யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’

சென்னையில்பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைமாற்ற, ஆதார் அட்டையை ஒருமுறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி
அனுப்பப்பட்டனர்.

பணம் செல்லாது அறிவிப்பு

புழக்கத்தில்உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. இதனால் அதை மாற்றவங்கிகள் முன்பு பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து கிடக்கின்றனர். இவர்கள்தங்களுடைய ஆதார் அட்டை நகலில்கையெழுத்திட்டு, வங்கிகளில் செலுத்தி பணத்தை மாற்றி செல்கின்றனர்.

முதலில்ரூ.4 ஆயிரம் மதிப்பில் மட்டும்பணமாற்றம் செய்யப்பட்டது. இதனை ரூ.4 ஆயிரத்து500 ஆக மாற்றி மத்திய அரசுஅறிவித்தது. ஒரு வாரத்தில் சகஜநிலைஏற்படும் என்று கருதிய வங்கிஅதிகாரிகளுக்கு, நாளுக்கு நாள் வங்கிகளின் முன்புநிற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

விரலில்மை

இதனை கட்டுப்படுத்த பணம் மாற்ற வருபவர்களின்கை விரலில் மை வைக்கமுடிவு செய்யப்பட்டது. இந்த தகவலால் நேற்றுகாலையில் வங்கிகள் முன்பு கூட்டம் சற்றுகுறைவாக காணப்பட்டது. பெரும்பாலான வங்கி கிளைகளுக்கு மைவந்து கிடைக்காததால், வழக்கம் போல் மைவைக்காமல் பணமாற்றம் செய்யும் பணி நடந்தது.

இதனால்நேற்று பிற்பகலில் வங்கிகள் முன்பு மீண்டும் நீண்டவரிசை காணப்பட்டது. ஸ்டேட் வங்கி தவிரபெரும்பாலான வங்கிகளில் மாற்றித்தருவதற்கு போதிய பணம் இல்லாததால்வங்கிகளில் வழக்கம் போல் டெபாசிட்பெறுவது, காசோலை பரிமாற்ற பணிகள்மட்டுமே நடந்தன. தபால் அலுவலகங்களைபொறுத்தவரையில் போதிய பணம் இல்லாததால்வெறிச்சோடியே காணப்பட்டன.

ஆதார் அட்டை பதிவு

இதுகுறித்துஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களின்வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாகஇருக்கும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்என்று ரிசர்வ் வங்கி அறிவித்துஉள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பணம் மாற்றவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எதாவதுஒரு அடையாள அட்டையின் நகலில்கையெழுத்திட்டு கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி85 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை நகல்மூலம் பணம் மாற்றித்தரப்பட்டது. அவ்வாறுகொண்டு வரப்படும் ஆதார் அட்டை எண்கள்கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மீண்டும்அதே ஆதார் அட்டைகளை கொண்டுவந்தால் கணினி அதனை ஏற்பதில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் மாற்று அடையாளஅட்டைகளை பொதுமக்கள் கொண்டு வந்து பணத்தைமாற்றி செல்கின்றனர்.

கண்காணிப்பு

குறிப்பாககுடிசை பகுதிகளில் இருப்பவர்கள் அதிகளவு வந்து பணத்தைமாற்றுவதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் கமிஷன் வாங்கிகொண்டு வேறு நபர்களின் பணத்தைமாற்றுவது ஒரு சிலர் மூலம்தெரியவந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கிபணம் மாற்ற வருபவர்களின் கைவிரல்களில்மை வைக்க அறிவுறுத்தி உள்ளது. மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிஅச்சகத்தில் இருந்து பெரும்பாலான கிளைகளுக்குமை வந்து சேரவில்லை. நாளை(இன்று) கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கிடைத்தஉடன் மை வைக்கும் பணியைதொடருவோம். அதுவரை வழக்கம் போல்பணம் மாற்றி தரும் பணியில்ஈடுபட்டு உள்ளோம்.

வங்கிகளில்பழைய பணத்தை சேகரிக்க தனிப்படைஅமைக்கப்பட்டு செல்லாத பணம் சேகரிக்கப்பட்டுவருகிறது. ‘ஜன்தன்’ கணக்கில் அளவுக்குஅதிகமாக பணத்தை டெபாசிட் செய்பவர்களும், கருப்பு பணத்தை டெபாசிட் செய்யவருபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். புதிய கரன்சி நோட்டுகளைவைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறுஅதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக