யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களைசரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி
இயக்குனரகம்சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள்ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:-
மாணவர்களின்விவரம்
அடுத்தஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின்விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர்பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்தபட்டியலில் இடம்பெற வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடிசரியாக இருக்க வேண்டும். இதனைகல்வி தகவல் மேலாண்மை முறையில்ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாகஉள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள்சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும்இருக்கக்கூடாது.
கண்காணிக்கவேண்டும்
அனைத்தையும்வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர்கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்டகல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்விஅதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில்காணொலி காட்சி மூலம் முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம்பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்றுதெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநிலஇயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில்நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள்தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக