி முதல் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.22,990, ரூ.14,990 மற்றும் ரூ. 35,990 ஆக இருந்த விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 மாடல்களின் விலை தற்போது ரூ.18,990, ரூ. 13,990 மற்றும் ரூ.31,990 ஆக குறைந்துள்ளது.

எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்களுக்கு இன்னும் குறைவான விலையிலும் கூட கிடைக்கும். பொதுவாக சொன்னால் இது செம்ம ஜாக்பாட்.

30/8/18

ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது



நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது


 இந்த நாளில், மத்திய அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு, மாநிலம் முழுவதும், 369 பேருக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது


இந்த விருதை பெற, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின், கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி நேரத்தில், 'கட்' அடித்து விட்டு, வகுப்பு நடத்தாதவர்கள்


பள்ளி கல்வி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் உள்ளிட்ட, பல்வேறு பிரிவினரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன


இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கானோரை தேர்வு செய்யும் இறுதிகட்ட பணியில், மாநில கமிட்டி ஈடுபட்டுள்ளது


பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் ஆலோசனைப்படி, திறமையான, மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஒழுக்கமாக திகழும் ஆசிரியர்களை மட்டுமே, விருதுக்கு தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது


தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக, அவர்களின் வீடு, பணியாற்றும் பள்ளி உள்ள பகுதி போலீசாரிடம், கட்டாயம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது


 மேலும், ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள், புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என்பதை, எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்


விசாரணை நடத்தப்படாத ஆசிரியர்களின் பெயர், விருது பட்டியலில் இருக்கக் கூடாது என, விருது தேர்வு கமிட்டிக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை - செங்கோட்டையன்

தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளின் விருப்பத்தை பொறுத்து இன்சூரன்ஸ் :

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.

இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்:
கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.

புதுக்கோட்டை,ஆக.29:  தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.
இது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,
பள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம்  தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..
அந்த வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களின் சங்கமத்தினை ஏற்பாடு செய்துள்ளது..
இதில் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல்  ஆணையர் V. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்களும்,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
பொ. பொன்னையா அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர்  ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்..
இந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும்,  தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேற உள்ளது..
அத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி  என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,
ஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இலவசமாக
பங்கேற்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் சங்கம மாநில அமைப்பும் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும்  இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும் இது போன்ற நிகழ்வுகள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றார்..

அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை. 
தேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.
பணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார்? பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார்? என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

M.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி
 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து வருகிறது.
இந்த பதிவு, கடந்த வாரம் முடிவதாக இருந்தது. ஆனால், பல்வேறு விடுமுறை, மழை வெள்ள பாதிப்பு போன்றவற்றால், வரும், 3ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் 
தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
 பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்
மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆதாரம்
இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி,
பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசின்தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்யவேண்டும்.
பள்ளி சான்றிதழ்
பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும். வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக் கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி
தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.


அதை ஒட்டி தற்போது 1295 கிளைகளின் அடையாள எண்ணை பாரத ஸ்டேட் வங்கி மாற்றி உள்ளது. இந்த மாறுதல் குறித்த அறிவிப்பு வங்கியின் இணய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அந்த இணைய தளத்தினுள் சென்று தங்கள் வங்கியின் கிளையின் பெயரை பதிந்தால் புதிய எண்கள் தெரியவரும் என வங்கி அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை இனிமேல் ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வு அடிப்படையில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு?

TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவியல் பட்டதரிகளுக்கு அனுமதி கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது..

இனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும். இதனிடையே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வழங்க கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இதனிடையே மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த கோவை மெடிக்கல் சென்டருக்கும் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இரு சுயநிதிக் கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோன்று பனிமலர் மருத்துவக் கல்லூரிக்கும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 இடங்களை அதிகரிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதுதவிர மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்காக மட்டுமில்லாமல், ஊராட்சிக்கும் நல்லதை செய்த நல்லாசிரியை!

இந்தாண்டு தமிழகத்திலிருந்து நல்லாசியர் விருதை கோவை, மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளை தலைமை ஆசிரியை ஆர் ஸதி பெறுகிறார்.

கடந்தாண்டு தமிழகம் சார்பாக 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக 6 ஆசிரியர்கள் மட்டும் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் ஆசிரியை ஆர் ஸதிக்கு விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர் ஸதி கூறியதாவது:
23 ஆண்டுகளாக வாரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். கடந்த 2009ல் பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றேன்.
நான் பணியில் சேர்ந்த போது 146 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசினேன். அரசு வழங்கும் உதவிகள், சலுகைகள் குறித்தும், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி மாணவர்களை சேர்க்கைக்கு முயற்சித்தேன். தற்போது 270 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் பாடத்தை நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் டேப்லெட் முறையில் பாடத்தை நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியை செயல்படுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்தவெளி மலம்கழிப்பிடமற்ற ஊராட்சி’ ஆக மாற்ற மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் எனக்கும், மாணவர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினார்.
2016ம் ஆண்டு கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருது பெற்றேன். 2017ல் , தமிழகத்தில் சிறந்த பள்ளி என டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கப்பட்டது என நெகிழ்ச்சியாக ஆசிரியை ஆர் ஸதி தெரிவித்துள்ளார்.

பயனர்களுக்கு வாட்ஸ் அப்(WhatsApp) விடுத்த எச்சரிக்கை!

பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை! வாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டுப் பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற கூகுள் க்ளவுடில் சேமித்து வைக்கப்படும் பேக்கப்களுக்கு, ஸ்டோரேஜ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப் புதிய அறிவிப்பு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வாட்ஸ் அப் அதில் உள்ள சிக்கலையும் வெளியிட்டுள்ளது.
இந்தச் சேவை குறித்து தற்போது வாட்ஸ் அப் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் வாட்ஸ் அப்பின் மீடியா மற்றும் மெசேஜ்கள், இனி end-to-end encryption செய்யப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் எந்தவொரு பதிவுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்பதே இதன் பொருளாகும். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பின் இந்த அறிவிப்பு குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சாய் கிருஷ்ணா கொத்தப்பள்ளி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "வாட்ஸ் அப்பின் மெசேஜ்களை கூகுள் டிரைவில் சேமித்து வைப்பது என்பது பயனர்களாகிய உங்களுடைய விருப்பம்தான். வாட்ஸ் அப் இதனைக் கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு புதிய அம்சம் அவ்வளவுதான். கூகுள் நிறுவனத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். தேவையில்லை என்று விரும்பினால் அதனைத் தவிர்த்து விடலாம்" என்று தெரிவித்துள்ளார்.
End-To-End Encryption என்றால் என்ன?
வாட்ஸ் அப்பில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்களும் End-To-End Encryption செய்யப்பட்டே அனுப்புநருக்கு அனுப்பப்படும். அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்கள் அனைத்தும் ஒரு சிப் வடிவிற்கு மாற்றப்பட்டு லாக் செய்யப்பட்டு போனிலிருந்து நம் சர்வருக்கு அனுப்பப்படும். பின்னர் லாக் செய்யப்பட்ட அந்த சிப்பானது, பெறுநரின் சர்வரை அடைந்து, அவர்களின் போனைச் சென்றடையும் வரை யாராலும் அந்த மெசேஜை படிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாது. இதுவே End-To-End Encryption வசதியின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த விதிமுறை வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது