யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/18

நீதிக்கதை



பொறுப்பு

ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.

யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.

ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.

மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆறுமாதம் சென்றது.

குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.

""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.

""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.

""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.

""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.

ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.

""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லா  பம் கிடைக்குமே என்று நினைத்தேன்.

நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.

பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.

அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.

14/11/18

லோக்சபா தேர்தல் பணி கலெக்டர்களுக்கு கடிதம்

லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் எழுதி உள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., அரசின் பதவி காலம், 2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, 2019 ஏப்ரல் அல்லது அதற்கு முன், லோக்சபா தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல், தேர்தல் கமிஷனும், தேர்தலை நடத்த தயாராகி வருகிறது.அதன்படி, தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை கண்காணிக்க, மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்துள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.அதே போல, ஒவ்வொரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்நியமிக்கப்படுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கஜா' புயல் எதிரொலிபயிர் காப்பீடு சுறுசுறு

கஜா' புயல் எதிரொலி யாக, டெல்டா மாவட்டங் களில், பயிர் காப்பீடு செய்ய, வேளாண் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கிஉள்ளது.
இம்மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கர் வரை சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சம்பா சாகுபடி பாதித்தால், ரேஷன் அரிசி வினியோகத்தில் சிக்கல் ஏற்படும். இந்நிலையில், கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில், அதிக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, இம்மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா பயிர்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகளை பாதிப்பில் இருந்து காப்பதற்காக, பயிர் காப்பீடு செய்ய, வேளாண் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சம்பா சாகுபடி செய்துள்ள, டெல்டா விவசாயிகள் அனை வரையும், பயிர் காப்பீடு செய்ய வைப்பதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட வேளாண் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.பயிர் காப்பீடு செய்த விபரங்களை, அறிக்கையாக வழங்கும்படி, வேளாண் இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

அரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களிலும், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர கால பட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவது கட்டாயம் ஆகிறது.
டில்லியில், 2012ல், ஓடும் பஸ்சில், கல்லுாரி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார். பாதுகாப்புஇது தொடர்பான வழக்கில், பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுத்துறை வாகனங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா; பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி; அவசரகால பட்டன்கள் போன்றவை பொருத்தப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்தது.இதன்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், அக்., 31ல், இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களில், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர காலபட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகளை, கட்டாயம் பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் இந்த உத்தரவு, பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். அச்சுறுத்தல் ஏற்படும் போது, பஸ்களில் பொருத்தப்படும் அவசர கால பட்டன்களை அவர்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். பஸ்சில் உள்ள, ஜி.பி.எஸ்., கருவி உதவியால், பஸ் செல்லும் இடத்தை, போலீசார் கண்டறிவர்.கண்காணிப்புபஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியே, அங்கு நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில், நேரடி காட்சிகளாக பார்க்க முடியும். மேலும், பஸ், வேறு பாதையில் கடத்தப்பட்டாலும், கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீதிக்கதை

பான்யாவின் பயணம்!

பான்யா பறக்க ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. அதிகச் சோர்வு காரணமாக, உடம்பு தளர்ந்திருந்துச்சு. இறக்கைகள் பிய்ந்துவிடுமோனு பயமும் வந்துச்சு.

எல்லாம் ஆன்யாவை நம்பி வந்ததன் பலன். ‘நகரத்துக்குக் குடிபெயர்ந்தே ஆகணும். அங்கேதான் நல்லா வாழமுடியும். சாப்பாட்டுக்குப் பஞ்சமே இருக்காது. வயித்தை நிரப்ப, விதவிதமான தின்பண்டங்கள் கிடைக்கும். நிறைய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, பான்யாவின் ஆசையைத் தூண்டிவிட்டது ஆன்யா.

யார் இந்த பான்யா, ஆன்யா?

ரெண்டுமே ஈக்கள். பொறந்ததிலிருந்தே நட்போடு பழகி, இணைபிரியாத நண்பர்களா இருக்காங்க. போன வாரம் ஒருநாள், திடீர்னு ஆன்யா காணாமப்போயிட்டா. மாட்டுத் தொழுவம், கடைவீதிக் குப்பை, கசாப்புக் கடை வாசல்ன்னு தேடிப் பார்த்துக் களைச்சுப் போச்சு பான்யா.

ஆனால், வெளியூர் போயிருந்த ஆன்யா, ஒரு வாரம் கழிச்சு உற்சாகமாகத் திரும்பி வந்துச்சு. சுத்திப் பார்த்துட்டு வந்த ஊர்கள் பற்றி கதை கதையா சொல்லிச்சு.

“வா, நம்ம நகரத்துக்குப் போகலாம். பால், பழங்கள், சக்கரை, பலகாரம் எல்லாம் கிடைக்குது. ஜனத்தொகை அதிகம் உள்ள ஊர்களில் சுகமா வாழலாம். பிரச்னையே இருக்காது” என்று தேன் பூசிய வார்த்தைகளால் நண்பன் பான்யாவை மயக்கிருச்சு.

பேசிவெச்ச மாதிரியே, ரெண்டு ஈக்களும் வெளியூர் பயணத்துக்குக் கிளம்பினாங்க. வேர்த்து விறுவிறுக்கப் பறந்து பறந்து நகரத்துக்கு வந்து சேர்ந்தாங்க. குட்டியூண்டு உடம்பைத் தூக்கிட்டிப் பறக்கமுடியாத பான்யாவைப் பார்த்துச் சமாதானம் செஞ்சு பேசிச்சு ஆன்யா.

“இன்னும் கொஞ்ச தூரம்தான். பெரிய பஜாருக்குள்ளே நுழைஞ்சுடலாம். ம்ம்ம்.. சோர்ந்து போகாதே பான்யா”

“நிறுத்து, ஆசைகாட்டி ஆசைகாட்டியே பகல் முழுக்க அலைய விட்டுட்டே. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்”

கடுமையான கோபத்தில் இருந்தது பான்யா. என்னதான் செய்றது? ஆன்யா காட்டப்போற அதிசயங்களைப் பார்த்துருவோம் என்ற ஆசையும் விடலை. பசி வயிற்றைக் கிள்ளிச்சு.

“பொறுமையா இரு. பிரமாதமான விருந்து கிடைக்கும்’’ என்ற ஆன்யாவின் சமாதான வார்த்தையைக் கேட்டு ஆறுதல் அடைந்தது பான்யா.

ஈக்கள் இரண்டும் பஜாரை வந்தடைந்தன. பசும்பாலில் தயாரித்த நெய் வாசம் மூக்கைத் துளைக்க, இரண்டு ஈக்களும் நெய் விற்பனைக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர் நெய் பாத்திரத்தை மூடிவெச்சிருந்தார். வாடிக்கையாளர்கள் வரும்போது, மூடியைத் திறந்து கரண்டியால் நெய்யை எடுத்து ஊற்றிக்கொடுத்துவிட்டு மறுபடியும் மூடிவைத்தார்.

பான்யாவுக்குப் பெருத்த ஏமாற்றம். மூக்கு நிறைய வாசனை பிடித்ததுதான் மிச்சம். ஒரு துளி நெய்கூடச் சுவைக்கக் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நாக்கைச் சப்புக்கொட்டியபடி இருப்பது? “ச்சே” எனச் சலித்துக்கொண்டது.

“சரி, வா… அதோ தர்பூசணிக் கடை இருக்குது” என்றது ஆன்யா.

இரண்டு ஈக்களும் மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர், ஒரே ஒரு பழத்தைப் பல கீற்றுகளாக வெட்டிவைத்திருந்தார். ஆனால், அவற்றை ஈக்கள் மொய்க்காதபடி வலைக்கூடையைக் கவிழ்த்திருந்தார்.

ஒரு சிறுவன் சாப்பிட்டுக் கீழே போட்ட சின்னத் துண்டில், எல்லா ஈக்களும் போட்டியிட்டு உட்கார்ந்தன. கூட்டத்துக்கு மத்தியில் நுழைய எவ்வளவோ முயற்சி செய்து பான்யா தோற்றுப்போச்சு. பசி மயக்கம்.

“நாம நெனச்சபடி ஒண்ணும் நடக்கல. நடக்கவும் நடக்காது. இதெல்லாம் வீண் ஆசை” என அலுத்துகிச்சு பான்யா.

“இப்படி யோசிசுட்டே இருந்தா பயன் இல்லை. ஒரு வாய் சாப்பிடலைன்னா செத்தா போயிருவோம். இப்படி ஓர் அனுபவமும் வாழ்க்கைக்குத் தேவைதான்” என்றது ஆன்யா.

கோடையின் கதகதப்பு குறையாத கடைத்தெருவின் மறுமுனைக்கு, ஈக்கள் இரண்டும் பறந்து கரும்புச்சாறு விற்கும் நடைவண்டியைச் அடைந்தன.

கரும்புச்சக்கை கொட்டிக்கிடந்த பிரம்புக்கூடையில், ஏராளமான ஈக்கள் உட்கார்ந்திருந்தன. ‘நீயா நானா?’ எனப் போட்டி போட்டு ஒன்றின்மேல் ஒன்று விழுந்து சண்டையிட்டபடி இருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட பான்யா திகைச்சுப்போய் நின்னது.

‘‘ஐயோ ஆன்யா! இதென்ன வாழ்க்கை? போட்டி, சண்டை, வம்பு, கூச்சல், குழப்பம்... இப்படி அநாகரிகமா, போட்டி நிறைந்த உலகத்தில சுகத்தை எதிர்பார்க்கிறது நல்லாயில்லே’’ என்று ஆதங்கத்தை எடுத்துச் சொன்னது பான்யா.

அதேநேரம் கரும்புச்சாறு பாத்திரத்துக்கு மேலே பறந்து வந்து உட்கார்ந்தது ஆன்யா. கடைக்காரர் தோளிலிருந்த துண்டை எடுத்து வீசினார். அவ்வளவுதான்... புயலில் சிக்கின மாதிரி பல அடிகள் தள்ளிப்போய்  விழுந்துச்சு. அதனிடம் அசைவில்லை.

ஆன்யா அருகில்போய் சில நொடிகள் கண்ணீர் விட்ட பான்யாவுக்கு அதுக்கு அப்புறம் அங்கிருக்கப் பிடிக்கல. பழைய இருப்பிடத்தை ஞாபகம்வெச்சுப் பறக்க ஆரம்பிச்சது. வழியில் ஒரு நாவல் மரத்தடியில் நசுங்கிக்கிடந்த பழத்தைச் சாப்பிட்டுப் பசியாறிச்சு.

மறுநாள் காலையில், ஒரு மாட்டுத் தொழுவத்தை வந்தடைந்துச்சு. ஒரு பாட்டி, பசுவுக்குப் புண்ணாக்கு வைத்துவிட்டு, கன்றுக்குட்டிக்குக் கையளவு வைக்கோல் வைத்தார். அவர் நகர்ந்துபோனதும், பசுவின் மடியில் பறந்துசென்று உட்கார்ந்துச்சு பான்யா. கன்றுக்குட்டி குடிச்சு மிச்சமாக ஒட்டியிருந்த ஒரு துளி பாலைக் குடிச்சதும் அதற்கு வயிறு நிரம்பியது.

“வாழ்க்கையில் நாம நிறைய எதிர்ப்புகளை உருவாக்கிக்கிறோம். அதுதான் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் கொடுக்குது. நமக்கான தேவையை இயற்கையிடமிருந்து அளவோடு எடுத்துக்கிட்டாலே நிம்மதியா சந்தோஷமா வாழலாம் எனப் புரிஞ்சது.

பசுவுக்கும் கன்றுக்கும் நன்றி சொல்லிட்டு உற்சாகமாகப் பறந்துச்சு பான்யா.    

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் - ஓர் அலசல் !!

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்புவிடுத்துள்ளனர். போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜனும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சு.மூர்த்தியும் கூறும் கருத்துகளை இனி பார்ப்போம்…

தியாகராஜன், ஜாக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர்நாங்கள் சில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச கூட இந்த அரசுக்கு மனமில்லை. எங்களது பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து கடந்த இரண்டு தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது, இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜாக்டோ ஜியோவினால் நடத்தப்பட்ட தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது, தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் 30.11.2017க்குள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்வது குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று நடவடிக்கை மேற்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

ஆக தேர்தல் வாக்குறுதி அளித்த அரசும் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த தலைமைச் செயலாளரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் வேறு வழியின்றி ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நீதி அரசர்கள், IAS அலுவலர்கள், IPS அலுவலர்கள் அனைவரும் 1.6.2016லிருந்து ஊதியக்குழுவின் மாற்றத்தைப் பெற்றுவிட்டனர். ஆனால், ஆசிரியர்களுக்கு மட்டும் 21 மாத நிலுவைத் தொகையினை இந்த அரசு வழங்காமல் வந்திருக்கிறது. எனவே, வேறு வழியின்றி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.

வரக்கூடிய நவம்பர் 27 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை நடத்தயிருக்கிறோம். அதற்கு ஆயத்தமாக அக்டோபர் 4 ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை எடுத்து போராடியிருக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை, இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு அடக்குமுறைகளை கையாளாமல் உடனடியாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் போராட்டங்கள் இதைவிட தீவிரமடையும்.

 சு.மூர்த்தி, ஆசிரியர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்ஆசி  நரியர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெறுவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது. உரிமைகள் அனைத்தும் வாழ்வதற்காகத்தான் கேட்கப்படுகின்றன. நம்மை ஆள்வதற்காக நாம் தேர்வு செய்த ஆட்சியாளர்களிடம்தான் நமக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடவும் முடியும்.

ஆனால், இங்கு ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் அவரவருக்கான உரிமையை  மட்டும் கேட்டுப் போராடுவதோடு முடிந்துபோவதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உறுப்பினனாகவும் சமூகத்தில் வாழும் பிறரால் பயனடைபவனாகவும் பிறருக்கு பயனளிப்பவனாகவும் இருக்கிறான். இதன் காரணமாகவே, பொது நலனுக்கான போராட்டத்திற்கு பங்களிப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால், இக்கடமைகளைச் செய்தே ஆகவேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

வாழ்நாள் முழுதும் பயனளிக்கும் அழியாத கல்வியைப் பெற ஆசிரியர்கள் துணை செய்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சமூகம் நன்றிக்கடன் செலுத்துவது நியாயமே. அதேசமயம், சமூகத்திற்கும் ஆசிரியரின் கடமை தேவையென சமூகம் எதிர்பார்க்கிறது. அதனால் தான், ஆசிரியர்கள் மட்டுமே ‘சமூகச் சிற்பிகள்’ என்று போற்றப்படுகிறார்கள். வகுப்பறையில் எழுத்தறிவிக்கும் வேலையைச் செய்வது, கொடுக்கப்பட்ட பாடநூல்களில் உள்ள பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது என்ற அளவில் மட்டும் ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து
விடுவதில்லை.

நாம் இன்றைக்கு மக்களாட்சி முறை சமூக அமைப்பில் வாழ்கிறோம். மக்களாட்சி சமூக அமைப்பு என்பது தனிநபரைப் பாதுகாப்பதோடு, மக்களிடையே சமத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு அவசியமான வழிமுறையாகும்.

மேலும், ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கல்வியின் பங்கே முதன்மையானது. இன்றைய தனியுைடமை சார்ந்த சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பிலான வாழ்நிலையில் மக்களாட்சி சமூக அமைப்பின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் கல்வியின் பங்கு மிகவும் முதன்மையாகிறது. கல்வியின் பங்கை நிறைவேற்றுவது ஆசிரியர்களின் செயல்பாடுகளில் உள்ளது. 

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மரணிக்க வைக்கிறோம் என்றால், நாம் ஜனநாயகத்தின் எதிர்த்திசையில் செல்கிறோம் என்று பொருள். அரசுப் பள்ளிகளைக் காக்கின்ற கடமையும் ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கடமைதான். ஆசிரியர் இயக்கங்கள் இக்கடமையை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளவேண்டும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை ஆசிரியர்களும் மறந்துவிடக்கூடாது.

10,+1,+2 HALF YEARLY EXAMINATION TIME TABLE DECEMBER -2018

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை:

வால்பாறை: வால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில், தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை ஒன்றியம், சின்னக்கல்லாரில், ஆதிதிராவிடர் அரசு நலப் பள்ளி, 1943ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவிக்காக, ஒரு தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றினர். அந்த மாணவி, இந்த கல்வியாண்டில் சின்கோனா இரண்டாம் பிரிவு அரசு நலப் பள்ளியில், நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இருந்த ஒரே மாணவியும், வேறு பள்ளிக்கு சென்ற நிலையில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் மட்டும், தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களை, தேவை இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யாததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''மாணவர்கள் இல்லாததால், பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம். ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வது குறித்து, கல்வித் துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியை நிரந்தரமாக மூடுவது குறித்து, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

பிளஸ் 2 துணை தேர்வு, விடைத்தாள் நகல், இன்று வெளியீடு :

பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அக்டோபரில், பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரியவர்கள், இன்று பிற்பகல் முதல்,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில், விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், இரண்டு நகல்கள் எடுத்து, நாளை முதல், 15ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை, முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்:

லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் எழுதி உள்ளார்.மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., அரசின் பதவி காலம், 2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, 2019 ஏப்ரல் அல்லது அதற்கு முன், லோக்சபா தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல், தேர்தல் கமிஷனும், தேர்தலை நடத்த தயாராகி வருகிறது.அதன்படி, தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை கண்காணிக்க, மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்துள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.அதே போல, ஒவ்வொரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்நியமிக்கப்படுவர்.

அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் ..புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையத் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான 9 இணைப்பு பயிற்சி மையங்கள்,மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான 13 இணைப்பு பயிற்சி மையங்கள் ,மற்றும்  3 உண்டு உறைவிடப் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன..

இணைப்பு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் மற்றும் உண்டு உறைவிடப் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூர் நோக்கு பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாவட்ட திட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது..

பயிற்சியினை தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும்   இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின்  நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.. தாயுள்ளத்தோடு அம்மாணவர்களின  கல்வி முன்னேற்றத்திற்கு மாவட்ட திட்ட அலுவலகத்துடன் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

பின்னர் அம்மையங்களின்  பதிவேடுதல் பராமரித்தல் மற்றும் உள்ளூர்  வளங்களைப் பயன்படுத்தி மையத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த வசதிகளை மேற்கொள்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கி 3 உண்டு உறைவிடப் பயிற்சி மையங்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கான அனுமதி ஆணையை வழங்கினார்..

இப்பயிற்சியில் உதவி திட்ட அலுவலர் ஆர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டு மையத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

பயிற்சியின் கருத்தாளர்களாக பொன்னமராவதி வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன்,மற்றும் பனங்குளம் வடக்கு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கருப்பையன் ஆகியோர் செயல்பட்டனர்.முடிவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

நீதிக்கதை

நான் கத்தவே இல்லை !


கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனம் எது?

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் புதிய விமானிகளை, குறிப்பாக பெண் விமானிகளை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த சில வருடங்களாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 350 மில்லியன் அதிகரித்துள்ளது.
எந்த விமான சேவை நிறுவனத்தில் அதிக பெண் விமானிகள் பணிபுரிகிறார்கள்?


உலகம் முழுவதுமுள்ள வர்த்தக விமானங்களின் விமானிகளில் வெறும் 5.18 சதவீதத்தினரே பெண்களாக உள்ளனர்.
உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்களாவர்.
• 
குறிப்பாக பார்த்தோமானால், இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஜூம் ஏர் உலகில் அதிக பெண் விமானிகளை கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. அதாவது, அந்நிறுவனத்திலுள்ள 30 விமானிகளில் ஒன்பது பேர் பெண் விமானிகள் என்று சர்வதேச பெண் விமானிகள் அமைப்பு கூறுகிறது.
எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாற்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக சர்வதேச பெண் விமானிகள் அமைப்பின் தலைவர் கேத்தி மெக்கல்லோ கூறுகிறார்.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் வர்த்தகரீதியான விமான பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயருமென்று போயிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விமானிகளின் சராசரி ஊதியம் என்ன?
பொதுவாக விமானிகள் ஒவ்வொரு நாளும் குறுகிய அல்லது நீண்டதூர இடங்களுக்கு பயணிகள் விமானத்தையோ அல்லது சரக்கு விமானங்களையோ இயக்குகிறார்கள்.
வர்த்தக விமானிகளின் ஊதியமானது அவர்கள் பணிபுரியும் விமான நிறுவனம், அவர்கள் இயக்கும் விமானத்தின் வகை மற்றும் அவர்களது அனுபவத்தை பொறுத்து அமையும்.
சராசரியாக 20,000 முதல் 30,000 பவுண்டுகள் வரையில் அவர்களது வருமானம் இருக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள அட்டவணையில் பிரிட்டனில் விமானிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த அனுபவம் கொண்ட விமானிகளுக்கு 1,40,000 பவுண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படுகிறது.
விமானிகளின் ஊதியத்தில் பாலின பாகுபாடு உள்ளதா?
பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக 250 பணியாளர்களுக்கு மேல் கொண்ட விமான நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆண்-பெண்களுக்கு இடையே ஊதியத்தில் நிலவும் பாலின பாகுபாடு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.

71.8 சதவீதத்துடன் ரியான்ஆர் நிறுவனம் அதிகளவிலான பாலின ஊதிய இடைவெளியை கொண்டுள்ளது. ஈசிஜெட் நிறுவனத்தில் 45.5 சதவீதம் பாலின இடைவெளி நிலவும் நிலையில், குறிப்பிட்ட சில பணிகளில் ஆண்கள்-பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.
மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் தங்களது விமான நிறுவனத்தில் 20 சதவீத பெண் விமானிகளை கொள்வதை இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

ஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

11/11/18

சுட்டி விகடன் மூலம் போட்டித்தேர்வினை நடத்துதல் -சார்பு

FLASH NEWS : NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா?

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் NMMS EXAM எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் தேர்வு நடைபெறுகிறது.



சமீபத்தில் 2017-18 ல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை பள்ளி அளவில் பதிவேற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது ஆனால் 31க்குள் இணையதளம் சரிவர இயங்காததாலும்,  பல்வேறு மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றினாலும் அதில் submit என்ற ஆப்ஷன் வராததாலும் அவர்களுடைய விண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கி நிற்கிறது. சில விண்ணப்பங்களில் கல்வித் தொகை பெறுவதற்கான scheme option open ஆகவில்லை.மேற்கண்ட காரணங்களால் மாணவர்களுடைய விண்ணப்பமானது மாவட்ட அளவில் FORWARD செய்யமுடியாமல் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆனது பூர்த்தி செய்ய முடியாமல் கல்வி உதவித்தொகை பெறுவது சிக்கலாகி உள்ளது.
 பள்ளி அளவில் மாணவர்களின் தகவல் உள்ளீடு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31 முடிந்துவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது எவ்வாறு என்று  திணறி வருகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி தகவல்களை பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் எடுத்துக்கூறியும் எந்த ஒரு தெளிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் ஃபார்வர்டு செய்வதற்கு இந்த மாதம் 15ம் தேதி இறுதி நாள் என்பதால் அவர்களுடைய ஊக்கத்தொகை கிடைக்குமா??? இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா???

மேற்கண்ட பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் தீர்த்து மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் அளவில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்த சங்கத்தினர் மீண்டும் இணைந்தனர்: 15ம் தேதி முறையான அறிவிப்பு :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனித் தனியாக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் நீடித்ததால்,  கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் என 22க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றாக இணைந்து மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை புதுப்பித்தனர். அதன் மூலம் அனைத்து சங்கங்களும்  ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்து களத்தில்  இறங்கினர்.  நகர, ஒன்றிய, வட்ட, மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் போராட்ட களத்தை மாற்றி அமைத்தனர். அதன் ஒரு அம்சம்தான், தொடர் வேலை நிறுத்தப்  போராட்டம். கடந்த ஆண்டில் தீவிரம் அடைந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு கலக்கம் அடைந்தது.

வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்த அரசு, தனது வியூகத்தை வேறு திசையில் திருப்பியது. ஒன்று பேச்சுவார்த்தை, மற்றொன்று தனியார் மூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு  தொடுத்தது. ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அத்துடன் ஜாக்டோ-ஜியோவிலும் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவில் உறுதியாக நின்றவர்கள் ஒன்று திரண்டு தொடர் வேலை நிறுத்தப்  போராட்டத்தை நடத்தினர். அதன் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஜாக்டோ-ஜியோ பிளவு காரணமாக போராட்டம் கலகலத்துவிடும் என்று எதிர்பார்த்த அரசுக்கு இந்த ஆண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்மட்டக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்,  நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
பிரிந்து சென்று சங்கங்கள் தனியாகவும், ஜாக்டோ-ஜியோ தனியாகவும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயிற்சி  எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் புதிய சம்பள உயர்வை அரசு அறிவித்தது. அதில் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதால் சங்கங்கள் திகைத்து நின்றன.  இந்நிலையில்தான் மீண்டும் அனைத்து சங்கத்தினரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற கருத்து உருவானது. இதையடுத்து, ஒன்றாக இணைவது குறித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 9ம் தேதி  பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை வேப்பேரியில் ஜாக்டோ-ஜியோ மற்றும் பிரிந்து சென்ற சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் சுப்ரமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ரெங்கராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சேகர், தமிழக ஆசிரியர்  கூட்டணியின் சார்பில் வின்சென்ட், அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மகேந்திரன், தொழில் கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேரு ஆகியோர் மற்றும்  ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று காலை நடந்த பேச்சுவார்த்தையில், பிரிந்து சென்ற மேற்கண்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ-ஜியோவில் இணைந்ததாக  அறிவித்தனர்.
ஒன்றாக இணைந்தது மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து 15ம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்தனர். தற்போது இணைந்தவர்களும் ஜாக்டோ-ஜியோவில் ஒருங்கிணைப்பாளர்களாக  சேர்க்கப்பட்டனர். அதன்படி தற்போது 20 ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதுதவிர இன்னும் ஒரு சில சங்கங்களை சேர்ப்பது குறித்து 15ம் தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என  ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

தகவல் அறியும் சட்டத்தில் 10, பிளஸ்2 விடைத்தாள் நகல் பெற பக்கத்துக்கு 2 கட்டணம் :

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடக்கிறது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.  தேர்வு முடிவுகளின்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவியர் பட்டியல் வெளியிடப்படும்.  தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட தேதிகளில் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். அதற்கென தனியாக கட்டணம்  செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் கூடுதலாக இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க தனியாக கட்டணம்  வசூலிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.  இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் விடைத்தாள் நகல் பெறுவதற்காக சிபிஎஸ்இ வைத்துள்ள  நடைமுறைகள் தனியாக உள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க விரும்புவோர் பக்கத்துக்கு ₹2, விண்ணப்ப கட்டணம் ₹10 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி,  இரண்டு நடைமுறைகளுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதி மன்றம் தெரிவித்துள்ளது

Lok sabha Election 2019 - Personal Polling Application Form:

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி எப்போது?

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அடுத்தகட்டமாக அரசின் நடவடிக்கை இல்லாததால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

அதுபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங் களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப் பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டு வரை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டதால், பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என, எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.


இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கை களை விரைவு படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,''என்றார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் !

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கானதேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing highergreade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லைஎன்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.
எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்ததேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோருவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்தமுறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.

10/11/18

அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்

சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை. 

இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு

சென்னை:'ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 
எனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

அசல் சான்றிதழை வாங்கி வைக்க கல்லுாரி, பல்கலைகளுக்கு தடை

மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலை களில் இருந்து, வேறு கல்லுாரிக்கு மாறும் மாணவர்களுக்கு, உரிய அசல் சான்றிதழ்களை தருவதில்லை என்றும், முழுமையாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்குவதில்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தரப்பில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின் கூறியிருப்பதாவது:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாறும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு சேர வேண்டிய கட்டணத்தை, உடனடியாக வழங்க வேண்டும். கட்டணத்தை தராமல் இழுத்தடிக்க கூடாது.
அதேபோல, மாணவர் சேர்க்கையின் போது, சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்து, மீண்டும் அவர்களிடம் வழங்கி விட வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், மாணவர் களின் சுய கையொப்பம் மற்றும் உறுதி கடிதம், பெற்று கொள்ள வேண்டும். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள், பள்ளி படிப்புக்கான சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது, அங்கீகாரம் ரத்து உட்பட, பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஆராய்ச்சிகளுக்கு புதிய கண்டுபிடிப்பு கவுன்சில்

சென்னை:'கல்லுாரிகளின் ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சில் உருவாக்கப்படும்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. இதில், பதிவு செய்யும்படி, கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் பணிகளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., கலைக்கப்பட்டு, புதிதாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்துள்ளது.அதேபோல, உள்கட்டமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும், கல்வி நிறுவனங்களுக்கு, சர்வதேச அடிப்படையிலான, உயர்தர உயர்கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
இதை தொடர்ந்து, ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சிலான, 'இண்டியன் இன்னோவேஷன்ஸ் கவுன்சில்' என்ற, ஐ.ஐ.சி., அமைப்பு நிறுவப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கவுன்சிலில் இணைந்து, ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்த, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நவ., 20க்குள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில், விபரங்களை பதிவேற்ற வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

TRB - சிறப்பாசிரியர் இறுதிப் பட்டியல் குளறுபடி - விளக்கம் அளிக்க கோரிக்கை!

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்



வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்எஸ்ஐ எனப்படும் தளப் பரப்பளவு குறியீடு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று (நவம்பர் 7) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் வீடு மற்றும் அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு, தளப் பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சிறப்புக் கட்டடங்கள் எனப்படும் நான்கு மாடிகளுக்கு மிகாத கட்டடங்களுக்கு, தளப் பரப்பளவு 1.5 மடங்காக இருந்தது. இதனால், 1,000 சதுர அடி நிலத்தில் 1,500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் மட்டுமே கட்டடத்தைக் கட்ட முடியும்.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், அனைவருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீடானது 1.5இல் இருந்து 2 ஆக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்த அரசாணை, நேற்று தமிழக அரசினால் வெளியிடப்பட்டது. “1,000 சதுரடி நிலம் வைத்திருப்பவர்கள் 1,500 சதுர அடிக்குக் கட்டடம் கட்டிக்கொள்ளலாம் என்ற அனுமதியானது, தற்போது 2,000 சதுர அடி வரை மாற்றப்பட்டுள்ளது” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு சலுகை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் கடந்த 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவினை 24.01.2019 தேதிக்குள் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாகவோ, அல்லது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவட்டையின் நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். 

மேலும், 25.01.2019-க்குப் பிறகு புதுப்பித்தல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசு அறிவித்துள்ள இச்சலுகையினைப் பெற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்

கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார் - 2 BEO - கள் , 'சஸ்பெண்ட்'

ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்று தராமல், காலதாமதம் செய்ததால், இரு வட்டார கல்வி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரு வட்டார கல்வி அலுவலகங்கள், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் செயல்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் மற்றும் அவர்கள் கடன் வேண்டி மனு அளித்திருந்தனர். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காதால், பணப்பலன்களை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர்.

இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அனைத்து ஆசிரியர்கள் சார்பில், கல்வி அலுவலரை கண்டித்து கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கடந்த மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தங்கவேல், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர், கபீர் ஆகியோர், ஆசிரியர்களிடம், 'சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பலன் உட்பட அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படும்' என, உறுதியளித்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி பெற்று தராமல் தாமதம் செய்ததாக, கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் சேகர், குமுதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல் கூறியதாவது:

கிருஷ்ணராயபுரம் தாலுகா வட்டார கல்வி அலுவலர் சேகர் மற்றும் குமுதா ஆகியோர், ஆசிரியர் களுக்கு பெற்று தர வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி செய்து தராமல், ஓராண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, இரு அலுவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்

ஷாலாசித்தி' திட்டத்தில் பள்ளிகள் 'சென்டம்

மத்திய அரசின், 'ஷாலாசித்தி' இணையதளத்தில்,
அனைத்து பள்ளிகளும், தகவல்களை பதிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்



மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுக்க, பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த, 'ஷாலாஷித்தி' திட்டம், கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது


*தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் (நியூபா) சார்பில், திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் (www.shaalasiddhi.nuebha.org) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்யும் பட்சத்தில், நிதியுதவி அளிக்கப்படுகிறது

*பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தேவையான அனைத்து வகை பயிற்சிகளும், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர, அக்.,31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது


*கோவையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இந்த இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றியுள்ளன


*பள்ளியின் பெயர், மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு பணிகள், கால அவகாசம் குறித்து, தெளிவாக குறிப்பிட்டு நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகள் இத்திட்டத்தில் பயனடைவதாக, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் கண்ணன் தெரிவித்தார்

சென்னையில் ஜாக்டோ-ஜியோ இணைப்பு குறித்து இருபிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது !!

16.11.2018 வெள்ளிக்கிழமை பள்ளிகள்,கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளூர் விடுமுறை-நாகை மாவட்டம்

கூகுள் டியோ செயலி' உபயோகப்படுத்தினால் ரூ.9 ஆயிரம் வரை ரொக்க பரிசு: கூகுள் அறிவிப்பு :

கூகுள் டியோ செயலி (Google Duo) உபயோகப்படுத்தினால் ரூ.9 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது. கூகுள் டியோவை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது கூகுள் நிறுவனம் தனது புதிய வீடியோ அரட்டை செயலியை (Video Chat App) கடந்த ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயலியை பதிவு செய்யும் போது, பயன்பாட்டில் இருக்கும் சிம் மற்றும் தொலைப்பேசி எண்ணை சரிபார்த்து உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறும் வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் "நாக் நாக்". இது அண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது, அழைப்பை எடுக்கும் முன்னே மோபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி வீடியோ காண்பிக்கப்படுகிறது.
இந்த செயலி வேகமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோ செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் ரோக்கப்பரிசு அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது,.
அதில், இந்தியாவில் அதன் வீடியோ அழைப்புப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் நபர்களுக்கு கூகுள் பே பேமென்ட் மூலம் மொத்தமாக 9,000 ரூபாய் வரை வருடத்திற்கு சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளது. இநத செயலி மூலம் புதிய பயனாளர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இது உங்களுக்கும், தொடர்பை ஏற்படுத்துபவர்களும் பணப் பரிசு கிடைக்கும் என்று கூறி உள்ளத
...

சிறப்பாசியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை - செங்கோட்டையன்

சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் ஏதும் இருந்தால், அவற்றை விசாரித்து தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும், இதே காலஅவகாசத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்- குட்டி போலீஸ் உங்களைக் கண்காணிக்கிறது

இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது' அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர்.
அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் இந்த முறை மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீட்டு அட்டை ஒன்றை மாணவர்களுக்கு அளிப்பர். அதில், மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் செல்லும் பயணங்கள் குறித்து மாதத்துக்கு 12 முறை மதிப்பிட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் தங்களின் பெற்றோர் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுகிறார்களா, வண்டி ஓட்டும்போது போன் பேசாமல் இருக்கிறார்களா, ஹெல்மெட் / சீட் பெல்ட் அணிகிறார்களா, சரியான முறையில் ஓவர்டேக் எடுக்கின்றனரா, ஹாரன் அடிக்கிறார்களா மற்றும் பிற விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்று மாணவர்கள் கண்காணிக்க வேண்டும். பின்னர் அதை அட்டையில் மதிப்பிட்டு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் சாலை விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை ஆசிரியர்களே கண்காணித்து மதிப்பிட உதவுகின்றனர். அதே நேரம் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீட்டு அட்டையை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 200 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 'குட்டி போலீஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒருவழிச் சாலையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த மாணவர்களே ட்ராபிக் போலீஸ் போல சீருடை அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ''எங்க டீச்சர்களும் ரூல்ஸ ஃபாலோ பண்றாங்களான்னு செக் பண்ணுவோம்a

ஓபிசி மாணவர்களுக்கு வங்கி தேர்வு இலவச பயிற்சி :

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணி யாளர் நலச் சங்க தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கம், எம்பவர் அறக் கட்டளை மற்றும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 23 முதல் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும். இதில் பங் கேற்க விரும்பும் ஓபிசி மாணவர் கள் வங்கி தேர்வு வாரியத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண் ணப்பத்தின் நகலை empower.socialjustice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது periyariasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


பயிற்சி வகுப்புக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பதிவு கட்டண மாக ரூ.100 மட்டும் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விவரங் களுக்கு 9381007998, 9092881663 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

EMIS Flash News : நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.

EMIS Flash news-
இவ்வாண்டு முதல் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாமினல் ரோல் தயாரிக்கும் பொழுது அது சார்ந்த தகவல்கள் திரட்டப்படுவது அரசின் EMIS வலைதளம் மூலமே நடந்தன. 

எனவே 10,11,12 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் EDIT வசதி நிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால் +1 மாணவர்களின் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் EMIS ல் EDIT வசதி செய்யப்படவேண்டும் என பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.  
               இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் +1 மாணவர்களின் பதிவில் திருத்தங்கள் செய்து மாணவரின் தகவல்களை நிகழ்நிலைக்கு கொண்டு வரகேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்aaa

12/10/18

6TH STD SOCIAL SCIENCE UNIT-WISE QUESTION PAPERS (EM) TERM-2 (NEW)



6th Social Science Unit 1 (His-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 2 (His-2) test EM (Term -2).pdf

6th Social Science Unit 3 (His-3) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Geo-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Civ-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 2 (Civ-2) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Eco-1) test EM (Term -2)pdf.


6TH STD SOCIAL SCIENCE UNIT-WISE QUESTION PAPERS (EM) TERM-2 (NEW)

6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 5


ஆசிரியர் பணி தகுதி தேர்வு : கவுன்சிலுக்கு அதிகாரம்

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில், மாநில கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும், பி.எட்., மட்டும் படித்தால் போதாது; டெட் தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு செல்லும்.இந்த ஆண்டு, அக்டோபரில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றம், அரசு பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த முறைகேடு புகார்கள் போன்றவற்றால், தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், அரசு பணிக்கு ஆள் எடுக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் சேர்வோருக்காக, டெட் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களுக்குள், டெட் தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வுக்கு, பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.பாடத்திட்டம் மாற்ற வேண்டும் என்றால், பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை புத்தகமாக தயாரிக்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், அறிவொளியிடம், டி.ஆர்.பி., சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரது கருத்து கிடைத்த பின், அடுத்த நடவடிக்கை துவங்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : அரசு உத்தரவு

மத்திய அரசு துறைகளின் கீழ் பணிபுரியும் உயரதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இல்லாமல் வரும் மனுக்கள் மற்றும் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவு குறித்து மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம், அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அல்லது வேறு முக்கிய துறைகளில் நியமனம் செய்ய ஆலோசனை நடக்கும் போது, பெயர் குறிப்பிடாத நபர்களின் புகார்கள் அல்லது முழுமை பெறாத குற்றச்சாட்டுகளுடன் கடிதங்கள் அதிகளவு வருவது வழக்கம்.


உண்மை தன்மை குறித்து ஆராயும் அளவிற்கு கூட பல சமயங்களில் புகார்கள் இருப்பதில்லை. எனவே புகார் அளிப்பவரின் விவரங்கள் இல்லாமல் மொட்டை கடிதம் வமீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அதனை பதிவு செய்தால் போதும் என மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறினர். இதே உத்தரவை, சிவிசி எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையமும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது

750 PP - ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தில் எந்த ஆணை சரியானது? - முதல்வர் தனிப்பிரிவில் மனு!

மாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி கல்வித்துறையில் அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு மகளிர் பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு வந்துசெல்வதை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப் பேட்டை பி.என்.தவான் ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற் றது. இதில், பள்ளிக்கல்வி அமைச் சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 257 பள்ளிகளின் நிர்வாகி களுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார். அவர் நிகழ்ச்சிநடைபெற்ற மேடையை விட்டு இறங்கி நிர்வாகிகள்அமர்ந் திருந்த இடத்துக்கே சென்று ஆணையை வழங்கியதை அனை வரும் பாராட்டினர்.அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘அங்கீகாரம் இல் லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் நலனை கருத்தில்கொண்டு கட்டிட வரன்முறை பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் அளித்து வருகிறோம்.

இதுவரையில் 1,183 பள்ளிகளுக்கும், தற்போது 257 பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் 412 பள்ளிகளுக் கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார்.நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மெட்ரிக்குலேஷன் பள்ளி கள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குநர் உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் எஸ்.திருவளர்செல்வி (சென்னை), ஆஞ்சலோ (காஞ்சிபு ரம்), தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச் சர் செங்கோட்டையன் நிருபர்களி டம் கூறியதாவது: மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்கள் பள்ளிக்கு வந்து செல் வதை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் திட்டத்தை அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் செயல் படுத்த உள்ளோம்.

‘ஆர்எப்ஐடி’ தொழில்நுட்பம் :

தற்போது சோதனை அடிப் படையில் சென்னை போரூர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதி மூலம் தங்கள் குழந்தைகள் எப்போது பள்ளி சென்றனர். எப்போது அங்கிருந்து புறப்பட்டனர் என்பதை பெற்றோர் செல்போன் எஸ்எம்எஸ் தகவல் உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இதில் ‘ஆர்எப்ஐடி’ என்ற தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம் முழுவ தும் சுமார் ஆயிரம் அரசு மகளிர் பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறைக்கு கற்பித்தல் துணைக்கருவியுடன் செல்ல வேண்டும் - CEO Proc (10.10.2018)

அரசு ஊழியர்கள் ஓய்வூதியமா...?? எங்களுக்கு தெரியாது... கைவிரித்த ஆணையம்...!!

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகம் படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்புகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என்னென்ன?

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


மோமோ சேலஞ்ச்' விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை:

இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இணையதள, 'புளூவேல்' விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.'மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது. 'இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அடிப்படை வசதி இல்லாத பள்ளிக்கு, 'சீல்' :

திருவண்ணாமலை அருகே, மாவட்ட நீதிபதி உத்தரவுப்படி,
அடிப்படை வசதி இல்லாத பள்ளிக்கு, 'சீல்' வைக்கப்பட்டது
*திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில், காந்தி இண்டர்நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில், மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை என, மாவட்ட நீதிபதிக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி, கடந்த, 6ல், பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார
*அப்போது, அடுக்குமாடி கட்டடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. வகுப்பறையில் கதவுகள், ஜன்னல்கள் பொருத்தப்படவில்லை
*மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், அடிப்படை வசதியின்றி முட்புதர் மண்டி இருந்தது. பள்ளி வளாகத்தில் மூடப்படாத நிலையில், கிணறு இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.இவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தலாக இருந்தது
*அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட, அதிக சேர்க்கை இருந்ததும் தெரியவந்தது
*இதையடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், நேற்று பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பள்ளிகளில் உறுதிமொழி: ஆட்சியர் உத்தரவு :

குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு
எதிராக வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தின் முதல் நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்
*நாட்டில் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21ஆகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்களை குழந்தைத் திருமணமாகும்


*தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்ததை அடுத்து, அதைத் தடுக்க 2006-ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது


*இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்


*எனினும், இதுவரை குழந்தைத் திருமணங்கள் முழுமையாக தடுக்க முடியாமல் உள்ளது.வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 63 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


*இதன்படி, இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

*இதன்தொடர்ச்சியாக, குழந்தைத் திருமணங்கள், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் வாரத்தின் முதல்நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்


*இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது


*வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடையே குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகிறது


*குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் பொது நிகழ்ச்சியாகவே கருதப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது


*எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் வாரந்தோறும் முதல் வேளை நாளின் காலை கூட்டத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், உறுதிமொழி ஏற்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றம் :

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில்
413 வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன


*இங்கு மாதம் ரூ.7,700 சம்பளத்தில் 11,191 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்



*இந்த வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஓவிய ஆசிரியர் மற்றும் தையல், இசை,கணிதம், கட்டடக்கலை, ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஒரு ஆசிரியர் வீதம் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 6,7,8 வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்புகளில் மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கலாம், என கூறப்பட்டுள்ளது


*இந்த சட்டத்தை பின்பற்றி தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


*இதையடுத்து, வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அடுத்த வாரம் முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது

ஆசிரியர் பணி தகுதி தேர்வு : கவுன்சிலுக்கு அதிகாரம்:

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில், மாநில கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும், பி.எட்., மட்டும் படித்தால் போதாது; டெட் தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு செல்லும்.இந்த ஆண்டு, அக்டோபரில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றம், அரசு பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த முறைகேடு புகார்கள் போன்றவற்றால், தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், அரசு பணிக்கு ஆள் எடுக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் சேர்வோருக்காக, டெட் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களுக்குள், டெட் தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வுக்கு, பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.பாடத்திட்டம் மாற்ற வேண்டும் என்றால், பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை புத்தகமாக தயாரிக்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், அறிவொளியிடம், டி.ஆர்.பி., சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரது கருத்து கிடைத்த பின், அடுத்த நடவடிக்கை துவங்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன

நீதிக்கதை


கரும்பு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.
அவர்கள் அடிக்கடி, ""அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.
ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, ""நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார்.
உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, ""சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்,'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார்.
அமைச்சரோ ""அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்,'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார்.
அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, ""கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்,'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.
""அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார்.
தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, ""நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்,'' என்று புகழ்ந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

750 PP - ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தில் எந்த ஆணை சரியானது? - முதல்வர் தனிப்பிரிவில் மனு!

மாணவிகளுக்கு கழிவறை கட்டும் பணிக்காக ஆசிரியர் ரூ.50,000 நிதி உதவி!

மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பட்டம் - புதுவித முயற்சியில் கலக்கும் அரசு பள்ளி!



கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் மலர்கள், கனிகள், காய்கறிகள், மரங்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களை சூட்டும் விழா நடைபெற்றது. அதேபோல,ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு வைத்து ஒரு ஐ.ஏ.எஸ்,ஒரு ஐ,பி.எஸ் மாணவர்களையும் தேர்ந்தெடுத்து அசத்தி இருக்கிறார்கள்.


அரசு பள்ளி

 கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் இத்தகைய வியப்பூட்டும் முயற்சியை செய்திருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய கிராமமான இந்த தொட்டியப்பட்டியில் உள்ள இந்த பள்ளி மாணவர்கள் நல்ல அடிப்படை கல்வியை பெற வேண்டும் என்ற உந்துதலில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஸ்பான்ஸர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான கட்டடங்கள்,கணினிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார். அதோடு, பாடங்களை கணினி மற்றும் இணையம் வாயிலாக காட்சிகள் மூலம் நடத்தி மாணவர்களிடம், கல்வி குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில்தான்,வட்டார கல்வி அலுவலரை அழைத்து வந்து, இப்படி மாணவர்களுக்கு பெயர்சூட்டும் விழாவை விமர்சையாக நடத்தினார். அதோடு,15,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற சீருடைகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.


பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம். "இது மாவடத்தின் கடைகோடி பகுதியில் உள்ள ஊர். இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டில் இருந்தது. நான் இங்கு பணிக்கு வந்ததும், பல்வேறு முயற்சிகள், வளர்ச்சிகளை ஏற்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். மாணவர்கள் மத்தியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வேலை பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலேயே ஏற்படுத்த தான் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வருட ஆரம்பத்திலேயே பொது அறிவு சம்மந்தமான கேள்விகளை உள்ளடக்கிய தேர்வை வைக்கிறோம். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்கள் வரும் மாணவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்களாக்கி அவர்களுக்கு அப்படி அடையாள அட்டை தருவோம்.

தினமும் அந்த அடையாள அட்டைகளைதான் அந்த மாணவர்கள் அணிந்து வர வேண்டும். கிளாஸை ஒழுங்குபடுத்துவதில் இருந்து பள்ளி வளர்ச்சி விசயத்தில் உரையாடுவது வரை அந்த மாணவர்கள் பங்கெடுப்பார்கள். அதேபோல், மாணவர்களுக்கு மரம், கனி, மலர்களின் பெயர்கள் நினைவில் நிற்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். அப்பதான் மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி அந்த பெயர்களை சேர்க்கலாம்ன்னு முடிவு பண்ணி இந்த விழாவை நடத்தினோம். முதலாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி மலர்களின் பெயர்களை சூட்டினோம்.

இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி கனிகளின் பெயர்களையும், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி காய்கறிகளின் பெயர்களையும் சேர்த்து சூட்டினோம். அதேபோல், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி முறையே மரங்களின் பெயர்களையும், அறிவியல் அறிஞர்களின் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தோம். இந்த முயற்சிகளை பார்த்துட்டு, கல்வித்துறை அதிகாரிகள், 'நல்ல முயற்சி. புதுமையான முயற்சியும்கூட. இத்தகைய முயற்சிகள் மாணவர்களிடம் நல்ல மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்'ன்னு வாழ்த்தினார்கள். அதோடு,இந்த கல்வியாண்டில் இதுவரை விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த இரண்டு மாணவர்களை பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கினோம். எல்லா ஆசிரியர்களும் சேர்ந்துதான் இந்த முயற்சிகளை எடுக்கிறோம்" என்றார்

UGC NET EXAM 2018 - விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி - கடைசி தேதி : அக்டோபர் 14 :

யூஜிசி நெட் தேர்வு எனும் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி அளித்துள்ளது. திருத்தம் செய்பவர்கள் http://www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 14ம் தேதி இரவு 11.50 வரை திருத்தம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

அரசாணை எண் 200 பள்ளிக்கல்வித்துறை நாள்:26.09.2018- தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு



சித்தா மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 2018 - வெளியீடு...!

சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 20 முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளதுசித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இந்த படிப்பில் சேர, 3,670 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளிஇடப்பட்டுள்ளதுஇதில், 3,471 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும், 20 முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவதுஆயுஷ் அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள், இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படவில்லை. அந்த பட்டியல், ஓரிரு நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, வரும், 20 முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

Amazon Festival Special Offer - ரூ.50,000 தள்ளுபடியுடன் 5 ஸ்மார்ட் டிவிகள் விற்பனை...!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன் கோலாகல விற்பனை இன்று முதலே துவங்கிவிட்டது, ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தத் துவக்க விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரிமே வாடிக்கையாளர்களுக்கு மட்டும், ஒரு நாள் முன்னரே அமேசான் நிறுவனம் தனது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனைக்கு முன்அனுமதி வழங்கியுள்ளது. பலராதரப்பட்ட தயாரிப்புகளுக்கு ஏராளமான சலுகைகளுடன் ஒரு நாள் முன்னரே அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


ரூ.50,000 வரை சலுகை

புதிதாக டிவி அல்லது ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கட்டாயம் இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனை சலுகை பட்டியலைப் பார்க்க தவறிவிடாதீர்கள்.இந்த பெஸ்டிவல் சேல்ஸ் திட்டத்தில் அமேசான் நிறுவனம் ரூ.50,000 வரை சலுகை வழங்குவதுடன் ரூ.22,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்குகிறது.

பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவி TH-49FX600Dஅமேசான் நிறுவனம் பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி TH-49FX600D டிவிகளுக்கு ரூ.46,010 வரை சலுகை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் சந்தை விலை ரூ.99,000 ஆகும், தற்பொழுது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்சேல் விற்பனையின் சலுகை விலையாக 52,990 என்று விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ.18,900 வழங்கப்படுகிறது.

பானாசோனிக் 55' இன்ச் எல்.இ.டி டிவி TH-55FX650Dபானாசோனிக் இன் இந்த மாடல் டிவி 32% சலுகையாக ரூ.41,910 விலை குறைக்கப்பட்டு ரூ.87,990 விற்கப்பட்டும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் ரூ.18,900 எக்ஸ்சேஞ் சலுகையும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. 6 மணிக்கு மேல் ரூ.69,900க்கு விற்பனை செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டிடிவிசோனி நிறுவனத்தின் அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் டிவி ரூ.14,910 சலுகை வழங்கப்பட்டு இந்த பெஸ்டிவல் சேல்ஸ் கொண்டாட்டத்தில் வெறும் ரூ.69,990 என்ற விற்பனை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.84,900 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவிசாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவியின் அசல் விலை ரூ.33,900 இல் இருந்து ரூ.9000 சலுகை வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் கூடுதல் ரூ.9000 எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது.

சாம்சங் 55' இன்ச் Q சீரிஸ் 55Q7FN 4K எல்.இ.டி ஸ்மார்ட் டிவிசாம்சங் நிறுவனத்தின் 55' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியா சந்தையில் ரூ.2,57,900 க்கு விற்கப்பட்ட இந்த மாடல் ஸ்மார்ட் டிவி தற்பொழுது ரூ.78,910 சலுகை வழங்கப்பட்டு வெறும் ரூ.1,78,990 க்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது