யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/17

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு; நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்

அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர். 

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், 'இணையதளத்தை பாருங்கள்; பத்திரிகைகளை பாருங்கள்' எனக்கூறி அனுப்பி விடுகின்றனர். இணையதளமோ, மொட்டை கடிதம் போல, அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி, வெறும் அறிவிப்புகள் மட்டுமே, ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.

டி.ஆர்.பி., வரலாறு, செயல்பாடு, அதிகாரிகள், உறுப்பினர்கள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யாரை அணுக வேண்டும், அவர்களின் பெயர் மற்றும் முகவரி, 'டெட்' தேர்வை அறிமுகம் செய்த அரசாணை, 'டெட்' தேர்வின் முந்தைய அறிவிப்புகள், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் போன்ற விபரங்கள் இல்லை. பொது அலுவலருக்கான தொடர்பு எண், செய்தி தொடர்பாளர் யார், அவரது தொலைபேசி எண்ணும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒரு இணையதளத்தில், எந்தெந்த அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும், இதில் இல்லை.விதிகளின் படி, இணையதளத்தையே பராமரிக்க தெரியாத, டி.ஆர்.பி., அதிகாரிகள், வருங்கால சந்ததிகளை உருவாக்கும், ஆசிரியர்களின் பணி நியமனத்தை எந்த அளவுக்கு தரமாக நடத்த முடியும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழை மறந்த அவலம் : தமிழகத்தில், அரசாணை மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வெளியிடுவது கட்டாயமாகும். ஆனால், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், தமிழ் மொழி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தை பார்த்தாவது, டி.ஆர்.பி., கற்றுக்கொள்வது நல்லது.

TET தேர்வுக்கு படிப்பது எப்படி? - TIPS

√.முதலில் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

√.தேர்வு நாள் வரை பொழுதுபோக்குகளைத் தவிருங்கள்

√.உறவினர் வீட்டு விசேஷங்களை தவிருங்கள்


√.செல்போன் பயன்பாட்டை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள்.

√.ஒரு நாளைக்கு ஒரு சப்ஜெக்ட் அல்லது மணிக் கணக்கில் ஒவ்வொரு சப்ஜெக்ட் என அட்டவணைப் படுத்திக் கொள்ளுங்கள்

√.இப்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் புரியாத பகுதிகளில் தேங்கிக் கிடக்காதீர்கள். பாடங்களைக் கடந்து சென்று கொண்டேயிருங்கள். அப்போது தான் படித்த திருப்தி ஏற்படும்.
√.நீங்கள் பலவீனமாக இருப்பதாக கருதும் பாடத்தில் சற்றே கூடுதல் நேரமும், பலமாக இருப்பதாக நினைக்கும் பாடத்தில் சற்று குறைவான நேரமும் செலவிடுங்கள்

√.வேலைக்கு எதுவும் போகாமல் இருப்பவர்கள் இந்த நேரத்தில் தான் படிக்கவேண்டும், இந்த நேரத்தில் படிக்கக் கூடாது என்றில்லை. தூக்கம் வரும்போது தூங்கிவிடலாம், விழிப்புடன் இருக்கும் தருணங்களில் தெளிவான மனநிலையுடன் படிக்கலாம்

√.முதலில் நம்மிடம் இருக்கும் பாடக்குறிப்புகள், மெட்டீரியல்களை முழுமையாக படித்து முடியுங்கள். புதிய மெட்டீரியல் தேடி நேரத்தை வீணாக்காதீர்.

√.உற்சாகமான மனிதர்களுடன் உரையாடுங்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகியிருங்கள்.

√.நேரம் கிடைத்தால் உங்கள் அளவிற்கு படித்து தயார் செய்தவர்களுடன் குழு உரையாடல் மேற்கொள்ளுங்கள்.

√.தூக்கம் வராதவர்கள் படுக்கைக்கு சென்ற பின்பு படித்தவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள். அப்படியே தூங்கிவிடுவீர்கள்.

√.நேரம் வாய்த்தால் படித்தவற்றை ஒரு எக்ஸ்பிரஸ் ரிவிஷன் செய்யுங்கள்.

√.இதற்குப்பிறகு மாதிரித் தேர்வை எழுதிப் பாருங்கள்.

√உங்களுக்கு மதிப்பெண்கள் மத்தாப்புகளாகும்
வானம் வசப்படும். வாத்தியார் கனவும் மெய்ப்படும்.

BREAKINGNEWS | *ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 கட்டணம் செலுத்த ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு



வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'

நீட்' தேர்வு எழுத வயது வரம்பு தளர்வு

புதுடில்லி: 'இந்த ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை, 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., நிர்ணயித்த வயது வரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நடப்பு, 2017ல் நடக்கும் நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை, அடுத்த ஆண்டு முதல் நிர்ணயித்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உயிரியலில் 'சென்டம்' கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

விருதுநகர்: 'பிளஸ் 2 உயிரியல் தேர்வில் தாவரவியல் பகுதி எளிதாக, விலங்கியல் வினாக்கள் கஷ்டமாக இருந்ததால் சென்டம் பெறுவது சிரமம்,' என, ஆசிரியை , மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

விலங்கியல் கடினம் - நிதிஷ் பரத்வாஜ் (மாணவர், நோபிள் மெட்ரிக் .,மேல்நிலை பள்ளி, விருது நகர்): ஒரு மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. விலங்கியல் பாட பிரிவில் 3 மதிப்பெண்களுக்கான கேள்வி கடினமாக இருந்தது. 5,10 மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. தாவரவியல் பாட பிரிவில் அனைத்து கேள்விகளுமே சுலபமாக இருந்தது.
நுணுக்கமான கேள்விகள் - சி.ராஜலட்சுமி( மாணவி,ஜேசீஸ் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி, சிவகாசி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. விலங்கியலில் மட்டும் 3 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது. சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. புத்தகத்தை ஒரு வரிவிடாமல் படித்திருந்ததால் 10 மதிப்பெண் வினாவிற்கு எளிதாக விடை எழுத முடிந்தது. கேள்விகளும் நுணுக்கமாக கேட்கப்பட்டிருந்ததால், பதிலை மட்டும் படித்து எழுதுபவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.
தாவரவியல் எளிமை - சாரதா (ஆசிரியை, ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்): தாவரவியல் வினாக்கள் எளிமையாக இருந்தன. விலங்கியலில் சென்டம் பெறுவது சிரமம். மூன்று மதிப்பெண் வினாக்களில் 18, 22, 26 கடினம். வினா உள்ள பாடங்களை தெளிவாக படித்திருந்தால் தான் விடையளிக்க முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன, எதிர்பார்த்தது வந்தன. 10 மதிப்பெண் வினாவில் உடற்செயலியல் பாடத்தில் வந்த இரு
வினாக்களும் எளிது. இந்த பகுதி 36 வது வினாவில் இருவினாக்களை சேர்த்து கேட்டிருந்ததால் அதிகம் எழுதவேண்டும். பொதுவாக சராசரி மாணவர்கள் மதிப்பெண் பெறுவது கஷ்டம் தான்.

வாய்ப்பும், வளர்ச்சியும் உள்ள துறைகளை தேர்வு செய்யுங்கள்! : ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

