யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார் சுழி போட்ட பெண் அதிகாரி

இரண்டுஆசிரியர்கள் உள்ள தொடக்க பள்ளிகளில், பெரும்பாலும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது. எனவே, ஒருவருக்குமூன்று நாள், இன்னொருவருக்கு இரண்டுநாள் வேலை என,
ஆசிரியர்கள்பிரித்துக் கொள்கின்றனர். ஆனால், வருகை பதிவேட்டில், அனைத்து நாட்களுக்கும் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இதற்குமுற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் முயன்றால், சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவை மாவட்ட தொடக்க கல்விஅதிகாரி காந்திமதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளார்.
திடீர்ஆய்வு : தினமும் குறைந்தபட்சம், இரண்டுபள்ளிகளுக்கு, காலையில் அதிரடியாக ஆய்வுக்கு செல்கிறார். உரிய நேரத்தில் வராதஆசிரியர்களை பிடித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கிறார்.காலை, 9:00 மணிக்கு பள்ளி துவங்கும். தலைமை ஆசிரியர், 8:45க்கும், ஆசிரியர்கள், 9:00 மணிக்கும்வர வேண்டும். பல பள்ளிகளில், 10:00 மணிக்குமேல் தான் ஆசிரியர்கள் வருகின்றனர். அதிலும், சில ஆசிரியர்கள் வாரத்திற்குஇரண்டு, மூன்று நாள் மட்டுமேபணிக்கு வருகின்றனர்; பாதியில், 'கட்' அடித்து செல்கின்றனர். இதையெல்லாம், திடீர் ஆய்வில் காந்திமதிகண்டுபிடித்தார். அதனால், அவரே பள்ளிக்குசென்று பாடம் நடத்துகிறார். ஆசிரியர்கள்என்ன பாடம் நடத்தினர் என்பதை, மாணவர்களிடம் விசாரிக்கிறார். பின், அந்த பாடத்திற்கு, உடனடி தேர்வு வைக்கிறார்; அதன்மூலம், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறனைஅறிந்து கொள்கிறார்; அதில், பின்தங்கிய ஆசிரியர்களுக்குஅறிவுரை வழங்குகிறார்.
வரவேற்பு: இப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 1,100 தொடக்க பள்ளிகளில், 50 சதவீத பள்ளிகளில், இதுவரைநேரடி ஆய்வு நடத்தியுள்ளார். துணிச்சலானஇவரது நடவடிக்கைக்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவரை பார்த்து, மற்றமாவட்டங்களிலும் இதேபோல் அதிரடி ஆய்வுநடத்த, தொடக்க கல்வி இயக்குனரகம்முடிவு செய்துள்ளது. அதனால், 'கட்' அடித்து விட்டு, ஊர் சுற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக