யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.

2017-ம்ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டின்மூன்றாவது காலாண்டு சம்பள பட்ஜெட் திட்டத்தைவில்லிஸ் டவர்ஸ்
வாட்சன் நிறுவனம்வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்துசேலரீஸ் இன் இந்தியா (salaries in india) நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று கூறியுள்ளது. கடந்த ஆண்டும் 10.8% உயரும்என்று கூறியிருந்தது. ஆனால் உண்மையாக 10% மட்டுமேசம்பள உயர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசஅளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும்இந்தியா சம்பள உயர்வில் முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வில், இந்தோனேசியாவில் 9% சம்பளம் உயர்வு இருக்கும்என்றும் இலங்கையில் 8.9 சதவீதம் சம்பள உயர்வுஇருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில்7 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும்என்று கூறப்பட்டுள்ளது.   மேலும் இந்தியாவில்சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் நன்கு பணிபுரியும் ஊழியர்களின்சம்பள உயர்வுக் காக 38% ஒதுக்கப்படும் என்றும்சராசரிக்கு கொஞ்சம் அதிகமாக பணிபுரியும்ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 34 சதவீதம்ஒதுக்கப்படும் என்று இந்த ஆய்வுகூறுகிறது. மேலும் சராசரியாக பணிபுரியக்கூடிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 28 சதவீதம்மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

``அனைத்துஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்குவதைக்காட்டிலும் நன்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்குசரியான சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்று இந்த ஆய்வுகள்தெளிவாக்கு கின்றன. எந்தவொரு வேறுபாடுஇல்லாமல் சம்பள உயர்வு இருக்கும்என்றால் நிறுவனங்கள் நல்ல திறமையுடைய ஊழியர்களைதக்கவைப்பது சிரமமாக இருக்கும். அதிலும்குறிப்பாக ஊழியர்கள் தேவை இருக்கும் துறைகளில்இன்னும் சிரமமாக இருக்கும்’’ என்றுவில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் நிறுவனத்தின்ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தகவல்சேவை பிராக்டீஸ் தலைவர் சம்பவ் ரக்யான்தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்காமற்றும் இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டில் 3 சதவீதம்மட்டுமே சம்பள உயர்வு இருக்கும்என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பார்மச்சூடிகல்ஸ்துறையில் சம்பள உயர்வு அதிகமாகஇருக்கிறது. நிதி சார்ந்த துறைகளில்சம்பள உயர்வு சராசரிக்கும் கீழே8.5 சதவீதமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக