யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

லெமன் ஜூஸ்----உடல்நலம் மருத்துவம்


உங்க நாக்குல வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?



நாக்கில் வெள்ளைப்படலம் தென்படுவது பாக்டீரியா பெருக்கத்தால் ஏற்படுகிறது. இதை சில இயற்கை முறைகளை கொண்டு நாம் போக்கலாம். நாக்கு நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பும் கூட. இது தான் உணவின் சுவையை உணர்வதற்கு நமக்கு உதவுகிறது. எனவே அதை சுத்தமாக வைப்பது என்பது நமது கடமை. இந்த பாக்டீரியாக்கள் பெருகி அந்த இடத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த வெள்ளைப்படலம் தோன்றுகிறது.



இதை அப்படியே விட்டு விட்டால் நாக்கு முழுவதும் படர்ந்து பின்னாளில் பற்சொத்தை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிடும். எனவே இதை இயற்கை முறைகளைக் கொண்டு போக்கி பயன் பெறலாம்.

   

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ் உணவுகள் நாக்கில் இருக்கும் இந்த கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. இது அழற்சியை போக்கி வெள்ளைபடலத்தை உருவாக்கும் மைக்ரோபஸ்யை அழிக்கிறது.


உணவுகள்

புரோபயோடிக் உணவான யோகார்ட் (தயிர்) போன்றவற்றை தினமு‌ம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோபயோடிக் மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

   

கிளிசரின்

உங்கள் நாக்கு இந்த வெள்ளை படலத்தால் அதிகமாக பாதிகுகப்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிசரின் அப்ளே செய்து கொள்ளுங்கள்.
ஒரு சினன டூத் பேஸ்ட்டை கொண்டு கிளிசரினை அப்ளே செய்யுங்கள்.
2 நிமிடங்கள் பல் துலக்கவும், பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு நாக்கை சுத்தம் செய்யுங்கள்.

   

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் பெருகி உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லும். எனவே உங்கள் நாக்கை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1 டீ தேங்காய் எண்ணெய் (5 கிராம்)
ஒரு சின்ன பிரஷ்
பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் உங்கள் வாயை தேங்காய் எண்ணெய் கொண்டு கொப்பளியுங்கள்.
நாக்கையும், பற்களையும் சுத்தம் செய்ய 3-4 நிமிடங்கள் பிரஷ் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி பற்பசையை கொண்டு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.

   

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை எதிர்ப்பு பொருள் உள்ளது. இது நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸைக் கொண்டு வாயை சுத்தப் படுத்தி கொள்ளுங்கள்.
பிறகு எப்பொழுதும் போல் பற்பசையை கொண்டு பல் துலக்கி கொள்ளுங்கள்.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்க உதவுகிறது. இது நாக்கின் pH அளவை நடுநிலையாக்குகிறது.
இதனால் பாக்டீரியா மேற்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.
இதனுடன் லெமன் ஜூஸ் உங்கள் நாக்கில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
தேவையான பொருட்கள்
1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா (5 கிராம்)

   

லெமன் ஜூஸ்--

பயன்படுத்தும் முறை
பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி டூத் பேஸ்ட் கொண்டு எப்பொழுதும் போல் பிரஷ் செய்யுங்கள்.


கடல் உப்பு

கடல் உப்பும் இதற்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது. கடல் உப்பு நாக்கில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
கடல் உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் பொருள் பாக்டீரியாவை கொல்லுகிறது.
சிறுதளவு கடல் உப்பை எடுத்து உங்கள் நாக்கில் தடவிக் கொள்ளுங்கள். 3 நிமிடங்கள் நாக்கை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
இதனுடன் சிறுதளவு லெமன் ஜூஸ் கூட சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு ப்ரஷ் பண்ண எளிதாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3 நிமிடங்கள் ப்ரஷ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.


டிப்ஸ்கள்

ஒரு நாளைக்கு 3 முறை ப்ரஷ் செய்யும் வழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இருந்தாலும் அதிகமாக நீண்ட நேரம் ப்ரஷ் செய்வது அல்லது மதிய வேளைகளில் ப்ரஷ் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு இயற்கை முறையைக் கொண்டு பலன் பெறுங்கள்.

அதிகமான தண்ணீர் குடியுங்கள். இது நாக்கில் உள்ள ஈரப்பதத்தை காத்து பாக்டீரியா பெருக்கத்தை குறைக்கும்.

காய்கறி மருத்துவ சிந்தனை---உடல்நலம் மருத்துவம்,


 காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!

தலைப்பு  :  தோலில் உண்டாகும்  மஞ்சள் நிறம்  , அரிப்பு  மற்றும் ஆசனவாயில் உண்டாகும் அரிப்பு நீங்க
---------------------------------------
 சத்துக்கள்
 --------------------
நார்ச் சத்து , புரதச் சத்து  , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு
-----------------------------------
முற்றின  முருங்கைகாயில் உள்ள முற்றின விதை(15) அல்லது முருங்க விதை பவுடர் (3ஸ்பூன்) , கோவக்காய் (15) , புதினா (சிறிதளவு) ,மஞ்சள் தூள் (சிறிதளவு) இவை அனைத்தையும்  சேர்த்து  மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி   வடிகட்டி வைத்துக்கொண்டு நாள்
முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவரவும்.

ஒரு வேளை உணவில் தினமும் முருங்கக்காய் அல்லது முருங்கைக் கீரையை நீராவியில் வேகவைத்து பொறியலாக உணவில் அதிகம் சேர்த்து  சாப்பிட்டு வரவும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து  காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

காய்கறி மருத்துவ சிந்தனை---உடல்நலம் மருத்துவம்,


இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!

தலைப்பு  :  தோலில் உண்டாகக்கூடிய சிவந்த மற்றும்  வீக்கத்துடன் உண்டாகும் தடிப்பு தன்மை  நீங்க
---------------------------------------

  சத்துக்கள்
 --------------------
சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை , புரதம் வைட்டமின் (ஏ,  பி6  , சி ,  , கே )

தீர்வு
-----------------------------------
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு(100 கிராம்) அதனுடன்  முருங்கை விதை (10)  , கோவக்காய் (10), புதினா (சிறிதளவு )இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இளம் பிஞ்சு வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து  பொறியல் செய்து அதனுடன் புதினா தழையை  பொடியாக நறுக்கி  பொறியலுடன் கலந்து  மதிய வேளை உணவில்  அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

இயற்கை வாழ்வியல்முறை----உடல்நலம் மருத்துவம்,


இயற்கை வாழ்வியல்முறை
ஆண்மை பலமே
குடும்ப நலம்
 அருள்அருள் ஹெர்பல்ஸ்  💙 தயாரிப்பில்
அபார தாதுபுஷ்டி லேகியம்
செய்முறை விளக்கம்
பாதாம் பருப்பு– 100 கிராம்
பிஸ்தா பருப்பு– 100 கிராம்
பாதாம் பிசின் – 100 கிராம்
கசகசா– 100 கிராம்
பூனைக்காலி விதை – 100 கிராம்
அமுக்கிரான் கிழங்கு – 100 கிராம்
சாதிக்காய்- 100 கிராம்
சாதிப்பத்திரி – 100 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
வால் மிளகு– 25 கிராம்
அரிசி திப்பிலி – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
கோரைக் கிழங்கு – 25 கிராம்
கடுக்காய்த் தோல்– 25 கிராம்
நெல்லிக்காய் தோல்– 25 கிராம்
தேன்– 500 கிராம்
குங்குமப்பூ– 5 மி.கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 1 கிலோ
பசும்பால்
இளநீர்
செய்முறை
அமுக்கிரான் கிழங்கை உடைத்து மண் சட்டியில் 500 மி.லிட்டர் பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிக்காயை உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் இளநீரும் 500 மி.லிட்டர் பசும்பாலையும் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிப்பத்திரி சுக்கு, மிளகு, வால் மிளகு, அரிசி திப்பிலி, ஏல அரிசி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், நெல்லிக்காய்  தோல் ஆகியவைகளை கல் உரலில் இடித்து வடிகட்டவேண்டும்.🌻🌻🌻🌻
அரைத்து பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், கசகசா, பூனைக்காலி விதை இவைகளை ஒன்றாக ஆட்டுக் கல்லில் நன்றாக ஆட்டிக் கொள்ளவேண்டும். சர்க்கரையை ஒரு இரும்புக் கடாயில் இடித்துப் போட்டு பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு மூடி வைத்து 30 நிமிடங்கள் கழித்து தோலை நீக்கி கழுவித் துடைத்து அம்மியில் வெண்ணெய்ப் பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும்
பிஸ்தாப் பருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 30 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பருப்பை முன்போல் அரைத்துக் கொள்ளவேண்டும்
பாதாம் பிசினை ஓர் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் இளநீர் விட்டு 9 மணி நேரம் அரைத்துக் கொள்ளவேண்டும்
கசகசாவை 500 மி.லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து பாதாம் பிசினையும் கசகசாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.💑💑💑💑
பூனைக்காலி விதை 500 கிராம் வாங்கி ஓட்டைப் போக்கி எடை அளவு பருப்பை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி. லிட்டர் இளநீர் விட்டு மூடி விறகடுப்பில் வைத்து சிறு *தீயாக எரித்து இளநீர் சுண்டியதும் பருப்பை எடுத்து அரைத்துக் *கொள்ளவேண்டும் 500 மி.லிட்டர் தூய நீர் விட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து கொதி வந்ததும் அரைத்துள்ள பருப்பு வகைகளைப் போட்டு மர அகப்பையால் கிண்டவேண்டும்
ஒரு நிமிடங்கழித்து மற்ற மருந்துச் சரக்குகளையும் கொட்டி 5 நிமிடங்கள் கிண்டி தேன் ஊற்றி 3 நிமிடங்கள் கிண்டவேண்டும். இளகல் பதம் வந்ததும் இறக்கி நெய்யை உருக்கி ஊற்றி 10 நிமிடங்கள் கிண்டவேண்டும் கிண்டி முடித்த பின்பு குங்குமப்பூ 5 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும்
உபயோகிக்கும் முறை
10 வயது முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கு இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து 5 கிராம் இளகலுடன் பசும்பாலும் *சேர்த்து கொடுக்க *வேண்டும்
15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு 10 கிராம். 21 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு 15 கிராம். இந்த வயதுக்குள் திருமணமானவராக இருந்தால் காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் இரண்டு வேளை வீதம் எண்பது நாட்கள் சாப்பிடலாம்
26 வயது முதல் *30 வயது வரை உள்ளவர்களுக்கு முன் போல் 80 நாட்கள். 31 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 15 +15 + 15 * *கிராம் இளகல் 80 நாட்கள். காலை, பகல், இரவு உணவுக்குப் பின் 80 நாட்கள் 36 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இதே கணக்கில் மருந்தை சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறையும்
தீரும் நோய்கள்
ஆண்மைக் குறைப்பாடு, சிறுவர்களுக்கு உடல் இளைப்பு, குழந்தையின்மை ஆகிய நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும்
பத்தியம்

பழஞ்சோறு, மொச்சை, பூசணிக்காய், கோழிக் கறி, கருவாடு ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது
குறிப்பு

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துண்ணும் நாட்களில் பசிக் குறைவு ஏற்பட்டால் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். ஒரு வேளைக்கு ஐந்து கிராம் வீதம் குறைத்துக் கொள்ளவேண்டும்

இயற்கை வாழ்வியல் முறை----உடல்நலம் மருத்துவம்,


இயற்கை வாழ்வியல் முறை
உண்பதும் உறங்குவதும் தவமே
உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள்.
உண்பதிலும் உறங்குவதிலும் ஒரு சுகம் கிடைக்கிறது. அதனால் உணவும் உறக்கமும் எல்லோருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன. உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள். அளவான உணவும் ஆழ்ந்த உறக்கமும் மனிதனுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும் வரங்கள். அதனால் இவையிரண்டும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை. இதையுணர்ந்த முன்னோர் இவற்றிற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் விளைவாக உணவு உட்கொள்ளும் முறையையும் உறங்குகின்ற வழிமுறையையும் கண்டறிந்து அவற்றைத் தவமாகவே போற்றினர்.
உணவு என்பது பண்பாட்டுடன் பிணைந்தது. பிறந்த இடம், வளரும் சூழலுக்கேற்பவே மனிதனுக்கு உணவுப் பழக்கம் அமைகிறது. தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்பவே தானியங்கள் விளைகின்றன. அந்தத் தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தவாறே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கமும் அமைகிறது. இதனால் சொந்த பூமியில் விளைபவை சுவையானதாகவும் வயிற்றுக்கேற்ற உணவாகவும் கருதப்பட்டன. அதைத்தான் இன்று இயற்கை உணவு என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம். இக்காலம் எங்கோ விளையும் பல்வகை உணவு வகைகளைப் பரிமாறும் காலமாக மாறிவிட்டது.
ஒருவேளை உண்பவன் யோகி (தவஞானி), இரண்டு வேளை உண்பவன் போகி (இன்பம்விரும்பி), மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்று உணவு உண்ணும் வேளையை ஞானியர் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மூன்று வேளை உணவு என்பதே எல்லோருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகிப் போனது. எந்தச் சூழலானாலும் எந்த உணவு ஆனாலும் நம் முன்னோர் சொன்ன முறைகளைப் போற்றி உண்பது ஆரோக்கியத்தின் திறவு கோலாகும். மூன்றுவேளை உணவு நமக்குப் பழகிவிட்டது. அவசியமும் ஆகிப் போனது. எவை அந்த மூன்று வேளை?
காலை, மதியம், இரவு. இந்த மூன்று வேளையும் உணவு உண்ண வேண்டும். இது சரிதான். காலை எத்தனை மணிக்குச் சாப்பிட வேண்டும்? மதிய உணவு எப்போது? இரவு உணவு ஏழு மணிக்கா? எட்டு மணிக்கா? இந்த மணிக்கணக்கைத்தான் நம்முன்னோர் பசித்துப் புசிஎன்று சொல்லி வைத்தனர். பசித்துப் புசி என்பது வெற்று மொழியன்று.
அனுபவத்தில் கண்டெடுத்த ஞானமொழி. பசி என்பது சாப்பாட்டு நேரத்தைக் காட்ட வயிறு அடிக்கும் அறிவிப்பு மணி. உணவுக்கு விடுக்கும் அழைப்பு மணி. நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பதற்கு நம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. நாம் வழக்கமாகச் சாப்பிடும் நேரத்திற்கேற்ப அமிலமும் சுரக்கப் பழகிக் கொள்கிறது. நாம் சாப்பிடப் பிந்தினாலும் அமிலச் சுரப்பு தன்வேலையை உரிய நேரத்தில் தொடங்கி விடுகிறது. இதுதான் பசியின் அறிகுறி. இந்த நேரத்தில் தேவையான உணவை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
உண்ட உணவு செரித்தபின் நமக்கு உகந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்லிவைத்த உண்மை. சாப்பிட வேண்டிய அளவு என்ன? ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? அதற்கும் அளவு சொல்கிறார் வள்ளுவர். நம் வயிற்றில் உள்ள அக்கினிதான் நாம் உண்ட உணவைச் செரிக்க வைக்கிறது. அதனால் நம் வயிற்றுத் தீயின்(உஷ்ணம்) அளவுக்கேற்பவே உண்ண வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. இதை உணர்ந்துதான், வயிறுமுட்டச் சாப்பிடாதே என்கின்றனர்.

ருசித்துப் புசிஎன்பது நம் முன்னோர் சொல்லி வைத்த இன்னொரு அனுபவ மொழி. அதாவது உணவை விருப்புடன் ரசித்துச் சாப்பிட என்று சலிப்புக் கொள்ளக் கூடாது. இப்படி மனத்தில் உண்டாகும் சலிப்பு வயிற்றையும் பாதிக்கிறது. மனம் சொல்வதைத்தான் வயிறு ஏற்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தச் சாப்பாடு ஆனாலும் மன மகிழ்வோடு விரும்பியுண்டால் வயிறும் அதனைச் சந்தோஷமாக எற்றுக் கொள்ளும்.


உப்பில்லாக் கூழ் கூட அமிழ்தமாகிவிடும். வேறு நினைவில் சிந்தனையைச் செலுத்தாமல் உண்ணும் உணவில் மட்டும் கவனம் செலுத்தி, நன்கு மென்று உண்ணவேண்டும். இரைப்பைக்குப் பற்கள் கிடையாது. வாயினால் உணவை நன்கு மென்று விழுங்கினால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகிவிடும். நன்றாக மெல்லும்போதுதான் நாக்கு உணவின் ருசியை அறிய முடியும். இதனால்தான் நம் முன்னோர் ருசித்துப் புசி என்றனர்.
கைகால் கழுவி வாயைச் சுத்தமாக்கிய பின்னே உணவு உண்ண வேண்டும். கால்களில் ஈரம் உலரு முன்பே உண்ணுதல் உயர்ந்த பழக்கம். உண்டு முடித்தபின் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் நம்முன்னோர் எந்தத்திசை நோக்கியிருந்து உணவு உண்ண வேண்டும் என்பதையும் அதற்கான பலனையும் குறிப்பிடுகின்றனர்.
கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் மூன்று திசைகளைப் பார்த்து இருந்து உண்பது நல்லது. வடக்குப் பார்த்து உண்ணக்கூடாது. அது நல்லது இல்லை. இந்திரனுக்குரிய கிழக்குத் திசை நோக்கியிருந்து உண்டால் கல்வியும் ஆயுளும் பெருகும். எமதர்மனுக்குரிய தெற்கு நோக்கி உண்டால் புகழ் வளரும். மகாலட்சுமிக்குரிய மேற்குத்திசை நோக்கியிருந்து உண்டால் செல்வம் பெருகும். மற்றவர் வீடுகளுக்குச் செல்லும்போது மேற்கு நோக்கி இருந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டும் நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் வெட்ட வெளியிலும் உணவு உண்பது நம் முன்னோருக்கு ஏற்புடையது அல்ல.
நின்றும் நடந்தும் வெட்டவெளிப் பரப்பிலும் உணவு உண்ணும் பழக்கம் இப்போது நம்மிடையே மலிந்து வருகிறது. வித, விதமான உணவு வகைகளை மேஜையில் பரிமாறி, சூழ இருந்து கரண்டி, முள்கரண்டிகளால் எடுத்துண்ணும் வெளிநாட்டுக் கலாசாரம் இங்கு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. எதை முதலில் சாப்பிடுவது? எதை எப்படிச் சாப்பிடுவது? என்ற குழப்பத்தில் பலர் தவிக்கின்றனர். இதனால் உணவு விடுதிகளிலும் விருந்து நிகழ்வுகளிலும் ஒருவர் சாப்பிடும் முறையே அவரை அடையாளப்படுத்தும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது. என்ன இருந்தாலும் வலது கையால் (சோற்றாங்கை) பிசைந்து அள்ளி உண்ணும் ருசிக்கு ஈடாகாது. இனிப்பை முதலிலும் கைப்பைக் கடைசியிலும் மற்ற சுவைகளை இடையிலும் உண்ண வேண்டும் என்பது முன்னோர் மொழிந்தது.
உணவைப் பற்றிச் சொன்ன நம் முன்னோர் உறக்கத்தைப் பற்றியும் சொல்லிச் சென்றுள்ளனர். உள்ளத்துக்கு ஓய்வு தந்து உடலுக்குத் தெம்பு தருவது உறக்கம். தூக்கம் நோயைத் துரத்தும் என்பது அறிவுபூர்வமான உண்மை. தூக்கத்திற்கு உகந்த நேரம் இரவு என்பதும் முன்னிரவில் துயின்று வைகறையில் துயில் எழ வேண்டும் என்பதும்? முன்னோர் வகுத்த நெறி. இரவில் தூங்காமல் இருந்தால், பயம், படபடப்பு, மந்தம், புத்திமயக்கம் போன்றவை உண்டாகும். கோபம், கவலை, வேண்டாத சிந்தனை போன்றவற்றைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு இறைவனை எண்ணித் துயிலச் சென்றால் நிம்மதியான தூக்கம் உடனே நம்மைத் தழுவும்.
நல்ல தூக்கத்திற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும். எந்தத் திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதையும் நம் முன்னோர் அறிவு பூர்வமாக வரையறுத்துள்ளனர். வடக்குத் திசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்பது நம் மூதாதையர் கருத்து. உடம்பின் தலைப்பகுதியில் நேர் மின்னோட்டம் உள்ளது. பூமியின் வடக்கில் நேர்மின்னோட்டம் உள்ளது. இரண்டு நேர்மின்னோட்டம் ஒன்றையொன்று துரத்தும். இது மூளைக்கு நல்லது அல்ல. பூமியின் வடதிசையில் உள்ள காந்த ஈர்ப்பு சக்தி மூளையைப் பாதிக்கும்.
இது அறிவியல் உண்மை. இதை அறிந்தே நம் முன்னோர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் தலைவைத்துப் படுப்பதற்கு உகந்தவை. இதனை, “உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்குஎன்பதால் அறியலாம். உடம்பில் உள்ள ஈரம் உலர்ந்த பின்னே படுக்கைக்குச் செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பவனைச் சாப்பாட்டு ராமன் என்றும் மிதமிஞ்சித் தூங்குபவனை கும்பகர்ணன் என்றும் இகழ்வதுண்டு. அப்படியின்றி, அளவோடு உண்டு, அயர்ந்து தூங்குபவர்களுக்கு ஊணும் உறக்கமும் உடம்பையும் உயிரையும் வளர்க்கும் உயர்ந்த தவமேயாகும்.