யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்

எட்டாம்வகுப்பு தனித்தேர்வுக்கு, இன்று முதல், 25 வரை, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவிவெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரியில்நடக்கவுள்ள, 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 12 ஆண்டு, ஆறு மாதங்களை பூர்த்திஅடைந்தவர்கள், இன்று முதல், 25 வரைஆன்லைனில் பதிவு செய்யலாம். அரசுதேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை, தேர்வுத்துறை இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Exam - 15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு.

*நகராட்சிஆணையர் (கிரேடு-2)* துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவிபிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி
ஆய்வாளர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாகநிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுஎழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி *ஏதேனும் ஒரு பட்டப்படிப்ப*ு முடித்திருக்க வேண்டும்.
கடந்த 2013-ம் ஆண்டு வரைகுரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான்நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ்முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகுபுதிதாக மெயின் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 250 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலானகேள்விகளும், 50 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும்கேட்கப் பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மெயின்தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலானகேள்விகள் நீக் கப்பட்டன. அனைத்துகேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும்புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில்*3, 5, 8 மதிப்பெண் கேள்விகள*் கேட்கப்பட்டன.
இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள்முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த *5 மதிப்பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.*
அதற்குப்பதில் *புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும்* சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும்கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில்தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து(Choice) விடையளிக்கலாம்.
இந்த புதிய வினாத்தாள் முறைகுறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள்பயிற்சி நிறுவனத் தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால்அதற்கு முழு மதிப்பெண் பெறும்வாய்ப்பு உண்டு. ஆனால், 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர்எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர்திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்ல எழுத்தாற்றலும், விடைகளைநல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்” என்றார்.

*குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.* நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் *ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும்*என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின்தேர்வில் புதிய வினாத்தாள் முறையைபின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களைசரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி
இயக்குனரகம்சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள்ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:-
மாணவர்களின்விவரம்
அடுத்தஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின்விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர்பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்தபட்டியலில் இடம்பெற வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடிசரியாக இருக்க வேண்டும். இதனைகல்வி தகவல் மேலாண்மை முறையில்ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாகஉள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள்சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும்இருக்கக்கூடாது.
கண்காணிக்கவேண்டும்
அனைத்தையும்வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர்கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்டகல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்விஅதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில்காணொலி காட்சி மூலம் முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம்பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்றுதெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநிலஇயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில்நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள்தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து பேசினர்.

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!

இன்று முதல் ரூ.4,500க்குபதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு:விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம்
ரூ.2.5 லட்சம்
வங்கிகளில்பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களைமாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்தஉச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல்குறைக்கப்படுகிறது.
அதிக மக்கள், பணத்தை பெறவசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்குசலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காகமணமக்கள் வீட் டார் வங்கிகணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும்அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள்மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கநீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற னர். மீண்டும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களின் சிரமங்களை யும் மத்திய அரசுஉன்னிப்பாக கவனித்து வருகிறது.
பொருளாதாரவிவகாரங்கள் செயலர் சக்தி காந்ததாஸ் டில்லியில் நேற்று கூறியதாவது:
வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றஅனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, 4,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக, 18ம் தேதி முதல்குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தைபெற வசதியாக இந்த நடவடிக்கைஎடுக்கப்படுகிறது. அரசிடம் போதிய பணம்இருப்பு உள்ளது என்பதை, மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.
விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு,25 ஆயிரம் ரூபாய்,பெற்றுகொள்ள அனுமதிக்கப்படுவர். ரபி பருவ பயிர்களைபயிரிட, சிரமம் இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வர்த்தகர்களும், இதேஅளவு தொகையை பெற, ஏற்கனவேஅனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், 24 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, வங்கிக்கணக்கில் இருந்து பெறலாம். விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடுகளுக்கான பிரீமியம்தொகையை செலுத்த, 15 நாள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.திருமண செலவு களுக்கு, வங்கி கணக்குகளில் இருந்து, 2.5 லட்சம் ரூபாய் பெறஅனுமதிக்கப்படும். திருமணம்நடக்கும் குடும்பத்தில், யாராவது ஒரு உறுப்பினர், இந்த தொகையை பெறலாம்.
இதற்கு, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்ததொகையை பெற்றுள்ளதாக, சுய அறிவிப்பு கடிதத்தையும், 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண்ணையும் வங்கியில்சமர்ப்பிக்க வேண்டும்.
பல்வேறுபொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப்படுவர். மத்திய அரசில், 'குரூப்சி' பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன் பணமாக, 10 ஆயிரம்ரூபாய் வரை பெறலாம்; நவம்பர்மாத சம்பளத்தில், இந்த தொகை நேர்செய்யப்படும்.
ஏ.டி.எம்.,களில், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும்வகையில், தக்க மாற்றங்களை செய்யும் பணிகளை விரைவுபடுத்த, சிறப்புநிபுணர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரம், பார்லிமென்டின்இரு சபைகளிலும், நேற்று, எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின்அமளியால், இரு சபைகளும், நாள்முழுவதும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன

நவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்டாடும்படி உத்தரவு

பள்ளி, கல்லுாரிகளில், வரும், 26ல், அரசியலமைப்பு சட்டநாள் கொண்டாடும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.

சுதந்திரம்பெற்ற பின், 1949 நவ., 26ல், இந்தியஅரசியலமைப்பு சட்டம்
தேசிய அளவில்ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள், சட்டநாளாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு, அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 26ம் தேதி, இந்தியஅரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாடப்படும்என, அறிவித்தார். அதன்படி, 26ல் அரசியலமைப்பு சட்டநாளை, பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், அரசியலமைப்பு சட்ட நாளை கட்டாயமாககொண்டாட வேண்டும்; அதன் அறிக்கையை, நவ., 30ல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ப.க.இ.ந.க.எண்,74499 எம்/இ/04/2015 நாள் 16/11/2016ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்-CM CELL REPLIED

நேர்மறை சிந்தனையின் சக்தி

படித்ததில்

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

பாதம் தொட்டு பணிகிறேன்

பீட்ரூட் ஜூஸ்

புகழ்பெற்றநூல்கள்

பெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்

பொடுகு என்றால் என்ன?

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள்

மரங்களை பற்றிய அறிய தகவல்

மாமிசம் மனித உணவா

மாம்பழம்

மிகவும் ஆபத்து