யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

+2 சிறப்பு துணைத் தேர்வு HALL TICKET பெறுதல் தொடர்பாக -தேர்வுத் துறை அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு எப்போது?

PGTRB HALL TICKET DOWNLOAD - 2017

G.O.(Ms) No.33 Dt: March 02, 2017 Examinations - Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued

அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு

அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில்  உணவு உண்ணும் மாணவர் 32 எனில்


MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
 என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..

நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்

MDM A20 B36 C00
(MDMspaceA20spaceB36spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
 குறுஞ்செய்தி இலவச

15/6/17

EMIS-Now Site will be kept under maintenance for migration from 2016-17 to 2017-18 academic year

*EMIS* *FLASH NEWS..*

EMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம் ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு* மாற்றுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்ய திறக்கப்படும்*.

மற்றமாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.

மற்றபள்ளியிலிருந்து *புதிதாக வந்துள்ள மாணவர்களை EMIS எண்களை
வைத்து STUDENT POOL லிருந்து எடுத்துக்கொள்ளவும்*.


*அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இதை பயன்படுத்தி EMIS எண் அனைத்து மாணவர்களுக்கும் இருக்கும்படி செய்ய வேண்டும்*

வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும்
வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது, உங்கள் ஏடிஎம் அட்டையை வங்கிக்கு போகாமலிருக்கலயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்தஇயந்திரம் வங்கிகளில் உள்ள பல வசதிகளை தன்னிடம் கொண்டுள்ளது. இந்த வகை ஏடிஎம்களின் செலவு தலா 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். இந்த இயந்திரங்கள் SS32, SS22, SS83 மூன்று வகைகளாக இருக்கும். இந்த இயந்திரங்கள் வழக்கமான ஏ.டி.எம். கள் போலவும் செயல்படும் ஆனால் சில கூடுதல் வசதிகள் உள்ளன.
இதில் முக்கிய அம்சம், ஏடிஎம் மூலமே வங்கிக் கணக்கை திறக்கலாம். அல்லது உங்கள் காசோலைகளை கிளியர் செய்ய முடியும். இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு அம்சத்தின்படி, உடனடி வங்கி கணக்குகள், பற்று அட்டைகள், தானியங்கி கையொப்ப சரிபார்ப்பு, நிதி பரிமாற்ற, பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றை செய்ய முடியும்.

இதுபோன்ற ஏடிஎம் மிஷின்கள் தற்போது 3 இடங்களில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.ஆர் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசுஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு
சமர்பித்துள்ளது. 

இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் வரவில்லை. இந்நிலையில் இந்த பரிந்துரைகள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என ஒரு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

இதில் வீட்டு வாடகை அலவன்ஸ் 27% உயர்வு உட்பட பல அலவன்ஸ்களை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 7ஆவது பே கமிஷன் ஆணையை செயல் படுத்த ரூ 65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றாமல் போனால் அரசு மேலும் தொகைய உயர்த்த வேண்டி வரும்.
இந்தமுறை 7ஆவது பே கமிஷன் நிறைய அலவன்சுகளை ஒழித்த போதிலும் பல அலவன்ஸ் தொகைகளை அதிகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

FA (b) Question

No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.





No automatic alt text available.



No automatic alt text available.









No automatic alt text available.No automatic alt text available.

No automatic alt text available.No automatic alt text available.
No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.

.கார்த்திக்ராஜா,
இடைநிலைஆசிரியர்,
...நி.பள்ளி - கத்தாழை,

கடலூர் மாவட்டம்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு *திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இலக்கு

அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு
முன் இருந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயில தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி கஷ்டப்பட்டு சேர்த்து வருகின்றனர்.

பெற்றோர்களின் இந்த மோகத்தால் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பள்ளி செயலர் உத்தரவு
இந்தகல்வியாண்டில் கல்வித் துறையின் முன்னேற்ற நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பள்ளியும் கவனம் செலுத்தி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதில் கடந்த 2011- -2012ல், 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைய கூடாது என பள்ளி கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கு முந்தைய இலக்கு

இதன்படி தேனி மாவட்டத்தில் 2011- -2012ல் 5,188 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கை நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 4,155 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் நேற்று வரை 3,865 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகள் போன்ற விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து சேர்க்கை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தா

இனி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தினசரி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும்!

டெல்லி: நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில்
இருக்கும் என பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாறியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

 இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 16-முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாங்கள் நடத்தவிருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு

அனைத்து நோய்களுக்கான மூல காரணம் - மன அழுத்தம்!

உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO)
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


உலகசுகாதார அமைப்பான ‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவரங்கள்படி உலகில் 30 கோடி மக்கள் மனத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதற்கு முன் உலக நாடுகளில் சுவாச பிரச்சினைதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தற்போது மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சினை யாக உலக மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு களுக்கு இடையிலேயான 10 ஆண்டு கால ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், மனஅழுத்தத்திற்கு உரிய சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும்,  இந்த மன அழுத்த நோய்  உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும் சக்தி கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து WHO இயக்குனர் ஜெனரல் டாக்டர் மார்கரெட் சான்  உலக நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“எல்லா நாடுகளும், மன ஆரோக்கியம் குறித்த,  தங்களது அணுகுமுறைகளை மறு பரிசீலனை செய்து மன அழுத்தம் நோய்க்கு உரிய  அவசரகால நடவடிக்கைகளை எடுக்க இந்தப் புதிய புள்ளி விவரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

WHO வைச் சேர்ந்த டாக்டர் ஸ்கேகர் சக்சேனா, WHO வின் ” வாங்க பேசலாம்”  பிரச்சாரம் அறிமுக நிகழ்ச்சியில்  பேசும்போது, இந்த பிரச்சினை, ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடியாததே என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமத்திற்கு காரணம் என்று கூறினார்.

மேலும், ” மன அழுத்தத்தில் இருப்பவர் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரிடம் மனம் திறந்து பேசுவதே , அவருக்கு மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிப்பதற்கான முதல் படி”  என்றும் கூறினார்.

இந்தமனஅழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உயர் வருமான முள்ள நாடுகளில் கூட மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில்ர 50சதவிகிதத்தினர்கூட  உரிய சிகிச்சை பெறுவதில்லை,  அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் பயனற்று போய்விடு கின்றன என்றும் கூறி உள்ளனர்.

மேலும், ஒவ்வொரு நாடும் தனது சுகாதார பட்ஜெட்டில் மன அழுத்த நோய்க்கு  3 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், குறைந்த வருமானமுள்ள நாடுகளில்  இது 1 சதவிகித மாக வும், இங்கிலாந்தின் உட்பட பல உயர் வருமான நாடுகளில் சுமார் 5% ஆக உள்ளது.

இந்தமனஅழுத்த நோய் காரணமாக உடலில் பல்வேறு  வகையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கூறி உள்ளது.

ஆகவேஸ்டிரெஸ் எனப்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட புன்னகை எனப்படும் மகிழ்ச்சியே மிகச்சிறந்த மருந்து.


நாம்சிரிக்கும்போது நமது உடல்களில் உள்ள நரம்புகளில் அதிர்வுகள் ஏற்பட்டு. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஏற்படுவதாக  க்டர் கூப்பர் ஆய்ந்து கூறி உள்ளார்.

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு

22.06.2017- வியாழன்- ஷபே காதர்
03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம

்25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா
04.09.2017-திங்கள்-ஓணம்
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு
18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு
02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை
24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ்
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி

31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 11 ஆயிரம் இடங்கள் காலி

சென்னை, ஜூன் 14 பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ. ஆர்.டி., என்ற, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.

இவற்றின் கீழ், மாநிலம் முழுவதும், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என, 463 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில், இரண்டு ஆண்டு, டி.டி.எட்., என்ற, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத் தப்படுகிறது.

இந்தபடிப்பில் சேர்வதற்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க் கைக்கு, இந்தாண்டு, ‘ஆன்லைன்’ முன்பதிவு அறிமுகமாகிறது. இதற்கு, இணையதளத்தில், வரும், 21 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள, 12 ஆயிரம் இடங்களுக்கு, நேற்று முன்தினம் வரை, 1,063 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.


இன்னும், 200 பேர்வரை மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப் புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு, 90 சதவீத மான, 11 ஆயிரம் இடங்கள் காலியாகும் அபாயம் ஏற் பட்டுள்ளது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தால், இடைநிலை ஆசிரியருக்கான, ‘டெட்’ தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சி பெற் றாலும், இடைநிலை ஆசிரியர் களுக்கு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை

ஓவியம் மூலம் கல்வி- கரூர் அரசு பள்ளி ஆசிரியை புரட்சி

கரூர்: தமிழகத்தில் தற்போது தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கருர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர்
கற்பிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் அங்கு அதிகப்படியான மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.



அந்தப் பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியை  ஒருவர் சுவரில் ஓவியங்கள் வரைந்து, அதன்மூலம் பாடம் நடத்துகிறார்.   பள்ளியின் வகுப்பறைகளில் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓவியம், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம், அளவீடுகளைப் புரியவைக்கும் ஓவியம், அடுத்த வகுப்புக்குச் செல்வதை பட்டாம்பூச்சிகளின் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தும் ஓவியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், கண்களையும் மனதையும் கொள்ளையடிக்கிறது. ''இதையெல்லாம் அதே பள்ளியின் ஆசிரியை ஒருவர் தான்'' என மாணவர்கள் உற்சாகமாக சொல்கின்றனர். அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியை பெயர் சாந்தி.  இது தொடர்பாக அவர் கூறும் போது,

"2000-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். அப்போது நாற்பது மணவர்களே இருந்தாங்க. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும் என்கிற ஆர்வமே இல்லாததை கவனிச்சேன். பசங்களும் பள்ளிக்கூடம் வராமல் சுத்திட்டிருந்தங்க. பலரிடமும் போய் பேசி பார்த்தாச்சு. படிக்கும் சூழ்நிலை மீது அவங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினால், தேடி வருவாங்கனு நினைச்சேன். பாடங்களை அவங்களுக்குப் புரிகிற மாதிரி நடத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன். எனக்கு ஓவியம் வரையறது ரொம்ப பிடிக்கும். அதனால், ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சாக்பீஸால் பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சு நடத்தினேன்.

