யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்று தவறாமல் சமர்ப்பிக்க வலியுறுத்தல்

தங்களின்வாழ்நாள் சான்றிதழை, ஓய்வூதியதாரர்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சென்னை மண்டல தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அமைப்பின்முதன்மை ஆணையர், சலீம் சங்கர்
தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கை: வருங்காலவைப்பு நிதி சட்டம் உள்ளடக்கிய, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்பஓய்வூதிய திட்டத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும்ஒவ்வொரு பயனாளியும், தாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம்பெறும் பொருட்டு, ஆண்டுதோறும், நவம்பரில், தாங்கள் உயிரோடு இருப்பதற்கானவாழ்நாள் சான்றிதழ், மனைவியை இழந்தோர் மறுமணம்செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், இந்த ஆண்டும் நவம்பரில், ஓய்வூதியதாரர்கள், மேற்படி சான்றிதழ்களை, தாங்கள் ஓய்வூதியம் பெறும்வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இந்த வாழ்நாள் சான்றிதழை, தற்போது, இணையம் மூலமாக, 'ஜீவன்பிரமான் போர்ட்டலிலும்' பதிவேற்றம் செய்யலாம்; அல்லது, 'ஜீவன் பிரமான் பதாபுரோகிராம்' பொது சேவை மையங்களைஅணுகியும் சமர்ப்பிக்கலாம். தற்போது, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானபொது சேவை மையங்கள் உள்ளன. எனவே, ஓய்வூதியதாரர்கள், தங்களது வங்கி, ஜீவன்பிரமான் மையம், பொது சேவைமையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி, சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை, இந்தியாவில் உள்ள எந்த ஒருஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாகவும்பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக