யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/16

SSA., போட்டிகளில் உதவிபெறும் பள்ளிகள்புறக்கணிப்பு

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் !!

தில்லிஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தைஏறத்தாழ இரு மடங்கு வரைஉயர்த்த அமைச்சரவை
ஒப்புதல் தெரிவித்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தில்லி தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
முடிவுகள்குறித்து முதல்வர் கேஜரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் கெளரவ ஆசிரியர்களின் ஊதியத்தைஉயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதுவரை கெளரவ ஆசிரியர்களுக்கு தினக்கூலிஅடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் விடுப்பு எடுக்கும்நாளில் ஊதியம் பெறாத நிலைஇருந்து வந்தது. இனி கெளரவஆசிரியர்களின் ஊதியம் மாதவாரியாக கணக்கிட்டுவழங்கப்படும். இதன்படி, மாதம் சுமார் ரூ.17,500 வரை ஊதியம் பெற்று வந்தகௌரவ ஆசிரியர், மாற்றியமைக்கப்பட்ட ஊதிய நிர்ணயத்தின்படி இனிமாதம் சுமார் ரூ.32,200 முதல்ரூ.34,100 வரை பெறுவர். மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடித்தவர்கள், தேர்வு முடிக்காதவர்கள் எனஇரு வகைகளாக இருக்கும் கௌரவஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர், டிஜிடி(பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்), பிஜிடி (முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்), சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்குஇந்த ஊதிய உயர்வு பொருந்தும். மாற்றியமைக்கப்பட்ட சிடிஇடி ஆசிரியர்களின் புதியமாத ஊதிய விவரம் வருமாறு(அடைப்புக்குறியில் தினப்படி, பழைய மாத ஊதியம்): உதவி ஆசிரியர் - ரூ.32,200 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800,ரூ.20,000); பிஜிடிஆசிரியர் - ரூ.34,100 (ரூ.900, ரூ.22,500); சிறப்புக்கல்வி ஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800, ரூ.22,000). சிடிஇடிதேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புதியஊதிய விவரம் வருமாறு: உதவிஆசிரியர் - ரூ.25,000 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000); பிறஆசிரியர்கள் (ஓவியம், உடற்பயிற்சி, நூலகர்) - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000). இதுவரைகெளரவ ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்படவில்லை.


இந்த நிலையை மாற்றப்பட்டு இப்போதுஆண்டுக்கு எட்டு நாள்கள் தற்செயல்விடுப்பு (கேஷ்வல் லீவ்) அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2011-ஆம் ஆண்டில் கொண்டுவந்த அனைவருக்கும் கல்விச் சட்டத்தில் மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும்"சிடிஇடிட தேர்வை எழுதி தகுதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்தஅவகாசம் கடந்த ஜூலையுடன்  நிறைவடைந்து விட்டது. இவ்வாறு "சிடிஇடி' தேர்வை எழுதாமல் இரண்டாயிரம்கெளரவ ஆசிரியர்கள் தில்லியில் உள்ளனர். சட்டப்படி இதுபோன்ற ஆசிரியர்களைப் பணியில் இருந்து நீக்கவேண்டும். ஆனால், இந்த கௌரவஆசிரியர்கள், "சிடிஇடி' தேர்வை எழுத இருவாய்ப்புகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இரு வாய்ப்புகளுக்குள் "சிடிஇடி' தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அவர்களைபணியில் இருந்து விலக்குவதைத் தவிரவேறு வழி இல்லை என்றார்கேஜரிவால். பேட்டியின் போது துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ்சிசோடியா உடனிருந்தார்

பிறந்த தேதியில் மாற்றமா? பாஸ்போர்ட் விதிகள் தளர்வு !

CCE-4th WEEK MATHS, SCIENCE, SOCIAL- KEY




RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்தேதியை பற்றியும்,
எத்தனை பக்க அறிக்கைதயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித்துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன்விவரம் பின்வருமாறு

தருமபுரிமாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் தமிழக அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழுவின்  செயல்பாடுகளின்விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித்துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசைஎண் 1 முதல் 9 வரையான தகவல்களைகோரி   RTI 2005இன்  கீழ்கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.50725/       நிதி(PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம்காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்கஇயலாது என பதில் வழங்கிஉள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவேநமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)

    இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போதுIncluding records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்றபெயர்களின் எதேனும் ஒரு வகையில்தான், அக்குழு பதிவு செய்வதுமற்றும் தயார் செய்யும் கருத்துகள்ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடையஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் எனஇந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கியதொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலைதங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன். மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்ககூடாது என எந்த ஒருபக்கத்திலும் இல்லை.  அக்குழுஇன்று வரை தயார் செய்துள்ளஅறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.

நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன் படி வழங்ககூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன். என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.

அம்மேல்முறையீட்டுகடிதத்திற்கு நிதித் துறையின் கடிதஎண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர்குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவேதலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம்3 கருத்து கேட்பு கூட்டமும், அதில்33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி

3097 மனுக்கள்வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்தேதியை பற்றியும்,
எத்தனை பக்க அறிக்கைதயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித்துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன்விவரம் பின்வருமாறு

தருமபுரிமாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் தமிழக அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழுவின்  செயல்பாடுகளின்விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித்துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசைஎண் 1 முதல் 9 வரையான தகவல்களைகோரி   RTI 2005இன்  கீழ்கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.50725/       நிதி(PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம்காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்கஇயலாது என பதில் வழங்கிஉள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவேநமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)

    இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போதுIncluding records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்றபெயர்களின் எதேனும் ஒரு வகையில்தான், அக்குழு பதிவு செய்வதுமற்றும் தயார் செய்யும் கருத்துகள்ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடையஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் எனஇந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கியதொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலைதங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன். மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்ககூடாது என எந்த ஒருபக்கத்திலும் இல்லை.  அக்குழுஇன்று வரை தயார் செய்துள்ளஅறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.

நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன் படி வழங்ககூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன். என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.

அம்மேல்முறையீட்டுகடிதத்திற்கு நிதித் துறையின் கடிதஎண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர்குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவேதலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம்3 கருத்து கேட்பு கூட்டமும், அதில்33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி

3097 மனுக்கள்வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

ALF YEARLY SSLC TAMIL FIRST PAPER & SECOND PAPER- KEY

CCE WORKSHEET -REPORT FORMS

ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு

ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, 69 மையங்களில், இன்று நடக்கிறது. காலையில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தேர்வுகள் நடக்கின்றன. இந்தியாவில், 17 நகரங்களில் அமைந்துள்ள, 69 தேர்வு மையங்களில், தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில், 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் நடக்கும் டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுகள், 9 நகரங்களில், 9 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கு புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் எம்.டி., - எம்.எஸ்., தேர்வுகளுக்கு 26,869 நபர்களும்; டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுக்கு, 2,287 நபர்களும் விண்ணப்பித்து உள்ளனர். ஜிப்மரில் எம்.டி., - எம்.எஸ்., பிரிவுகளில், 102 இடங்களும், டி.எம்., - எம்.சி.எச்., பிரிவில், 18 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இரண்டு தேர்வுகளின் முடிவுகள் வரும், 18ம் தேதி வெயிடப்படும். கலந்தாய்வுகள் டிசம்பர் மாதம், 21 மற்றும் 28ம் தேதி நடக்கிறது. வகுப்புகள் ஜனவரி மாதம், 2ம் தேதி தொடங்குகிறது. 

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 
இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USEFUL HANDBOOKS TO ALL TEACHERS REGARDING RULES & OFFICEPROCEDURES

Admission Notice Joint Entrance Examination (JEE) Main 2017

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 க்கு பின்னரும் தொடர வாய்ப்பு.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

புதுச்சேரி,: சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.

அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண் தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்.
மற்றவர்களின் பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள் உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும் உள்ளன.

ஆனால், அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம் எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால், மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகியவை தரமான கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

அங்கெல்லாம் 10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது சாதனை அல்ல. மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.

மேலும், சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத் தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், 16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்

புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


டிஜிட்டல் முறையிலும், எலக்ட்ரானிக் முறை யிலும் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்ப தில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என, அரசு நம்புகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் முறையில், பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கும்படி, என். பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணம் செலுத்து தல் கழகத்திடம், அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பான, 'நிடி ஆயோக்' கேட்டுக்கொண்டுள்ளது.

'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை:


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்த னைகள் சிறப்பான வகையில் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுத் திட்டங் களை, அரசு அறிவிக்கும். டிஜிட்டல் முறையில் பரி வர்த்தனை செய்வோருக்கு, இரு கட்டமாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும், குலுக் கல் முறையில், பரிசுக்கு உரியோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றொரு கட்டமாக, காலாண்டுக்கு ஒரு முறை, பெரியளவில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
ஏழைகள், நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களை குறிவைத்து, இந்த திட்டங்கள் தயாரிக்கப்படும்.

பரிசுத் திட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நவ., 8க்கு பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் அனை வருக்கும், பரிசு பெறத் தகுதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

வருகிறது 'வர்தா!' :80 கி.மீ., வேகத்தில் இன்று மதியம் சென்னையை கடக்கிறது:

வங்க கடலை மிரட்டும், 'வர்தா' புயல், இன்று சூறாவளியுடன், சென்னை வழியே கரையை கடக்கிறது.

துறைமுகங்கள், அனல் மின் நிலையங்களுக் கும் கடும் ஆபத்து உள்ளது என்றும், 
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலுார், வேலுார் மாவட் டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் மழை இப்போது இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்க கடலில், கடந்த, 7ல், உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப் பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானால் வைக்கப்பட்ட, 'ரோஜா மலர்' என்ற பொருளில், 'வர்தா' என, பெயரிடப்பட்டு உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன், தெற்கு அந்தமானில் பீதியை ஏற்படுத்திய, 'வர்தா' புயல், அந்தமான் தீவுகளில் பலத்த மழையை கொட்டியது. அதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி கள், கடும் தவிப்புக்கு ஆளாகினர். பின், அங்கி ருந்து நகர்ந்த புயல், ஒடிசாவுக்கும், விசாகப் பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியை நோக்கி சென்றது.

ஆனால், காற்றின் திசை மாற்றத்தால், ஆந்திரா வின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கில்,நெல்லுார் - காக்கிநாடாவுக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர்ந்தது. பின், வட கிழக்கிலிருந்து
வலுவாக வீசிய காற்று, அனைத்து கணிப்பு களையும் தாண்டி, புயலை மேற்கு நோக்கி திருப்பிவிட்டுள்ளது.

இந்திய வானிலை மைய அதிகாரிகளின் தகவல் படி, நேற்று மாலையில், சென்னைக்கு தெற்கே, 300 கி.மீ., - நெல்லுாருக்கு தெற்கே, 370 கி.மீ., துாரத்தில்,வர்தா புயல் மையம் கொண்டிருந்தது. இது, கரையை நோக்கி, மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நகர்கிறது.அதிகாலை, சென்னை கடற்கரைக்கு, 100 கி.மீ., துாரத்திற்குள் நெருங்கி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:


மிகத் தீவிர புயலாக உருவெடுத்துள்ள வர்தா, கரையை நெருங்கும் போது தீவிரத்தை இழந்து, புயலாக வலுவிழக்கும். கரையை கடக்கும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இன்று பகல், நெல்லுாருக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நேரடியாக சென்னை வழியே, புயல் கரையை கடக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உட்பட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும். 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; படகுகளை பத்திரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

வர்தா புயல், சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளான, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் பகுதிகளை நேரடியாக தாக்கும். துறைமுகங் கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு, கடும் ஆபத்து ஏற்பட்டுள் ளதால் முன்னெச்சரிக்கை யாகபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப் புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு; மற்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு என்ன?


மழை மற்றும் காற்றால், குடிசைகள், மண் வீடுகள், தற்காலிக கொட்டகைகள், சேதமாக லாம். நெற்கதிர்கள், வாழைத் தோட்டங்கள், வலுவிழந்த மரங்கள் சாயும். சாலைகளில் மரங்கள் முறிந்து விழுவதால், உயர் மின் கம்பங்கள் மற்றும் கேபிள்கள் அறுந்து விழும்; மின் தடை ஏற்படும். நிலைமையை சமாளிக்க, பொதுமக்கள் முன் கூட்டியே மெழுகுவர்த்தி களை வாங்கி வைப்பது நல்லது.


சென்னை துறைமுகத்தில் 10ம் எண் எச்சரிக்கை கூண்டு


* வர்தா புயலால், சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில், உச்சபட்ச ஆபத்தை தெரிவிக்கும், 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 'புயலால் துறைமுகத்திற்கு கடும் ஆபத்து ஏற்பட உள்ளது' என, இதற்கு அர்த்தம். இதற்கு மேல், எச்சரிக்கை கூண்டு இல்லை
* கடலுார், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில், எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'தீவிரமான புயல் கரையை கடக்க வருகிறது; வெளியே வராதீர்கள்' என, அர்த்தம்
* பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களுக்கு, இரண்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'கடலுக்குள் புயல் நிலை கொண்டுள் ளது; துறைமுகங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்' என, அர்த்தம்.

Flash News : வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.

1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)

மேலும், 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

11/12/16

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்:

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறினார்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. இதில் கள்ள நோட்டுகளை அச்சிடுவது சாத்தியமில்லை. இந்த நோட்டுகள் காகித கரன்சிகளை விட தெளிவானதாக இருக்கும். தவிர, பல ஆண்டுகள்(5 வருடங்கள்) புழக்கத்தில் இருக்கும் என்பதாலும் மேற்கத்திய நாடுகள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு உள்ளன.
இந்தியாவில் இதுபோல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கள ஆய்வுக்காக 100 கோடி எண்ணிக்கையில் ரூ.10 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேசுவரம் ஆகிய 5 நகரங்களில் அறிமுகம் செய்யும் என அறிவித்தது.

மத்திய அரசு முடிவு

இந்த நிலையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ராஜாங்க நிதி மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கையில், “பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ஆகியவற்றினால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன” என்று குறிப்பிட்டார்.

இன்னொரு கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அதிகாரிகள் மீது நடவடிக்கை

2015-ம் ஆண்டு பாதுகாப்பு இழைக்கோடு இல்லாத 1,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சில தங்களுக்கு வந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் ஹொசாங்காபாத் பாதுகாப்பு காகித ஆலையில் இருந்து வினியோகிக்கப்பட்டு நாசிக்கில் அச்சிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக இலாகாபூர்வ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மீது சட்டவிதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

எதிர்காலத்தில் குறைபாடு இல்லாத வகையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை இல்லை - ஈடாக ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுத்தால் போதும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

TET Compensate by Refresher Course For Minority School Teachers - High court

HC asks minority schools to conduct refresher courses for teachers

The Madras High Court Bench here has reiterated its suggestion togovernment aided as well as
unaided minority schools to take intoconsideration the interest and welfare of students studying in  

 thoseinstitutions and conduct refresher courses as well as interactive sessionsfor their teachers during annual vacations, since the court had in Augustheld that it was not mandatory for them to clear the Teachers EligibilityTest (TET).
Dismissing a batch of writ appeals preferred by the Director of SchoolEducation (DSE) in 2014, Justices M. Sathyanarayanan and J. Nisha Banupointed out that another Division Bench in the Principal Seatof the HighCourt in Chennai had held that teachers of minority institutions need notclear the TET, since the Supreme Court on May 6, 2014 ordered that theRight of Children to Free and Compulsory Education (RTE) Act would not beapplicable to those institutions.

The Division Bench of Justices Huluvadi G. Ramesh and M.V. Muralidaran hadalso said: “However, keeping in mind the larger interest in which theGovernment has issued G.O.s (in 2011 making TET compulsory for teachers ofall schools), this court feels that the minority institutions may considerconducting refresher courses and also some interactive sessions to all theteachers during annual vacation in order to ensure and improve the qualityof teachers.”Since the Division Bench itself had made such a suggestion,the Bench ledby Mr. Justice Sathyanarayanan said that such refresher courses could beconducted for teachers either during annual vacation or other holidays inthe interest of the students pursuing education in the schools.


It pointedout that the DSE had preferred the appeals two years beforechallenginginterim orders passed by a single judge of the High Court in favour ofteachers appointed in Baren Bruck Higher Secondary School, St. John’sHigher Secondary School, Walker Higher Secondary School, Schaffter Higher  Secondary School, C.C.M. Higher Secondary School and Mary Sargent HigherSecondary School in Tirunelveli district.After the filing of the present appeals, much water had flown with theSupreme Court insulating minority institutions from the purview of the RTEAct and a Division Bench of the High Court in August this yearcategorically holding that teachers of those institutions need not clearthe TET.Hence, the appeals pending since 2014 were dismissed in view of thedecision rendered on the issue by the other Division Bench.