மதுரை: 'உயர் கல்வியில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ள துறைகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்,' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
தினமலர் சார்பில் மதுரையில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'வேலை வாய்ப்பு ஆலோசனை' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:எதிர்காலத்தில் எந்த துறைகளில் வாய்ப்பு, வளர்ச்சி உள்ளதோ அந்த துறைகள் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தற்போது இயந்திரமயமாதல் (ஆட்டோமேஷன்), புதிய கண்டுபிடிப்புகள், பாடத் திட்டங்கள் ஆகிய மூன்று சவால்களை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இயந்திரமயமாதலால் பலரது வேலைவாய்ப்பு பறிபோய் விடுகிறது. ஆராய்ச்சிகள் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
கல்லுாரிகளில் தற்போதுள்ள பாடத் திட்டங்களுக்கும், தற்காலிக வளர்ச்சிக்கும் அதிக இடைவெளி உள்ளதால், படித்த உடன் வேலை என்பது கனவாகிறது. படிப்புகளை தேர்வு செய்வதை விட அனைத்து வசதிகளும், பாடத் திட்டத்தை தாண்டி விஷயங்களை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இ.சி., இ.இ.இ., போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவற்றை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்கலாம். எந்த பிரிவு படித்தாலும் 99 சதவீதம் பேர் ஐ.டி., துறையில் தான் வேலைக்கு செல்கின்றனர். மெக்கானிக் இன்ஜி.,யை பெண்கள் தேர்வு செய்யலாம்.படிக்கும் போதே திறமை மட்டுமின்றி, புத்திசாலித் தனத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 2021க்கு பின் பொறியியல் முடித்தவர்களுக்கு கல்லுாரிகளில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் மாறி, போட்டித் தேர்வுகள் மூலம் வாய்ப்பு ஏற்படும் சூழல் அமையும். அதற்காக மாணவர்கள் தயாராக வேண்டும். உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.மருத்துவத்தை பொறுத்துவரை அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காத வகையில் தான் 'நீட்' தேர்வு முடிவு அமையும். இதுகுறித்து தமிழக அரசு மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடை மருத்துவம், ஓமியோபதி, சித்தா படிப்புகளுக்கும் எதிர்காலம் உள்ளது. பாரா மெடிக்கல் படித்தால் மேல்படிப்பு கட்டாயம் படிக்க வேண்டும். கலைப் பிரிவுகளில் கணிதம், ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம். பி.டெக்., கட்டடக் கலை, அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ், சட்டப் படிப்புடன் கம்பெனி செகரட்டரிஷிப்பும் முடித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு பேசினார்.

ஜியோ அடுத்த அதிரடி அறிவிப்பு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 120 ஜிபி டேட்டா..!

                                              
                                         ஜியோ அடுத்த அதிரடி அறிவிப்பு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 120 ஜிபி டேட்டா..!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.   ரூ. 149 அல்லது அதற்கும் அதிகமாக டேட்டா ரீச்சார்ஜ் செய்தால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை வழங்கி உள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அவர்களுக்கு கூடுதலாக 1 ஜிபி, 5 ஜிபி, 10 ஜிபி பயன்கள் கிடைக்கும். இந்த பலன்களை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியும். ரூ. 149க்கு   கூடுதலாக 2 ஜிபியை பெற முடியும்.


303 ரூபாய் பிளான் மூலம் கூடுதலாக 5 ஜிபியை பெற முடியும். ஏற்கனவே 28 ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, கூடுதலாக 5 ஜிபி வழங்கப்படுகிறது.

ரூ. 499 மற்றும் அதற்கும் அதிகமான பிளான்கள் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகையுடன் கூடுதலாக 10 ஜிபி வழங்கப்படுகிறது. இந்த 10 ஜிபியை பயன்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே பிரைமில் சேரும் கடைசி தேதியை மார்ச் 30 வரை ஜியோ நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. பிரைமில் இணைந்தோர் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 2.7 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதத்திற்கு 10 ஜிபி என்கிறபோது வருடத்திற்கு 120 ஜிபி இலவசமாக வழங்குகிறது ஜியோ! 

பிரைம் யூஸர் ஆவதற்கு 99ரூபாய் ஒரு முறை கட்டணம் (One time fee) கட்ட வேண்டியிருந்தது. ஆனால், அதையும் இலவசமாக பெற ஜியோவில் ஒரு வழி இருக்கிறது.

பிரைம் யூஸர் கட்டணமான 99 ரூபாயை ஜியோ மணி (Jio Money) மூலம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் தருகிறார்கள். அதன் பின் ஏப்ரல் மாதத்துக்கு 303 ரூ ரீசார்ஜ் செய்தால் அதில் ஒரு 50ரூ கேஷ்பேக் உண்டு. ஆக, இந்த 100 ரூபாய் கேஷ்பேக் மூலம் பிரைம் யூஸர் ஆவதற்கான 99ரூ கட்டணத்தை திரும்ப பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். மகிழ்ச்சி.

அதைத் தாண்டி பல டேட்டா ஆஃபர்களையும் அள்ளி தெளிக்கிறது ஜியோ. மாதம் 149ரூ ப்ரீபெய்ட் பிளானில் இலவச கால்களும், 2 ஜிபி டேட்டாவும் உண்டு என சொல்லியிருந்தார்கள் மார்ச் 31க்குள் 149ரூ ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது 3 ஜிபி டேட்டா 149 மட்டுமே. போலவே, 303 ரூ ரீசார்ஜில் 28 நாட்களுக்கு, தினம் ஒரு ஜிபி என 28ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய ஆஃபர் படி 28ஜிபி தாண்டி இன்னுமொரு 5 ஜிபி டேட்டாவை தருகிறது ஜியோ. 303 ரூபாய் தாண்டியும் பல ரீசார்ஜ் பேக்குகள் பல 499, 999, 1999 என ஜியோவில் உண்டு. அதில் அதிகபட்சமாக மாதம் 10ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 120 ஜிபி இலவச டேட்டா. 

இந்த ஆஃபர் எல்லாம் மார்ச் 31க்குள் மட்டும் தான். ஏப்ரல் மாதம் முடிந்தால் அடுத்த மாதம் என்ன செய்வது? இதற்கும் வழி வைத்திருக்கிறது ஜியோ. ப்ரீபெய்ட் என்பதே முன் கூட்டியே கட்டணம் கட்டி வைப்பதுதானே? அதை ஏன் ஒரு மாதத்துக்கு மட்டும் என யோசித்த ஜியோ அதிரடியாக இன்னொன்றை செய்திருக்கிறது. நீங்கள் ஆகஸ்ட் மாதம் அதிக டேட்டா பயன்படுத்தும் தேவை வரும் என நினைக்கறீர்கள். இப்போதே ஆகஸ்ட் மாத பேக்குக்கான கட்டணத்தை கட்டி விடலாம். அந்த மாதம் கூடுதல் டேட்டா உங்களுக்கு கிடைத்துவிடும். திருமண மண்டபத்துக்கு பல மாதங்கள் முன்பே அட்வான்ஸ் தந்து பதிவு செய்கிறோமே.. அது போல ஆஃபரையும் முன்பதிவு செய்யலாம். இது எல்லாம் மார்ச் 31க்குள் செய்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

ஜியோவின் ஆஃபர் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 2016 கடைசி காலாண்டில் பலத்த நட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்தன. பின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களும் ஆஃபர்களை அடுக்கினார்கள். ஆனால், யாருமே தெளிவான ஆஃபர்களை அறிவிக்கவில்லை. செக்மெண்ட்டட் ஆபர் என குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான ஆஃபர்களையே அதிகம் கொண்டு வந்தார்கள். ஜியோவின் இந்த புதிய ஆஃபர்களை சமாளிக்க இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

பெட்ரோல் விலை ரூ.3.77 காசுகள், டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைவு

மும்பை: பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள்  அறிவித்துள்ளன. மேலும் விலை குறைப்பு  இன்று நள்ளிரவு  முதல் அமலுக்கு வருகின்றன.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்

