யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/18

நீதிக்கதை :

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்


ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

நீதிக்கதை



இந்த உலகத்தில் எதுவும் வீணாக படைக்கப்படவில்லை
-----
விவசாயி ஒருவருக்கு மலை அருகே ஒரு தோட்டமிருந்தது. அதில் துளசிச் செடிகள் பயிர் செய்து இருந்தார். வாரத்துக்கு ஒரு முறை துளசிச் செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் போன்றவற்றைப் பிடுங்கி எடுத்து, துளசிச் செடிகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்த்து வந்தார்.அன்று அவருடன் அவரது மகனும் சென்றிருந்தான்
-
 அவர். ஒரு  துளசிச் செடிக்கு, இடையே வளர்ந்து இருந்த முட்செடி ஒன்றைப் பிடுங்கி எறிந்தபோது,முள் அவரது கையை குத்தியது  அவரது கையில்  இரத்தம் வந்தது.
-
மகன் கேட்டான்.இந்த முட்செடியினால் நமக்கு என்ன பயன்? இது மற்றவர்களை காயப்படுத்துகிறதே தவிர பயனில்லையே.எல்லாவற்றிற்கும் ஏதாவது பயன் உண்டு என்பீர்களே பயனில்லாத இதை இறைவன் ஏன் படைத்தார் என்று கேட்டான்
-
 கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை. எல்லோருக்கும் திறமையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார்.ஒவ்வொன்றிற்கும் ஒரு பயன் உண்டு. ஆனால் அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்” என்றார் தந்தை
-
இதனால் என்ன பயன் என்றான் மகன்
-
 கொஞ்சம் யோசித்த அந்த விவசாயி, தன் தோட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் எடுத்து, சேர்த்துக் கட்டி, தோட்டத்தைச் சுற்றி வேலி போன்று அமைத்தார்.
-
பின்னர்  மகனிடம் பார்த்தாயா? இந்த முட்செடியின் இயல்பு பிறரை காயப்படுத்துவதுதான். அதேநேரம் விலங்குகளிடமிருந்தும்,தீயவர்களிடமிருந்தும் பயிர்களை பாதுகாக்கவும் செய்கிறது.
-
‘கடவுள் எல்லா உயிர்களையுமே ஏதாவது ஒரு திறமையையும் அதனைச் செய்வதற்கான பலத்தையும் வரமாகத் தந்துதான் படைக்கிறார். எனவே நமக்குள்ளும் அப்படி ஒரு திறமை நிச்சயம் மறைந்திருக்கும். அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்!

நீதிக்கதை :



ராஜாவும் முட்டாள் குரங்கும்

(The Foolish Monkey And The King - Panchatantra Story in Tamil)



வேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அந்த அரசரின் மீது மிகவும் பாசமாக இருந்தது.

ஒரு நாள் ராஜா வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவப் போகும் பொழுது குரங்கையும் கூடவே அழைத்துச் சென்றார்.

செல்லும் வழியில் ஒரு முட்புதர்க்கு நடுவில் பாம்பு ஒன்று இருப்பதை குரங்கு கவனித்தது. உடனே அந்த குரங்கு தாவி குதிச்சு பாம்பு இருப்பதை ராஜாவிடம் காண்பித்தது. அந்த பாம்பு ராஜாவை கடிக்கும் முன்பு குரங்கு பாம்பிடம் சண்டையிட்டு பாம்பைக் கொன்றது.

சரியான சமயத்துல ராஜா, பாம்புக் கடியிலிருந்து தப்பித்தார். குரங்கின் எச்சரிக்கை உணர்வையும், விசுவாசத்தையும் பார்த்து ராஜா மிகவும் நெகிழ்ந்தார்.

உடனே, அந்தக் குரங்கையே தன்னோட பாதுகாவலரா நியமிக்க முடிவு செய்தார். அவரோட இந்த முடிவைக் கேட்ட மந்திரிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.



 அவர்கள் ராஜாவிடம், ‘ராஜா என்னதான் இருந்தாலும் அது ஒரு விலங்குதானே! அதுக்கு மனிதர்கள் மாதிரி பகுத்தறிவோ, முடிவெடுக்கும் திறமையோ இருக்காதே! உங்களோட இந்த விபரீத எண்ணத்தை மாத்திக்கங்க'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.

ராஜா கேட்கறதா இல்லை.

‘என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு அந்தரங்கப் பாதுகாவலனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி பாசமும், விசவாசமும்தான்! அது என் குரங்குகிட்ட நிறையவே இருக்கு! அதனால என் பாதுகாவலுக்கு மனிதர்கள் வேண்டாம். குரங்கே போதும்'னு தீர்மானமா சொல்லிட்டாரு.

அன்று முதல் குரங்கு, ராஜாவை விட்டு ஒரு நிமிஷம்கூட விலகாம அவர் எங்கு போனாலும் கூடவே போறதும் வர்றதுமா இருந்தது.

ஒரு நாள் ராஜா குரங்கிடம் ‘எனக்கு தூக்கம் வருகின்றது. நான் கொஞ்ச நேரம் நல்லா தூங்கப் போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்க’ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பித்தார்.

குரங்கும் ரொம்ப அக்கறையா, படுக்கைக்குப் பக்கத்துலேயே இருந்து காவல் காத்தது. அந்த சமயம் பார்த்து அங்க ஒரு ஈ வந்தது. அது ராஜா காது கிட்ட வந்து ‘ஸொய் ஸொய்'ன்னு கத்தி ராஜாவை தொந்தரவு செய்தது. குரங்கு ‘சூசூ'ன்னு துரத்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சி, அந்த ஈ திரும்பவும் அங்கேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருந்தது. குரங்குக்கு கோபம் தாங்கல. ஈக்குத் தகுந்த பாடம் புகட்டணும்னு தீர்மானிச்சிடுச்சு. அது ராஜாவோட வாளை கையில் எடுத்தது. இந்த முறை ஈ வந்தா அதை ஒரே போடு போட்டு ரெண்டு துண்டாக்கிட வேண்டியதுதான்னு முடிவு செய்தது.

நடப்பது எதுவும் தெரியாத ராஜாவோ பாவம் நிம்மதியா தூங்கிக்கிட்டிருந்தாரு. ஈ திரும்பவும் வந்தது. இந்தத் தடவை அது ராஜாவோட கழுத்துக்கு மேல பறந்தது.

தயாராக இருந்த அந்த குரங்கும் ஈயை ஒரே வெட்டா வெட்டிடுச்சி. ஐயோ! என்ன பரிதாபம்! ஈ பறந்து தப்பிச்சிடிச்சு. ராஜா தலை துண்டாகிப் போச்சு. இப்படியாக, ராஜா தன்னோட சொந்த பாதுகாவலனாலயே கொல்லப்பட்டுட்டாரு.

ராஜா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த நாட்டு மக்களும் மந்திரிகளும் சோகத்துல மூழ்கிட்டாங்க. அவங்க 'புத்திசாலியான எதிரியைவிட முட்டாளான தோழன்தான் ரொம்ப ஆபத்தானவன்'னு ராஜாவுக்குத் தெரியாமல் போய் விட்டதே என்று புலம்பினார்கள்.

நீதிக்கதை :




மூளை இல்லாத கழுதை

(The Donkey Without Brain - Panchatantra Stories)


அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.

சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.

யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.


 உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.

“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.

நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.

“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.

நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.

சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.

சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.

“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.

“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.

“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.

“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.


அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.


 நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.

கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.

சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?” என்று சிங்கத்திடம் நரி கூறியது.

சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.

நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.

குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே இல்லையே?” என்று சிங்கம் கேட்டது.

“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.

சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.

“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.

நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.

நீதிக்கதை



மௌனம் ஒரு மகாசக்தி

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமர்சித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.

மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால்
வார்த்தைகளை
பயன்படுத்துங்கள்.

நீதிக்கதை



பொய் சொல்லாதே

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

 பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....

அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

 இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....

 அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

 உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,

இல்லையேப்பா..,
நல்லா தானே இருக்கு" என்பார்.

உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

ஏங்க..
"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!

 "என் தினமும் இப்படி நல்லா இல்லைனு
சொல்லி டிராமா போடறீங்க"

 உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்.....,

"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!

ஆனாலும்...,
 "தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
 " தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,

அந்த பாட்டியிடம்,

"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!

 "இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?

 உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு....,

அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,

"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!

இது எனக்கு தெரியாது என்று
நினைக்கிறான்...!!

"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!

 மாறாக...
 " அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...
என்றார் அன்போடு....,

இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்
ஜீவன் இன்னும் இருக்கு.....!!

"அன்பை விதையுங்கள்"....!!

*"அதையே அறுவடை செய்வீர்கள்".......!!

மூட நம்பிக்கைகள், தீண்டாமை வேரறுப்போம்
அன்பினால் உலகத்தை நிரப்புவோம்

நீதிக்கதை :



நன்றி ஓடுகளே!
   


ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
   



  "முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
   


ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

நீதிக்கதை


முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.
அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.
"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.
தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.
அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.
மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.
"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.
"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.
சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.
இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.
"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.
"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.
அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.
"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த
கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.
"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.
அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.
"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.
உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.
"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''
"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.
"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.
"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.
சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.
"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.
"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.
நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.


நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

தேர்வு வினாத்தாள் : பள்ளிகளுக்கு அறிவுரை

சென்னை: காலாண்டு தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு துவங்கியது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வரும், 17ல் தேர்வு துவங்க உள்ளது.இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வழங்கும் வகையில், பள்ளி கல்வியின் வினாத்தாளை பயன்படுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 படிப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.அதேபோல், 'ப்ளூ பிரின்ட்' என்ற வினாத்தாள் கட்டமைப்பு முறையும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யவும், தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ

DEE PROCEEDINGS-சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 பணி இடங்களுக்கு 6½ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 காலிப்பணியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 535 பேர் போட்டி போடுகிறார்கள்.
அரசுத்துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதன்படி அரசு துறைகளில் காலியாக உள்ள சப்-ரிஜிஸ்டர் கிரேடு-2 காலிப்பணியிடங்கள் 73, தமிழ்நாடு கூட்டுறவுகழகங்களில் சீனியர் ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் 599, தமிழ்நாடு வேளாண்மை மார்க்கெட்டிங் மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் 118, தொழிலாளர் கூட்டுறவு அதிகாரி காலிப்பணியிடங்கள் 30, உதவி தொழிலாளர் ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் 28 உள்பட 23 வகையான 1,199 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வுக்காக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி ஆன்லைனில் பட்டதாரிகள் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க கடந்த 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடைசி நாள் வரை இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்திற்கு 535 பேர் போட்டிப்போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படும்.


அந்ததேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள்

காலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.


கேள்வித்தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்  மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு காலாண்டு தேர்வு துவங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாட திட்டத்தில் பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

 பிளஸ் 2வில் இதற்கு முன் இருந்த கேள்வித்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வமாக கேள்வித்தாள் வடிவமைப்பு பிளஸ் 1 பிளஸ் 2 என இரண்டு வகுப்புகளுக்கும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இணையதளம், வாட்ஸ்அப் போன்றவற்றில் சில தனியார் ஆசிரியர் அமைப்பினர் கேள்வித்தாள் வடிவமைப்பை கடந்த வாரம் வெளியிட்டர். இதை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.

 இதற்கு முன் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகள் தான் தேர்வில் 95% கேட்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் இருந்து அனைத்து கேள்விகளும் புத்தகத்தினுள் பகுதியில் இருந்துதான் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் எந்த பாடத்தில் எங்கிருந்து கேள்விகள் வரும் என புரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத கேள்விகள் புத்தகத்தில் உள் பகுதியிலிருந்துதான் கேட்கப்பட்டிருந்தது.

 புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இறுதியில் வெளியான ஒரு சில கேள்விகள் மட்டும் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.  இந்த வினாத்தாளை பார்த்து அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர் கலக்கமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.

 கேள்வித்தாள் மாணவர்களுக்கு சற்று கடினமாக தான் இருந்திருக்கும் என முதுகலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது

அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி? எவை தவறு?

வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.: அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.


அலுவல் சம்பந்தமான செய்தி
வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:

அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.



வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும் பின்வருமாறு தருகிறேன்.

பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்டுள்ள = சரி

30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.

கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.

தொடர்பாக என்று எழுதுவதே சரி.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி

பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.



அய்யா = தவறு.
ஐயா = சரி.

ஊதியப் பட்டியல் = தவறு.
ஊதியப் பட்டி = சரி.

அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.

இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.

நகல் = தவறு.
படி = சரி.

கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.

விபரம் = தவறு.
விவரம் = சரி.

ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)

நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.

பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.



விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.

சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.

ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.

அனுமதி = தவறு.
இசைவு = சரி.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது

மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ

இந்திய சந்தையைக் குறிவைக்கும் Whatsapp!

ஜியோ ஃபீச்சர் போன்-2வில் வரும் 20ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் சேவை அறிமுகமாகவுள்ளது.


இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், ஃபீச்சர் போன்-2வை அறிமுகம் செய்து தனது அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வருகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் வசதிகளைக் கொண்டு KaiOS தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஜியோ ஃபீச்சர் போன்-2 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜியோ ஸ்டோரில் அறிமுகமானது. தற்போது இந்தப் போனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலி வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளியாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ போன், ஜியோ போன்-2வைப் பயன்படுத்தும் பயனர்கள் இந்தப் பிரத்யேகச் செயலியை ஜியோ ஸ்டோரில் சென்று நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் மாடல்களில் உள்ள வாட்ஸ் அப் சேவையைப் போலவே இதிலும் end-to-end encryption வசதி உள்ளது. வாய்ஸ் ரெக்கார்ட், வாய்ஸ் மெசேஜ் சேவைகளைக் கொண்டுள்ள இந்தப் போனில் வாய்ஸ் கால், வீடியோ கால் சேவை கொடுக்கப்படவில்லை.
இந்த செயலியின் வெளியீடு குறித்து ஊடகத்திற்குப் பேட்டியளித்த வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், "இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள், இந்தியா முழுவதும் இனி ஜியோ போனில் வாட்ஸ் அப் ப்ரைவேட் மெசேஜ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். KaiOS இயங்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பிரத்யேக செயலியைக் கொண்டு ஜியோ பயனர்கள், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் சிறந்த சேவையை அனுபவிக்கமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.



வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய சேவையை அடுத்து இந்த எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய சந்தையில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.

DEE PROCEEDINGS-சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

நீதிக்கதை :



நன்றி ஓடுகளே!
   


ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
   



  "முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
   


ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு-

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு*


_🔵15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை._

*🔵15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-*

*🔵101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-*

*🔵251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-*

*🔵1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-*

*🔵2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.*

*30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.*

M.Ed சேர்க்கைக்கு கடைசி தேதி 17-09-2018 ஆகும் -தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழக கடிதம்


ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் நாகை மாணவிக்கு காமராஜர் விருது :


நாகையில் 11ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரீத்தாவிற்கு காமராஜர் விருது கிடைத்துள்ளது. நாகையில் ஒரு தொண்டு நிறுவனம் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் தொடங்கியுள்ளது. இதில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து குடும்ப சூழ் நிலையை போல் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.


  இந்த குழந்தைகள் கிராமத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தையை இழந்த பிரீத்தா என்ற மாணவியை அரசு மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். இவர் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார்.


   இந்நிலையில் பிரீத்தா நன்றாக படிப்பதோடு நடனம், கேரம் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு நடனம், கேரம் விளையாட்டுகளில் பங்குபெற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளார்.


  இதையடுத்து தமிழக அரசு பிரீத்தாவிற்கு படிப்பு மற்றும் நடனம், கேரம் போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றதை அடிப்படையாகக்கொண்டு காமராஜர் விருது வழங்கியது. விருது சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை கடந்த 5ம்தேதி சென்னையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.


  காமராஜர் விருது பெற்ற மாணவி பிரீத்தாவை நடராஜன் தமயந்தி மேல் நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள், மற்றும் எஸ்.ஓ.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ள சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

காலாண்டு தேர்வு வினாத்தாள் : பள்ளிகளுக்கு அறிவுரை :

காலாண்டு தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு துவங்கியது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வரும், 17ல் தேர்வு துவங்க உள்ளது.


இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வழங்கும் வகையில், பள்ளி கல்வியின் வினாத்தாளை பயன்படுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 படிப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.அதேபோல், 'ப்ளூ பிரின்ட்' என்ற வினாத்தாள் கட்டமைப்பு முறையும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யவும், தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

T.N.O.U. செப் .30 வரை அட்மிஷன் :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பதிவாளர், சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், தொலைநிலை படிப்புகளில், ஆகஸ்ட், 31 வரை, மாணவர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை, 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் உள்ள, பல்கலையின் மண்டல மையங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது www.online.tnou.ac.in என்ற, இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்!





11/9/18

234 தொகுதியிலும் நீட் தேர்வு மையம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

'தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நீட் தேர்வு மையம் உருவாக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு இரண்டு அல்லது மூன்று என நீட் தேர்வு மையங்கள் இருக்கும். வீடியோ கான்பரன்சிங் கிடைக்காத நிலையில் ஒரு நீட் தேர்வு மையமாவது செயல்படும். எல்லா தொகுதியிலும் நீட் தேர்வு மையம் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.


மாதிரி பள்ளிகள், 32 மாவட்டங்களிலும் துவங்க உள்ளது. முதன் முறையாக அரசு சார்பில் தலா 50 லட்சம் ரூபாய் என 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மலை மாவட்ட மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி'

மலை மாவட்ட மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், 4,343 மாணவர்களுக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியை பொறுத்தவரை, வனப்பகுதிகள், போக்குவரத்து வசதி கள் இல்லாத இடங்களில் உள்ள குழந்தைகள், பள்ளிக்கு வருவதில்லை என்ற புகார் உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
நடப்பு கல்வியாண்டில், நீலகிரி மாவட்ட பகுதிகளில், தொலைவில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், 142 பள்ளிகளைச் சேர்ந்த, 3,331 மாணவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வனம், வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள, 92 பள்ளிகளைச் சேர்ந்த, 1,012 மாணவர்களுக்கு பாதுகாப்பாளர்கள் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிகள் வங்கி கணக்கில், 67 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., 
வெளியிட்டது. ஆன்லைன் கவுன்சிலிங்கில், இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

வேளாண் இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகிறது.
கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப் பட்டது. மறுதேர்வுகள்ஆக.,18, 19ல் நடந்தன. பல்வேறு காரணங்களால் தாமதமாகிய நிலையில், தற்போது நுழைவுத்தேர்வு முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆய்வுக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.


https://icarexam.net/ என்ற ஐ.சி.ஏ.ஆர்., இணையதள முகவரியில், லாகின் செய்து, மதிப்பெண் அட்டை மற்றும் பங்கேற்பு கடிதத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேசிய வேளாண் ஒதுக்கீட்டு ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள், இன்று துவங்குகின்றன.ஆன்லைன் கவுன்சிலிங் இணையதளத்தில், தேர்வுகளை தேர்ந்தெடுத்து, கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான, கடைசி தேதி, செப்.,13 கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின், முதல் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 15ல் வெளியிடப்படுகிறது.

ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, கட்டணம் செலுத்தல் ஆகிய நடைமுறைகள், செப்.,16 முதல் 20 வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 23 வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள், செப்.,24 முதல் 28 ம் தேதி வரை நடக்கின்றன. கவுன்சிலிங் உதவிகளுக்கு, 011 - 2584 3635, 011 - 2584 6033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!


தொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.

கோயில்கள் பாதுகாப்பு:


தொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.

நடுகற்கள் பாதுகாப்பு:

வேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.

செப்பேடுகள் பாதுகாப்பு:


2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.

பெருங்கற்கால கல்திட்டு:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

மலை சிற்பங்கள்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.


அகழ்வாராய்ச்சி:

திண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.

கீழடி:

கீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு:

பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார்.
வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
கரூர்:

கரூர் க.பரமத்தி சேரன் பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கரூரில் நடந்தது. சேரன் அறக்கட்டளை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, அம்பிகை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 124 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரும்பியது கிடைப்பதே வெற்றி என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. விருப்பத்திற்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே. நான் பல நேரங்களில் விரும்பாததையும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னால் பேசும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். இந்தியாவில் பல வெற்றியாளர்கள் செல்வக்குடியில் பிறந்தவர்களோ, பெரிய கல்வி கூடங்களில் பயின்றவர்களோ கிடையாது. சாதாரண பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். 
சாதிக்கும் சந்தர்ப்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அயராத உழைப்பும், உயர்ந்த லட்சியமும், தேவையான திறமைகளும் இருந்தால் நிலவுக்கு போகும் கனவு நனவாகும். பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்ற செய்தியை கேள்வி பட்டிருப்போம். அதே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதும் உண்மையாகும். எனவே பணிகளுக்கு தேவையான தகுதியினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர்  மனோகரன், பொருளாளர் அப்னா தனபதி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நன்றி மாலை மலர் .

நாளை 11.9.18 ,சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள். பதிலாக வேலை நாள்.15.9. 18

10/9/18

கானல் நீராகும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் -மாணவர் எண்ணிக்கை சரிவு-பயிற்சி முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி -?தகுதியை வளர்கிறதா தகுதிதேர்வு ??

ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

வேலூர் மாவட்ட நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள்.
 ஓர் PG ஆசிரீயர்!
உங்களைப் போலவே படித்துவிட்டு டிஆர்பி எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேர்ந்தவர், தன்னிடம் படிக்கும் மாணவன் திறனுடையவனாக முன்னேறவேண்டும் என்ற வேட்கை கொண்டவர் இன்று அவரது பள்ளியிலேயே நிராதரவாக்கிடப்பட்டு தனித்து சூழப்பட்டு பெண்களால்! அப்பள்ளி மாணவனாலேயே அடித்து வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்கிறார்.

பார்க்கும் போதே குலை நடங்குகிறது.


Mass violence! என்றோ!Public rampage!என்றோ சிலரது கருத்துக்களாக மாறிப்போகும்.
நாள்பட மறந்தும் போகும்.


தான் பணியாற்றிய பள்ளியிலேயே தாக்கப்படும் ஆசிரியருக்கு பணிப்பாதுகாப்பு எங்கே?

பேருந்து ஓட்டுநர் எங்கேயாவது மோதிவிட்டால் இறங்கி ஓட்டம் எடுப்பதுபோல் இனி ஆசிரீயர்களும் ஓட வேண்டுமா?
இருநாட்கள் முன் ஆசிரியர் தினமென்று வாழ்த்திவிட்டு அடுத்த இரு நாட்களிலேயே அடிக்கும் காணொளியைப் போடுகிறார்கள்.



மாணவன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுப்படும் முன்னரே கற்பிக்கும் ஆசானைஅடித்து துவைக்கிறார்கள்.மாணவனின் கடிதத்தில் எல்லோர் மேலுமே வெறுப்படைந்ததாக உள்ளதற்கு காரணம் யார்?அனைவரின் மேலுமே குற்றம் சொல்லிடும் அவனது மனநிலை என்ன?

இதற்கிடையே குறைந்தது தேர்ச்சியாவது பெற வைத்திட முடியாத நீங்கள் வாங்கும் சம்பளம் தர்மமா?எனவும் அதிகாரிகள் கேட்டுவிடுகிறீர்கள்.


தாக்கப்பட்ட ஆசிரியரின் மனநிலை என்னவாக இருக்கும்?அவர் தாக்கப்படுவதைப்பார்க்கும் அவரது குழந்தைகளும்,மனைவியும்,பெற்றோரும் இனி என்ன அவருக்கு சொல்லப்போகிறார்கள்?


கத்தியால் குத்திய மாணவனுக்கு தண்டனை இல்லை.அவனுக்கு கவுன்சலிங் கொடுத்து ராஜமரியாதையோடு அடுத்த பள்ளிக்கு கூட்டிச் சென்று சேர்த்து விடுகிறீர்கள்.ஆனால் அடிபட்ட ஆசிரியருக்கு என்றைக்காவாவது ஆறுதல் சொன்னதுண்டா?


எங்களின் பாதுகாப்பு யாரிடம் இனி கேட்பது?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

TNPSC.-க்கு கை கொடுத்த "ஆன்-லைன்': 7 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணம் சேமிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஆன்-லைன் முறை காரணமாக ரூ.100 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் முறை வழியாக 139-க்கும் அதிகமான தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவை நடத்தப்பட்டுள்ளன.

 குரூப் 1, குரூப் 2 உள்பட பல முக்கிய அரசுத் துறைத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளுக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் காகிதத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.

 இந்த விண்ணப்ப முறையில் ஓ.எம்.ஆர். எனப்படும் கணினி வழி ஆய்வு செய்யும் காகிதமும் இணைக்கப்பட்டு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டன. இதனால், குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் போன்ற தேர்வுகளை நடத்தும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன.
 ஆன்-லைன் முறை: காகித முறையிலான விண்ணப்ப முறைக்கு மாறாக, ஆன்-லைன் முறையில் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயலாக்கத்துக்கு வந்தது.


 ஆன்-லைன் தேர்வு முறை காரணமாக, தேர்வர்கள் அனைத்துத் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்து வருகிறார்கள். இந்தத் தேர்வு முறையால் தேர்வர்கள் எளிமையான முறையில் விண்ணப்பிப்பது மட்டுமின்றி, அரசுக்கும் பெருமளவு செலவுகள் குறைந்துள்ளன.

 இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வரலாற்றில் மைல்கல்லாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆன்-லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் 139 தேர்வுகளுக்கான அறிவிக்கைகளும், அதற்கான விண்ணப்பங்களும், தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டன.

ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் - சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பழகன் பேட்டி

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!; ஆசிரியர் மீதான நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் 'நீல் டவுன்' போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை முதன்மைக் கல்வி அலுவலர் எந்தவித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபிரகாஷ் (55). கடந்த 5 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவர்கள், ஊர்மக்கள் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால், புகார் மனுக்களின் உள்விவகாரங்கள் குறித்து விரிவான விளக்கம் சொல்லப்படவில்லை. மேலும், புகார்கள் தொடர்பாக அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகளும் வழங்கப்படவில்லை. வழக்கமான சம்பிரதாயமான நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை சஸ்பெண்ட் செய்துள்ளதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


இதற்கிடையே, ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் முட்டிக்காலிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பாசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்

கல்வித்துறையில் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை
எழுந்துள்ளது.


பள்ளி கல்வியில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டம் (ஐ.இ.டி.,) 2009 -10ல் துவக்கப்பட்டது. இதில் 13,115 மாணவர் படிக்கின்றனர். இவர்களுக்காக 202 சிறப்பாசிரியர் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 சதவீதம் அடிப்படையில் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படுகிறது. நிர்வாக சீரமைப்பிற்காக எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் (டயட்) ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.ஏ., (சமஹ சிக்ஷான் அபியான்) என மாற்றம் செய்யப்பட்டது.

இதை காரணம் காட்டி ஓராண்டாக சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் 40 சதவீதம் பங்களிப்பு சம்பளம் நிறுத்தப்பட்டது. இதனால் 34,148 ரூபாய் என்ற சம்பளம் 25 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் சிறப்பாசிரியர்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுகலை சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் சரவணன் கூறியதாவது:ஓராண்டாக மாநில அரசின் பங்களிப்பு சம்பளம் முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2012 - 13ம் ஆண்டு முழுவதும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 2013 - 2014 மற்றும் 2014 -2015ம் ஆண்டுகளில் 10 மாதம் என 22 மாதங்கள் சம்பளம் 'அரியர்ஸ்' வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. கல்வி செயலாளர், இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் அதிருப்தியடைந்த பலர் வேலையை விட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட காலியிடங்களில் 59 பேர் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 41 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பணியில் உள்ள பிற ஆசிரியர்களுக்கும் இதுபோல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அரசுப் பள்ளியை தத்தெடுத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி...

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

* வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தில்அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளி , சரியாக சீரமைக்கப்படாததால் 44 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

* பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும் நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இந்த பள்ளியை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரவி.

* சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் ரவி, இந்த அரசுப் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தார். போஸ்டர்கள், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு ஆகும் செலவை பள்ளிக்கு கொடுக்க முன் வந்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உணர்ந்த அவர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.

* மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், விளையாட்டு பூங்கா உள்ளிட்டவற்றை அவர் செய்து கொடுத்தார்.  வகுப்பறையில் மின்விசிறி போன்றவற்றை செய்து கொடுத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

* பள்ளியின் பக்கம் செல்லாததால் படிப்பின் அருமையை உணர்ந்ததாக கூறிய ரவி, மாணவர்களின் நலனே தனக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.5 லட்ச ரூபாயில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து  கொடுத்த ரவிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பில் முன்மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மாணவர் நலன் கருதி இலவச பேருந்து அட்டை, மிதிவண்டி, சீருடை வழங்கப்பட வருவதாகவும் தெரிவித்தார்.

பள்ளி நேரத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!


திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளில் பயிற்சி :

9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான
பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களின் படிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மத்திய அரசின் உதவி கிடைக்கும். இந்த தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பலரும் பின்தங்கி இருக்கின்றனர்.

இதை தவிர்க்க, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் சில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்கள் கியூ.ஆர் கோடு மூலம் பாடம் நடத்த மட்டுமே அனுமதி.
வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே மாதம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2640 காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கவும் ஆணை வெளியிட கேட்டுக் கொண்டார். கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை 1883 கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை (கூடுதல் 1) பணியமர்த்த அனுமதியும், திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இக்கல்வியாண்டு முதல் பின்பற்றவும் அரசு ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - வேலூர் மாவட்ட "அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்புடன்" வேலூர் மாவட்ட "CEO" அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்!!

தமிழக அமைச்சரவை நிறைவு - நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க முடிவு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழக அமைச்சரவை நிறைவு - நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க முடிவு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.



இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.

அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஸ்டிரைக் - கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.



முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த போராட்டம் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சங்கமான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும்போது, “நாளை கடை அடைப்பு நடைபெறுமா? என்பது குறித்து வணிகர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

முழு அடைப்பையொட்டி நாளை அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஆனால் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதைப் பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், லாரிகளும் பெட்ரோல்- டீசல் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ரெயில்கள் வழக்கம்போல் ஓடும்.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கோவை, நெல்லை உள்பட முக்கிய நகரங்களில் ஏராளமான தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இந்த பஸ்கள் நாளை ஓடுமா? என்பது பற்றி இன்று மாலை ஆலோசனைக்குப்பின் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்றும் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறினார்.

நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு கைகொடுக்கும் ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சொந்தங்களுக்கு வேண்டுகோள் :

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் கல்விக்கு கைகொடுக்கும் விதமாக அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் பகிர்ந்து வரும் ஜி.வி. இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது,
கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே கல்வி என்பது வியாபரமாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும். உலகஅளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே. தற்போது 890 அரசுப் பள்ளிகள் மூடும்நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான அளவிலான மாணவர்களே உள்ளனர். நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதில் எனது சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு தனியார் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னை இந்த நல்முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி, இவ்வாறு கூறினார்