யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

உரை மருந்து" மறந்துட்டோமே!!!-------உடல்நலம் மருத்துவம்,


"உரை மருந்து" மறந்துட்டோமே!!!
.--
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன.
.
குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
.
கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
.
மறந்துட்டோமே "உரை மருந்து"
.
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும், "ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை".
.
இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம்.
.
நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
.
அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
.
உரை மருந்து என்றால் என்ன?
.
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
.
எவை எவை உரை மருந்தாகிறது?
.
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
.
எப்படி உபயோகப்படுத்துவது?
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
.
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
.
எப்போது கொடுக்க வேண்டும்?
.
குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
.
ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
.
குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
.
உரை மருந்துக்கான மூலப் பொருட்களும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகளும், அவற்றின் மருத்துவ பயன்களும்...
.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வாயு, சளி என்றால் வெந்நீரிலும்,

சளி, மப்பு என்றால்
வெற்றிலைச் சாற்றிலும்,துளசிச் சாறு, தேன் கலந்தும்,

வயிறு மந்தம், வயிற்றுப்போக்குக்கு, தேன், ஓமகஷாயம்,

மப்பு, ஜூரம், வாந்திக்கு
 இஞ்சிச் சாறு,தேன் விட்டும், பிரச்சனைக்கேற்ப இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2  அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் சேர்த்துக் கொடுக்கவும்.
.
#கடுக்காய்:
.
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
.
#சுக்கு:
.
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
.
#சித்தரத்தை:
.
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜூரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்தரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
.
#ஜாதிக்காய்:
.
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
.
#மாசிக்காய்:
.
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
.
#வசம்பு :
.
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
.
#கார_மருந்து என இதற்குப் பெயர்.
.
அதனால் உரைத்த மருந்தை #சிறுகச்சிறுகபுகட்ட_வேண்டும். தேன் சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும்.

 மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.!
.

லெமன் ஜூஸ்----உடல்நலம் மருத்துவம்


உங்க நாக்குல வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?



நாக்கில் வெள்ளைப்படலம் தென்படுவது பாக்டீரியா பெருக்கத்தால் ஏற்படுகிறது. இதை சில இயற்கை முறைகளை கொண்டு நாம் போக்கலாம். நாக்கு நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பும் கூட. இது தான் உணவின் சுவையை உணர்வதற்கு நமக்கு உதவுகிறது. எனவே அதை சுத்தமாக வைப்பது என்பது நமது கடமை. இந்த பாக்டீரியாக்கள் பெருகி அந்த இடத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த வெள்ளைப்படலம் தோன்றுகிறது.



இதை அப்படியே விட்டு விட்டால் நாக்கு முழுவதும் படர்ந்து பின்னாளில் பற்சொத்தை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிடும். எனவே இதை இயற்கை முறைகளைக் கொண்டு போக்கி பயன் பெறலாம்.

   

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ் உணவுகள் நாக்கில் இருக்கும் இந்த கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. இது அழற்சியை போக்கி வெள்ளைபடலத்தை உருவாக்கும் மைக்ரோபஸ்யை அழிக்கிறது.


உணவுகள்

புரோபயோடிக் உணவான யோகார்ட் (தயிர்) போன்றவற்றை தினமு‌ம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோபயோடிக் மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

   

கிளிசரின்

உங்கள் நாக்கு இந்த வெள்ளை படலத்தால் அதிகமாக பாதிகுகப்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிசரின் அப்ளே செய்து கொள்ளுங்கள்.
ஒரு சினன டூத் பேஸ்ட்டை கொண்டு கிளிசரினை அப்ளே செய்யுங்கள்.
2 நிமிடங்கள் பல் துலக்கவும், பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு நாக்கை சுத்தம் செய்யுங்கள்.

   

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் பெருகி உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லும். எனவே உங்கள் நாக்கை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1 டீ தேங்காய் எண்ணெய் (5 கிராம்)
ஒரு சின்ன பிரஷ்
பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் உங்கள் வாயை தேங்காய் எண்ணெய் கொண்டு கொப்பளியுங்கள்.
நாக்கையும், பற்களையும் சுத்தம் செய்ய 3-4 நிமிடங்கள் பிரஷ் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி பற்பசையை கொண்டு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.

   

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை எதிர்ப்பு பொருள் உள்ளது. இது நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸைக் கொண்டு வாயை சுத்தப் படுத்தி கொள்ளுங்கள்.
பிறகு எப்பொழுதும் போல் பற்பசையை கொண்டு பல் துலக்கி கொள்ளுங்கள்.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்க உதவுகிறது. இது நாக்கின் pH அளவை நடுநிலையாக்குகிறது.
இதனால் பாக்டீரியா மேற்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.
இதனுடன் லெமன் ஜூஸ் உங்கள் நாக்கில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
தேவையான பொருட்கள்
1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா (5 கிராம்)

   

லெமன் ஜூஸ்--

பயன்படுத்தும் முறை
பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி டூத் பேஸ்ட் கொண்டு எப்பொழுதும் போல் பிரஷ் செய்யுங்கள்.


கடல் உப்பு

கடல் உப்பும் இதற்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது. கடல் உப்பு நாக்கில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
கடல் உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் பொருள் பாக்டீரியாவை கொல்லுகிறது.
சிறுதளவு கடல் உப்பை எடுத்து உங்கள் நாக்கில் தடவிக் கொள்ளுங்கள். 3 நிமிடங்கள் நாக்கை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
இதனுடன் சிறுதளவு லெமன் ஜூஸ் கூட சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு ப்ரஷ் பண்ண எளிதாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3 நிமிடங்கள் ப்ரஷ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.


டிப்ஸ்கள்

ஒரு நாளைக்கு 3 முறை ப்ரஷ் செய்யும் வழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இருந்தாலும் அதிகமாக நீண்ட நேரம் ப்ரஷ் செய்வது அல்லது மதிய வேளைகளில் ப்ரஷ் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு இயற்கை முறையைக் கொண்டு பலன் பெறுங்கள்.

அதிகமான தண்ணீர் குடியுங்கள். இது நாக்கில் உள்ள ஈரப்பதத்தை காத்து பாக்டீரியா பெருக்கத்தை குறைக்கும்.

காய்கறி மருத்துவ சிந்தனை---உடல்நலம் மருத்துவம்,


 காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!

தலைப்பு  :  தோலில் உண்டாகும்  மஞ்சள் நிறம்  , அரிப்பு  மற்றும் ஆசனவாயில் உண்டாகும் அரிப்பு நீங்க
---------------------------------------
 சத்துக்கள்
 --------------------
நார்ச் சத்து , புரதச் சத்து  , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு
-----------------------------------
முற்றின  முருங்கைகாயில் உள்ள முற்றின விதை(15) அல்லது முருங்க விதை பவுடர் (3ஸ்பூன்) , கோவக்காய் (15) , புதினா (சிறிதளவு) ,மஞ்சள் தூள் (சிறிதளவு) இவை அனைத்தையும்  சேர்த்து  மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி   வடிகட்டி வைத்துக்கொண்டு நாள்
முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவரவும்.

ஒரு வேளை உணவில் தினமும் முருங்கக்காய் அல்லது முருங்கைக் கீரையை நீராவியில் வேகவைத்து பொறியலாக உணவில் அதிகம் சேர்த்து  சாப்பிட்டு வரவும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து  காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

காய்கறி மருத்துவ சிந்தனை---உடல்நலம் மருத்துவம்,


இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!

தலைப்பு  :  தோலில் உண்டாகக்கூடிய சிவந்த மற்றும்  வீக்கத்துடன் உண்டாகும் தடிப்பு தன்மை  நீங்க
---------------------------------------

  சத்துக்கள்
 --------------------
சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை , புரதம் வைட்டமின் (ஏ,  பி6  , சி ,  , கே )

தீர்வு
-----------------------------------
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு(100 கிராம்) அதனுடன்  முருங்கை விதை (10)  , கோவக்காய் (10), புதினா (சிறிதளவு )இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இளம் பிஞ்சு வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து  பொறியல் செய்து அதனுடன் புதினா தழையை  பொடியாக நறுக்கி  பொறியலுடன் கலந்து  மதிய வேளை உணவில்  அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.