விருதுநகர்: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி, ஏப்.12ம் தேதிக்குள் முடியுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (மார்ச் 30) முடிவடைந்தது. இதேபோல, பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை திருத்துவதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், தலா ஒரு திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழி விடைத்தாள் திருத்தப்படும். 4ம் தேதி பிற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை ஏப்.12ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 விடைத்தாள்களை ஏப்.24ம் தேதிக்குள்ளும் திருத்தி முடிக்க, பள்ளி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் குகைபாதை: 10 அம்சங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான குகைப்பாதையை வரும் ஞாயிறு (ஏப்ரல்2) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பாதையின் 10 முக்கிய அம்சங்கள்:

நேரம் குறையும்:

1.காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் செனானி முதல் ரம்பன் மாவட்டம் நாஷ்ரி என்ற இடம் வரை ரூ.2,500 கோடி செலவில் இந்த குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
2. கடந்த 2011ல் துவங்கிய இந்த குகை பாதை அமைக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. சுமார், 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
3.இப்பாதையின் நீளம் 10.89 கிலோ மீட்டர்.அதாவது, ஆசியாவிலேயே நீளமான குகைப் பாதை என்ற பெயரைப் பெறுகிறது. 
3.இந்த பாதை மூலம், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் பயணம், 2 மணி நேரம் குறையும்.
4.இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.
 5. ஜம்மு பிராந்தியத்தில்உள்ள கிஸ்த்வர், தோடா, பதேர்வா பகுதிகளுக்கும் இணைப்பு வசதி கிடைக்கும்.

6. இந்த பாதையில்,ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
7.பாதையில் யார் நுழைந்தாலும் அவர்களை கண்டறிய முடியும்.
8.தீத்தடுப்பு சாதனங்கள், மின்னணு கண்காணிப்பு முறைகள் பாதை நெடுக பொருத்தப்பட்டுள்ளன.9.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆட்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
10.கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு, ஆண்டு முழுவதும் பயன்தரத்தக்க வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய பொறியாளர்களின் திறமைக்கு இக்குகை பாதை ஒரு சான்று.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்... அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்

ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது. இந்த நிதியாண்டில் பல மாற்றங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.

 பட்ஜெட்டை முன்கூட்டியே அதாவது பிப்ரவரி 1-ந்தேதியே தாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. சலுகைகள் முதல் புதிய வரிகள் வரை, வரி குறைப்பு அனைத்தும் அமலாகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது.
 இதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, வருமான வரி விலக்கு என பல மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.  அவை என்ன என்பது தெரிந்துகொள்ளலாம்.
 வருமானவரி குறைப்பு
2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் வருமானவரி செலுத்து அளவு குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதாவது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரைஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள், 10 சதவீதம் வருமானவரி வரி செலுத்தி வந்தனர். அதை 5 சதவீதமாக பட்ஜெட்டில் குறைத்து நிதிஅமைச்சர் ஜெட்லி அறிவித்தார்.அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.அதாவது இந்த நிதியாண்டு முதல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5. லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் மட்டுமே வருமானவரி செலுத்தினால் போதுமானது.
அதிலும், வீட்டுவாடகை, குழந்தைகளின்படிப்பு,மருத்துவச்செலவு என 80 சி படிவத்தில் கணக்குகாட்டினால், அதையும் செலுத்த தேவையில்லை.
 2. ரூ.3.5 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ.2575 வரி செலுத்தினால் போதுமானது, இதற்கு முன்பு இது ரூ.5,150 ஆகஇருந்தது. மேலும், வரிசெலுத்தியதை திரும்பப் பெறும் டேக்ஸ் ரிபேட் அளவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 10 சதவீதம் கூடுதல்வரி
3. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் வருமானவரியோடு சேர்த்து, கூடுதல் வரியாக 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது நடைமுறைக்கு வருகிறது.
15சதவீதம் வரி
4. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல்வருமானம் இருப்பவர்களுக்கு ஏற்கனவே செலுத்தும் வருமானவரியோடு சேர்த்து கூடுதல் வரியாக 15 சதவீதம் செலுத்துவதும் நடைமுறைக்கு வருகிறது.
 ஒருபக்க வருமானவரி ரிட்டன் படிவம்
5. ஆண்டுக்கு ரூ. 5லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், முதல்முறையாக வருமானவரி செலுத்துபவர்களுக்காக ஒரு பக்கம் கொண்ட வருமானவரி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக வருமானவரி செலுத்தும் நபர்களிடம் அதிகமான விசாரணைகளும் நடத்தப்படாது. ஐ.டி.ஆர்.1 என்ற ஒருபக்க படிவம் மட்டுமே வர உள்ளது.
 அபராதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம்
6. 2017-18ம் நிதியாண்டில் வருமானவரி ரிட்டன்களை 2018,டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பாக செலுத்தினால் ரூ.5ஆயிரம் அபராதமும், அதற்கு பிறகு செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதேசமயம், ரூ.5 லட்சம் வரைஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
 வரிவிலக்கு
7. ராஜீவ்காந்தி சேமிப்பு திட்டத்தில் இதற்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு 80சிசிஜி படிவத்தின் படி வரிபிடித்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிதியாண்டு முதல் அந்த வரிபிடித்தம்செய்யப்படாது.
வரிபிடித்தம் இல்லை
8. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்பது இருப்பவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து பாதி அளவு பணத்தை இடையே எடுத்தால், வரிபிடித்தம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், அது மாற்றப்பட்டு பாதிபணம் வரை எடுத்தாலும் வரிவிதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ரூ.2லட்சத்துக்கு மேல் தடை
9.ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்கு மேல் யாருக்கும் பரிமாற்றம் செய்ய முடியாது. வர்த்தகர்கள் வங்கியில் இருந்து ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாகவும் எடுக்க முடியாது. அவ்வாறு ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம்செய்தால், எந்தஅளவு பரிமாற்றம் செய்கிறார்களோ அதே அளவு அபராதம் விதிக்கப்படும்.
 மருந்துகள் விலை உயர்வு
10. சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை, புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான 875 அத்தியாவசிய மருந்துகளின் விலை 2சதவீதம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்கிறது.
 இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு
11. ஏப்ரல் 1-ந்தேதி முதல் காப்பீடு பிரிமியம், வாகனங்களுக்கான மூன்றாம்நபர் காப்பீடு பிரிமியம் ஆகியவை 5 சதவீதம்  உயர்த்தப்படுகிறது. அதிலும் 150சிசி முதல் 350 சிசி வரை, அதற்க மேல் உள்ள சிசி உள்ள பைக்குகளுக்கு மூன்றாம்நபர் (தேர்டுபார்ட்டி இன்சூரன்ஸ்)காப்பீடு 40 சதவீதம் உயர்கிறது. கார்களில் 1000 சிசிக்கு மேல் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.
 எஸ்.பி.ஐ. வங்கி அபராதம்
12. எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக நகரங்களில் வசிப்போர் ரூ.5ஆயிரம், சிறுநகரங்களில்வசிப்போர் ரூ.3 ஆயிரம், கிராமங்களில் வசிப்போரு ரூ.ஆயிரம் வைத்துஇருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.100முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், மாதத்துக்கு 3 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் செய்தால், ரூ. 50 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.
 ஆதார் கட்டாயம்
13. ஜூலை 1-ந்தேதி முதல் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

GST - ஜுலை 1 தெரிந்து கொள்வோம்....

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட
 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் 
சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.


ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும் 
சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள் 
என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது
.3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள 
பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4–ந்தேதி 
தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள 
பணம் கிடைக்க உள்ளது.

பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு




பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு:::


இன்றைய பாடம் - கணிதம்
30 மதிப்பெண் :
நேரடி வினாக்கள் (6)
வாழ்வியல் கணிதம் (18)
தயாரிப்பு வினாக்கள் (6)


  :::::நேரடி வினாக்கள்:::::

எண்கள்
இயற்கணிதம்
அளவியல்
வடிவியல்
புள்ளியல்
முக்கோணம், வட்டம், மற்ற வடிவங்கள்
பரப்பளவு, சுற்றளவு
(வகை, பிரிவுகள், மதிப்புகள், வரையறை)
இவை சார்ந்த நேரடி வினாக்கள் பாட பகுதி சார்ந்தவற்றை படிப்பதன் மூலம் பெறலாம்

::::::: வாழ்வியல் கணிதம் ::::::

விகிதம்
சதவிகிதம்
லாபம் , லாப %
நட்டம், நட்ட %
தனி வட்டி
கூட்டு வட்டி
இயற்கணித நடைமுறை கணக்குகள்
வயது கணக்குகள்
எண்ணியல் கணக்குகள்
மீ.பெ.வ , மீ.பொ.ம
கலப்பு மாறல்
முக்கோண பண்புகள்
வட்ட பண்புகள்
வடிவ அதிகரிப்பு, குறைப்பு
சுருக்குக
வேலை - ஆட்கள்
தூரம் - வேகம்
பரப்பு, சுற்றளவு, கன அளவு

::::::::: தயாரிப்பு வினாக்கள்::::::

மன கணக்குகள்
படம் சார் கணக்குகள்
விட்டுப் பட்ட எண்கள்
பொருந்தாத எண்
பெரியது, சிறியது எது?
எறுவரிசை, இறங்கு வரிசை
பின்னம், தசமம் ஒப்பீடு
கலப்பு பின்னம், நேர் பின்னம்

:::::::::: கூடுதல் பகுதிகள் ::::::::::

வகுப்பு 9 மற்றும் 10
கணம் (படம் சார் கணக்கு)
மெய்யெண் தொகுப்பு ( அனைத்து வகைகள்)
மடக்கை
இயற்கணிதம் ( தொகுப்பு )
வடிவியல் (இணை கரம், நாற்கரம், கன உருவம் / கூட்டு உருவம், வட்டம் )
அளவியல் (கன சதுரம், செவ்வகம், கூம்பு, உருளை , ேகாளம்)
புள்ளியியல் (சராசரி, இடைநிலை, முகடு, வீச்சு)
நிகழ்தகவு ( நாணயம், பகடை, சீட்டு கட்டு)
வகுப்பு 11, 12 தேவை அல்ல.

::::::: பயிற்சி முறை :::::::

அனைத்து கணக்குகளையும் விரைவாக எளிதாக பயிற்சியுடன் விடை காண பழகுங்கள்
வாழ்வியல் கணிதம் தெளிவுற அறிதல் கட்டாயம்
கணிதம் பொறுத்தவரை வினாவிற்கான விடை வினாவில் ஒளிந்துள்ளது. புரிந்து தெளிவாய் தீர்வு காணுங்கள்
தினம் 1 மணி நேரம் ஒரு தலைப்பை பயிற்சி காணுங்கள்
கணித வெற்றியும் எட்டி விடும் தூரம் தான் - வாழ்த்துகள்

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

TET

101.  இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102.  இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103.  இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104.  இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105.  இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106.  இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108.  இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109.  இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110.  இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111.  இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112.  இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113.  இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114.  இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115.  இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116.  இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117.  இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118.  இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119.  இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120.   இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121.  இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122.  இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123.  இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124.  இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125.  இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126.  இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127.  இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128.  இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129.  இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130.  இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131.  ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132.  ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133.  ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134.  உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135.  உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி
136.  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137.  உண்டாட்டு - கள்குடித்தல்
138.  உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140.  உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141.  உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142.  உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143.  உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144.  உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145.  உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146.  உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147.  உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148.  உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149.  உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150.  உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155.  உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156.  உலகின் முதல் நாவல் – பாமெலா
157.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158.  உவமைக் கவிஞர்                    -சுரதா
159.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
160.  உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164.  ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166.  ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு