யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!

இன்று முதல் ரூ.4,500க்குபதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு:விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம்
ரூ.2.5 லட்சம்
வங்கிகளில்பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களைமாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்தஉச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல்குறைக்கப்படுகிறது.
அதிக மக்கள், பணத்தை பெறவசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்குசலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காகமணமக்கள் வீட் டார் வங்கிகணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும்அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள்மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கநீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற னர். மீண்டும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களின் சிரமங்களை யும் மத்திய அரசுஉன்னிப்பாக கவனித்து வருகிறது.
பொருளாதாரவிவகாரங்கள் செயலர் சக்தி காந்ததாஸ் டில்லியில் நேற்று கூறியதாவது:
வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றஅனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, 4,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக, 18ம் தேதி முதல்குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தைபெற வசதியாக இந்த நடவடிக்கைஎடுக்கப்படுகிறது. அரசிடம் போதிய பணம்இருப்பு உள்ளது என்பதை, மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.
விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு,25 ஆயிரம் ரூபாய்,பெற்றுகொள்ள அனுமதிக்கப்படுவர். ரபி பருவ பயிர்களைபயிரிட, சிரமம் இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வர்த்தகர்களும், இதேஅளவு தொகையை பெற, ஏற்கனவேஅனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், 24 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, வங்கிக்கணக்கில் இருந்து பெறலாம். விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடுகளுக்கான பிரீமியம்தொகையை செலுத்த, 15 நாள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.திருமண செலவு களுக்கு, வங்கி கணக்குகளில் இருந்து, 2.5 லட்சம் ரூபாய் பெறஅனுமதிக்கப்படும். திருமணம்நடக்கும் குடும்பத்தில், யாராவது ஒரு உறுப்பினர், இந்த தொகையை பெறலாம்.
இதற்கு, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்ததொகையை பெற்றுள்ளதாக, சுய அறிவிப்பு கடிதத்தையும், 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண்ணையும் வங்கியில்சமர்ப்பிக்க வேண்டும்.
பல்வேறுபொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப்படுவர். மத்திய அரசில், 'குரூப்சி' பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன் பணமாக, 10 ஆயிரம்ரூபாய் வரை பெறலாம்; நவம்பர்மாத சம்பளத்தில், இந்த தொகை நேர்செய்யப்படும்.
ஏ.டி.எம்.,களில், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும்வகையில், தக்க மாற்றங்களை செய்யும் பணிகளை விரைவுபடுத்த, சிறப்புநிபுணர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரம், பார்லிமென்டின்இரு சபைகளிலும், நேற்று, எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின்அமளியால், இரு சபைகளும், நாள்முழுவதும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக