யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

Current Affairs Question and Answers...!! நடப்பு நிகழ்வுகள்

1. 7 அணிகள் பங்குபெற்ற ஆசிய ரக்பி செவன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அணி - இந்திய மகளிர் அணி 

2. இந்து திருமண சட்ட மசோதா 2017 சமீபத்தில் எந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டது - பாகிஸ்தான்

3. கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் - பிப்ரவரி 19, 1878

4. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் - டிசிஏ. ரங்கநாதன்

5. சத்திரபதி சிவாஜி பிறந்த வருடம் - பிப்ரவரி 19, 1627

6. ஆர்.பி.ஷா என்பவர் எந்த துறையில் பொது மேலாளராக பதவி வகித்தார் - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 

7. ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி கடைசி ஆட்டத்தில் யாரிடம் தோற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது - தென் கொரியா

8. தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை விண்வெளியில் பயிரிட்டவர் யார் - அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன்

9. விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-வது பயிர் எது - சீன முட்டை கோஸ்

10. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் - சுனில் மேத்தா

11. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஜயர் பிறந்த ஆண்டு - 1855, பிப்ரவரி 19

12. இந்திய அரசு யாருடைய நினைவாக பிப்ரவரி 18, 2006-ம் ஆண்டில் அஞ்சல் தலை வெளியிட்டது - உ.வே. சாமிநாத ஜயர்

13. அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள் - டிசம்பர; 20, 1951

14. சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நு}ல் நிலையம் அமைக்கப்பட்ட வருடம் - 1942

15. மத்திய ஆயுஷ் அமைச்சகம் கிராமங்களில் சுகாதார மற்றும் சுகாதார கல்வியை ஊக்குவிக்க எந்த திட்டத்தை தொடங்கியுள்ளது - ளுறயளவாலய சுயமளாய Pசழபசயஅஅந




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதியார் 




1. பாரதியார் பிறந்த நாள் - 11.12.1882 

2. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம் 

3. பாரதியாரின் பெற்றோர் - சின்னசாமி அய்யர் - இலட்சுமி அம்மாள் 

4. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர் - பாரதியார் 

5. பாரதியாரின் சிறப்புப் பெயர்கள் - மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன் 

6. பாரதியாரின் கவித்திறனை மெச்சி எட்டப்ப நாயக்கர் மன்னர் பாரதியாருக்கு வழங்கிய பட்டம் - பாரதி 

7. பாரதி தன்னை ---------- என அழைத்துக்கொண்டார் - ஷெல்லிதாசன்

8. பாரதி என்பதன் பொருள் - கலைமகள் 

9. பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள் - பாஞ்சாலிசபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு 

10. பாரதியார் ----------- பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், ----------- பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார் - சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி 

11. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி (1904) 

12. பாரதியார் ---------------- என்ற பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை 

13. பாரதியாருக்கு எட்டையபுரத்தில் உள்ள ஏழு அடி உயர திருவுருவச்சிலை யாரால் திறந்து வைக்கப்பட்டது - பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் 

14. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

15. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார் 


பாரதியாரின் இலக்கியப் பணிகள் :

📃 பாரதியார் தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்.

📃 பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

நு}ல்களும், அதனைப் படைத்த ஆசிரியர்களும் 



1. 'இன்னா நாற்பது" நு}லின் ஆசிரியர; - கபிலர;

2. 'டென் லிட்டில் பிங்கர்ஸ்" நு}லை எழுதியவர் - அரவிந்த் குப்தா

3. 'என் சரிதம்" நு}லை எழுதியவர் - உ.வே.சாமிநாத அய்யர்

4. 'மனுமுறை கண்ட வாசகம்" நு}லைப் படைத்தவர் யார்? - இராமலிங்க அடிகள்

5. 'தேம்பாவணி" பாடலைப் பாடியவர் - வீரமா முனிவர் 

6. 'காந்திபுராணம்" எனும் நு}லை எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார் 

7. 'நளவெண்பா" பாடலைப் பாடியவர் - புகழேந்திப் புலவர்

8. 'விழுதும் வேரும்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

9. 'திரிகடுகம்" பாடலைப் பாடியவர் - நல்லாதனார்

10. 'வழித்துணை" புதுக்கவிதையைப் பாடியவர் - ந. பிச்சமூர்த்தி

11. 'இன்ப இலக்கியம்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

12. 'பு+ங்கொடி" காவியம் பாடியவர் யார்? - முடியரசன்

13. 'அம்மானை" எனும் விளையாட்டுப் பாடலைப் பாடியவர் - சுவாமிநாத தேசிகர் 

14. 'மெய்ப் பொருள் கல்வி" பாடலைப் பாடியவர் - வாணிதாசன் 

15. 'இது எங்கள் கிழக்கு" எனும் பாடலைப் பாடியவர் - தாரா பாரதி

இளமை மரபுச் சொற்கள் :

விலங்குகள் - இளமை மரபு 

குருவி - குருவிக்குஞ்சு 

கழுதை - கழுதைக்குட்டி

நாய் - நாய்க்குட்டி

சிங்கம் - சிங்கக்குருளை 

கோழி - கோழிக்குஞ்சு 

குரங்கு - குரங்குக்குட்டி 

யானை - யானைக்கன்று 

கீரி - கீரிப்பிள்ளை 

புலி - புலிப்பறழ்

மான் - மான்கன்று 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

சிறப்பான பாடலடிகளைப் பாடியவர்கள் 



1. 'புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகுவார்" என்று பாடிய புலவர் - குமரகுருபரர்

2. 'கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர் - திருவள்ளுவர்

3. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" என்று கூறுபவர் - பு+தஞ்சேந்தனார்

4. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்று பாடியவர் - திருமூலர்

5. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று பாடியவர் - ஒளவையார்

6. 'முகநக நட்பது நட்பன்று" என்று உரைத்தவர் - திருவள்ளுவர்

7. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று பாடியவர் - திருமூலர்

8. 'சு+ழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக் குறுத்தனவே" என்றவர் - திருத்தக்கதேவர் 

9. 'ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்றவர் - மதுரைக் கூடலு}ர்க் கிழார் 

10. 'மழையே மழையே வா - நல்ல வானப் புயலே வா வா" என்று பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

11. 'மலையின் மகள்கண் மணியே அனைய மதலை வருக வருகவே" என்று பாடுபவர் - குமரகுருபரர் 

12. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" என்று பாடியவர் - மருதகாசி

13. 'அன்பின் வழியது உயர்நிலை" என்று கூறியவர் - திருவள்ளுவர்

14. 'தமிழ்வெல்க வெல்க என்றே தினம் பாடு" என்றவர் - பாரதிதாசன்

15. 'ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்று பாடியவர் - மகாகவிபாரதி

சொற்பொருள் :

1. பண் - இசை

2. வண்மை - கொடைதன்மை

3. பந்தயம் - போட்டி 

4. பயக்கும் - தரும்

5. சுடும் - வருத்தம்

6. அகம் - உள்ளம் 

7. தானை - படை 

8. மேதை - அறிவு நுட்பம்

9. நெறி - வழி 

10. வனப்பு - அழகு 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது ப

27/3/17

செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற உத்தரவு

நடப்பு செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும் என்று செல்போன் சேவை
வழங்கும் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காணப்பட்டு, ஒழிக்கப்படுகின்றன. ஊழலும் தடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள நடப்பு செல்போன் சந்தாதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும், அதன் அடிப்படையில் அவர்களை சரிபார்க்க வேண்டும் என்று தொலைதொடர்புத்துறை, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொலைதொடர்புத்துறை கூறுகிறது.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .

+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்!!

நீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்

நாடுமுழுவதும் நீட் தேர்வு நடத்துவதற்கு கூடுதலாக 23 நகரங்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம்.நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதி மசோதா நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 80 மையங்களில் (தமிழகத்தில் 5 மையங்கள்) கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், நாடு முழுவதும் புதிதாக 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அந்தநகரங்களின் பட்டியல் http://cbseneet.nic.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன்நிரந்தரக்கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான்கார்டு செல்லாது.
நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார்எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள்காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது.

 பான் கார்டு வரி செலுத்தும்அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில்இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப்பயன்படுத்தலாம்.மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாகமத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவைஎன்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும்அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்மதிய உணவிற்கும் ஆதார்எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும்ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும்பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார்கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன்இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின்வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களைவருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறியமுடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லிவருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாளஅட்டைபோன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டைமாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண்கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.

எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார்அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்குமேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும்அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும்முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லிதெரிவித்தார் .

மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதுசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஏப்.1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

ஏப்1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
2016-17-ம் ஆண்டிற்காக நிதியாண்டு கணக்கு நிறைவடைவதையொட்டி வங்கிகளுக்கு நாளை (மார்ச் 26-ம் தேதி) முதல் ஏப். 1-ம் தேதி வரையில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் 2018 - ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு ஏப்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகத்தின் இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனிதநேயம் அறக்கட்டளை யால் நடத்தப்படும் சைதை துரை சாமியின் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகத்தில் 2018-ம் ஆண்டுக் கான ஐஏஎஸ் முதல்நிலைத் தேர் வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இப் பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வுசெய்ய ஏப்ரல் 30-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நுழை வுத்தேர்வு நடைபெறும். இத்தேர் வுக்கான வினாக்கள் பொது அறிவு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இலவச பயிற்சிக்கான மாணவர் தேர்வில் மாவட்ட வாரியாக ஒதுக் கீடு உண்டு. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமலேயே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவர்களும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.இலவச பயிற்சிக்கான நுழை வுத்தேர்வு எழுத விரும்புவோர் www.saidais.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே ஆன்லைன் பயிற்சிக்கு விண்ணப் பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21-ம் தேதி ஆகும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அந்த அனுமதிச்சீட்டில் பாஸ் போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அனுமதிச்சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 044-24358373 என்ற தொலைபேசி எண்ணிலோ, 98401-06162 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

DEE: 2016 - 17 Teacher's Transfer Application Form




வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுக்கணும்னா ஆதார் கண்டிப்பா வேணும் .

போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுக்களின் பல்வேறு வகையான நலதிட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வரிசையில் புதிதாக ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கும் தற்போது ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இருசக்கர மற்றும நான்கு சக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்சு பெறும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய டிரைவிங் லைசென்சு மட்டுமின்றி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லைசென்சுகளை புதுப்பிப்பதற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

இதன்மூலம் போலி லைசென்சு பயன்படுத்துவதை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து குற்றங்களையும் தடுக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க இது உதவும்.

நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் ஒரு வாகனமானது எந்த மாநில வாகனமாக இருந்தாலும் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான லைசென்சு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் உள்ள குறைகளை களைய ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான முறையில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும்.

மேலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்சு பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் போராட்ட ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்.நாள் - 26.03.2017

26.03.2017 இன்று நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல முறை மாநில அரசை அனுகியும், போராட்டம் நடத்தியும் பணிநிரந்தரம் குறித்து வாய் திறக்கவில்லை.

எனவே மத்திய அரசை நேரில் சென்று அனுக மே மாதத்தில் 2000 பேர்முதல்கட்டமாக டெல்லி  சென்று நேரில் மத்திய மணிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களை அனுகி நம் நிலையினை எடுத்து கூறி மனு அளித்து தமிழக அரசை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்துவது என்றும்,அகில இந்திய திட்ட அலுவலக செயலாளரை முற்றுகையிட்டு மனு அளிப்பது என்றும், திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, டெல்லி வர உள்ளவர்கள் ஒன்றியநிர்வாகிகளிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆதார் நகல் அளித்து பெயரை முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பிற மாவட்ட நிர்வாகிகள் திரு.என்.வெங்கடேசன் அவர்களை கலந்து ஆலோசிக்கவும் தடுமாறும் தலைமைகளை தவிர்த்து நமக்கு நாமே செயல்திட்டம் வகுத்து செயல்படுவோம்.

*என்.வெங்கடேசன்
*திருவண்ணாமலை
*பகுதிநேர ஆசிரியர்கள் டெல்லி போராட்டக் குழு

JIPMER ADMISSION 2017-2018

JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017


It is informed that JIPMER being an Institute of national importance (Act of Parliament) under theMinistry of Health and Family Welfare, Government of India have been EXEMPTED from NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) (NEET-UG) for admission to MBBS Course inJIPMER, Puducherry The prospectus has been uploaded in the JIPMER website (www.jipmer.edu.in) which contains detailed information of important dates, test, syllabus, eligibility criteria to appear/admission, reservation, examination fee, cities of examination, Age etc. (Kindly click the following link to see the MBBS Prospectus – MBBS Prospectus 2017) Details of Online Application User Interface with screen shot will be hosted in the website separately on 27.03.2017 at 11:00 AM. Students and Parents are, therefore, advised to regularly visit the website for updates.www.jipmer.edu.in

Click here NOTIFICATION 2017...

26/3/17

ALAGAPPA UNIVERSITY DDE - December 2016 Results Published

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட, எழுத்துத் தேர்வு முடிவுகள், நேற்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.
அதன்அடிப்படையில், காலியிடங்களுக்கேற்ப,1 : 5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரி பார்ப்புக்கான பட்டியல், முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.

இப்பட்டியல், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்; நடைமுறையில் உள்ள இன சுழற்சி; விண்ணப்பதாரர்கள் அளித்த விபரம் ஆகியவற்றின் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!

தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை,
கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.

அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்'
வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.


இதற்கு, 45.57 கோடிரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.