யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/8/16

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 144 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 137 அரசுமேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லையாம். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான பேட்மிண்டன், செஸ், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், வலை உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத நிலை தொடர்கிறது.பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லாமை என பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் கேள்விக்குறியாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.இதுகுறித்து ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் விளையாட்டுக்கு என எந்த நிதியும் இல்லை. பொது நிதியிலிருந்து விளையாட்டுக்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்களும் முன் வருவதில்லை.

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என அவர் கூறினார்.இதுகுறித்து, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 144 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 137 அரசுமேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லையாம். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான பேட்மிண்டன், செஸ், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், வலை உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத நிலை தொடர்கிறது.பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லாமை என பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் கேள்விக்குறியாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.இதுகுறித்து ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் விளையாட்டுக்கு என எந்த நிதியும் இல்லை. பொது நிதியிலிருந்து விளையாட்டுக்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்களும் முன் வருவதில்லை.

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என அவர் கூறினார்.இதுகுறித்து, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

TNPSC:குரூப் - 4 பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

அரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு:
குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, 2015 மே, 22ல் வெளியானது. இதில், முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், மீதமுள்ள, 491 காலி இடங்களுக்கு, வரும், 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும். இதற்கு தகுதியானவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல்:

2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.ஜூலை 29-இல் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம், 31-இல் வங்கி விடுமுறை ஆகிய காரணங்களால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே, அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும் வருமான வரிக் கணக்கை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை 5.30 வரை கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில், வன்முறைச் சூழல் நிலவுவதால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs ,


நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும்.
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் இன்று 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகின்ற பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை வரவழைத்து உயர்நிலைப் பாள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவேண்டுமானால் பட்டதாரி ஆசிரியராக ஓராண்டு பணியாற்ற வேண்டும் என விருப்பக் கடிதம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்........

4/8/16

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும்.

நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும்.

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு

துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. 


இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் http://mhrd.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Tamilnadu Teachers Recruitment Board (TRB) Engineering Colleges Recruitment 2016

Employment Type: Tamilnadu Govt Jobs

Total No of Vacancy: 192 Posts

Job Location: Tamilnadu

Name of the Post & No of Vacancies: 
Assistant Professor (Engineering Subjects)
Assistant Professor in Civil Engineering - 24
Assistant Professor in Mechanical Engg. - 22
Assistant Professor in EEE - 19
Assistant Professor in ECE - 22
Assistant Professor in EIE - 02
Assistant Professor in Computer Science Engg. - 19
Assistant Professor in Metallurgy - 01
Assistant Professor in Mathematics - 25
Assistant Professor in English - 19
Assistant Professor in Physics - 21
Assistant Professor in Chemistry - 18

Qualification:  
Assistant Professor (Engineering Subjects) 
BE or B.Tech and ME or M.Tech. in the relevant Branch of Engineering or Technology with First Class or its equivalent either in BE or B.Tech. / ME or M.Tech
Assistant Professor (Non-Engineering Subjects) 
1.Master's Degree in the relevant subject with good academic record with not less than 55% of marks or an equivalent Cumulative Grade Point Average (CGPA) from an Indian University or an equivalent Degree from a Foreign University, and
 2.Pass in the National Eligibility Test (NET) for Lecturers conducted by the UGC, Council for Scientific and Industrial Research (CSIR) or similar test accredited by the University Grants Commission. Provided that holders of Ph.D Degree are exempted from passing the said test.

Age Limit: Candidates should not be over 57 years of age, as on 01.07.2016.

Pay Scale: Rs.15,600 - 39,100 / - + AGP. Rs.6000 / -

Selection Procedure: Written Exam, Interview

Important Dates:
Starting Date for Submission of Application: 17.08.2016
Last date for Submission of Application: 07.09.2016
The written Examination will be held on 22.10.2016 from 10.00 AM to 1.00 PM

Application Form Link: http://www.tamilanguide.in/2016/07/tamilnadu-trb-recruitment-2016-192.html
  உஷார்      உஷார்        உஷார்
👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊

முதல் ஆப்பு துவங்கியாச்சு 

என்ன புரியலையா

  VEC அக்கவுண்ட்டை ஏன் 

திடிர்னு SMC பள்ளி 

மேலாண்மை குழு 

அக்கவுண்ட்டா மாத்த 

சொல்றாங்கனு இன்னுமா 

தெரியல

 புதிய கல்வி கொள்கை மத்திய 

அரசால் தற்போது 

வெளியிடப்பட்டுள்ளது

அதில் அனைத்து விதமான

அதிகாரங்களும் இந்த SMCக்கு

கொடுக்கப்பட்டுள்ளது

அதாவது ஆசிரியர்களை 

சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு

முழு அதிகாரம் இந்த SMCக்கு 

உள்ளதாம்

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

 ஆசிரியர்களே  இருபது 

வருடங்களுக்கு முன்னால் 

சென்று  யோசித்து பாருங்கள் 

பஞ்சாயத்துராஜ் சட்டத்தினால்

பஞ்சாயத்து போர்டு பிரஸிடண்ட் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்

 நாம் இருந்த போது பட்ட 

கஷ்டங்களை எல்லாம் 

வெகுவிரைவில் அனுபவிக்க 

இருக்கிறோம்.

தயாராகுங்கள் குரல் கொடுக்க

போராட்ட களம் வெகு தொலைவில் இல்லை

நம் பேரியக்கத்தின் கட்டளைக்காக காத்திருப்போம்.

31/7/16

EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:

👉 2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்.... 👉 2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்... 👉 2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று தற்போது 2016-17 கல்வியாண்டில் வேறு பள்ளியில் படிப்பவர்களின் தரவுகளை Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட வேண்டும்.
👉 2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் தற்போது COMMON STUDENT POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்...
👉 புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை சரி செய்யவும்....
👉 தங்கள் பள்ளியில் தற்போது உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ அதை சரிசெய்து UPDATE செய்யவும்
👉 இவை அனைத்து ஆகஸ்ட் 7-க்குள்(07/08/16) முடிக்க வேண்டும்...

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
இதன் முக்கிய அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை, ஜூலை, 31 வரை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டது. இப்போது, ஆசிரியர் கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கருத்துக்களை, nep.edu@gov.in என்ற மத்திய அரசின், 'இ - மெயில்' முகவரிக்கு தெரிவிக்கலாம்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்றும், யோகா கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட கல்வி பணிக்குழு மற்றும் துறவியர் அமைப்பு சார்பில் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாதிக், லயோலா கல்லூரி முதல்வர் சேவியர் ஆரோக்கிய சாமி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வர் ஆக்னஸ் ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறியதாவது:
கல்வி கொள்கையை ஆய்வு செய்யவும், கொள்கை எல்லோருக்குமானது என்பதை புரிந்து கொள்ளவும் கால அவகாசம் தேவை. ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. மதவாத அரசு முன்வைக்கும் கல்வி திட்டம் எல்லோருக்கும் உரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதை தீர ஆய்வு செய்த பிறகே ஏற்போம்.
எனவே, இந்த புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம். வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழக கவர்னரை சந்தித்து புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோருமாறு மனு அளிக்க உள்ளோம். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாத
விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம் போடக்கூடாது
வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில்
கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங்
செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை
மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும்
ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது
கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்
அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது
தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.
இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் : ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு

மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது. கல்வி திட்டங்கள் குறித்த உதவித் தொகைகளும், நேரடி மானிய திட்டத்தில் வங்கி மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, 'ஆராய்ச்சி படிப்பான பி.எச்டி., உட்பட அனைத்து படிப்புகளுக்கும் உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்' என, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி
அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது. இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.
இந்நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதன் முடிவில் மொத்தம், 89,760 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் அதிகபட்சமாக மெக்கானிக்கல் படிப்பு, 21,137 பேர்; இ.சி.இ., எனப்படும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, 16,413; கம்ப்யூட்டர் சயின்ஸ், 15,387; எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், 10,136; சிவில், 10,088 பேர் சேர்ந்துள்ளனர். இது தவிர, ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மெக்கானிக்கல் தமிழ் வழி வகுப்பில், 200 பேரும், சிவில் தமிழ் வழியில், 195 பேரும் சேர்ந்துள்ளனர். 
கோவை மாவட்டத்தில் 90% க்கு குறைவாக ( பாடவாரியாக) தேர்ச்சி விகிதம் எடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு ஆசிரியருகும் தலைமை ஆசிரியர் வழியாக சோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியப் பெருமக்கள் பெரிதும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதேபோல் மற்ற பிற மாவட்டங்களிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதா என தெரியப் படுத்தவும்.