யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/17

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛நீட்' அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

முடியாது:

‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.
சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

தடை:

இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் எங்கே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய கோர்ட், அவசர சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறினர்

BIG BREAKING NEWS-ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி !!


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

*ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் - முதலமைச்சர்.


*மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை அடுத்து வெளிநபர்கள் தேவையில்லாமல் உள்ளே நுழையத் தடை வித்தக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை : திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடு.. 1 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

வட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அசாம், மேற்குவங்கம், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை கிழக்கு அசாமின் ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாமில் தற்போது மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளால் நிலைமை மோசமாக உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களை நேரில் பார்வையிட்டேன் என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வடமாநிலங்களில் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை  250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து ரயில்களும் வரும் 20-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் அறிக்கை : வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்! !

வாழத்தகுந்த நகரங்கள்: இந்தியா எங்கே?

மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் 
யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், வருத்தமளிக்கக் கூடிய விஷயம், என்னவெனில், அந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்று கூட இடம்பிடிக்கவில்லை என்பதுதான்.

லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தின் துணை அமைப்பான எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் அச்சமின்றி வாழத்தகுந்த 140 நகரங்களை கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது. நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் உலக அளவில் மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரம் முதலிடத்தையும், ஆஸ்திரியாவின் வியன்னா மற்றும் கனடாவின் வேன்கூவர் ஆகிய நகரங்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தானின் கராச்சி 134வது இடத்திலும், வங்கதேசத்தின் டாக்கா 137வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக, அந்நாடுகளில் உள்ள நகரங்கள் மக்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.

மேலும், ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்டவை மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழவே முடியாத நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன.

உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து வருவதை இந்த கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. உலகில் அமைதியாக மக்கள் வாழும் இடங்கள், கடந்த 5 ஆண்டுகளில் 0.8 சதவிகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!



11/8/17

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கை... டல்! தனியார் கல்வி நிறுவனங்கள் தவிப்பு

நடப்பாண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டி வருவதால்


ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளன. கடலுார் மாவட்டத்தில் 20 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், கடலுார், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர கடலுார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் எஸ்.சி., - எஸ்.டி., க்கென தனியாக ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொறியியல் படித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேப்போல ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தாலும் மீண்டும் 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என்பதால் பல மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முடித்த பின்பும் வேலை கிடைப்பதில்லை. இதனால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை.ஒரு காலத்தில் தனியார் பயிற்சி பள்ளிகளில் லட்சக் கணக்கில் ரூபாய் நன்கொடை கொடுத்தாலும் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இன்று மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 'டல்' அடித்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வடலுாரில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளியின் மூலம் 50 ஆசிரியர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கான கவுன்சிலிங் கடந்த 7ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் உள்ள 50 மாணவர்களுக்கு 21 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங் மூலம் வடலுார் ஆசிரியர் பள்ளியில் சேர தேர்வாகியுள்ளனர். இதனால் மீண்டும் விண்ணப்பம் பெற்று சேர்க்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.கட்டணம் குறைவாக உள்ள பயிற்சி பள்ளிகளிலேயே இந்த பிரச்னை என்றால் தனியார் ஆசிரியர் பள்ளிகளுக்கு கேட்கவே வேண்டாம். பல பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதால் பயிற்சி பள்ளியை மூடிவிட தயாராகி வருகின்றனர்

கல்லூரி அருகே 'டாஸ்மாக்' மாணவியர் சாலை மறியல்

மாதவரம்: தனியார் கல்லுாரிக்கு
அருகே திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்றக் கோரி, கல்லுாரி மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.இரு மாதங்களுக்கு முன், கல்லுாரி அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அங்கு குவியும், 'குடி'மகன்களால், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு, டாஸ்மாக் கடை முன் திரண்ட கல்லுாரி மாணவ, மாணவியர், கடையை அகற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து, 'மாவட்ட ஆட்சியரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்; இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.சாலை மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? ( பகுதி -3 )

தமிழ் நாட்டின் ஓய்வூதிய வரலாறு*
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆரம்ப காலங்களில் அரசு ஊழியருக்கு மட்டும் மிக சொற்பமான அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

1960-ஆம் ஆண்டு மாவட்டக் கழகப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக்கப்பட்டன. அதுநாள் வரையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்பது வழங்கப்படவில்லை.


1956-ஆம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்காக, அரசு மற்றும் ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய வைப்புநிதித் திட்டமாக ஓய்வூதியத் திட்டத்தினை முதன் முதலில் கொண்டு வந்தது. 01.04.1956 முதல் 13.06.1966 வரை நடைமுறையில் இருந்த இத்திட்டத்தின்கீழ், ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.8-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10ம் வழங்கப்பட்டது.

 05.12.1964 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஒன்றுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு.பக்தவச்சலம் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், கூட்டணியின் தலைவர் இராமையாதேவர், *“தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அனாதைகளை விட குறைவான ஓய்வூதியம் பெறுகின்றனர். எனவே, அனாதைகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.20-ஐயாவது ஆசிரியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்”* என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் மாநாட்டில் கூறியதாவது *“கூட்டணியின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கு ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்படும்”* என்றார். பிறகு 14.06.1966 முதல் 17.11.1968 வரை ரூ.20 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

18.11.1968 முதல் 30.09.1978 வரை ரூ.50-ம், அதன் பின்னர் ஊதியத்தில் 30/80, 33/80 என்ற விகிதங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

        அரசாணை எண்: 57, நாள்: 02.02.1980-ன் படி 01.10.1980 முதல் படி-முறை (SLAB SYSTEM) அடிப்படையில் சராசரி மாத ஊதியம்,

ரூ.1000 எனில் 50%

ரூ.1000 - 1500 எனில் 45%

ரூ.1500-க்கு மேல் எனில் 40%

என ஊதியத்தின் படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

 அதன்பின் அரசாணை எண்: 1030, நாள்: 14.12.87-ன் படி கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சராசரி 50% 14.12.1987 முதல் வழங்கப்பட்டது.

அரசாணை எண்: 639, நாள்: 03.07.1972-ன் படி 01.04.1972 முதல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்பட்டது

பதிவுகள் தொடரும்.  . . . .

நன்றி : cpstamilnadu.blogspot.com

திண்டுக்கல் எங்கெல்ஸ்

நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் 
கோர்ட் கூறியுள்ளது.நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன்? சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது

JACTO-GEO Breaking News*

திட்டமிட்டப்படி 22ம் தேதி அடையாள வேலைநிறுத்தம்* -

திருச்சியில் இன்று நடந்த ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு.

ஜாக்டோ_ ஜியோ ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் நடைபெறும் அன்று காலை 10.00 மணிக்கு வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டும்.

JACTO GEO இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். ..

நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி !

நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது. நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.

85 சதவீத உள்ஒதுக்கீடு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், 
மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து ஜூலை 31-ந் தேதி உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது

நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை: தேர்தல் ஆணையம்!!!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவினை  அதிமுகவின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரிவினைத் தொடர்ந்து அதிமுக தற்பொழுது அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தனக்கு என்று ஒரு தனி அணியினை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி எடுத்துள்ள முடிவின் படி, டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்து செயல்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமயிலான அணியினைச் சேர்ந்த 'அஸ்பயர்;' சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு கடந்த எட்டாம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலானது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிலானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP....!!

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP..
.http://cps.tn.gov.in/public/

ஊட்டியில் ப்ளாஸ்டிக் பை? ரூ.1000 அபராதம்!

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை எடுத்து வந்தால் மாவட்ட எல்லைகளில் 
அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உணவருந்திவிட்டு, பிளாஸ்டிக் பைகள், பொருட்களை ஆங்காங்கே வீசிவிடுகின்றனர். இதனால் ஊட்டி நகராட்சியில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் ஒரு கட்டமாக, கோவை - நீலகிரி எல்லையில், பர்லியார் சோதனைச் சாவடி பகுதியில் செயல்படும் சேகரிப்பு மையம் போன்ற மையங்கள் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் ஏற்கனவே அமைந்துள்ள காவல், வனம் மற்றும் சுங்கச் சாவடிக்குச் சொந்தமான கட்டடங்களில் இந்த மையங்கள், இன்று (ஆகஸ்ட், 10) முதல் இயங்க உள்ளன.

சோதனைச் சாவடிகளில், வாகனங்கள் சோதனை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் குறைந்தபட்ச அபராதமாக, 1,000 ரூபாய் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், வளைவு மிகுந்த சாலைகளில், இரண்டாம் கியரைப் பயன்படுத்த வேண்டும். எரிவாயு சிலிண்டர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏப்ரல், மே மாதங்களான கோடை சீசனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய சுற்றுலா பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.16 ஆயிரம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10/8/17

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் புதன்கிழமை மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், புதிய பாடத்திட்டக்குழுத் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூ றியதாவது:

புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. கருத்தறியும் கூட்டம் மதுரையில் தான் முதலில் நடத்தப்படுகிறது. அடுத்ததாக கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்படும். கூட்டங்கள் முடிந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளியில் மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், சமூகத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தயாராவது அவசியம். பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான புத்தகங்கள் தயார் செய்தல், அவற்றுக்கான பயிற்சியை ஆசிரியருக்கு அளித்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த 12 ஆண்டுகளுக்கான தொலைநோக்கோடு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் பொறியியல் பாடமும் சேர்க்கப்படும் என்றார்.
காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த மே மாதம் 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், 40 முதல் 70 சதவீத உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊனத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், 3 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்குவதாக கூறி, அதைவிட குறைவான இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும் புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை விதிப்பு

இந்த மனு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம், ஆனால், அந்த தேர்வின் முடிவை வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பதவிக்கான தேர்வில், மாற்றுத்திறனாளிகளின் உடல் ஊனம் தகுதியை அறிவியல்பூர்வமாகவும், அறிவார்ந்த முறையிலும் நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. தற்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இதற்காக அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளது என்றும் கூறினார். நிரப்பலாம் தற்போது 3,456 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டால் அது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பணியிடங்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி, மொத்த காலிப்பணியிடங்களில் சுமார் 140 இடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும். எனவே, இந்த 140 இடங்களை மட்டும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்கிறோம். மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள -ஜாக்டோ - ஜியோ வலியுறத்தல் !! 

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்

சென்னையில் 5.8.17 அன்று  ஜேக்டோ-ஜியோ சார்பாக   நடைபெற்ற கோரிக்கை பேரணி - ஆர்பாட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அத்துனை நல் உள்ளங்களும், ஏதோ சில காரணங்களால் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் -அரசு ஊழியர்களிடம் 5.8.17 அன்று சென்னையில் நாம் கண்ட நமது ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் எழுச்சியையும் , ஆர்பரிப்புகளையும்  மற்றும்  கோர்க்கையின் 
முக்கியத்துவத்தையும் அச்சு ஊடக செய்திகள் வாயிலாகவும் , காட்சி  ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் நண்பர்கள் அனுப்பிய கட் செவி (Whatsapp ) மூலமாகவும்  தெரிந்திருந்தாலும்  .இருப்பினும் அவர்களுக்குரிய நடையில் நீங்கள் எடுத்துக் கூறுங்கள் .
           மேலும் ,மாநில , மண்டல , மாவட்ட , வட்ட நிர்வாகிகள் நம்மை அழைப்பார்கள் என்று எண்ணாமல் , கோரிக்கைகள் நமக்கானது, எனவே கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியாக  ஜாக்டோ - ஜியோ அறிவிக்கின்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்ற வகையில் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலோ (அ) பள்ளிகளிலோ உள்ளவர்களிடம்  எடுத்துக்கூறி வருகிற 22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொணடார்கள் என்ற புதிய போராட்ட வரலாற்றை படைத்திட  வேண்டுகிறேன் .
         நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
        நமது உரிமைகளை மீட்போம் .
      
            
          இவண்

 பெ.இளங்கோவன்  & 

 ஜெ.கணேசன்

  தொடர்பாளர்கள்    

 ஜாக்டோ - ஜியோ   

      JACTTO - GEO

அன்புடன்
மு.சிவக்குமார், தலைவர் TAMS,TPT