முன்பைவிட அவங்ககிட்டே ஆர்வம் அதிகமானதையும் பாடங்களைப் புரிஞ்சுக்கிறதையும் உணர்ந்தேன். என் யோசனைக்கு வெற்றியடைஞ்சதை நினைச்சு உற்சாகமானேன்.   அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அரசு ஆரம்பிச்சபோது, இந்த மாவட்டத்தில் பத்து பள்ளிகளைத் தேர்வுசெஞ்சாங்க. அதில் எங்கள் பள்ளியும் ஒண்ணு. அது இன்னும் உற்சாகத்தைக் கொடுத்துச்சு. பெற்றோர்களிடம் பேசினேன். அவங்களே பெயின்ட், பிரஷ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து அடுத்த வாரத்துக்கான பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சுடுவேன். பள்ளி நாட்களில் அதைவைத்து பாடங்களா நடத்துவேன். தொடர்ந்து நான்கு வருஷங்கள் இப்படி பாடங்களை ஓவியங்களா வரைஞ்சேன். என்னுடைய உழைப்புக்குச் சரியான பலன் கிடைக்க ஆரம்பிச்சது. மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுச்சு. தலைமை ஆசிரியையும் உற்சாகப்படுத்தினாங்க. 

2015-ம் வருஷம் இந்தியா முழுக்க இருக்கும் பள்ளிகளுக்கிடையே 'டிசைன் ஃபார் சேஞ்ச்' என்ற புராஜெக்ட் நடந்துச்சு. பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிப்பது, மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியைப் புதிய நிலைக்கு கொண்டுச் சென்றது.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டி அது. அதில் எங்கள் பள்ளியும் கலந்துக்கிட்டோம். பரிசு கிடைக்கலைன்னாலும், அது எங்களை வெளியுலகுக்கு இன்னும் பெரிய அளவில் அடையாளம் காட்டிச்சு. தன்னார்வமிக்க மனிதர்களால் பள்ளியை மேம்படுத்தினோம். தரையில் மார்பிள் பதிச்சோம். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வீணான பொருள்களில் முகமூடி, அலங்கார பூஜாடிகள், பறவை கூடுகள் என தயாரிக்க சொல்லிக் கொடுத்தோம்.
இப்போ, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களும் எங்கள் பள்ளியைத் தேடிவந்து அவங்க பிள்ளைகளைச் சேர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. பாடக் கல்வியைத் தாண்டியும் பல விஷயங்களைச் சொல்லித்தர்றோம். நல்ல உணவு எது, கெட்ட உணவு என்று புரியவைக்கிறோம்.

விவசாயத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்க மண்புழு உரம் தயாரித்தல், ஆர்கானிக் முறை விவசாயத்தின் முக்கியத்துவம் என சொல்லிக்கொடுக்கிறோம். கல்வியில் மட்டுமின்றி, சமூக விஷயத்திலும் எங்கள் பள்ளி மாணவர்களை மேம்பட்டவர்களாக மாற்றிக் காட்டும் லட்சியத்தோடு எங்கள் பயணத்தைத் தொடர்ந்துட்டிருக்கோம்'' என்று புன்சிரிப்புடன் சொல்கிறார்
ஆசிரியை சாந்தி. 

மேலும் இது மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைக்கு செல்லும் முன் காலனிகளை ஒரு வரிசையாகவும், ஸ்கூல் பைகளை ஒருவரிசையாகவும் வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தையும் நன்கு விதமாக சொல்லித்தரும் அப்பள்ளியில் பேப்பர் கழிவுகளை கொண்டு முகமுடிகள், வித்யாசமான அலங்காரப் பொருட்கள் என்று சொல்லிக்கொண்டே கரூர் மாவட்டத்தின் முன்னோடி பள்ளியாகவே கோடங்கிப்பட்டி நடுநிலைபள்ளி நடுநிலையாகவே திகழ்கின்றது.



மேலும் அப்பள்ளியை அந்த ஊர் பொதுமக்கள் பல்வேறு ஊக்கங்களையும் அளித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பள்ளிகளில் தினந்தோறும் படித்து வருகின்றனர்.

உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள் - இன்று

No automatic alt text available.

பேரூராட்சி பணியாளர் சங்கம் எதிர்ப்பு - ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த கூடாது.

NEET - 2017 Exam Official Key Answer Published.