யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/3/18

TNPSC '- குரூப் - 3ஏ' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 3 ஏ பிரிவில் அடங்கிய பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 3 ஏ'பிரிவில் அடங்கிய, பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 ஆக., 3ல் எழுத்து தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 14ல் வெளியிடப்பட்டன.

பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை நிரப்ப, வரும்,26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. 
காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார்.இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது.வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம்.சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம்தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது.கணித ஆசிரியர் என்ற முறையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது.சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாகசிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.

போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புதுஅறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போதுடிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இதுகுறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு... இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். 
அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.

கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வைதவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடைபொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தஇரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பியடித்த 44 பேர் சிக்கினர் :

இயற்பியல் மற்றும்பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்.

பிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
கே.காளீஸ்வரி, ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ம் மிக எளிமை, ஒன்றிரண்டு வினாக்கள் சிந்தித்து பதில் அளிப்பதாக இருந்தன. அது குழப்பத்தை ஏற்படுத்தினாலும்சரியான பதில் எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப்பட்டிருந்தன.

 5 மதிப்பெண் கட்டாய வினாவும் எளிமை. சென்டம் வாய்ப்பு அதிகம்.ஏ.சினேக பிரித்தா, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ல் சில கடினமாக இருந்தன. மற்றபடி மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் வினாக்கள் எல்லாம் எளிமை தான்.ஒருமதிப்பெண் வினாக்கள் எழுத முடியாத நிலையில், சென்டம் வாய்ப்பு குறையும். ஐந்து மதிப்பெண் கட்டாய வினா எட்டாவது பாடத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டு படித்தபடியே கேட்கப்பட்டிருந்தது.

எஸ்.நித்தீஷ்குமார், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டும் சற்று கடினமாக, கணக்கு போட்டு எழுதுவதாக கேட்கப்பட்டிருந்தன.மற்ற வினாக்கள் கடந்தாண்டுகளில் கேட்கப்பட்டது போல், திரும்ப திரும்ப பொதுத் தேர்வில் இடம்பெற்றதாகவே இருந்தன. இதனால், எளிமையாக இருந்தது.

எம்.சேக்அப்துல்லா, இயற்பியல் ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் கேள்விகளில், பி டைப்பில் வினா எண் 5, 9, 25 ஆகியவை சற்று கடினம். சிந்தித்து எழுத வேண்டியதாக இருந்தது. இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.

இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை விட எளிமை தான். ஒரு மார்க்கில் 15 வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 10 வினாக்கள் பயிற்சியின் மூலம் செய்வதாகவும், 5 வினாக்கள் சிந்தித்து எழுதுவதாகவும் இருந்தன.

பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்'

மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில்உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

கே.வி.,க்களுக்கு தரவரிசையா?லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.

வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?




வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?

40000 பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு (வாழ்வு)கொடுக்குமா தமிழக அரசு!



தமிழக அரசு ஆதாரித்தால் தான் தனியார் பள்ளிகளில் கூட பணி புரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்க்கான

புதிய வரண்முறையும் அரசானையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்..

தனியார் பள்ளிகள் கூட கணினி ஆசிரியர்களை  உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நிடித்து வருகின்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)மூலம் இதுவரை 40000பேர்.

கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
காரணம் தமிழக அரசு நடத்தும் எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும்   கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாயப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எதனால்.?

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான் மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரண்முறையை தமிழக அரசு உருவாக்கி தரவில்லை இதனால் அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி கணினி ஆசிரியர்கள் பணிக்கு செல்ல  முடியாத அவல நிலை
இன்றாளவும் உள்ளது.

அரசே தனியாரே அவை எங்கு இருந்தாலும் அங்கு பணி புரியும் மற்ற தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பட்டதாரி ஆசரியர்கள் என்றால்  இளங்களை பட்த்துடன் பி.எட் ,பட்டம் கட்டாயம்,முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம்.

ஆனால் தமிழகத்தில்  பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு  அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வி தகுதி எங்கும்

பின்பற்ற படுவதில்லை எனவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணிபுரிய வரண்முறையும் அரசானையும் உருவாக்கி தந்தால் தான் 40000 கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு .
எங்கும் கணினி எதிலும் கணினி என்று நோக்கி செல்லும் கால கட்டத்தில்

கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செய்படுவது ஏன்?

இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம் நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை
கணினி அறிவியல் பாடபுத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது.
தற்போது அதன் நிலை குப்பையில் தொட்டியில் போடப்பட்டது
என RTI தகவல் அளிப்பது வேதனைக்குறியது.


கணினி அறிவியல் பாடம் நடைத்தப்படுவது எதற்க்காக.

அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை
செலவு செய்து பயிற்சி கொடுத்தம் பலன் இல்லை காலங்கள் மாறி வரும் போதே அதற்கு ஏற்ப பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் பாடங்களுக்கு தகுந்து ஆசிரியரகளை நியமிக்க வேண்டும்.

அந்தந்த பாடங்ளுக்கு தனித்தனியாக பி.எட் பட்டம் எதற்க்காக உருவாக்க வேண்டும்.இதற்கு தான் தமிழக அரசு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)  40000 பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது .
எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லகாசக உள்ளது.தாங்கள் கொடுக்கும் பிஎட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட  வேலைக்கு செல்ல முடிய நிலை இன்றாளவும் உள்ளது அப்படி பணிக்கு செல்ல நான் படித்த பட்டத்தை மறைத்து பணிக்கு செல்லும்  நிலை ஏன்?

தமிழக அரசு !

இனியாவது  தமிழக பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு  அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வி தகுதி பின்பற்ற படவேண்டும்

ஆகவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணிபுரிய வரண்முறை உருவாக்கி அதற்க்கான அரசானையை விரைவில் வெளியிட வேண்டும்.

செல்வி நா.ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

தேர்வு நேரம்: தேர்வு நேரத்தில் விளையாடலாமா?

உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை விளையாடப் போகிறீர்கள். உதாரணத்துக்கு, கால்பந்து என வைத்துக்கொள்வோம். உங்கள் கால்களுக்குப் பந்து கிடைத்துவிட்டது. லாவகமாகப் பலரைத் தாண்டி அதைக் கடத்திச் செல்கிறீர்கள். போட்டியின் முடிவு என்னவாகும் என்று நினைத்து அப்போது பதற்றமடைந்தால் உங்கள் மூளையாலும் உடம்பாலும் முழுத் திறனை வெளிப்படுத்தி பல கால்களைத் தாண்டி அந்தப் பந்தைக் கடத்திச் செல்ல முடியுமா?
யோசிக்க வேண்டாம். ஏனென்றால், அந்தக் கணம் மகிழ்ச்சியில் ஊறித் திளைக்கும்போது மட்டும்தான் உங்கள் முழுத் திறனும் வெளிப்பட முடியும். தேர்வில் இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
சத்தான உணவைச் சாப்பிடுதல்
காலை உணவு எப்போதும் முக்கியம், அதுவும் தேர்வு நாள் அன்று அது மிக அவசியம். சத்தான அதே நேரம் எளிதில் செரிக்கும் உணவைச் சாப்பிடுங்கள். பொங்கல், தயிர்ச் சோறு, தயிர் வடை போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டுக்குப் பிறகு முடிந்தால் ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்களைச் சாப்பிடலாம்.
காபி, டீ தவிர்த்தல்
காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அவை பதற்றத்தையும் பயத்தையும் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத பழக்கமாக இருந்தால், கொஞ்சமாக அவற்றைக் குடிக்கலாம். தேர்வுக்குச் செல்லும் முன் பழச்சாறு அருந்துவதால் சத்தும் சுறுசுறுப்பும் கிடைக்கும்.
அரக்கப் பறக்கச் செல்ல வேண்டாம்
வீட்டிலிருந்து வழக்கமாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், தனியாகவோ நெருங்கிய நண்பருடனோ காலாற சிறிது நடைபோடுங்கள். ஆனால், அப்போது தேர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிருங்கள்.
கேள்வித் தாள் வாசிப்பில் கவனம்
பதிலை எழுத ஆரம்பிக்கும்முன் நிதானமாகக் கேள்வித் தாள்களின் குறிப்புகளைக் கவனமாகப் படியுங்கள். அதன்பின் கேள்விகளைக் கவனமாக வாசியுங்கள். இது தவறாகப் பதில் எழுதுவதைத் தவிர்க்க உதவும்.
பதில் பாதியில் நின்றுவிட்டதா?
தெரியாத கேள்வி இடம்பெற்றாலோ தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்துபோனாலோ ஒருவிதமான பதற்றமும் பயமும் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழ்நிலையில், கேள்வித் தாளையும் பதில் எழுதும் தாளையும் மூடிவையுங்கள். ஒரு எட்டு நடந்து கழிவறைக்குச் செல்லுங்கள், பின் சிறிது தண்ணீர் குடியுங்கள். உங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு ஆழமாகப் பத்து முறை மூச்சை இழுத்துவிடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுத ஆரம்பியுங்கள். பாதியில் நின்ற பதிலை இறுதியில் ஒருகை பாருங்கள்.
கை கால்களுக்கு ஓய்வு
தேர்வு எழுதும்போது கை கால்களை அவ்வப்போது நீட்டிமடக்குவது கொஞ்சம் ஓய்வு தரும். முடிந்தால் அவ்வப்போது எழுந்தும் உட்காருங்கள். கூடுதல் தாளை வாங்கும்போது வாய்ப்பிருந்தால் எழுந்து நின்று வாங்குங்கள்.
மூன்று மணி நேரம்தான்
உங்களின் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தோராயமாக ஆறு லட்சம் மணி நேரம் வாழப்போகிறீர்கள். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப்போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லையா?
தேர்வு என்பது ஒரு விளையாட்டுதான். அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு ரசித்து அனுபவித்து ஜாலியாக விளையாடுங்கள்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற கல்வி அமுதுவின் இனிய வாழ்த்துக்கள்..

தமிழகத்தில் 8 உயர் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியது யூ.ஜி.சி!




தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட, 8 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பரிசோதித்து, ஆண்டுதோறும் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவருகிறது யூ.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு. அதன்படி, இன்று 62 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு சுயாட்சிக்கான அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், டெரி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு வழங்கப்படும் தன்னாட்சி உரிமை விதிகளின்படி, ஐந்து மத்திய பல்கலைக்கழகம், 21 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 21 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சுயாட்சி அந்தஸ்தை இன்று வழங்கியுள்ளது. இதுகுறித்து இன்று பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ' பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள், சேர்க்கை நடைமுறைகள், கட்டண விதிகள், ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மற்றும் துறைகள் சார்ந்த புதிய படிப்புகளைத் தொடங்குவது, புதிய துறைகள் நிறுவுவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
யூ.ஜி.சி வெளியிட்ட பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன

Directorate of Government Examinations - NTSE Examination - Nov-2017 - Out of Range Results

DEE -ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!


TAMIL UNIVERSITY DECEMBER-2017 RESULTS PUBLISHED

                                     


www.tamiluniversity.ac.in

21/3/18

குடந்தையில் மார்ச் 24-இல் வேலைவாய்ப்பு முகாம்


கும்பகோணம் அரசு ஆண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:

மார்ச் 24-ம் தேதி 

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் பயிற்சி வகுப்புக்காகப் பதிவுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவுகள், அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணிக்கான பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முகாமில் 18 வயது முதல் 45 வரையிலான (இரு பாலர்) பணி நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவரஅறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


வேலைவாய்ப்புச் செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள இந்த ஆப் பயன் உள்ளதாக இருக்கிறது.
 நீங்களும் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள் !https://play.google.com/store/apps/details?id=com.app.tnpscjobs

பள்ளியில் பேரிடர் மேலாண்மை பாடம்- ஆசிரியர் கருத்து!

அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!

ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது கவனமாக இருங்கள்;-ஆணையம் திடீர் எச்சரிக்கை!!!

மாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூடாது!!!

2% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில்!

தலைமைச் செயலக வட்டார செய்தி:



 2% அகவிலைப்படி உயர்வுக்கான கோப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில தினங்களில் முதல்வரின் உத்தரவுக்காக வைக்கப்படும் என தகவல்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது: விடையளிக்க போதிய நேரம் இருந்ததாகவும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. 
பொறியியல் படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் கணித தேர்வு சற்று கடினமாக இருந்ததால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மாணவ-மாணவிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகள் புனிதா, கவிநயா, காயத்ரி, திவ்யா, ஹேமலதா ஆகியோர் இயற்பியல் தேர்வு குறித்து கூறும்போது, “கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டதால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன்தான் தேர்வுக்கூடத்துக்குச் சென்றோம். ஆனால், அவற்றுக்கு மாறாக தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1, 3, 5, 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல வினாக்கள் தேர்வுக்கு வந்திருந்தன. விடையளிப்பதற்கு போதிய நேரம் இருந்தது” என்றனர்.“கணித தேர்வுடன் ஒப்பிடும்போது இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும்எளிதாக இருந்தது” என்று சூளைமேடு கில்டு நகர் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி கரீனா தெரிவித்தார். பல்வேறு மையங்களில் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளும் இதே கருத்தை கூறினர். அதேபோல், நேற்று நடந்த பொருளாதார தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது என்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருப்பதால் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல, 200-க்கு195-க்கு மேல் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதனால், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப்மதிப்பெண் உயரலாம்.

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?
இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.


இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.
"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா:
"இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5