யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

TNPSC Group 2 Exam - 15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு.

*நகராட்சிஆணையர் (கிரேடு-2)* துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவிபிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி
ஆய்வாளர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாகநிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுஎழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி *ஏதேனும் ஒரு பட்டப்படிப்ப*ு முடித்திருக்க வேண்டும்.
கடந்த 2013-ம் ஆண்டு வரைகுரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான்நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ்முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகுபுதிதாக மெயின் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 250 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலானகேள்விகளும், 50 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும்கேட்கப் பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மெயின்தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலானகேள்விகள் நீக் கப்பட்டன. அனைத்துகேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும்புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில்*3, 5, 8 மதிப்பெண் கேள்விகள*் கேட்கப்பட்டன.
இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள்முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த *5 மதிப்பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.*
அதற்குப்பதில் *புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும்* சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும்கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில்தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து(Choice) விடையளிக்கலாம்.
இந்த புதிய வினாத்தாள் முறைகுறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள்பயிற்சி நிறுவனத் தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால்அதற்கு முழு மதிப்பெண் பெறும்வாய்ப்பு உண்டு. ஆனால், 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர்எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர்திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்ல எழுத்தாற்றலும், விடைகளைநல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்” என்றார்.

*குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.* நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் *ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும்*என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின்தேர்வில் புதிய வினாத்தாள் முறையைபின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக