யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

காய்கறி மருத்துவ சிந்தனை---உடல்நலம் மருத்துவம்,


இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!

தலைப்பு  :  தோலில் உண்டாகக்கூடிய சிவந்த மற்றும்  வீக்கத்துடன் உண்டாகும் தடிப்பு தன்மை  நீங்க
---------------------------------------

  சத்துக்கள்
 --------------------
சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை , புரதம் வைட்டமின் (ஏ,  பி6  , சி ,  , கே )

தீர்வு
-----------------------------------
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு(100 கிராம்) அதனுடன்  முருங்கை விதை (10)  , கோவக்காய் (10), புதினா (சிறிதளவு )இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இளம் பிஞ்சு வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து  பொறியல் செய்து அதனுடன் புதினா தழையை  பொடியாக நறுக்கி  பொறியலுடன் கலந்து  மதிய வேளை உணவில்  அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக